Tuesday, March 10, 2015

ஆறு மருமகளும் அழகு

ஆறு மருமகளும் அழகு
 பெரியவள் இரண்டுக்கும் இடையில்
 அழகுக்கும் பொறுமைக்கும்
 இரண்டமவளோ   குமரி  போல
 சிரிப்பும் சிணுங்கலும்
 கமலம் போன்ற மூன் றாமவள்
 செந்தாமரை மலர் ஒத்தவள்
 அமர்த்தலான் அழகு  நாலாவதாக
 வந்த பெருங்குடு ம் ப ப் பெண்
 அறிவ சால் தகைமையு டன்
 அட்டகாசமாக  பேசும்  அடுத்தவள்
 அழகுக்குச்  சிகரம் என்று பெருமைக்
 கொள்ளும்  ஆக இளையவள்
 என்று பெருமிதம் கொள்ளும்
பிள்ளைக் குட்டிக்காரக் குடும்பம்
கண்டேன் அடிக்கடி  பல முறை
 வியந்தேன் தற்பெருமையைக்  கண்டு.


   

நினைந்து நினைந்து

தந்தையும் தாயும்  ஒரு நேரத்தில்
மனைவியும்  பிள்ளைகளும் சில நேரத்தில்
மனிதன் தனக்குத் தானே எல்லா நேரத்திலும்
நினைந்து நினைந்து  வாழ வகை காணின்

Sunday, March 8, 2015

எங்கு கேடபது

பாட்டைக் கேட்டேன்
 பாட்டு என்றவுடன்
 இசை என்று கொள்ளாதே
 இசை மட்டும் அல்ல
  வயிற்றுப் பாட்டு
 முதலில் தோன்ற
 அறிந்தேன் பலரின்
 துன்பத்தை   வயிற்றுக்காக
 அலையும்  பாடு
 உழைக்கும்  பாடு
 நினைத்துத்  துவள
அதற்கு மேலும்
உடலால் படும் பாடு
 நோய் வந்து அழுத்தும்
வலி வந்து படுத்தும்
அதை எண்ணின்
 கண்ணிர்  தளும்பும்
மேற்கொண்டு
 மன வேதனை  அளிக்கும்
பாட்டையும் கரத்தின்
 உறவுகளால்  சொத்தால்
பேச்சால் அடையும் வலி
 சொல்லி மாளா
 இவ்வளவும் தரும்
 துயரம்  கணக்கிலடங்கா
 பாட்டும் இசையும்
 எங்கு கேடபது




வெல்வாய் உறுதியாக

படிக்கும் எண்ணிக்கை குறைவு
 படிப்பார்கள் ஒரு  முறை
 எண்ணம் நன்று
எண்ணுவது நல்லதல்ல
 படிப்பார் படிக்கட்டும்
 கவலைக்   கொள்ளா தே
 எழுத  நினைத்ததை
 அழ்காக  நயமாக எழுது
 வெல்வாய் உறுதியாக 

மகராசி மாதரசி

தோடும்  கண்டசரமும்
முக்குத் தியும்    வளை யலும்
 காஞ்சி பட்டும்   கொண்டைப்   பூவும்
 புன்சிரிப்பும் குங் குமப்  பொ ட்டும் 
 மங்கள நாணு டன்  வந்தமர் ந்தாள் 
 மகராசி மாதரசி லெட்சுமிகரமாக 
 ஒரு பூச்சு இல்லை  ஓர் அலங்காரமும் இல்லை 
ஒரு அதிக அலட்டலும் இல்லை 
 யதார்த்தமாக இயற்கையாக 
தோற்றமளித்தாள்   பெண்ணரசி .
 வியந்தேன் அவளைக்  கண்டு 
 கைக் கூப்பி னேன் பரவசத்துடன் 
அவளின் அடக்கத்தைக்  கண்டு  
படிப்பில் மேதை  எழுத்தில்  தெளிவு 
கருத்தில் சிறப்பு கவிதையின் உற்று 
 இருப்பினும் ஒரு அவையடக்கம் 
 கண் கொள்ளாக்  காட்சி 
கண்டேன் பிரமிப்புடன் .

Saturday, March 7, 2015

அன்று மலர்ந்த

 அன்று மலர்ந்த மலரும்
அன்றே செய்த உணவும்
அன்று நடந்த நிகழ்வும்
 அன்றே முடிந்து விடும்
மலர் வாடிப் போகும்
உணவு சலித்துப்  போகும்
 நிகழ்வு  மறந்து போகும்
அப்போதைக்கு அப்போது
தோன்றி மறைந்தது விடும்
நினைவில் நிற்கா

சாதா வட்டி அல்ல

வட்டி வாங்கி வாழ்கிறான்
 சாதா வட்டி அல்ல
  தடி வட்டி அநியாயம்  என்பது
மிகக்  குறைவு அதற்கும் மேலே
 சொல்லத் தெரியவில்லை
வட்டிலிலே உண்ணும் போ து
 வட்டி பளிரென்று தெரியவில்லையா
 கட்டிலேலே உறங்கும் போ து
வட்டி கடுகளவும் குத்தவில்லையா
வண்டியிலே பயணிக்கும் போது
வட்டி வம்பாகத்  தெரியவில்லையா
 வட்டி வட்டி என்று அலையும் போது
 வடிக்கும் கண்ணீரைக்  காணவில்லையா
 மாளாத வட்டி பாழாகப் போக
 அடங்காத ஆசை பொசுங்கிப் போக
 வட்டி வாங்கும் தேட்டாளன்
ஆரவாரித்து நிற்கிறான் குதுகாலமாக.