Saturday, October 31, 2015

வணங்க வேண்டியவன்.

கடலினும் மாணப் பெரிது
 மனதில் நிரம்பி வழியும்  
 அன்பு.

மலையிலும் மிகப பெரிது 
மனித  நேயம்  ததும்பும் 
மனம்.

வானிலும் சாலச்   சிறந்தது 
 சக மனிதனை மதிக்கும் 
எண்ணம். 

அன்பு செலுத்தவது எளிதல்ல 
 மனி த  நேயம்   கிடைக்காது 
மதிக்கும்  எண்ணம்  வராது.

மூன்றும் ஒருங்கே பெற்றால் 
 மனி தன தெய்வம்   போன் றவன் 
வணங்க வேண்டியவன்.

எல்லாம் பணத்துக்காக

விரட்டி விரட்டி செல்கிறான்
 எங்கு சென்றாலும்
 எதற்காக   என்று நினைத்தால்
 எல்லாம் பணத்துக்காக
 பணம் என்றால் மனம் மாறும்
 மனம் மாறினால் பணம் தடுமாறும்
 தடுமாறினால்  திருடு நடக்கும்
 திருடு என்றால் மோசம் செய்வது
 மோசம் பண்ணினால்  குடு ம்பம்
வளராது  புல் பூண்டு கூடத் தக்காது 

Thursday, October 29, 2015

வேறுபாடு ஏனோ ?

காற்றிலே ஆடியது மரம்
சாய்ந்து  சாய்ந்து ஆடியது
 பார்க்க பரவசம் மிகுந்தது

 மனமும்  சில கணங்களில்   ஆடுகிறது
 விரைந்து விரைந்து ஆடுகிறது
 பார்க்க பதற்றம் மிகுந்தது.

ஆட்டம் ஒன்றே தான்
 சாய்ந்தும் விரைந்தும்  ஆட
ப ரவசம் ஒன்றில் தோன்ற
பதற்றம் மற் றோன்றில்  காண
வேறுபாடு ஏனோ ?

Wednesday, October 28, 2015

பவள மல்லி

பவள மல்லி  ஓர் அழகு
 பவள நிறக்  காம்பும்
 வெள்ளை நிற மலரும்
 மிருதுவான் இதழ்களும்
 தொடும் போதே ஓரு  லயிப்பும்
மனதை கொள்ளை கொள்ள
 குனிந்து பொறுக்கினேன்
 ஒன்று ஒன்றாக
 எனது பூக் குடலையில்

Sunday, October 11, 2015

கனவிலும் நினையாதுது பல

கனவிலும் நினையாத ஒன்று
 நினைவில்   வந்த போது
கலங்கியது மனம்
கையைப் பிசைந்து  கொண்டு
 நின்ற போது
 சட்டென்று அடித்தது    முகத்தில்
ச்மாளித்துக்  கொண்டு  \
எழுந்த போது
கால் இடறியது ஏறக்குறைய
 நட வாதுதெ ல்லாம்  நடந்தது
கனவிலும்  நினையாதுது  பல  

காட்டிலே தீ

காட்டிலே தீ பரவி
 புகை சுற்ற
 யாருக்கும்  பாதிப்பு இல்லை
 ஊரிலே நெருப்பு தோன்றினால்
 அனைவரையும் எரி த்துக்  கொல்லும் 

Wednesday, October 7, 2015

மழை

மழை பூத் துவலாக த்   தூவ 
கதிரவன் சட்டென்று மறைய 
 மலர்கள் சிற குகள்  போல்  தெறிக்க 
அங்கு ஓர் அதிசயகே காட்சியை 
கண்டு மகிழ்ந்தோ ம்  

 

சினம் கண்டேன்

சினம் கண்டேன்
சினமே கண்டேன்
கண்ணில் குருதி
சொல்லில் வெப்பு
கண்டேன்  கே ட்டேன்
மனம் பொரும
நிற்கிறேன்
என் நிலயயை  நினை ந்து 

பொன்னான வயிறு

பொன்னான  வயிறு
 பூவாக மலர்ந்து
அழகாக  விரிந்து
சுகமாக  நிரந்து
 இன்று
சுருங்கியது ஏனோ 

Tuesday, October 6, 2015

செம்மொழி.

நெடிலும் குறிலும் நிறைந்த மொழி 
 வல்லினம் மெல்லினம் இடையினம் 
 என்றும் பகுத்துப்  பயிலும் மொழி 
 லகர னகர வேறுபாடுகள் காணும் மொழி 
 தமிழ் மொழி என்ற செம்மொழி.