Monday, July 11, 2016

நெடு நேரம் கண்டேன்

நெடு நேரம் கண்டேன்
 நெடு நேரமும் 
 வியப்புடன்.

  நன்னாளில்   நடக்கும் 
 நற்பொழுதில் துவங்கும்  
விடிந்தும் விடியாததும் 
 தெரிந்த  வித்தியாசங்களை  
கண்டு அதிர்ந்தேன்.

உடல் நலம் குன்ற 
 வலி வந்து அமிழ்த்த 
 நிலை குலைந்து நிற்கிறான் 
நாயகன்.

அறிந்தும்  நாயகி 
சீண்டுகிறாள்   அவனை.

உடல் வலியும்  மன வலியும் 
 அவனை படுத்த 
 நாயகன் மயங்கினான் 
பரிதாபம்! பாவம் 
  
    

Saturday, July 9, 2016

மானம் எது? மானம் ஏது?

மானம் எது?
 மானம் ஏது?

கேள்விக் கணைகள்
 என்னைத் தாக்க
 நிதானிக்கிறேன்  சற்று.

எது என்பதற்கு
 என்ன விடை?

நேர்மை, ஒரு சொல்,
பிறழாத தன்மை
தவறினால்  மன்னிப்பு
அடக்கம்,  அருள்
 என்பது மானம்.


ஏது  என்ற போது
என்ன பதில்?

பொய், புரட்டு
புறங்கூறுதல்,
 வார்த்தை மாறுதல்,
 விலை போகுதல் 
என்ற போது
 மானம்  எங்கு
கண்டோம்.

மானம் பெரிது
 என்ற காலம் போய்
 பணமே  சிறப்பு
என்ற
 நேரம் இப்போது.

  


Thursday, July 7, 2016

எவ்வழியில் பெருக்கினான்

பணம் பத்தும்  பண்ணும்
 என்பது அவனுக்கு
 முற்றும் பொருந்தும்.

 எளிய குடும்பத்தில்
 பிறந்தும்  அவனுக்கு
 அதில் ஏற்றமில்லை.

ஏற்றம் அடைந்தான்
 படிப்பாலே  ஓரளவு
ஏற்றம் எனில்
பணத்தாலே!

 திறமை  என்று நோக்கும் போது
 பெரிதளவு  அவனிடம்
காண முடியாது. 

எவ்வழியில் பெருக்கினான்
 என்பது அவனுக்கே
 வெளிச்சம்.

 
  பணத்தை கண்டவுடன்
 அடக்கம் அற்றுப்போய்
 அடங்காமை தலை  தூக்க
 ஆடுகிறான்  ஆடுகளம்
மிக அழகாக.

Wednesday, July 6, 2016

என்ன ஒரு பெருமை!

வந்தமர்ந்தான்  அழுத்தமாக
நோக்கினான் மேலும் கீழுமாக
 பேச்சை ஆரம்பித்தான்
  அமர்க்களமாக

 அது அப்படி இது அப்படி
 என்று அளந்தான்
 பெரும் பணம் புரண்டோட
வாழ்கிறான் போலும்.

நின்றேன்  சற்று நேரம்
 மெதுவாக அவனை
 கிளப்பினேன்.
புரியாமல் பேசிக்கொண்டிருந்தான்
 நேரம் போவது தெரியாமல்
 தாங்காமல்  கை எடுத்துக்
 கும்பிட்டேன்.

 என்ன ஓர் ஆணவம்!
 என்ன ஒரு பெருமை!



Saturday, July 2, 2016

முல்லை.

ஒரு சிறு அலட்டல்
 ஒரு சிறிய  பகட்டு
 என்று இல்லாமல்
 தனித்துவமாக
 அமைதியின்  மறு
பதிப்பாக
 திகழ்கிறாள்
 முல்லை.

பெயர்க்கு  ஏற்றவாக 
மிருதுவான கனிவும்
அதிராத பேச்சும்
ஆழமான  சிந்தனையும்
 அழகான  நடையுமாக
 வலம் வரும்
 முல்லை.

யாவரும் விரும்பும்
 ஒரு அறிவு  மிகுந்த
 பெண்மணியாக
 அறிமுகமாகிறாள்
 முல்லை.






Friday, July 1, 2016

தீர்ப்பு சொல்பவன்

தீர்ப்பு  சொல்பவன் 
 தீர  விசாரித்து 
 ஆராய்ந்து  
 எப்பக்கமும் சாராது 
 நியாயம்  வழங்குவதே 
 சிறப்பு.


தீர்ப்பு  கூறும் 
ஒருவன் 
சொந்தம் என்றால் 
பொறுப்பிலிருந்து   விலகி 
விட்டு

அன்பு 
ஒருவனிடம்  மிகுந்தால் 
மற்வறொருரிடம்  ஒப்படைத்து 
 ஒதுங்க வேண்டும்.

இல்லாமல் விடாது 
கொம்பை 
பிடித்த்துக் கொண்டே இருந்தால்
ஒன்றும் ஆகாது. 
.







அநியாயத்துக்கு துணை போய்.

வாழ்கிறான் அவனும்
 நன்றாகவே.

நியாயம் இல்லாமல்
 நியதி அற்று .

 செல்வம் நிறையவே
என்னிடம்  என்று  பேசிக்கொண்டு .

அவனுக்குத் துணை
நான்கு பேர்.

கூடவே  சென்று குலவி
 கூத்தடித்து  கெடுத்து

 வாழ்கிறார்கள் அவர்களும்
அவனோடு
அநியாயத்துக்கு
 துணை போய்.