Sunday, September 11, 2016

இயம்பு என்ற போது

தாய் நாட்டை விட்டு
வாழ்கிறான்
 பிழைப்புக்காக.

ஊரை விட்டு உறவை விட்டு
 வாழ்கிறான்
 பிழைப்புக்காக.

பணப்  பெருக்கம் இனப்  பெருக்கம்
 தேடி வர  வாழ்க்கிறான்
பெருமைக்காக

பதவியும் அனுகூலங்களும்
பெருகி நிற்க  வாழ்கிறான்
பெருமைக்காக

வாழ்கிறான் என்ற போது
ஒரு கேள்வி
எழும்புவதாக

கலாச்சரம் இழந்து  களையிழந்து
நிம்மதி இல்லாத
வாழ்க்கைக்கா ?

இயம்பு என்ற போது
வாயடைத்து நின்றான்
பொதுவாக.







No comments:

Post a Comment