Friday, July 1, 2016

தீர்ப்பு சொல்பவன்

தீர்ப்பு  சொல்பவன் 
 தீர  விசாரித்து 
 ஆராய்ந்து  
 எப்பக்கமும் சாராது 
 நியாயம்  வழங்குவதே 
 சிறப்பு.


தீர்ப்பு  கூறும் 
ஒருவன் 
சொந்தம் என்றால் 
பொறுப்பிலிருந்து   விலகி 
விட்டு

அன்பு 
ஒருவனிடம்  மிகுந்தால் 
மற்வறொருரிடம்  ஒப்படைத்து 
 ஒதுங்க வேண்டும்.

இல்லாமல் விடாது 
கொம்பை 
பிடித்த்துக் கொண்டே இருந்தால்
ஒன்றும் ஆகாது. 
.







அநியாயத்துக்கு துணை போய்.

வாழ்கிறான் அவனும்
 நன்றாகவே.

நியாயம் இல்லாமல்
 நியதி அற்று .

 செல்வம் நிறையவே
என்னிடம்  என்று  பேசிக்கொண்டு .

அவனுக்குத் துணை
நான்கு பேர்.

கூடவே  சென்று குலவி
 கூத்தடித்து  கெடுத்து

 வாழ்கிறார்கள் அவர்களும்
அவனோடு
அநியாயத்துக்கு
 துணை போய்.








Tuesday, June 28, 2016

கற்றாழை

அழகான தோட்டத்திலே
 ரோஜாவும் , மல்லிகையும்,
 பிச்சியும் , சூர்யகாந்தியும்
 மணம் கமழ
 தன்னந் தனியாக நின்றது
 ஒரு சோற்றுக்  கற்றாழை

 அழகின் ஊடே ஒரு அழகற்றதாக
 பச்சை நிறத்தில் இலைகள் கனமாக
 கோணலாக  நிற்கிறது  கற்றாழை.

வேரோடு பிடுங்க நினைத்துப் போது
 தடுத்தாள்   என்  தோழி.

அதன் பயன்களையும்,அதனின் சக்தியையும்
 கூறியவுடன் மலைத்து நின்றேன் .

தீயனவற்றைக் கழிந்து, தீமையைப் போக்கி
 நலம் பல செய்யும் செடியைப்  பழித்தேனே
 என்று வருந்தினேன்.

  

Sunday, June 26, 2016

தூங்கினான்

தூங்கினான்  தூக்கம்  வராமல்
 கண் மூடி    அசைவில்லாமல் .
மணவறை   மறந்தான்
 அசதியிலே!


பெண்ணின்  மனத்தை
 தொடாமல்   உடுருவினான்
 மயங்கினாள் மாது
நினைவில்லாமல்.

 அவன் தந்தையோ
 அள்ளி வீசினான்
சொற்களை.

தாயோ  மெச்சினாள்
 மகனின்  அறிவை.

பெரிய தகப்பனோ
 கூவினான்  அதிகமாக

கோடியில் புரள்கிறேன்
 ஆள் பலம் அதிகமாக.
எனக்கு என்று.

 வாங்கினார்கள்
 யாவரும்  மிகவாக
ஏச்சும் பேச்சும்
 அடியும்!





Monday, June 20, 2016

மாட்டினான் வசமாக

மாட்டினான்  வசமாக

சீராக  வாழ்கிறான்
என்ற நினைப்பு.

"கோடியில்  புரள்கிறேன்
 ஆள் பேர் அரசாங்கம்
 என்று எனக்கு
 எல்லாச் செல்வாக்கும்"
நிறையவே   என்று
 மார் தட்டினான்  நேற்று.

இன்று கதை மாற
 நிலை குலைந்து நிற்கிறான்.

தடம் புரண்டான் பல் நேரங்களில்
 மகனின்  திருமணத்தில்  முற்றுமாக
 பழக்கம்  தவறிய
 மகனுக்கு ஒரு கல்யாணம்.
அவன் மனைவியும் தெரிந்தும்
 உடந்தை.

 மகன்  கடைசி நேரத்தில்
 தூங்கி  காரணமாகவே
 துக்கம் உண்டாக்க.
 கதறி ய பெண்ணும்
 அவள் வீட்டாரும் வெகுண்டு
 அவனை ஏச.

வாய் மூடி கை கட்டி
 தலை குனிந்து
 நிற்கிறான் .

நிமிர்ந்து விடுவான்
 சில நாட்களிலே
பணம் முழுவதுமாய்
 அவனை விட்டுச்
 செல்லும் வரை.

  






   

Tuesday, June 14, 2016

நன்று பல கூறின்

 நன்று பல கூறின்
நாளும் பொழுதே
 நன்று எனின்
 நலம்   பயக்குமே!.

 நன்மை  விளையும்
 நன்னாள் முழுதுமே
நற்செயல் செய்யின்
நட்பு   நகுமே!.

 நாவிலே சொல்
 நடப்பிலே செயல்
நல்லவை  வழங்க
நவில்வது நற்பண்பே! 

Monday, June 13, 2016

பனியில் மலர்ந்த பூ

பனியில் மலர்ந்த  பூ
 நிகரில்லா ஒளியுடன் திகழ
 பனி விலகிய வுடன்
 மட்டில்லா  பொலிவுடன்
 சொர்ணமயமாக  விளங்க
  ஒரு பலமான் காற்றுடன்
 பேய் மழை  பொழிய
 அழகிய மலர்
 பறந்து மறைந்தது.