Thursday, March 5, 2015

தறி கெ ட்டு

வாய்க்கு வந்ததைப் பேசுகிறான்
 வரம்பு க்குள் இல்லை
 முறையாக இல்லை
 சினம் கொண்டு சீறி விழுகிறான்
 மனம் ஒரு நிலையில் இல்லை போலும்
 கறுக்கச் சிவக்கப் பார்த்து
 உருட்டி உருட்டி  விழி கள் பிதுங்கத்
திரிகிறான் தன்னோத்துப்   போ கிறான்
 தன் போல் தறி  கெ ட்டு அலையும் மனிதர்களுடன்






வாழ்க்கை முறை

நடிப்பு எதிலும்
 நகாசு எதிலும்
 பசப்பு எதிலும்
 பகடை எதிலும்
ஆழம் இல்லாத  படிப்பு
ஆழந்து  கருதாத  கருத்து
 மேலெ ழு ந்த  பேச்சு
 இதவே வாழ்க்கை முறை
என்று ஆகும் போது
 அதை  நடை முறை
  படுத்துபவர்களை
 நோக்கின் மனம்
 வெதும்புகிறது.

நக்கிரன் யாரென்று

நன்றி யாருக்கு?
நக்கீரனுக்கு எதற்கு
 தமிழ் நெறிக்கா
 வழி  முறைக்கா
அவன் நேர்மைக்கா
 சீறுகிறான் பெரும் புலவன்  
காயப் படுத்துகிறான் இராமன்
நக்கிரன் யாரென்று அறியாமல்
புலப்படும்  உண்மை ஒரு நாளில்
ஓடுவான் தலை தெறிக்க இராமன் 

Wednesday, March 4, 2015

இராமனாகவோ சுப்பனாகவோ

காரியம் இல்லாமல்
 தட்டு தூக்க மாட்டான்
 விவரம் இல்லாமல்
 வால்  பிடிக்க மாட்டான்
சாமானியன் அல்லன்
 சாதுர்த்தியம்  நிறைந்தவன்
தன்  வேலையே குறி
பணமே வெறி
 அவன் யாருமன்றோ
அவன் இராமனாகவோ
 சுப்பனாகவோ   இருக்கலாம்


சொல்லவொண் ணாச் சிறப்பு

மூம்மொழி  கற்றேன்
 ஆங்கிலத்தில் கல்வி
 தமிழோ தாய் மொழி
 பிரெஞ்சோ  அடுத்த மொழி
 மூன்றும்  அழகு
 செம்மொழி கள்   என்று கண்டு
 உலக மொழியான ஆங்கிலம்
பழந்தமிழும்  அதன்  இலக்கணமும்
பிரெஞ்சும்  அதன் இனிமையும்
ஒன்றுடன் கோர்த்த  சரமாக
பொருந்தி உட்படுத்தி
 என்னை  வழி  நடத்தும் பாங்கு
 சொல்லவொண் ணாச்    சிறப்பு
 அளவிடமுடியாத  மகிழ்வு


Tuesday, March 3, 2015

நிற்கிறேன் சிலையாக

எல்லாமே ஓரு நிலையில்
முன்னும் போக முடியவில்லை
 பின்னும் சரிய முடியவில்லை
 ஏன்  இந்த நிலை?
 தெளியத் தெரியவில்லை
சட்டெ ன்று  புரியவில்லை
 நிற்கிறேன் சிலையாக.

Sunday, March 1, 2015

கட்டாயம் என்று

கட்டாயம்  என்று சொல்லப போக
கடினமாகத்  தோன்ற முயலும்
கடினம் மேற்கொண்டு  இடையூறாக
இடையூறு  ஓர் இயலாமையாக மாறி
 நடப்பதே  உறுதி யி ல்லாமல் விலகி விடும்
 திணிக்க  நினைக்காமல் எடுத்து இயம்பி
முடிவைக் காண விழைதல் சிறப்பு