Wednesday, September 28, 2016

கொஞ்ச நேரம்

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
 என்று காலம் தாழ்த்தி
பொறுமை கடலினும்   பெரிது
என்று பறை சாற்றி
நேரமும் காலமும்
 என்று  அறிந்தும்
   நீடிக்கும் எண்ணம்
 ஒரு தீமைக்கே
 என்று கொள்வோமாக.

Friday, September 23, 2016

தகுதி

தகுதி என்று நினைத்து
 தகாத காரியங்கள் செய்து
 தகுந்த எண்ணம் ஆகா

தகுதி என்று இறுமாந்து
 தாங்காத  கொடுமை செய்து
தானே பெரியவன் என்பது ஆகா.

தகுதி என்பதில்  திளைத்து
திமிராகத் தூக்கி எறிந்து
தான்  பொய்  பேசுவது ஆகா.

தகுதி ஓர்  அநீதி  அல்ல
 அது ஒரு சான்று  ஆகும்
மிகுவதும் மிகாததும்   நம் கையிலே   

Wednesday, September 21, 2016

தண்ணீருக்காகவா இவ்வளவு

தண்ணீர் தண்ணீர் 
 என்று புலம்பி 
 தடியடி  வன்முறை 
 எங்கும் பெருக.

 வழக்குரைக்க 
 நீதிமன்றங்கள் 
என்று தாண்டி ஓட.

தண்ணீரை  ஓட விடாமல்
அடக்கி  அணைகளில் தேக்கி 
பறறாக்குறை   என்று  மனிதன் 
 ஓலமிட.

 பயிரை வளர்த்து 
 நீர் வரத்து இல்லாமல் 
அவை வாட..
 
 மனமிழந்து 
 தன்னுயிரை  விட்டு 
 கதறுகிறான்  மனிதன்
இன்னொரு எல்லையில். 

.
 
உ யிர்ச் சேதம், பொருட் சேதம் 
 இழப்பு  என்று மக்கள் திக்குமுக்காட
 
 நினைத்துப் பார்த்தால் 
 தண்ணீருக்காகவா  இவ்வளவு 
என்று மயங்கி 
 துவள்கிறது  நெஞ்சம். 


 

Tuesday, September 20, 2016

தமிழின் அழகே

பாலும் கசக்கவில்லை
 பிழிந்த துணியும் கசக்கவில்லை
 என்று நயம்படச் சொன்னான்
புலவன்
 சாகும் தருவாயில் கூட.

தமிழின் அழகே அதனின்
இயம்புதலில்.
அதன் சிறப்பே அதனின்
தனித்தன்மையில்.

செல்வோமா என்பதை போவோமா
 கிளம்புவோமா,  பார்ப்போமா
 என்று பல விதமாக
 நேரம் காண்பதாக
 உரைப்பது
 என்னே அழகு.

இதே போல் எத்தனையோ
 எடுத்தாள எண்ணம்  
வியப்பு மேலிட பெருமிதம்
 பொங்க  மகிழ்வுறுகிறேன்
 தாய்த் தமிழை
 உணர்ந்து.

 


 

Saturday, September 17, 2016

கண்ட இன்பம்

வம்பு எதிலும் எவையிலும்
 எப்போது என்று காத்திருந்து
 சட்டென்று தாவி
 கழுத்தைப் பிடிப்பது  போல்
 கவ்விக் கிழித்துக் குதறி
கண்ட  இன்பம் என்னவோ ?

Thursday, September 15, 2016

நிலம் காணுதல் நிரந்தரம்.

மேலேயும் கீழேயும்
 ஒரு சந்திப்பு.

மேலே பறக்கும் ஓர் 
ஊர்தி  வானம் பிளந்து 
 காற்றைக்  கிழித்து 
பாய்கிறது 
இராட்சத   வேகத்திலே!

வான நீல  நிறம் 
 ஒரு பொழுதிலே 
 வெண்மையாக மாறி  
மீண்டும்  நிலமாக 
 கொப்பளிக்க.


 கீழே செல்லும் 
 ஊர்திகள்
 சில அசுர வேகம் 
 கொண்டு பாய
 சில மிதமான 
கோர்வையில் செல்ல 
பல ஊர்ந்து 
 நகண்டு   நகர்ந்து 
போகும் நேரம்   
விதமான 
போக்குவரத்துக்கள் 
நிலத்தின் மேலே என்று 
அறியுங் கால் 
 நிலத்தின்  அருமை 
நெஞ்சம் நிறப்ப! 


உயரப்  பறக்கும் 
 வானவூர்தியோ  
 தரை  நோக்கி 
 இறங்கும் கால் 
ஒரு நினைப்பு 

உயரப்  பறப்பின்   
 நிலம்  காணுதல் 
நிரந்தரம்.







  



Sunday, September 11, 2016

இயம்பு என்ற போது

தாய் நாட்டை விட்டு
வாழ்கிறான்
 பிழைப்புக்காக.

ஊரை விட்டு உறவை விட்டு
 வாழ்கிறான்
 பிழைப்புக்காக.

பணப்  பெருக்கம் இனப்  பெருக்கம்
 தேடி வர  வாழ்க்கிறான்
பெருமைக்காக

பதவியும் அனுகூலங்களும்
பெருகி நிற்க  வாழ்கிறான்
பெருமைக்காக

வாழ்கிறான் என்ற போது
ஒரு கேள்வி
எழும்புவதாக

கலாச்சரம் இழந்து  களையிழந்து
நிம்மதி இல்லாத
வாழ்க்கைக்கா ?

இயம்பு என்ற போது
வாயடைத்து நின்றான்
பொதுவாக.