Tuesday, December 31, 2013

மனதில் பதிய பாடிய பாடல்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
அளவு என்று இருத்தல்  அதற்காகத்தானோ
அளவுடன்  நிறைவாக இருத்தலே நியமம்.

அளவாக   உணவருந்தி  ஆரோக்கியமாக  வாழ்தல்
அளவுடன்  உடற் பயிற்சி செய்து திடமாக இருத்தல்
அளவு   என்றாலே கச்சிதம் என்று கொள்.

செலவில் அளவு தொலை தூரம் செல்லும்
அதிகச் செலவு இன்னல் பெருக்கும்
அளவு கோலே  எவற்றுக்கும்  துணை என்று நினை
.
தோற்றத்தில்  அழகு   அளவுடன் அமைய
திருத்தம்  என்று சொல்லே அளவாக அமைதல்  என்று பொருள் பட
 எதுவும் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பது  அளவு . என்று அறி

பழக்கமும், பழகுதலும்  ஒரு அளவுக்குள்ளே அடக்கம் 
தாண்டிப் போயின்  அது கொச்சை படும்  என்று நினைவில் கொண்டு
நிர்ணயமே இங்கு அளவு என்று புரிதல் அவசியம் .


அடக்கமே காணாத  இவ்வுலகு   மாந்தரிடம்
அளவு என்று சொன்னாலே வெறுப்படையும்  மக்கள்
நியாயம் ,நிர்ணயம் , திருத்தம்  என்று சொற்றொடர்கள்
மனதில் பதிய பாடிய பாடல்.




நீயே தான் !

 காடு மலை ஏறி
 வயல் வரப்பு கடந்து
 ஆறு கடல் தாண்டி
குதித்து வரும் இளவஞ்சிக் கோடியே

வீடு வரை வந்து
 வாசலில் நின்று
கதவைத் தட்டும்
அழகான் பொன் மயிலே


உன்னை எதிர்பாராது
சட்டென்று விழித்து
கண்ணைக் கசக்கும் போது  நின்ற
தேன்  மதுர இசைக் குயிலே


வருக என்று அழைத்து
வாய் நிறைய   வந்தனம் கூறி
மனம் கசிந்து உருகும் நேரம்
 வந்த  கவின் மிகு  பேரொளியே .


எனக்கு வழி  காட்டும் திசையே
என்னிடம் என்ன சேதி சொல்ல வந்தாயோ
என்று நெகிழ்ந்து நெக்குருகி நின்ற வேளையிலே
என் திவ்விய  திருமுகமே  திரு வாய்   மலர்ந்தாய் .

புன்னகையுடன்  வாய் திறந்தாய்  பின்
அருளினாய்  யாவற்றையும்  நிறைவுடன்
அள்ளிக் கொடுத்தாய்   குறைவில்லாமல்
கூத்தாடினேன் கொண்டாட்டத்தோடு
உன்னைக் கண்ட களிப்பிலே .


நீ யாரென்று எனக்கு தெரியவில்லையே
நீ யாரை இருந்தாலும்  சரி  என்ற போது
 என் நெஞ்சம் சலனமில்லாமல்  பேசியது.
இந்நேரம் நீ எதிர் கொண்டது  உன்னேயே  தான்



இது ஒரு வகை மண் வாசம். .

.பெருந் தொழிலுக்கு கைமாற்று வாங்கினான்
சிறிய விகிதத்தை   இழந்தான் தொழிலில்
 இருந்தும் பேசப்பட்டான் கடன்காரன் என்று .

பேசினவர்கள்  வேறு   யாரும் இல்லை
அவன் தன உடன் பிறந்தவர்கள்
கொக்கரித்தார்கள்  இவனைப பார்த்து

கேலி பேசினார்கள் வெகுவாக
ஏளனம் செய்தார்கள்  மிகுதியாக
அவர்களின் நிலை அறியாமல்

பட்டறி வும் படிப்பறிவும்  இல்லாதவர்கள் 
அட்டகாசமாக  சிரித்தார்கள்  ஆர்ப்பரித்தார்கள்
குடும்பச் சொத்தை  அப்படியே அபகரித்த பின்.

நீடித்தாதா  அவர்கள்  கேளிக்கை ?
வீழ்ந்தார்கள்  கடன் சுமையில்
நசிந்து கொண்டிருக்கிறார்கள்   தற்போது

பே சப்பட்டவனோ    தொழிலைச்  சுருக்கி
 வாங்கிய கை மாற்றை  அடைத்து  அமைதியாக
 வருமானத்தைப்  பெருக்கி  வாழ்கிறான்

பெருஞ் சொத்து மிஞ்சினது  அபாரமாக
பெருமிதம் பொங்க  பெரிதும் மதிக்கப்படுகிறான்
மதிப்பும் பெருமையும் பெருக  வாழ்கிறான்  அடக்கமாக

கை தட்டினவர்களுக்கு  இன்று தட்ட ஏதுமில்லை.
 வஞ்சித்தவர்கள்  இன்று  நிற்கிறார்கள் தெருவிலே
.அபகரித்த சொத்து இன்று கை விட்டுப்  போய்  விட்டது.

தடுமாறுகிறார்கள்  தாறு மாறாக இப்போது  முற்றிலும்
பணத்திற்கு பேயாக அலைந்தவர்கள் இப்போது இழந்தார்கள்
பணத்தையும் பெயரையும்  ஒருங்கே

இது இதிகாசமோ காவியமோ அல்ல
இது நாம் யாவரும் காணும் நிகழ்வு
செப்புகிறேன்  கவிதை வடிவிலே  கண்ணால்
 கண்டதை என் அறிவிற்கு எ ட்டிய வகையிலே.


.




Monday, December 30, 2013

என்னுடைய குட்டிப் பூ

காட்டிலே ஒரு பூ
அழகான் பூ பூத்தது
அது காட்டுப் பூ.

சேற்றிலே ஒரு பூ
 செம்மையான பூ கிடந்ததது
அது சேற்றுப் .பூ

தோட்டத்திலே ஒரு பூ
வெளிர் நிறத்தில் விரிந்தது
அது தோட்டப் பூ


விட்டிலே ஒரு பூ
என் வயிற்றில்  உண்டானது
என் குட்டிப் பூ .

பூத்து குலுங் கியது
படுத்து தவழ்ந்தது
 நடந்து ஓடியது.

படித்து சிறந்தது
மனம் புரிந்தது
என்னை மறந்த்தது.
 
தன வீடு தன குடும்பம்
என்று வாழ்கிறது
ஆனந்தமாக .

மனம் பரப்பி
இனத்தை பெருக்கி     
 பிஞ்சும் பூவுமாக தழைக்கிறது .

மரமும் கொடியுமாக
வாழ்வாங்கு  வாழ்கிறது
என்னுடைய குட்டிப் பூ

     

நட்சித்திரங்களே நட்சித்திரங்களே

 வானில் மின்னும் நட்சத்திரங்களே 
இரவை  ஒளி மயமாக்கும்  சித்திரங்களே  
துள்ளிச் சிதறும் கோலங்களே 
நீவீர்   எவ்வாறு நின்று நிடிக்கிறீர் ?  

கருமையில் தோன்றும் அழகுக் கூட்டமே 
தீப் பொறி போல் வட்டமிடும் சுடரே  
அங்கு ஒன்று இங்கு ஒன்றாகச் காட்சித்  தரும் பாங்கே 
நீவீர்  எப்படி திரண்டு  நிற்கிறி ர் ?

கார்மேக வண்ண மேகக் குவியலிலே 
ஓடி விளையாடும்  மினமினி தொடர்களே 
அவ்வப்போது கண்ணா முச்சி ஆடும்  விழிகளே 
நீவீர்  என்ன விதத்தில் தோன்றி மறைகிறிர் ? 

நட்சத்திரங்களே  வண்ண வானவில்லில் 
கோலோச்சும்  ஆனந்தச்   சிகரங்களே 
அற்புதமான  பொலிவிலே மெருகூட்டும்  திருவே   
நீவீர்  எங்கிருந்து இவ்வனவு அழகை கொணர்ந்தீர்?



Sunday, December 29, 2013

கண் ஆயிரம்

கண் அசைவிலே உலகைக் கண்டேன்
கண்ணால் உலகை அளந்தேன்
 கண் மூடி திறப்பதற்குள் மாற்றங்களை
கண்டு மலைத்து நின்றேன்.  

கண் பார்வையில் குற்றம் இல்லை அறிந்தேன்
மனக்கண்ணில்  குறைபாடு   என்று தெளிந்தேன்
கண்ணே மணியே என்ற  கொஞ்சலிலும்
 கண்ணையே  கண்டேன்.

கண்  பட்டது என்று   கூறக் கேட்டு ள்ளேன்
கல்லடி பட்டாலும் கண்ணடி கூடாது
 கண்டேன்   உண்மையை வாழ்விலே 
கண்ணின்  வீச்சைத்   தவிர்த்தேன்

கண் ஆயிரம் பேசும் காதலோடு .
கண் ஆயிரம் கட்டளை இடும் அதிகாரத்தோடு
கண் ஆயிரம் விளக்கம் தரும் உவகையோடு
கண் கோடி கனிவை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியோடு..

கண்களைப் பற்றி பாடும் போது
கண்ணிலே தோன்றும் ஒளி  மலர 
கண்ணிலே   கண்ணீர்  வழிய
கண்ணோடு  தெரியும் பெருமை  பொங்க
கண் இறும்பூது  எய்துகிறது  



காதல் எழுத்திலே

கண்ணிலே காதல் மின்ன
நெஞ்சிலே உவகை   கூட
நின்றாள்  மரத்தடியிலே 

கண்ணிலே குறும்புத்  தெரிய
 நெஞ்சிலே மகிழ்வு கூட
  மறந்து நின்றான் மரத்தின் பின்னாலே .

வழி மேல் விழி வைத்து
கால் கடுக்க நின்றாள்
வண்ண மயில்  அவனுக்காக .

 பின் நின்று முன் வரத் துடிக்க
 கால் முன் வர மறுக்க
கட்டிளங் காளை    மறுகினான் அவளுக்காக

கண்ணா மூச்சி   விளையாட்டுத் தொடர
அவளும் அவனும் உருக
வெளிக் கொணர முடியாத  தருணம்

எத்தனயோ காதல் இவ்வாறு அழுந்தி
மனதின் ஆழத்தில் உழல
காவிய்ங்கள் உருவாகி  வலுப்பெற

வாழ்க்கையில் காணாத சுகத்தை
 எழுத்தில் கண்டோம் 
மனம் கண்ட களிப்பு .




Saturday, December 28, 2013

நன்றியுமில்லை

என்னை நடத்திச் சென்ற கால்கள்
 தோய்ந்து நொந்து அழுகின்றன
ஏன்  எந்த அழுமுஞ்சி ஆட்டம் ?
என்று சற்று கோபத்துடன் எண்ண
கால்களோ மேலே நடக்க மறுக்க
அவற்றை ஏளனத்துடன் நோக்கி
இரைந்தேன் சீற்றத்துடன்
 என் வயதை மறந்து
கால்கள் செய்த தொண்டை  மறந்து
 வேகமாக நடந்த  நாட்களை மறந்து
உலகத்தை சுற்றியதை   மறந்து
பாராட்டத் தோன்றவில்லை
பழிக்கத்  தோறுகிறது
மனித மனமே
உனக்கு ஈவில்லை
இரக்கமில்லை
 நன்றியுமில்லை.  

வருத்தம் மிகுகிறது

நாகரிகமான இந்நாட்களிலே
செயல்கள் பல நாணச  செய்ய 
தலை குனிந்து  செல்ல  வேண்டிய  போது
நாம் நிமிர்ந்து நடக்கிறோம் .

சுற்றுப்புறத தூய்மை அறவே நினையாமல்
எவ்விடத்திலும் காறித் துப்பி
நினைத்த் இடத்தில் இயற்கை உபாதைகளை  கழி த்து 
நாம் பெருமையுடன் நடக்கிறோம்.

 கழிவுகளை அகற்றாமல் தெருவில் குவித்து
  எதையும் எங்கு  என்று பாராமல் எறி ந்து
 அவற்றை எரித்து கரும் புகையை உண்டாக்கி
நாம் பெருமிதத்துடன் நடக்கிறோம்..

நமக்கு ஏன் இவ்வளவு  பெருமை ?
நமக்கு எதற்கு இத்தனை மகிழ்ச்சி ?
நம்மை எண்ணினால் வருத்தம் மிகுகிறது
இருந்தும் நாம் தலை தூக்கி நடக்கிறோம்.


Friday, December 27, 2013

தண்ணீர் எங்கே?

தண்ணீர்  எங்கே  என்று ஏங்குகிறோம்  
தண்ணீருக்கு வழியில்லாமல்  தவிக்கிறோம் 
நீர் நிரம்பிய ஆற்றைக்  கண்டில்லோம்
கேணிகள் இன்று எங்கும் அறியோம்.


கிராமத்துக்கு மூன்று   கண்மாய் 
 வீதிக்கு  ஒரு நல்ல தண்ணீர்  கிணறு 
 ஊரைச் சுற்றி ஒரு  வற்றாத ஆறு 
யாவையும் ததும்பும் நீர் வளத்தோடு..
கண்டோம் அன்று.

வீட்டிற்கு நான்கு ஆழ்கிணறு 
வீதிக்கு ஓர் அடி குழாய் 
ஊரைச்   சுற்றும் ஒரு வறண்ட ஆறு 
யாவற்றிலும்  வற்றிய  ஊத்து
காண்கிறோம் இன்று.


தண்ணீர்ப பந்தல் அமைத்து  
வரு வோருக்கெல்லாம்   தாகம் தீர் த்து
மகிழ்ந்த தமிழர்களை  இன்று கண்டில்லோம் 
குடத்துனும் பானைகளுடனும்  அலையும்
பெண்டிரைக்   காணும் போதில் துணுக்க்குற்றோம்.

ஏன்   இந்த நிலை ? என்று எண்ணும் போது  
 நம்முடைய   அளவில்லா ஆசையும் 
 வளமான நிலத்தை  பாழாக்கும்  நோக்கும்  
 எதிலும்  பணத்தைக்  கருதும் உணர்ச்சியைக் கண்டு 
வகையறி யாத  வேதனையுடன் கலங்குகிறோம்     

 
 
 

Wednesday, December 25, 2013

ஒலியும் ஒளியும்

ஒலிகளின்  ஓசையில் 
மயங்கி நின்றேன்
ஒளிகளின்   பிரகாசத்தில்
தோய்ந்து நின்றேன் 
ஒளியும் ஒலியும் 
எழுப்பும் விகிதங்களில்
மலைத்துப்  போய்
சிலிர்த்து  சமைந்தேன்.

ஒலிகள் பாட்டாகவும் இசையாகவும் 
 குரல்  வழியாகவும்   
கருவிகள் மூலமாகவும்   
பறவைகளின்   ஓசையாகவும் 
குழந்தையின் மழலையாகவும் 
பெரியோர்களின் ஆசியாகவும்
நோக்கி வரும் போது
சிலாகித்து   மயங்கினேன்.


ஒளிகள்   வண்ண மயமாகவும் 
கண்களுக்கு   அழகாகவும்
குளிர்ச்சியாகவும்  குளுமையாகவும் 
செடி கொடிகளின் பசுமையும்
கடலின் நீல நிறமும் 
ஆகாயத்தின் வெண்மையும்  
பரந்த மணற்பரப்பின்   செம்மையும் 
கண்டு புளாங்கிதம் அடைந்தேன். 


ஒலிகள் வித்தியாசமான் 
 சத்தங்களி எழுப்பி 
கூ ச்ச்சலும் கத்தலுமாகி 
ஒளிகள்  கண்ணைப்  பறிக்கும் 
விதமான  கோலங்களில்  தோன்றி  
விகார விகிதங்கள் கூடி  
செவித்திறனும்  கண் பார்வையும் 
பறிபோகும்  நிலை அறிந்து 
மனம் பேதலித்து பின்னடைந்தேன்.

மனிதனின்அறிவின் மீது  
ஏள்ளளவும்  ஐயமில்லை எனக்கு 
அவனின்  செய்கையில் 
தோன்றும் அலட்சியமும் 
தான் தான் என்ற நினைவும் 
மற்ற எதைப்  பற்றிய சிந்தனையும் 
அறவே  மறந்த விட்ட தன்மையும் 
என்னை வெகுவாகப் கலங்க வைக்கிறது 
கை பிசைந்து நிற்கிறேன்  தன்னாலே 

நிலைத்து நீடுழி வாழும்

 காதல் புனிதமானது
நின்று நிதானமாக
 தங்கு தட்யில்லாமல்
நல்கி  நயந்து 
கூடி கொண்டாடி
 வரும் நேசம்
பாசமாகி  பண்பாகி
 விரிந்து நெடிதுயர்ந்து
 பயணமாக வரும்  ஒரு பற்று
 காதல் எனக் கொள்வோமாக .

காதல் கொச்சையாகும் நிலை
உடலும் உடல் சார்ந்த  போதில்
சிற்றின்பம் பெரிதாகும் நேரம்
 இச்சை  மிகையாகும் காலம்
இலை மறை காய்    மறைவாக
நிற்கும் தோதில் மாறி
 வெளிச்சம் காட்டும் வகையில்
 வெளியேறும் நிகழ்வு
ஒரு வெறுப்பான வினையை
எதிர் கொள்ளும் நிகழ்ச்சி.

காதல்
 புனிதம்  தோற்றும் தெய்விகம்
 அளிக்கும் சிறப்பு  அருமை
 தரும் மேலாண்மை  பெருமை
சாலப் பொருத்தம் பெறும் வளமை 
அன்பின் பரிணாமங்களை
வியந்து போற்றி விரிந்து
  அரவணைத்து ஆதரித்து
அழகான  நெக்குருகும்
விதமான   காதலே
தொடர்ந்து நிற்கும்  எப்போதும்,

துவளும் மனம்

கலையும்  கவியும்
ஆடலும் பாடலும்
வண்ணமும் ஓவியமும்
பேச்சும் நடிப்பும்
 மொழியும்  விஞ்ஞானமும்
தழைத்து  ஓங்கும்
 தமிழ் நாட்டில்
அரசாங்கமும் அரசியலும்
ஆட்சியும்  அலுவலர்களும்
நேர்மையும் நியாயமும்
தன்மையுடன் இல்லாததால்
செழிப்பு இல்லை
முன் னேற்றம் இல்லை
பின் தங்கி பின்னடடைந்து
சிதைந்து கலங்கி
சீர்ர லையும் அவல  நிலையை
காணும் போது
மனது துவண்டு
துடிக்கிறது பெரிதுமாக..


  


Tuesday, December 24, 2013

உன் கை உனக்கு உதவி.

தகிக்கும் வெயிலிலே 
 கொந்தளிக்கும் மனதுடன் 
 தணியாத  கோபத்துடன்  
வீறு கொண்டு எழுந்தான்
 


சாடினான் தீங்கு இழைத்தவர்களை
வாழ வும் மாட்டீர்கள்   நிறைவுடன் 
 வாழ விட மாட்டீ ர்கள்  நல்வழியில்
ஆவேசமுடன்   பேசி கலங்கினான் 


கேட்டவர்கள் நியாயத்தை உணர்ந்தார்கள் 
அவன் மீது இரக்கம்  கொண்டார்கள் 
பிற எதுவும் செய்ய முடியாமல் நின்றார்கள் 
அவன் பாட்டை அவனே மேற்பார்க்க வேண்டிய சூழ்நிலை.


இது தான் உலகம் பொதுவாக  என்று கொள் 
இன்னல் என்ற பொது யாரும் துணை வர மாட்டார்கள்
ஆதரவை கனவிலும்  நினனக்காதே 
உன் கை உனக்கு உதவி என்று கொள். 


பாடம் கண்டு மிரளாதே  மகனே  
புரிந்து செயல் படு தங்கமே 
நின்று நிதானமாக வாழ கற்றுக் கொள் 
இதுவே நிறைவான வழி  என் கண்ணே.
 
 

Monday, December 23, 2013

தவிப்பது

பெற்ற மூவருக்கும்
 ஒருங்கே யாவும் செய்து 
ஒன்றாக நினைத்து
வேறுபாடு ஏதும் இல்லாமல் 
பாகுபாடு  எவையும் காணாமல்  
ஒன்றுக்கு   இணையாக 
மற்றொன்று என்று கருதி 
 வித்தியசாம் இன்றி  நடத்தி
வளர்த்து நிலைப்படுத்தி 
நிமிரும்  போது 
எனக்கு தான் குறை வைத்தாய்  
எனக்கு அதை கொடுக்கவில்லை 
எனக்கு அதைச் செய்யவில்லை  
என்று குரல் எழும்பியது 
 மனம் நோகாமல்   என்ன செய்வது ?
பெற்றவர்கள் காயப்படுத்திய போதில்  
பொறுத்துக்கொண்ட மனது 
தற்போது பெ ற்  றது   சாட்டும்  குற்றச் சாட்டை 
தாங்க முடியாமல் தவிக்க 
பெற்றவர்களும் பெற்ற துகளும் 
படுத்தும் போது 
மனம் கல்லாகி  மாறியது 
 சலி த்துக் கொண்டே வாடி
 தவிக்கப் போகுவது  திண்ணம் 





தவிப்பது 

Sunday, December 22, 2013

அதவே சரி

காலில் வலி
தாங்கவில்லை
 கையில் கடி
பொறுக்கமுடியவில்ல
 மூக்கில் நெடி
 உணர இயலவில்லை
கண்ணில்  துடி
தடுக்கத தெரியவில்லை
தலையில் வெடி
சத்தம்  அடங்கவில்லை 
மனதில்  படி
அமைதி இல்லை
 சட்டென மடி
 அதவே சரி 

Saturday, December 21, 2013

அன்பே அழகே ஆராவமுதே

காணவில்லை உன்னை
காண விளைந்தேன் உன்னை 
  கண்டு கொள்ளவே  இல்லை நீ 
கண்டும் காணாமல் போனாய்

கோபம் தான் என்னவோ?  
குறை தான் எதுவோ?   
சொல்லாமல் செல்கிறாயே கண்மணி  
 ஏன்  என்று புரியவில்லயே!.

உன்னை  கண்ணின் இமை போல் காத்தேன் 
பூவாக எண்ணி ஆராதித்தேன் 
பொன்னாக கருதி மயங்கினேன்
  ஏன் இந்த பாராமுகம்?  

நான் செய்த தவறு தான் என்னவோ?
என் குற்றம் ஏதேனின் சொல் அன்பே 
திருந்தி வாழ்  ஆர்வம் கொண்டுள்ளேன் 
இந்த  ஒரு தடவை  மன்னிப்பாயாக 

தெரியாமல் பல் நிகழ்வுகள் காயப்படுத்தியி ருக்கும் 
  தெரிந்து சில நிகழ்ச்சிகள் புண் படுத்தி யிருக்கும் 
அறியாமல் செய்த பிழைகளை  மன்னித்து  
அறிந்து செய்தவைகளை கண்டித்து  
என்னை உன்னோடு பிணைத்துக்  கொள்ளடி  கண்ணே !


Thursday, December 19, 2013

நான் யார்?

நான் யாரென்று எனக்குத் தெரியவில்லை
நான் ஒரு மகள்  இருவருக்கு
ஒரு மனைவி ஒருவருக்கு
ஒரு தாய் மூவருக்கு
ஒரு  சகோதிரி ஐவருக்கு
என்று  புரிந்து கொண்டே.ன்.
ஆனால் உண்மையாக  நான் யார்   புரியவில்லை.

இத்தனை பேருக்கும் என்னை நினைவிருக்கமா?
நான் செய்தது நினைவில் தங்கியிருக்குமா?
 என்னை மறந்து வாழ்ந்தேன்
என்னை அழித்து வாழ்ந்தேன்
என்னையே அளித்தேன் அவர்களுக்காக
இன்று நான் இல்லை அவர்கள் மனதில்  
   நான் யாரென்று அவர்களுக்குத் தெரியாது .

எனக்காக வாழப் போகிறேன்
மிஞ்சியுள்ள காலங்களில்
எனக்கு எனக்காகவே வாழ்வேன்
 எழுதி கொண்டே படித்து
படித்துக் கொண்டே எழுதி
எழுத்வதே இனி என் பணி 
கண் மூடும் தருவாய் வரை


Wednesday, December 18, 2013

அலைந்தான் எதற்காக ?

ஓடி ஓடி உழைத்தான்
 நேரம் காலம் பார்க்காமல்
பணம் ஒன்றே குறியாக
நல்லியல்புகளை மறந்தான்
நல்  வாரத்தைளை களைந்தான்
 நன்னடத்தையை  உதறினான்


வென்றான் ஈட்டுவதில்
எவ்வழி என்று பாராமல்
 நல்வழி யில் சில கோடி
மற்ற வழியில் பல கோடி
பெருக்கினான் செல்வத்தை
தங்கமும் இடமும்மாக .


துவண்டான் வாழ்க்கையில்
இழந்தான் மனைவியை
தீராத நோய்க்கு
மீறின குழந்தைகளை
 தாரை வாரத்தான்
தீய பழக்கங்களுக்கு .


மிஞ்சியது பணம் மட்டுமே
தனிஆளாகித்   திரிந்தான்
மனதில் நிம்மதி இல்லை
பையில்  பணம் வழிய
தளர்ந்தான் வெகுவாக
 இறந்தான் யாருமில்லாமல் .

Monday, December 16, 2013

திருமணம் இன்று துர்மணம்

இரு மனம் இணையும் போது
மிகுந்த மணம் உண்டாகும் நேரம்
கலந்து உறவாட எண்ணும் வேளை
கூடி மகிழும் காலம்
நடை பெரும் நிகழ்வு 
திருமணம்  என்ற ஒரு காட்சி
திரு என்று அ டை மொழி
 அருளைக் குறிக்க
மணம்   என்ற சொல்
 வாசம் என்பதை எடுத்துரைக்க
 வாசம் நல்ல வாசனையை தெளிக்க
 வாசம் ஒரு இருப்பிடம் என்று கொள்ள
 அருள்  நிறைந்த இருப்பிடம்
திருமணம் என்று கொண்டு
சிறப்புடனும் சீருடனும்
காதலுடனும் இணைந்து
வாழ பணிப்பதே
திருமணம்  ஆகி வந்தது
இன்று அது உடைபட்டு
சட்டை மாறும் நேரம் கூட  தாங்காமல்
விட்டு விலகி முறிந்து
தூளாகி பொடியாகும் போது 
அது  துர்மணம் என்று கொள்ள நேரிட
வகையான  வாழ்வு  தொய் ந்து
துவண்டு நசிந்து போகும் நிலை
மனத்தை பாதித்து  வலியை .
செவ்வனே உண்டாக்குகிறது


காதல் என்றால்

காதல் வரும்முன் 
திருமணம் வந்தது 
திருமணத்தை அறியும் முன் 
குழந்தை பிறந்தது 
குழந்தையை வளர்க்கும் முன்  
அடுத்து ஒன்று உண்டானது 
அதை பெற்றவுடன்  
 மற்றொன்று பிறக்க நேரிட்டது 
 குடும்பம் பெருத்தது 
பொறுப்பும்  வந்தது 
உழைப்பு மிகுந்தது 
உடல் பாதித்தது 
வயது ஏறியது 
முதுமை  ஆட்கொண்டது 
கை நடுங்கியது 
அணைக்க முயலும் போது 
கால் பின்னியது 
அருகில் நெருங்கிய போது 
உடல் துவண்டது 
அருமை அறியும் போது 
கண்ணை  மூடும் வரை 
 காதலிக்கவே முடியவில்லை .
 

பாடம் புகட்டிய விதம்

அழகிய மலர் ஒன்று கண்டேன்
நறுமணம் பரப்பும் விகிதத்தை நோக்கினேன்
 பட்டு இதழ் ஒன்றை தொட்டேன்
பஞ்சை விட மென்மையான  நிலையை அறிந்தேன்
பச்சை இலை ஒன்றை  தடவினேன்
வழுக்கும் நிமித்ததை   தெரிந்து கொண்டேன்
நீண்ட கொடியை   வருடினேன் 
நெக்குருகும் தன்மையை உணர்ந்தேன்
பொடிதான வேரை துழா வினேன் 
  அதன் பிடிமானத்தை எண்ணி வியந்தேன்
சிறு செடி என்று நினைத்தேன்
அது எனக்கு பாடம் புகட்டிய விதமே  அருமை



மனமே, மனமே !

மனமே நீ எங்கு இருக்கி  றாய் ?
 மனிதனிடம்  என்று நீ சொல்வாய்
எந்த  மனிதனிடம்  காண்போம் உன்னை ?
நின்று நிதானமாக சொல்
 நான் காத்திருக்கிறேன் .


யோசிக்கிறாய் பலமாக
 நினைத்துப்  பார்க்கிறாய்    வெகு நேரமாக
உனக்கே குழப்பம்  வருகிறது
என் சொல்வேன்  மனமே
நான்  இன்னும் காத்திருக்கிறேன் .


காத்திருக்கும் போது நினைக்கிறேன்
மனம் என்ற ஒன்று மனிதனுக்கு இருக்கிறதா ?
இருந்தால் ஏன் இவ்வளவு கலகம், யு த்தம்
பொறாமை,  திருடு, பேராசை  என்று
நான் திரும்பிப்  பார்த்தேன் .


மனம், மனம் என்று கூக் குரலிடுகிறேன்
எங்கும் காணேன்  தேடினேன்  எங்கும் இல்லை
ஏன்  ஓடி ஓடி ஒளிந்து கொள்கிறாய் ? மனமே
அறிந்து  கொள்கிறேன் சடுதியில்
 மனம் என்று ஒன்று இன்று இல்லை


Saturday, December 14, 2013

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணாம்
எழுவதாம் கல்யாணாம்
எ ண் பதாம் கல்யாணாம்
தம்பதியர்கள்  முதுமையில்
 கல்யாணம்  ஏன் என்றதற்கு
பிறர் பார்த்து மகிழ்வதற்கு
பீடை கழிவதற்கு 
பிளளை கள்  கட்டாயத்திற்கு 
 ஆயுசு விருத்திக்கு 
என்று பல காரணங்கள்
என்று பல் காரியங்கள்
 என்று பல ஆசைகள்
 என்று அடுக்கிக்கொண்டே போவது
இன்று நடை முறை  .
அறுபதுக்கு மேல்  வாழ ஆசை
 எழுபதுக்கு பின் ஓட  ஆசை
 என்பதுக்கு மேல் குதிக்க ஆசை
 நூறுக்கு மேல் கும்மாளமிட ஆசை
என்று பல குரல்கள் ஒலிக்க
 பல  பேச்சுக்கள் எழ
பலர் கேள்விகள் எழுப்ப
இதுவும் இன்று நடப்பில்  தெரிய
 எதற்கு  இவ்வளவு ஆர்ப்பாட்டம்
 நினைக்காமல்  இருக்க முடியவில்லை
எதற்கு இவ்வளவு செலவுகள்
நினைத்து பார்க்க முடியவில்லை
அவரவர் விருப்பங்கள்
 அவரவர் வாழ்விலே   வெளிப்பட
யாரும் யாரைப் பற்றி  பேச உரிமை இல்லை 
என்ற  கருத்தோடு ஒதுங்க வேண்டும்.
இந்  நோக்கோடு செயல் பட்டால்
நல்லது என்று தோன்றுகிறது .



 

Friday, December 13, 2013

சமுதாயம் எங்கே செல்கிறது ?

சற்று முன் கண்ட நிகழ்வு
மனக் கண்ணை விட்டு அகல மறக்க
கண் முன்னே நடந்த நிகழ்ச்சி
பொய் என்று சொல்வதை கேட்ட பின்
மனம் துடிக்க கத்த வேண்டும்  என்று தோன்ற
வெடிக்க முடியாத  சூழ் நிலை அழுத்த
குமைந்த நெஞ்சோடு  விடு திரும்பி
வெதும்பும் உள்ளத்தோடு சாய்ந்து
 நிலையை எண்ணி எண்ணி உருகி
 அக்காட்சி   திரும்பி திரும்பி  தோன்ற
என்னே என்று அறிய முற்படும் உங்களுக்கு
சொல்ல விளையும் நேரம் வந்து விட்டது
ஒரு பெண் தன கணவனை   தாக்க
 அவன் குடி வெறியை  பொறுக்க  முடியாமல்
அவனின் அட்டுழியத்தை தாங்கிக் கொள்ள இயலாமல்
அவனை நிலைக்கு கொண்டு வர  அடித்தால் பளாரென்று
 அவனின் பொருத்தமற்ற செய்கையை  மறைக்க
அவளின் சீற்றத்தை அடாவடி  என்று பொருள் பட
ஊதி பெரிதாக்கி அவளை நிலை குலைய வைத்து
தவறின அனை மன்னிக்க விளையும் சமூகம்
திருத்தின மனைவியை அலங்கோலப்படுத்தும்  சமுதாயம்
எங்கே செல்கிறதோ என்று மனது படுத்துகிறது என்னை .


Thursday, December 12, 2013

தலை வாயில் நுழைவாயில்

தலை வாயிலில் நின்றாள் 
எழில் மங்கையொருத்தி 
கடைக்கண்ணால் பார்த்தாள் 
அழகிய வாலிபனை 
அவளும் நோக்க 
 அவனும் நோக்க 
கண்ணும் கண்ணும் பேச  
அவள் வெட்கி  நாண 
அவன் விம்மி சிலர்க்க்
காதல் வெள்ளோட்டம்  கண்டது .

தலை வாயில் நுழை  வாயிலாக மாற 
செம்மை படர நங்கை நல்வரவு கூற 
விருப்பத்துடன்  அவன் தன சம்மதம் அளிக்க 
பெற்றோர்களோ  தடைசொல்லி கோபம் அடைய
நிரோடை போன்ற காதல் தெளிவற்று நிற்க 
அவள் கண்ணீர் சொரிய  
அவன் வேதனையடைய  
கண்ணும் கண்ணும்  கரைய 
காதல் மெல்லோட்டத்தில் வந்த வழியே திரும்பியது.



தலை வாயில் நுழைவாயில் 

Wednesday, December 11, 2013

என் தாய்த் திரு நாடு

கவின் மிகு மலையும்
நிலவண்ணக்  கடலும்
நீண்டமணற்  பரப்பும்
பசுமையான நிலமும்
நெடிதுயரந்த  மரங்களும்
கொட்டும் அருவிகளும்
சலனமின்றி ஓடும் ஆறுகளும்
அமைதியான மக்களும்
நிறைந்த தமிழ் நாட்டிலே
 செம் மொழி பேசும் போதினில்
கனிந்துருகி அழகான நடையிலே
அருமையான சொற்களிலே 
நெக்குருகி   பாடிய  பாடல்கள்
எத்தனை எத்தனையோ
திருவாசகத் தெள்ளமுது
உருகாத  மனத்தையும்   உருக்க  
தேவார   சொல்லமுது
மனதில் நுழைந்து  பரவசமுட்ட 
தெய்விகம் கமழும்  இத் திரு நாட்டிலே
விஞ்சும் அருளுனர்வும்
எஞ்சும்  நெறி முறைகளும்
நெஞ்சை சொக்க வைக்க
என் தாய் திரு நாடு  இதுவே
 என்று பெருமிதம் கொண்டு
வலம்   வரும் என் போன்றோர்க்கு
எளிமையான  வாழ்வு  எழுத்தால் வலிமை 
பேச்சால் சுகம் விளைய  இதம் தவழ
  வேண்டும் என்று வேண்டி நிற்கிறேன்
 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி 








ஆண் என்ன பெண் என்ன ?

 மகனைப்  பெற்றவள் மக ராசி 
 அவளைக் கை எடுத்துக் கும்பிடும்  மண் ராசி
அளவில்லா மகிழ்ச்சியை தரும் மனராசி
அவளே  ஒரு முக ராசி
அவள் ஒரு பேரரசி .

மகளை ஈன்றவள்  ஒரு மூதேவி 
 அவள் வெட்டி சாய்க்கும்  ஒரு பெருந்தேவி
மனம் குமறி   வெதும்பி  அழுகும்  சிறு தேவி
அவளே ஒரு  பொருந்தாத  தேவி
அவள் ஒரு  வீண்டிக்கும் தேவி 

மகனோ மகளோ  என்று  விழும்  திரை 
மகன் என்றால் வெகு  நிறை
மகள் என்றாலே   படு  குறை
பிள்ளையே  ஒரு வரம்  என்கிறது மறை
குழந்தையே  ஒரு மட்டில்லா  இன்பம்  என்று பறை .


Tuesday, December 10, 2013

கண்டேன் உலகை அவ்வவாறே

அடக்கம் காணேன் எங்கும்
அமைதி காணேன் இங்கும் 
 சாதனைகள் செய்வோர் 
ஆட்டமும் பாட்டமும் 
 கலந்த அதிகாரம் 
கண்டேன் இங்கும் அங்கும் .

கண்ணிலே நீர் எதற்கும் 
முகத்திலே கவலை  இதற்கும் 
காரியம் கை கூடா  விடில் 
துயரம் அதி களவு பொங்க
நெஞ்சம் விம்மி வெடிக்க  
கண்டேன் அதற்கும் இதற்கும் .

சீற்றம் எழும்பியது சட்டெ ன்று  
சென்ற வழி  திரும்பியது  பட்டென்று 
நினைத்தது  நடக்கா விடில்
அடிதடியில்  இறங்கி கலகம் கொணர    
கொலை வெறியில்  களமிறங்கி 
கண்டேன்  குருதியும் சாவும் ,

சுற்றுகிறது  உலகம்  எப்போதும்
பகலும் இரவும் மாறுகிறது   எப்பொழுதும் 
கடலும் கொந்த ளிக்கிறது அவ்வப்போதே 
காற்றும் புயலாக சீறுகிறது  சில நேரங்களிலே 
நெஞ்சமும் ஏறி   இறங்குகிறது  எந்நேரமும்
 கண்டேன்  விநோதங்களை  அந்தப் போதினில் 


Saturday, December 7, 2013

பாக்கியம் இல்லை

சென்ற ஆண்டு மழை போதவில்லை  
இந்த ஆண்டு  மழை இல்லவே இல்லை  
அடுத்த  ஆண்டு மழை  இருக்குமோ இருக்காதோ 
வரும் ஆண்டுகளில்  மலை ஒரு சொல்  மட்டுமே 
 எத்தனையோ சேதங்கள் பாதகங்கள் கண்டோம் 
இதையும் ஏன்  விட்டு விட வேண்டும்  பார்ப்போம் 
நம்  குழந்தைகளுக்கு  மழை  ஒரு பாடப் பொருள்  மட்டுமே 
கண்டு அநுபவிக்க அவர்களுக்கு பாக்கியம் இல்லை 

Thursday, December 5, 2013

குப்பையும் வார்த்தையும்

குப்பையைக்  கொட்டினான்
 கூட்டி அள்ளினான
இடம் சுத்தம் ஆனது

வார்த்தைகளை  கொட்டினான்
வம்பை விலைக்கு வாங்கினான்.
இடம் ரண களமாயிற்று.


குமித்து வைத்த  குப்பையை
சேகரித்து தூரப் போட்டான்
இடம் துலங்கியது பளிச்சென்று.

கொட்டிய வார்த்தைகளை
திரும்பிப் பெற முடியாமல்  திணறினான்
இடம் கும்மிருட்டாகி  விட்டது.

குப்பையை விட வார்த்தைகள் மோசம்
குப்பை அழிந்து போகும்  சுவடில்லாமல்
வார்த்தை நின்று நிலைக்கும் அச்சுப பிசகாமல்





 

Tuesday, December 3, 2013

ஆடல் காணிரோ

ஆடல் காணிரோ
திரு விளையாடல் காணிரோ
இன்று நடக்கும் ஆட்டம் காணிரோ

அரசியல் ஒரு சூதாட்டம்
 அங்கு தலைவர்களும் கட்சிகளும்  
ஆடும் வெறியாட்டத்தை  காணிரோ.

வர்த்தகம் ஒரு களியாட்டம்
இதில்  பங்குச் சந்தையிலும் தொழிலும்
 நடக்கும் தில்லு முல்லு  ஆட்டத்தைக் காணீரோ.

கல்வி ஒரு சதிராட்டம்
இங்கு  படிப்புக்கும்  ஆசிரியர்கள்  பணிக்கும்   விலை
பணத்தின் பேயாட்டத்தைக் காணீரோ.

 மக்கள் பாடு திண்டாட்டம்
எதற்கும்  காசு என்ற நிலை  நிடடிக்கும் அவதி
சாமானியனை  ஆட்டிப் படைக்கும் ஆட்டத்தைக்  காணீரோ


Sunday, December 1, 2013

பிறந்து மடிவது நிர்ணயமே

வாடின பூ  என்னிடம் சொன்னது
என் என்னை பார்த்து ஒதுங்குகிறாய் என்று?
நான் வதங்கிப் போனேன் என்று தானே ?
 நான் சருகாகிப் போனேன் என்று தானே ?
 நான் பொலிவிழந்து கிடக்கிறேன் என்று தானே?

நான் பதிலுரைக்கும் முன்
 மீண்டும் பேசியது அழாக்  குறையாக
நேற்றுக்கு முந்திய நாள்  நான்
ஓர் அழகான மொட்டு  விரிய  காத்திருக்க
விடியும்  முன்  மெல்ல விரிந்து விட்டேன்  நேர்த்தியாக


நேற்றைய தினம் அ ன்றலர்ந்த மலராகத்  தோன்றி 
கண்டோரும் காணப் போவோரும்   வியந்து மகிழ
மெலிந்த காம்பிலே மொட்டவிழ்த்து   மனம் பரப்பினேன்
தென்றல் காற்றிலே அசைந்து ஆடி  இதமாகத் தவழந்தேன் 
என் அழகிலே நானே மயங்கி னேன் அன்று போதும்  முழுமையாக .


இன்று நான் ஆகாமல் தரையில்  விட்டேரறியப்பட்டுள்ளேன்
என் நிலைமை கண்டு உனக்கு ஏளனமோ!
 வாழ்வே இது தான் புரிந்து கொள் மானிடனே !
 இன்று இருப்பது நாளை இல்லை  யாவும்
மனிதனும், பொருளும் பிறந்து  மடிவது  நிர்ணயமே 

 




என்னே ஓர் அற்புதம் !

பே ரிரச்சலடுன் ஆடிப் பாடும் கடலே
 உன்னிடையே மேலும் கீழும  ஏறி இறங்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு  கும்மாளுமிடுகிறாய்?

குமறிக்  கொப்பளிக்கும்  கடலே
உன்னுள் கோரத் தாண்டமாடும் அலையே
எதற்கு நீ இவ்வாறு கோபம் கொள்கிறாய்?


 சலனமே இல்லாமல் தவழும்  கடலே
உன்னிடம் ஒரே  கோட்பாட்டில்  அடங்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு  நிதானமா இருக்கிறாய் ?

  ஆழம் தெரியாத  நீலக் கடலே
உன் மேல் அலங்காரமாக  சலசலக்கும் அலையே
எதற்கு நீ இவ்வாறு பதுங்குகிறாய்?

உன்னை எப்போது பார்த்தாலும் ஆனந்தம்
எத்தனை முறை கண்டாலும் அதிசயம்
 கனவோ நனவோ என்னே ஓர் அற்புதம்

Saturday, November 30, 2013

என் அருமைப் பெண்ணே


தெருக்  கோடியில்  அமைந்த
மின் கம்பத்தின் கீழ்  அமர்ந்து
விளக்கொளியில் படித்து
காலையி ல்  எழுந்து  நாளிதழ்களை
 தெருத்  தெருவாகப்   போட்டு
கல்லூரிக்கு விரைந்து
 புத்தகங்களை கடன் வாங்கி
 கட்டணத்தை கட்ட முடியாமல் கட்டி
 மாலையில் திரும்பியவுடன்
பக்கத்துக் கடையில்   கணக்கு எழுதி
பின் நட்டநடு நீசி வரைப படித்து  
கல்லோரியிலே முதல் மாணவியாக
பயின்று வெளியே வந்த நிஜந்தா
உன்னுடைய காலம்  இனி மேல்
விடிவு காலம்  பொன்னான நேரம்
 அதை பயனுள்ளாதாக மாற்றி  
நல்வாழ்வு வாழ்ந்து
ஏழை எளியோருக்கு  வழிகாட்டி
வாழ் என் அருமைப் பெண்ணே

புது வாழ்வு

எதுவும் செய்யலாம்  என்ற போது 
எதுவும் செய்ய  முடியவில்லை 
ஏதுவும் செய்ய  முடியும் என்ற போது 
எதுவும் இல்லை செய்வதற்கு 
என்ன வாழ்க்கையோ தெரியவில்லை 
என்று சலித்துக் கொண்டே வாழ்கிற  போது 
சட்டென்று  ஒரு பிடிமானம் தென்பட்டது 
என்ன என்று குறுகுறுக்கும் மனத்திற்கு 
விடையாக ஒரு பச்சிளங் குழந்தை 
அழ முடியாமல் அழுது கொண்டு  கிடந்தது
அதை தூக்கி எடுத்துக்   கொஞ்சினவுடன்  
நெஞ்சில் இருந்த சலனம் பறந்து ஓடியது  
மனது  துள்ளிக் குதிக்க எண்ணங்கள்  விரைந்து ஓட  
என்னால் எல்லாம் முடியும் என்ற  நினைப்போடு
புது வாழ்வை தொடங்க ஆவலாய் உள்ளாள்  நிஜந்தா.  



முலமும் மந்திரமும்

ஆனந்தக் கூத் தாடினான் தில்லையில் நடராஜன்
 கால் மாற்றி மாறி ஆடினான்  வேகமாக  சிற்சபையிலே
காலைத் தூக்கி தூக்கி ஆடினான் கூத்தன்  அம்பலத்திலே


அண்டம் அதிர  கால் சலங்கைகள் குலுங்க  ஆடினான்
 கங்கை  துளி சிதற  அடியார்கள் எல்லாம் கொண்டாட
ஆடினான் தாண்டவம்  வெகு நாகரிமாக  வெள்ளி அம்பலத்திலே

காணக் கண் கோடி வேண்டும்  திரு நடனத்தைக் களி ப்புடன் நோக்க
பரவசமாக  கரைந்த்துருகி நெகிழ்ந்தது  கணகள்  துடிக்க 
கண்ட காட்சியை   என் சொல்லி விளக்குவேனோ .

மெய் மறந்தேன் நிலை இழந்தேன்  பரமா னந்தத்தைக்  கண்ட பிறகு
 பரததிற்கே  ஓர் இலக்கணம்  வகுத்த பரமனை   தாழ்   பணிந்து
முலமும் மந்திரமும் கண்ட  மூக்கண்ணணை  சிறைப்பிடித்தேன் .



Friday, November 29, 2013

கானல் நீர்

கானல் நீர் போன்று ஆனது வாழ்வு 
கனல் தெறி த்தது  கடு வாயிலே 
அனல் பற ந்த்தது வாழ்விலே 
அடித்துக் கிளப்பியது  காற்றிலே

 துவண்டு போனாள்  அவள் 
வெடித்துச் சிதறினாள்  துண்டு துண்டாக 
 விம்மி கதறினாள்  விக்கி விக்கி 
எல்லாம் போய்  விட்ட பின்  அழுது என்ன பயன்.?

கோபம் தலை  உச்சிக்கு ஏறிய போது 
தன்னை மறந்து தன நிலை உணராது 
பேசின பேச்சுக்கு வந்த வினை 
இன்று வாழ்வு இழந்த நிலை 

நிதானம் நியாயம் பார்த்து  நிற்காமல்  
தன் பிடிவாதத்தால் கொம்பாகிப்  போனாள்
வெற்றுக் கொடி  கூட அவள்  மீது படராமல்
பட்ட மரமாகிப் போனாள் நிஜந்தா .



Monday, November 25, 2013

பிடிப்புடன் வாழ

பிடித்தது என்றும்  \
பிடிக்காதது என்றும்
 பிரிக்காது இருந்தும்
பிடித்ததுக்கு ஒன்று
பிடிக்காததற்கு ஒன்று
என்று பிடிவாதமாக
பிடித்து வைத்திருந்தும்
பிடிக்க வேறு ஒன்று மில்லை
என்ற நிலை போய்
எல்லாமே பிடித்து விட்டது
என்று வாழப் பழகியும்
குறையே காணும்  மனிதர்கள்
நிறைந்த உலகிலே
பிடிக்காமலே   வாழும்
நிர்ப்பந்தம்   பிடித்துவிட்டது
என்னை  பிடிப்புடன்.

நாட்டின் நடப்பு அவ்விதம்

அழுத குழந்தைக்கு
பால் கிடைக்கும்   சட்டென்று
அழாத குழந்தைக்கு
அடி கிட்டும்  பட்டென்று


அடம் பிடித்த வளுக்கு
 ஆலிங்கனம்  அன்போடு
அமைதியாய் இருந்தவளுக்கு
 ஓரு    மோதல்   கோபமாக


வெட்டிக் கொண்டு  போனவளுக்கு
அனுதாபம்  கூடை கூடை யாக
ஒட்டியே இருந்தவளுக்கு
காயம் மலை மலையாக

குடு ம்பத்தை பிரித்தவளுக்கு
அதி காரம்  தூள் கிளப்பும்
உறவினை சேர்த்தவளுக்கு
வெளியேற்றம்  வீண் முட்டும்


நடிப்பவளுக்கு என்றுமே
விமோசனம்   அத்கமாக
இயல்பாய் இருப்பவளுக்கு
பழி  பாவம். மிகுதியாக

இது  தான் இன்று உலகம்
நடக்கும் நடப்பு  நல்விதமாக
இது தான் இன்று நாம்
எதிர் கொள்ளும்  வெடிப்பு. பலவிதமாக

மழையின் சிறப்பு

தகை சால் சிறந்த மழையின்  தன்மை
வரம்புக்குள் பெய்தால் மகிமை
 வரம்பு மீறி கொட்டினால் வன்மை
வரம்புக் குறைய வந்தால் இன்மை
பொய்த்து விட்டால் எடுபட்ட கொடுமை.



Sunday, November 24, 2013

உங்களையும் இழுத்துக் கொண்டு

எழுத ஆரம்பித்தால்
 எழுதிக் கொண்டே இருப்பேன்.
என்ன எழுது வேன்
 எனக்குத் தெரியாது
  எதற்காக எழுதுகிறேன்
 எனக்கு புரியாது
 ஆனாலும் எழுது வேன்
 புரியாதத்தையும் தெரியாததையும்.

 வார்த்தைகள் வந்து விழுகின்றன
எண்ணங்கள் வந்து தொடும் போது
எண்ணங்கள் தன்னிச்சையாக தோன்றுகின்றன
காட்சிகள் மனக் கண்ணில் விரியும் போது
காட்சிகள் தெரிகின்றன வெளிச்சமாக
 கண்களை  பிரித்து நோக்கும் போது
கண்ணால் கண்டது எல்லாம்  வண்ணக் கோலங்கள்
 கவிதையில் புனையும் போது கொஞ்சி குலாவி கும்மாளமிடுகின்றன .
இராகமும் மெட்டும்  தாளமும் சேர்ந்தால்
மனதை மயக்கும்   சூழ்நிலை தன்னோலே வந்தமையும்
என்னுடைய எழுத்துக்கு விளக்கம் சொல்லப் போய்
எங்கேயோ போய் விட்டேன் என்னை அறியாமல்

மொழி மறந்தவன் தோலி இழந்தான் போல்.

தாய் மொழி  தாயைய்ப்  போல் அன்பானது
இன்னல் வரும் போது  நாம் சொல்வது அம்மா
வலி தாங்க முடியாத  போது  நாம் கதறுவது அம்மா
மொழியின் நினவு அதிகம் தோன்ற
 இன்று பிள்ளைகள் பேசும்
ஆங்கிலக் கலப்புடன் தமிழ்  பேச்சு
 என்னை  கண் கலங்க வைக்கின்றது.

 ஆதி தமிழன் தாயை ஆத்தா  என்று அழைத்தான்
 இன்றும் என் குழந்தைகள் என்னை அவ்வாறே  அழைக்க
 தந்தையை அப்பச்சி என்று  எங்கள் குல வழக்கப்படி கூப்பிட
  நாங்கள்  யாவரும் தமிழ் நாட்டை விட்டு மற்ற  நாடுகளில்  வாழ்ந்தாலும்
 அன்று  ஆத்தா மறைந்து அம்மா  தோன்றினாள் 
அம்மா இன்று இல்லை மமமி  ஆகி விட்டாள்
தமிழன் வெளக்காரனாகி விட்டான்  நிறத்தை தவிர.


நம் மொழியில் பேசுவது இயல்பு  மிக எளிது
தவறி விழுந்தோம்  என்றால் ஆத்தாடி என்போமே தவற
மம்மி  என்று நாம் ஒங் காரமிடுவதில்லை .
ஆங்கிலேயன் நம் நாட்டில் இருந்து கொண்டு போனான்
செல்வத்ததையும், பொன்னையும்,  உவகையும்
 விட்டுச் சென்றான் அடிமைத்தனத்தையும் கலப்படத்தையும்
மொழி மறந்தவன்  தோலி இழந்தான்  போல்.





Saturday, November 23, 2013

நான் ஒரு தமிழனடா

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வள்ளு வனுக்கு இரண்டடி சாத்தியம்
ஈற்றடியில்  கொண்டு வந்தான்
 உலகின் சிறப்பை  வானின் உயர்வை
உழவனின் வாழ்வை,மழையின் பலனை
மண்ணின்  வாசனையை மனிதனின் குணத்தை
வல்லவனுக்கு  வல்லவன் வள்ளுவன்.

உலக மறைப் புலவன் வள்ளுவன்
சுருங்கக் கூறி அகலப் புரிய வைத்தான்
திருக்குறள்  சிறு சிறு அத்தியாயங்கள்
பத்து குற ட்  பாக்கள்  பத்து பொருளைக் கூற
நூற்றி முப்பத்தி மூன்றும்  நெறியை தூக்கி நிறுத்த
வள்ளுவன்  நிலை பிற ழா த  வாழ்விற்கு
இலக்கணம் வகுக்கிறான் எளிமையாக.


தமிழில் எது இல்லை என்று நான் நினைக்க
இல்லாதது ஏதும் இல்லை என்று மனம் கூவ
 இலக்கிய  சுகமா  நாடக  நயமா
இலக்கண தெளிவா  கவிதை தெள்ளமுதா
வழிபாட்டு பாடல்களா  இதி காசக்  காவியங்களா
எதற்குப் பஞ்சம் எதற்குமே  இல்லை என்று  எண்ணி
 தலை நிமிர்ந்து  நடக்கிறேன் தமிழன் என்ற பெருமையோடு





Thursday, November 21, 2013

அமைதியின் வலி வெற்றியின் வழி

போராட்டம் சத்தமாக இருக்க வேண்டுமா?
கத்தி  மறி த்து  அடித்து  தான் செய்ய வேண்டுமா?
உடைத்து உதைத்து  சிதறி  தான்  முயல  வேண்டுமா?


இல்லை
மனம் ஒன்றாமல்    விலகி நின்று
மனதில் உறுதி பூண்டு   எதிர்ப்பை  பொருட்டாக  கருதாமல்
வெற்றியே குறிககோளாக நினைக்க  வேண்டும்

 
வன்முறையும் அடாவடியும்  பலன் வேகமாகத்  தரும்
வந்த வேகத்தில் அவை அடித்துச்  செல்லப்படும் 
ஆக்கப் பூ ர்வமான தடுத்தல்  மிக விவேகம்
அது   நின்று பிடிக்கும்.

இது தான் காந்தியின்  வழி   என்று நினைக்கலாம் .
எத்தனை  மக்கள் இவ்வியுகத்தை  கை பற்றினார்கள்
அவர்களின்  அடையாளம் .நமக்கு தெரியவில்லலை.
அவர்கள் சாமானியர்கள் 


ஆயிரக்கண கானோர்  சென்ற வழித்தடம்
 பெண்கள் கை பிடித்த  முறை ஆண்டாண்டாக
சாதுர்த்தியமும் சாமர்த்தியமும்  அடைய முடியாதது  ஏதுமில்லை
 அமைதியின்  வலி  வெற்றியின்  வழி

உனக்கு எப்போது விடுதலை

கண்டேன் சீதையை
கண்டேன் அவள் கோலத்தை
கண்டேன் அவள் வி ர்க்தியை
 கண்டேன் அவள் ஏக்கத்தை.
 கண்டேன்   அவளின் எழிலை.

துவண்டு இருந்தாள் 
துணிவில்லாமல் இருந்தாள்
துணி போல் இருந்தாள்
துனபறு தப்பட்டிருந்தாள்
துடித்து  போயிருந்தாள் .

பெண்ணிற்கு  வரக் கூடாத துன்பம்
பெண்மையை  சோதித்த  கொடுமை
பெண்ணினத்தை   அவமானப்படுத்திய விதம்
பெண்கள் தலை குனிய வைத்த  உண்மை
பெண்ணே உனக்கு எப்போது  விடுதலை ?


கம்பன் காலம் முதல் பெண் ஓர் அடிமை
 இன்றும்  அவள்  ஓர் அபலை
 எப்போதும் அவள் ஒரு சுமை தாங்கி
 கண்ணீரும் கவலையும் அவளுக்கு சொந்தம்
  தாங்கி தாங்கி அவள் நொந்து போகிறாள்

Monday, November 18, 2013

என் வெற்றி

எனக்கு ஒரு  வெற்றி
 உண்மையாகவே வெற்றி .
அது ஒரு கோப்பை.
 அது வே ஒரு சன்மானம் .

நான் உயர்ந்து நிற்கிறேன்
படித்த  மனிதர்களின்  நடுவில்.
என்னுடைய அழகா னவலைதளத்தில்
அதில் ஒரு முறை அல்ல  பல முறைக
 நுழைந்து நுழைந்து செல்வேன்
 எத்தனை தடவைகள் என்று தெரியாமல் .

என்னுடைய எழுத்துக்கள் எனக்கு
ஒரு வடிகால்  ஒரு இளைப்பாறும் இடம்
அவைகளுடன்  மணிகணக்காக  இருப்பேன்
எழுதுவேன் எனக்கு  தோன்றி யதை எல்லாம்
நன்றாக இருக்கிறதோ நன்றாக இருக்காதோ
என்று ஒரு காலும் நினையாமல்.


என்னுடைய வலை தளம் ஒரு சிறு படத் தொ குப்பு
அதில் வரைவுகளும் வண்ணங்களும் இருக்கா
 எழுத்துக்கள்   வண்ணங்களில் சொக்கி நிற்க
அனுபவங்கள் சொல்லில் வடிவு  எடுக்க
இயற்கையின்  சலனமில்லா நேர்த்தியை வர்ணிக்க
 மனிதனின் குணங்களை  அவ்வவாறே வெளிப்படுத்த
சொற்களோடு எ ன்னுடைய நினைவுகளும் ஒன்று சேர
எனக்கு தெரிந்த மொழியில் அவற்றை  எழுத
அவை சொல்லோவியமாக பதிய
 படைப்பாற்றல் என்னை  உலகுக்கு வெளிப்படுத்தியது.



மிகப் பெரிய வட்டம் எனக்கு அமையவில்ல
எனக் கெ ன்று ஒரு சிறு குழா ம் என்னை உற்சாகப்படுத்த
நான் இடை விடாமல் இலக்கி ய உலகில் வல ம் வருகிறேன்.
என்னுடைய  எழுத்து வாழ்க்கை தாமதமாக ஆ ரம்பிக்க
நான் எழுதுகிறேன் யாரையும் நம்பி அல்ல
பரிசை வென்றேன் எனறு  நினைக்கையில் மகிழ்ச்சி உண்டாகி
என்னுடைய மாணவப் பர்வத்த்ற்கு என்னை அழைத்துச் செல்ல
 அன்று நான் வாங்கிய ம் கோப்பை என்னுடைய மனக் கண் முன் தோன்ற
விம்முகிறேன் விசும்புகிறேன் எனக்குள்  பரவசமாக .


கண்களும் வயிறும் தெறிக்க

பார்வை பல விதம்
 எண்ணமும் பல விதம்
நல்லதும் உண்டு 
கெட்டதும்  உண்டு 

கண்ணால்  அடிபடுவது
திருட்டி  என்று வழங்கப்படும் 
காலை வாங்கி கையை முடக்கி 
 உடம்பை படுத்தி சீரழிக்கும்.

கவலையைக் கொடுத்து 
செல்வத்தை பறித்து
வறுமையில் வாடி சொல்லொண்ணாத்
துயரத்தை உண்டாக்கும்.


வயிறும் அவ்வாறே   
வயிற்ரெ  ரிச்சல்  காவு வாங்கும் 
சாபமும் சாட்டையும் ஒன்றே
இரண்டும்  வகையான்   கொடுமை


கதை என்று நினைக்க வேண்டாம் 
 உண்மை நிகழ்ச்சி  ஒன்று 
ஒருவன் பார்வை   பட்டு 
அழகான கட்டிடடம்  பிளந்த்தது..


துவண்ட பெண்மணியின் 
ஆத்திரமும் ஆவேசமும் 
அவளை  நிலை குலைய  வைத்த
கயவர்களை  சாம்பலாக்கியது


நம்பவும் முடியவில்லை 
 நம்பாமல் இருக்கவும் இயலவில்லை
கண்டதை எழுதுகிறேன் 
 கேட்டதை கவியாக்குகிறேன்..

  

Sunday, November 17, 2013

பலே ராமன்

வாழ்வது கொஞ்ச நாட்கள்
 அதில்அக்கப்போர்  மிகுதி
வம்பு வழக்கும் அதி கம்
 திமிரும்  அடா வடியும்  நிறைய
இப்படி வாழ்கிறான்
 எனக்கு தெரிந்த ராமன் 

தெரிந்தது அவனுக்கு  எள்ளளவு
தலைக்கன்மோ உலகளவு
போக்கே தனி கட்டுப்பாடதது 
கை நீட்டி  சம்பளம் வாங்கிக் கொண்டு
கொடுப்பவரிடமே தன திமிரைக்  காட்டுவான்
ராமன்   பலே கையாள் .


ராமன் தன நிலை அறியாமல்  வாழ்கிறான்
அவனுக்கோ வயது எழுபத்திஐந்து 
பல அடிகள் பட்டும் திரு ந்தவில்லை
அடிகள் சாதராணம் அல்ல மரண  அடிகள்
இருப்பினும் அவன் தன நோக்கத்திற்கு வாழ்கிறான்
இது ஓர் அறியாமை ஓர் இயலாமை .

நாளை நாம் இருப்பது உறுதி அல்ல
 ராமனோ தான் சாசுவதம் என்றி நினைக்கிறான்.
 மகனின் வாழ்வில் அமைதியை பங்கப்படுத்தி 
மகளின் வாழ்வில் சூறாவளி யை உண்டாக்கி
போகும் இடமெல்லாம் கெடுதல் செய்து
 வாழ்ந்து  கொடிருக்கிறான் ராமன்.



 

Saturday, November 16, 2013

கெட்ட தை மறவாது

நல்லதை  நினைவு  கொள்
கெட்டதை மற .
என்று சொல்வது எளிது
 செய்வது கடினம் .
இருந்தும் எல்லோரும்
சொல்வது இதுவே
  நானும் சொல்வேன்
அதை வேகமாக .

சொல்லும் வார்த்தை சுடும்
செய்யும் செயல்  கொதிக்கும்
சுடு வதையும் கொதிப் பதையும்
எப்படி மறப்பது 
இதத்தையும் இனிமையும் 
 மறந்து விடலாம்
தகிப்பதை தா ங்கிக் கொள்ளலாம்
 மற என்பது முடியாது.



நான் பேசுவது பிடிக்காது
என் பேச்சு  ஒரு மாறுபாடு
மாற்றம் ஏற்கப்படுவதில்லை
மாறாக  எதிர்க்கப்படும்
இருந்தும் என் நிலை பெயராமல்
 சொல்லுகிறேன்  வினயமாக
வாளாவிருப்பது   பொறுமை  அல்ல
அது மிகுந்த கோழைத்தனம்.


கவனம் கொள்ளுங்கள்  
 தீமையைக் கண்டு  விலகாதிர்கள்
 வேரோடு  பறியுங்கள்
 கூண்டோடு  பிடுங்குங்கள்
மீண்டும் தலை தூக்க விடாமல்
சாகடியுங்கள்  தீயவர்களை.
ஆற்றுங்கள்  இப்பணியை
இப்போதே  இந்த வினாடியே 




நானும் ஒரு கருவேப்பிலை.

திரும்பி பார்க்கிறேன்
 திரும்பும் போது
கண்டேன்  எதை
காண வேண்டாம்
என்று  நினைத்தேனோ.

கண்டதைச் சொல்கிறேன் 
என் வழிப் பாதையிலே
நான் கடந்த வேதனைகளை
மறக்க வேண்டும்
என்று நினைத்தேனோ.


மறந்ததைச் சொல்லுகிறேன்
என் நினவுகளிலிருந்து 
நான் அப்பாவியாக
இருந்த நாட்களை
எண்ணும் போது


எனக்கு நடந்த  நிகழ்ச்சிகள்
 எதை விட்டு   கழிப்பது
எதை விடாமல்   சேர்ப்பது
சொல்ல  முடியாமல்
தயங்குகிறேன்

நான் கண்டது  மிகப் பெரிதில்லை
 அது ஒரு கருவேப்பிலை
வாசத்திற்கு  சேர்ப்பதும்
உபயோகமில்லை எனறு எறிவதும்
  அதற்கு வழி  முறை.

 வழி  வழியாக  வருவது
கருவேப்பிலைக்கு  உவகை
எனக்கும் அதில் உடன் பாடு
என்னுடைய தடமும்  அதுவே.
சேர்த்துக் கொள்வதும்  விடுதலும்


காலம்  ஓடுகிறது  வேகமாக
 நானும் வாழ்ந்து விட்டேன்
 மிகுதியாக  சற்றுக்  காலம் 
வாழ்ந்து விட்டால்  கவலை யில்லை
நானும் ஒரு கருவேப்பிலை.

  

Thursday, November 14, 2013

தளர்த்தி மாறி வாழ

வேலைப்  பளுவிலே மறந்தான் தன்னை 
உண்  மறந்தான் உடை மறந்தான் 
குடி மறந்தான்  

வேலை வேலை என்று திரிந்த அவனிடம் 
அன்பு இருந்தது  கனிவு இருந்தது 
 களிப்பு இல்லை.

வேலையைத்  தவிர அவனுக்கு ஏதும் இல்லை 
பாசம் தெரியும்  நேசம் தெரியும் 
 எல்லாம்  தெரியும் 

வேலையை நேசித்து  வாழ்ந்தான் 
மனைவியோடு அன்போடு  வாழ்ந்தான் 
ஏனோ  மனைவிக்கு புரியவில்லை 

  அவளுக்கு எதும்  வெளிப்படையாக  வேண்டும்  
அன்பும் ஆதரவும் ஆலிங்கனமும் 
வெளியில் போவதும் வருவதும்  

அவனுக்கோ எதும்    அளவாக இருத்தல் வேண்டும் 
பாசமும்  அரவணைப்பும்   நான்கு சுவற்றுக்குள்
எல்லாமே வீட்டிற்குள்  
.

பிணக்கும்  சண்டையும் அவ்வப்பொழுது தோன்றின 
அவன் கோபப்பட  அவள் அழுக 
சுற்று சலனங்கள் ஏற்பட்டன.

இருவரும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் 
 அவனும் தன கெடுபிடியைத் தளர்த்தி 
அவளும் தன எண்ணத்தை மாற்றி. 




Wednesday, November 13, 2013

சத்தியம் தவறினான்

பேசினான் என்றால் 
 அதில் பொருள் உண்டு 
அதில் நேர்மை உண்டு 
அதில் சத்தியம் உண்டு .

அப்பேர்  பட்ட மனிதன் 
மயங்கினான் தவறினான் 
 குழறி னான் வீழ்ந்தான் 
இறுதியில்  பரிதாபமாக

ஒரு சிறு தவறு 
ஒரு பெரிய வீழ்ச்சி 
உருக்குலை ந்தான் 
எ ழும்ப முடியாமல் .

ஒரு சிறு  பொய்  சொல்லி 
ஒரு பெரிய  உண்மையை மறைக்க
அது அவனை மாய  வலை யில் பின்ன 
கவிழ்ந்தான் தலை குப்பற.

சத்தியம் தவறினான் 
பொலிவு இழந்தான்  
புகழ் மறைய 
இகழ்வு அடைந்தான் 

 
  
 

நான் ஒரு ஜடம்

நான் யாரென்று அறியேன் 
என்னை ஒரு மரம் என்று நினைக்கலாமா
கூட வே  கூ டாது மரத்தை என்னோடு ஒப்பிடலாமா  
மரம் தரும் பலன்களை என்னால் தர முடியமா 
நிழலும் பழமும் கனியும் தரும்  விருட்சம் 
நான் ஒரு கல் என்று கொள்ளலாமா 
தவறு பெரிய தவறு கல்லாக நான் ஆக முடியுமா 
காலத்தை வென்ற கல்லும் நானும் சரியாக முடியுமா 
அதன் பொறுமை எங்கே நான் எங்கே 
இப்பத்தான் உன்னை பற்றி தெரியுதா 
 என்று குறு நகையுடன்  கேட்கிறாயா
உன்னுடைய கிண்டல் அர்த்தமுடையது  
நான் ஒரு தேவையில்லாத  ஜடம் 
என்று எனக்கு நல்லாவே தெரியும்.
இருந்தும் வாழ்கிறேன்  எனக்கு 
 விதித்த நாட்கள் முடியும் வரை.


  


Saturday, November 9, 2013

இலக்கிய உலகிலே

காதல் கவிதைகள் கொடி கட்டி பறக்க
புதுக் கவிதைகள் சிலாகித்து நிற்க
 பாசக் கவிதைகள் கண்ணீரை  வரவழைக்க
உண்மை சொல்லும் கவிதைகள் புறக்கணிக்கப் பட
பக்திக் கவிதைகள் சற்று ஆதரிக்கப்பட
பொதுவாக கவிதைகள் ஒதுக்கிவைக்கப்பட
இலக்கிய உலகில் கதைகளும் ,உரை நடைகளும் ஒங்க
நல்ல கவிதைகள் கேட்பாரற்று கிடக்க
 கவிஞன் துவண்டாலும்  படைப்பதை நிறுத்தவில்லை
அவனால் நிறுத்த முடியவில்லையே.

எண்ணங்கள் நூலிலே

 ஒரு சிறு எண்ணம்
 மனதில்  தோன்ற
தட்டினேன் மடி கணினியில்  
எண்ணங்களும் கருத்துக்களும் 
மாறி மாறி வர 
தொகுப்பை அமைத்தேன்.

அழகாக   வந்தது 
கொத்தாக  மலர்ந்த்தது 
மணம்  பரப்பியது  
புத்தக வடிவத்தில்  
தாள்கள் சேர்ந்த  உருவத்திலும்  
 இ நூல்  என்ற தோற்றத்திலும்.

சேர்ந்து வாழும் காலம் போய் 
தனித்து வாழும் நிலைமை வந்து 
தான் தன குடும்பம் என்று பிரிந்து 
தனியாகவே வாழும்  நேரத்தில் 
மாறிக் கொள்ளும் வகையிலே 
பழகிக் கொள்ளு ம் பயிற்சி  புத்தக வடிவிலே. 


தனிமை பாதிககாது   என்ற நினைப்புடன் 
தன்னால் முடிந்த உதவி நல்கி  
இயன்ற வரை  இனிமையைக் கொடுத்து 
நலிந்தோர்க்கு  வெகுவாக உதவி 
 சிறப்புடன்  வாழ்ந்தால்  பெரும்   பயன் 
என்று   வலியுறுத்தும்  நூலை  எழுதினேன் .

இது பழம்  பஞ்சாங்கம்  எனலாம்.
இது எல்லோருக்கும் தெரிந்தது  எனலாம் 
இது  ஒரு கோட்பாடு 
 இது ஒரு தெளிவு
இதில் காண்பவை நடந்தவை 
வழி  முறைகள் வெவ்வேறு  வகையானவை.
.




தேதியும் நாளும்

தேதி எனக்கு நினைவில்லில்லை
நாள் எனக்கு தெரியவில்லை 
மனதில் எதுவமில்லை
எந்த சிந்தனை யும் இல்லை
நான் அமைதியை நாடுகிறேன்
எதற்கும் அவசரமில்லை 
அடர்த்தியான மரங்களுக்கு  நடுவே
வாழ் விரும்புகிறேன்
அதுவே சொர்க்கம்.


Friday, November 8, 2013

நிலை மாறும்

மனம் மாறும் மனிதனே
இன்று ஒன்று பேசி
நாளை ஒன்று கூ றி
நேரத்திற்கு ஏற்ப  மாறி
அதைச் சொல்லி
இதைச் சொல்லி
வாழும் மனிதா
 வாலுடன்  வலம்  வரும்
 குரங்கைப் பார்த்து 
 நீ சொல்லுகிறராய்
கிளைக்கு கிளை
தாவும் அற்பமே  என்று.

தீர்க்க தெரியாததால்

கண க்கு கேட்டால்
 ஒரு கிறுக்கல்
 வழக்கு போட்டால்
 ஒரு  வழுக்கல்
நேரே வாதாடினால்
 ஒரு  சறுக்கல் 
எப்படிச் செய்தாலும்
 ஒரு விலகல்
முடிவு என்று  வந்தால்
ஒரு ஒட்டம்
தீர்வு என்பது இல்லை
 தீர்க்க  தெரியாததால்
 

Wednesday, November 6, 2013

எங்கு இருக்கிறானோ ?

தொழில்  செய்தான்
 என்ன   எது
 என்று தெரியாமல் .

 செலவழித்தான்  செல்வத்தை
ஏன் எதற்கு
 என்று  தெரியாமல்

பார்த்தார்கள்  யாவரும்
எப்படி எவ்வாறு
 என்று அறியாமல்

வியந்தார்கள்   எல்லோரும்
 செல்வம் வந்த வழி
 என்ன என்று புரியாமல்

புரண்டான் காசில்
தவழ்ந்தான்  பணத்தில்
தலை கால் தெரியாமல்

உருண்டான் தலை  குப்பற
 வெகு வேகமாக
எங்கு இருக்கிறானோ  தெரியவில்லை ?

Tuesday, November 5, 2013

பால் மரக் காட் டினிலே

சொர்ண பூமியில்
ரப்பரும், செம்பனையும்
நிறைந்த தோட்டங்களில் 
வாழ்ந்த இந்தியனே !

மண்ணுக்கு நல்கினாய்
உடலையும் உயிரையும்
 வெயிலிலும் மழை யிலும்
பாடுபட்டாய் இந்தியனே!

நாட்டுக்கரா னாகி விடுகிறான்
மலாய்க் காரன்  சலுகைகளும்
உரிமைகளும் செழிப்பும்
 மித மிஞ்சி  அடைகிறான்.

வியாபாரமும் விநியோகமும்
படிப்பும் முன்னேறமும்
சீனனை  உயர்த்த
ஏற்றம் கண்டுள்ளான்.

உழைப்பைத் தவிர ஏதும் தெரியாத
கல்வியும்  விருத்திக்காமல்
 வாழ்கிற  இந்தியனோ  இ ன்று
நிலையிழந்து  விட்டான்


தோட்டங்கள் சுருங்க துயரங்கள்   தொடர
வேலையிழந்து திருடு  கொலை
என்ற வன்முறைகளைப்  பழகி
துச்சமாக மதிக்கப்படுகிறான்

மலாயா நாடு  முற்றிலும் மறந்த்தது
 வளத்திற்கு  காராணமான இந்தியனை
நினைக்கவில்லை எள்ளளவும்  அவனை 
சோபையிழந்து நிற்கிறான்.


தாய் நாடே தெரியாது  வாழ்ந்து
அண்டிய நாட்டில்  தள்ளி வைக்கப்பட
இந்தியன் எங்கே செல்வான்  வாழ்விற்கு
எப்படி வாழ்வான்  செம்மையாக ?




தேவதையோ

 நிலவின் பட்டொளியிலே
வானவில்லின் வர்ண ஒளியிலே
இருட்டும் வெளிச்சமும்
அமைந்த  பொழுதினிலே
ஒர்  அழகிய பெண்
 ஒயிலாக வந்தாள்


சிவந்த நிறமும்
அடர்ந்த கூ ந்தலும்
வாளிப்பான் உட லும்
அளவான உயரமும்
பொருந்திய பெண் அவள்


கண்டோர் வியக்க
 கேட்டோர்  ஆனந்திக்க
பார்த்தோர்  புகழ
மயில் போல்
 ஓயாரமாக  வந்தாள்


அவள் ஒரு மயிலோ
 அவள் ஒரு அன்னமோ
அவள் ஒரு தே வதையோ
என்று மயங்கிய வேளையில்
மாயமாக மறை ந்தாள்.



Monday, November 4, 2013

விட்டு விடாமல்.

தூங்கும்  போது 
அலை அலைகளாக 
 நினைவுகள் 
தூங்க விடாமல் 

கண் மூடி  உறங்கும் போது  
கனவுகள் படலம் படலமாக 
காட்சிகள்  பல 
அலைகழித்தன விடாமல் 

தூங்கும் போதில்லாமல் 
கனவு காணும் போதில்லாமல் 
நடக்கும் நிகழ்ச்சிகள் 
மனதை ஒன்று பட விடாமல் 

எதுவும் விட்டும் விடாமலும் 
எதிலயும் பட்டும் படாமலும் 
இங்கும் இல்லை அங்குமில்லாமலும் 
எதையும் விட்டு விடாமல் 

இருந்தவன் இன்று இல்லாமல் 
தெரிந்தவன் தெரியாமல் 
புடிந்தும் புரியாமல்  
பற்றிக் கொண்டு  வாழ்கிறான்  
மனிதன் விட்டு விடாமல்.


நற்செய்தி

செய்தி நல்ல செய்தி
 மனதுக்கு இனிய செய்தி 
இதமான செய்தி
 நன்மையான செய்தி
எத்தனை செயதிகள்
 இனிமையும் இன்பமும்
ஒன்றே நல்குபவை
இச் செய்தி அளித்தது
நல்ல   அருமையான் வாய்ப்பை
நினைக்கும் போதே மகிழ்ச்சி
என்ன என்று யோசிக்க
அது ஒரு வேலைக்கு ஆனஉத்தரவு
வாடும் குடும்பத்துக்கு
 ஒரு அற்புதமான  திறவுகோல்
வறுமையை மறந்து
இனிதாக வாழும் நேரம்
இன்னல்களை துறந்து
இங்கிதமாக இருக்க வேண்டிய தருணம்  
சங்கடங்களை சமாளித்து
 சமாளித்து பழகிய மனத்திற்கு
ஒரு இளைப்பாறும்  நிலை
வெகு நெருக்கத்தில் வந்து விட்டது
வாழ்த்துகளுடன் நற்செய்தியை
பகிர்ந்து கொண்டு  இன்புற்றிருக்குவதல்லாமல்
வேறு ஒன்றும்  அறியேன்



Sunday, November 3, 2013

ஆண்டு தோறும் தீபாவளி

பட்டாசுகள் பட படக்க 
மத்தாப்புக்கள்  பூக்க 
புது உடைகள் சர சரக்க 
தீபாவளி   பண்டிகை 
விமிரிசையாக   கொண்டாடி 
மி க்க செலவோடு முடிய  
வானமும் மேகமும்  
கறுத்துப்  போக
பூமி யும்  நிலமும்  
 நகண்டு  போக
சத்தம் காதை  அடைக்க 
 அங்கும் இங்குமாக 
தீ காயங்கள்  படர 
சில  இடங்களில் 
உயிர்ச் சேதம்  ஏற்பட 
காசை இறுதியில் 
கரியாக்கி  கொண்டாட்டத்தை 
முடிக்கிறான் மனிதன்
  ஆண்டு தோறும்.

  

 

Saturday, November 2, 2013

காலை வணக்கம்

காலை வணக்கம் என்ற குரல்
 எங்கேயோ கேட்ட  குரல்
யாரென்று கூற  இயலவில்லை
என்னைத் தெரியவில்லையா
 என்ற அடுத்த வந்தததற்கு
தடுமாறி பதில்  அளிக்கும் முன்
என்ன இவ்வளவு மறதியா
என்று வேகமான குற்றச் சாட்டு
உண்மயிலே மறதி வந்து விட்டதோ
அய்யய்யோ என்று எண்ணும் போது
மீண்டும்மொரு  தொடர்   மொழியாக
  ஏன்  இப்படி ஆகி விட்டாய்?
மலங்க மலங்க விழித்தபடி
 நின்ற என்னிடம் கேலியாக
உனக்கே உன்னை   தெரியவில்லை
என்று நகைக்க
 எனக்கு என் மேல் வெறுப்பு
தோன்றத  தொடங்கியது
நல்ல காலை வணக்கம் பாடி
மனத்தை  சுருங்க வைத்ததற்கு
நன்றி மிக்க நன்றி  .



ஆகாத வரை சரி

பண வீக்கம் குறைந்தது
வெங்காயம் விலை ஏறியது 
பணக்காரன் பாடு மகிழ்ச்சி 
 ஏழையின்  நிலை  திண்டாட்டம் 

மத்தி ய வங்கியின் ஆளுநர் 
மந்திரக் கோலுடன் வலம்  வருகிறார்  
உழவனோ ஏறுடன் 
உழுது  பாடுபடுகிறான் 

ரூபாயின் மதிப்பு  ஏறகிறது  
  அன்னியச் செலவாணி உயருகிறது 
தானியங்களின் விலை தாவு கிறது 
  உணவு அரிதாகத்  தெரிகிறது.

பணக்காரன்  பணத்தில் புரளு கிறான்
ஏழையோ ஏழ்மையில் வாடுகிறான் 
மந்திரக் கோல்  தந்திரக் கோல் 
ஆகாத வரை சரி.


பொருத்தம் பத்து

பொருத்தம் பார்த்தார்கள் 
பொருந்தியது   பத்தும் 
செயதார்கள்  திருமணத்தை 


சாதகத்தில் பொருந்திய 
 பத்து  பொருத்தங்கள்  
வாழ்க்கைக்கு பொறுப்பேற்கவில்லை 

பத்தும் பதிவேட்டில்  பொருந்த 
வாழ்வு ஏட்டில் விலக 
பற்றிக்கொண்டது  விவகாரம் 

ஆணின்  கை ஒங்க  
  பெண்ணின் சினம் பொங்க 
முற்றியது சண்டை 

ஆணவம் தலை தூக்க 
அடங்காமை தலை விரித்தாட 
 வேறுபாடு சென்றது நீதி மன்றம் .

ஆண்டுகள் பலவாக  ஓட 
வயதும்  கூட அதனுடன் விரைய 
பிரிவும்  நிரந்தரமானது 

மறு முறை திருமணம் 
வேகமாக அரங்கேற 
அறுத்துக் கட்டுவது  வழக்கமானது 


அன்று சாதகம் சொன்ன 
 பொருத்தங்கள் அனரத்தமாக  போக  
மண  முறிவு ஏற்பட்டது. 


இன்று பொருத்தம்  பார்க்காத 
இரண்டாம் கல்யாணம்
மன ஒற்றுமையை    உண்டுபடுத்துகிறது .

என்னவென்று சொல்லப்   புரியவில்லை 
 ஏன்  என்று அறிய முடியவில்லை 
எப்படி என்று தெளிய இயலவில்லை 





உன் பெயர் என்ன ?

காதிலே பூ  அழகாகச் சுற்றுவதில் திற னுடன்
கண் கட்டி வித்தையிலே  சிறந்து
முக்கை நுழைக்கும்  வழியிலே  மேம்பட்டு
வாய் வார்த்தையிலே  பொய் புகுந்து
கழுத்தை நொடிக்கு ஒரு தரம் நொடித்து
நெஞ்சிலே நேர்மை இழந்து  சத்தியம் தவறி
கையை நீட்டி மிரட்டி சிம்ம நடை  போட்டு
பேரரசன்  போல் வாழும் மனிதனே
உன் பெயர்  தான்   என்ன ?
நானே  அரசியல் வாதி என்று மார் தட்டினான்


காலனே பொறு

காலனைக் கண்டேன்
 காலை நேரத்திலே
கால் கடுக்க நிற்கிறேனே
உன் வரவை நோக்கி
 என்று கேட்கிறான்


சற்றுப் பொறு  காலனே
காலமும்  நேரமும் கூடட்டும்
வேலையும் முடியட்டும்
வருகிறேன் உன்னோடு
என்று சொன்னேன்.

என்னை இருக்கச் சொல்கிறாயா
காலப் பரிமாணம் புரியாமல் 
நான் வந்தவிட்டால்
 நேரம் முடிந்தது  என்று கொள்
 என்று சொன்னான்


நகைத்தபடியே  பகர்ந்தேன்
நான் காலத்தை வென்றவன்
நீ பொறு என்றால் பொறு
நான் யார் என்று நீ அறியவில்லை
என்று பதிலளித்தேன்

வெகுண்டான் காலன்
எனக்கே தவணை சொல்கிறாயா? என்றான்
நான் தான் மனிதன்    யாவற்ரையும்
தவணை  முறையில் வாங்குபவன்
சாவையும் கூட

Friday, November 1, 2013

எந்தாய் தந்தை முகங்கள்

நான்  அந்த வீட்டிலே பிறந்தேன்
செல்வ மகளாக  வளர்ந்தேன்
 பூவிலும் மென்மையாக  கொண்டாடி
செல்வமும் செல்லமும் ஒருங்கே கூடி
தாயின் அன்பும்  அரவணைப்புடன்  ஆடிப்பாடி 
கண்டிப்பும் கறாருடன்  ஓடி விளையாடி
தந்தையின்  கனிவும் கட்டுப்பாட்டுன்  படித்து சிறக்க
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
மகிழ்வுடன் வளர்ந்து  கல்வியில் மேம்பட
சீருடன் சிறப்புடன்  மண  வாழ்க்கை அமைய 
நான் பிறந்த வீட்டை  விட்டு   விலகினேன்


நாட்கள் செல்லச் செல்ல  அந்த வீடு  மாறியது
இருந்த ஒழுங்கும் நேர்மையும் முற்றும் மாற
பெற்றவர்கள் வாழ்ந்த முறை தலை கீழாக திரும்ப
செழிப்பு வறண்டு  தேய்ந்து  காய்ந்து போக
பொய்யும் பித்தலாட்டமும் ஏமாற்றும்  பெருக
செல்வம் சொல்லாமல் . கொள்ளாமல்  ஓட
 என்னோடு  பிறந்தவர்கள்  யாவற்றையும்  கைபற்ற
என் பிறந்த பங்கும் உரிமையும் என்னிடமிருந்து பறிக்க
விழி  பிதுங்கி வழி  நோக  துடித்தேன் நான்
அச்சமயத்தில்  ஏனோ 
எந்தாய் தந்தையின்   முகங்கள்  தோன்றி மறைந்தன


Thursday, October 31, 2013

சூறாவளி

காற்று பலமாக வீச
மரங்கள் பேயாட்டம் ஆட
 மாட மாளிகைகள் சரிந்து விழ
சிறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்ல
மக்கள் குய்யோ முய்யோ என்று கதற
மின்னினைப்புக்கள் துண்டிக்கப்பட
எங்கும் இருட்டு  ஒரே கும்மிருட்டு
காற்று கொடுரமாக சுழன்று சுழன்று  ஆட
அங்கு ஒரு பெரும் போராட்டமே  நடந்தது
அச்சமுடன் அதிர்ச்சியுடன் உலகம் நின்றது
செய்வதறி யமால்   திகைப்புடன்.
காற்றி ன் கோபம் தான் என்னவோ?
ஏன்  இந்த வெறி? ஏன்   இந்த வேகம் ?
அழித்து துடைத்து  நாசம்மாக்கியது ஏனோ?
மனிதனின் பேராசையும் தான்தோன்றித்தனமும்
காரணம் என்று கொள்வோமா
வெட்கித் தலை குனிய வேண்டும்
மனிதனாகப் பிறந்ததற்கு

Wednesday, October 30, 2013

சிறப் பு ற்ற மங்கை

கல்வியில் தெளிந்தாள்
கலையில்  தெளிவுற்றாள் 
கவனத்தில் தெளிவாயினாள் .

கழுத்திலே பதக்கம் அலங்கரிக்க 
கண்ணிலே  பிரகாசம்  அழகுற
கால்களிலே  பிரமாணம்  அடிக்க 


 கனிந்து பதிய  சிறந்தாள்
கணிப்பு  பரவ  சிறப்புற்றாள்
கருத்து படர  சிறப்படைந்தாள்

வளர்க அம்மங்கை
வாழ்க அம்மங்கை
பல்லாண்டு வாழ்க

என்னவென்று சொல்ல

கண் இமைக்கும் நேரத்திலே 
ஒரு கோர விபத்து 
பச்சிளங் குழந்தை கண் முட
தாயின் மடியில் தவழ்ந்த படி  
தாயோ குழந்தையை அணைத்தப்படி
மரணத்தை தழுவ 
தந்தையோ வண்டி  ஒட்டியபடியே 
நிலை தடுமாற 
வண்டியோ முட்டி மோதி 
அப்பளமாக நொறுங்க  
போவோர் சற்றுக் கூட 
உதவாமல் விரைய  
இரத்த வெள்ளத்தில் 
தாயும் மகளும்  
 துடி துடித்து சாக  
கணவனோ   நிலைக்குத்தி 
புரியாமல் நிற்க
பெருஞ சாலையில்  
நடந்த சேதத்தை 
என்னவென்று சொல்ல 

முதலும் இரண்டாவதும் முழுவதும்

 பாட்டில் பொருள் கண்டான்
இசையில் இன்பம் அடைந்தான்
நாட்டியத்தில் சுகம் விளைந்தான்
நடிப்பில் மதி மயங்கினான்
தன்னை முதலாக  இழந்தான்

வடிவில்  அழகைக் கண்டான்
விளைவுகளில்  நிம்மதி அடைந்தான்
உடல் சூட்டில்  குலாவி மகிழ்ந்தான்
வண்ணங்களி ன்  ஜாலத்தில் மயங்கினான்
தன்னை இரண்டாவதாக இழந்தான் .

கோப்பையில் ரசனைக் கண்டான்
போதையில்  தஞ்சம் அடைந்தான்
நாகரிகத்தில்  த ன்னை மறந்து கூ த்தாடினான்
நிர்ணயத்தை தன்னை   அறியாமல்  விட்டு விடடான்
தன்னை முழுவதுமாக இழந்தான்


சகுனமும் சலனமும்

காகம் கரைகிறது
 எட்டிப் பார்த்தேன்
 சாளரம் வழியே
யாரையும் காணவில்லை .

பல்லி  சொல்லுகிறது
எத்திசையில்  இருந்து
என்று நோக்கினேன்  ஆவலாக
ஒன்றும் நடக்கவில்லை .

பூனை  குறுக்கே  போகிறது
புறப்படும் போது 
வீபிரிதம் ஏற்படுமோ என்று அஞ்சினேன்
யாதொன்றும் நடக்கவில்லை

சகுனமும்  சலனமும்  குன
ஒன்றே  கூடின்
தவிர் ப்பது தவிர வழியில்லை
நமபினால்  அவ்வாறே

நம்பாவிடில்  அவற்றை
பின் தள்ளி  செல்ல
முனைவது  அழகு
பெருமையும் அது வே.


காகமும் பல்லியும் 
   கிளியும் பூனையும்
நற் செயலுக்கும் தடை க்கும்
 எவ்வாறு காரணமாகும்.





 .



Tuesday, October 29, 2013

உலகம் இவ்வளவு தான்

காட்டினதைப் பார்த்தேன் 
மிகுந்த சங்கடத்துடன்
பேசினதைக் கேட்டேன் 
மிகுதியான வருத்தத்துடன் 
நடந்ததைக்  கண்டேன் 
மிகவும்  நெருக்கடியுடன்  
நெஞ்சில் ஒரு பதைப்பு 
பிடித்துக் கொண்டேன் 
கண்ணிலே நீர் 
சுண்டி விட்டேன் 
 குமறி  வந்த 
உணர்ச்சிகளை அடக்கி
 நிலை குலையாமல்
வெளியே  வந்தேன்
எப்படி  என்று தெரியாமல் .

மனிதர்கள்   பல விதம் 
நான்  அறிந்த வகையில் 
நல்லவர்கள் மிகக் குறைவு 
நல்லவர அல்லாதவர்கள் 
என்று அறி வது மிகக் கடினம் 
கண்டு கொண்டேன்  மக்களை 
முன்னால் பெருமை  பேசி 
பின்னால் கேலி  செய்வதும் 
புறம் பேசுவதும் நகைப்பதும் 
இன்னல் விளைவிப்பதும் 
இல்லாததைச் சொல்வதும் 
வாழப் பொறுகாதவர்களும் 
   இருகிறார்கள் என்று தெளி ந்து  
உலகம் இவ்வளவு தான் 
என்று புரிந்து கொண்டேன்.

 

உலகம் இவ்வளவு தான் 



 



Monday, October 28, 2013

கைம்மாறு

மனது நினைப்பதை 
 கை எழுத 
மனது எண்ணுவதை 
 கை செயல்படுத்த
மனது பார்ப்பதை 
கை வடிவம்  கொடுக்க 
மனது கேட்பதை 
கை எடுத்துக் கொடுக்க 
மனதால் துதிக்க 
கைகள் தொழ 
மனதே கைகளுக்கு 
என்ன செய்யப் போகிறாய் ?



வாழும் கலை

நிரப்புங்கள் மனத்தை
நல்ல என்ணங்ளோடு
களையுங்கள் மனத்திலிருந்து
கெ ட்ட சிந்தனைகளை
கோப தாபங்களை  அழி த்து
நிறைகளை  கருத்தில் கொண்டு
 குறையை நோக்காமல்
நலமுடன்  வாழ  பழகுங்கள்.



மணமுறிவு.

பூவாக  மலர்ந்த்தது
பழ மாகக்  கனிந்தது
முடிந்தது மண மாக
திருமணம்  கூ டியது
ஒன்றிணைந்த மனங்கள்
மகிழ்வுடன் வாழ
கண் பட்டதோ
 கால் பட்டதோ
 வந்தது வினை
சச்சரவும்  சண்டையும்
எரிச்சலும்  தோன்ற
விரிவு வேகமாக  ஏற்பட
உடைந்தது விவாகம்
 பெரியவர்கள் நுழையவில்லை
சாதி  வேறுபாடு எழும்பவில்லை 
கொடுக்கல் வாங்கல் இல்லவே இல்லை
இருப்பினும் முறிந்தது மண  வாழ்க்கை
தம்பதியரின்  இளமைத் துள்ளல்  குறைய
புரிதலும் அனுசரணையும் மறைய
பிளந்தது ஒரே ஆ ண் டில்.



Sunday, October 27, 2013

வீடு என்பது

வீடு என்பது கோவில்  
இல்லம் என்று சொன்னால் 
 இல்லாதது ஒன்றுமில்லை 
மகிழ்வும் நிறைவும் 
 கவலையும்    துன்பமும் 
ஏற்றமும் தாழ்வும் 
ஒன்றே அமைந்த 
இடம்  வீடு.

மனைவியுடன் கூ டி 
குழந்தைகளுடன் கொஞ்சி 
உண்டு களி த்து 
உறங்கி எழுந்து 
உழைத்து  அலுத்து 
நிம்மதியுடன்  வாழும் 
இடம் வீடு .


சுத்தமும்  சுகாதாரமும் 
நேர்த்தியும் நிர்மாணமும்
வளமும்  வனப்பும் 
நல்லதும் கெட்டதும் 
நன்றாகவே நடந்திட 
சுகமான வாழ்வுக்கு  ஏற்ற 
இடம் வீடு.


அருமையும் பெருமையும்  
பேசும்  கதவுகளும் 
கண்ணீரும்  கோபமும் 
பார்த்த அறைகளும் 
நறுமணமும் புகையும் 
கண்ட அடுப்படியும்  அமைந்த 
இடம் வீடு.

கல்லும் மண்ணும் 
கதை சொல்லும் 
மரமும் கம்பியும் 
கலகலப்பை  உள் வாங்கும்
வண்ணமும்  வகையுமாக 
நிலமும் தளமுமாக  நிற்கும் 
இடமே வீடு.




Saturday, October 26, 2013

இனிய காதல்

அதி காலையில் ஓர் அழைப்பு
யாரென்று அறிந்த பின் ஒரு வியப்பு
அன்பான  குரலில் ஒரு உதவி  என்று  சொல்ல
ஆதரவுடன் என்ன என்று விசாரிக்க
 ஒரு சரிகை மேல் துண்டு  வேண்டும்
தீபாவளிக்கு   அணிய தன கணவருக்கு  என்று பகர
எண்பதைத் தொடும் பெண்மணி இன்றும்
கைப்பிடித்தவரின்    தேவையை மேற்பார்க்க
அக் கோரிக்கை  எனக்கு ஒரு கவிதையாகத் தோன்ற
அதில் மிளிர்ந்த அன்பு ஒரு தெளிந்த காதலாகத  ததும்ப
அன்புக்கு வயதில்லை அளவில்லை  என்று புரிய
என்ன ஒரு அழகான் விதத்தில் தன  காதலை
வெளிப்படுத்துகிறாள் இந்த  மங்கை
இதுவே நம்  இனத்தின் பண்பாடு. என்ற  பெருமிதம்
நெஞ்சில் பொங்க நிறைவுடன்  
வாழ்த்த  வயதில்லை என்றாலும்
தன்னிச்சையாக  வருவதை நிறுத்த  இயலவில்லை.
வாழ்க நீ  சகல மங்களத்துடன்

தோற்றமும் அழகும்

கரு வண்டு கண்கள்
என்று சொல்லும் போதே
ஓர் அழகு மிளிரும்


பரந்த நெற்றி
என்று  பார்க்கும் போதே
 ஒரு  விசாலம் தெரியும்

கூர்மையான முக்கு
என்று கருதும் போதே
ஒரு சுடர்   தெறிக்கும் .

பவள வாய்
 என்று குறிக்கும் போதே
ஒரு செம்மை மின்னும்


முத்துப் பற்கள்
என்று  நோக்கும் போதே
ஒரு ஒழுங்கு விரியும்  .


சங்குக் கழுத்து
என்று வியக்கும் போதே
ஒரு பளீர் வெண்மை படரும்.


கனிவும்,  பரந்த நோக்கும்
 தீட்சனி யமும் , சிரிப்பும்
வரை முறையும்  நேர்மையும்
ஒன்று சேரக் காண்பது  அதி அற்புதம்,



ஏமாற்று

ஏமாற்றுவது  ஒரு கலை
ஏமாறுவது  ஒரு தலை  விதி
ஏமாற்றுபவன்  ஓங்குகிறான்
ஏமாந்தவன் மயங்குகிறான்.
 ஏமாற்றி அடைந்த காசு
நின்று நிலைக்காது
வந்த வேகத்தில் போய்  விடும்
ஏமாந்தவன் உள்ளத்தில்    எழுந்த
பெருமூச்சு வெந்து தணியும் முன்
ஏமாற்றியவன் நோந்து போ வான் 
இது நாம் அறிந்த நடை முறை 



Friday, October 25, 2013

நம்பலாமா நம்பக்கூ டாதா?

எனைச் சுற்றிலும்  இருப்பவர்களை
 நம்பலாமா  நம்பக்கூ டாதா
என்று நினைக்கையில்
 நம்பாதே என்று உள்மனம்
சொல்லும் போது
சஞ்சலம் அடைகிறது .

காரியம் முடிந்த பின்
 காலை வாரும்  உறவினர்கள்
ஏமாற்றும் நோக்குடன்
செயல்படும்  இரத்தப் பந்தங்கள்
அலைக்க ழிக்கப்பட்டு
துயரம் அடைந்த நாட்கள் எத்தனையோ!


சற்று திரும்பிப் பார்க்கும் போது
நிகழ்வுகள் நெகிழ்ச்சியடையச்  செய்ய
கண்ணீர் கரை  கட்ட
துளிரும் நீரை புறந் தள்ளி
நமக்கு விதித்தது இது தான்
என்று சமாதானமாகி  வாழ்ந்து
காலத்தை  கடக்கிறேன்

புத்தகக் கிறுக்கு

படித்தல் ஒரு நல்ல பொழுது போக்கு
நான் ஒரு புத்தகக்  கிறுக்கு
புத்தகம் எனக்கு ஒரு சிறப்பு
மற்றதை மறக்க வைக்கும்  ஒரு வியப்பு.
படித்தலும்  வாசிப்பும் நான்  நாடின்
மற்ற யாவும்  என்னைச்   சாடின்
இடக்கும் நக்கலும் ஆங்காரமும்
மனத்தை  நோக வைக்க  விளையும்  போது
அவைகளைச்  சற்று அவசரமாக  நகட்டி
அனாவசியத்தை   வேகமாக அகற்றி
பயனுள்ள  வகையில்   புத்தகம்  நோங்கினேன்
 மட்டில்லா மகிழ்ச்சியும்   பெருமையும் கிட்டின
வேறு என்ன வேண்டும்  எனக்கு
 நானோ ஒரு கிறுக்கு.


Thursday, October 24, 2013

வாழ்க்கை

கடிதம் ஒன்று வந்தது
ஒரு சேதி சொன்னது
கண்ணீர் வந்தது
 மனம் பதைத்தது
துக்கம் அழுத்தியது
சமாளித்துக்  கொண்டு
அடுத்த வேலையை
பார்க்க முயன்ற  போது
தோன்றிய எண்ணம்
காசுக்கு இரண்டு  பக்கம்
 வாழ்விலும்  அதே போல்
மாறி மாறி வருவது தான்
 வாழ்க்கை  ஆகும் 

மனிதன் என்னவாக்குகிறான் ?



நீரின்றி உயிர் இல்லை 
உயிரின்றி உலகம் இல்லை 
உலகம் இன்றி  யாதும் இல்லை
நீரே வாழ்வுக்கு ஆதாரம் .


நீரைப்  பழி  த்து  வீணாக்கி 
மரங்களை வெட்டி  பாலை வன மாக்கி
ஆற்றைக்  குட்டையாக்கி 
கடலைக் குடைந்து  மேடாக்கி  எல்லாம் மாறி 

பாரினை வாழ்வதற்கு    தகுதிஇல்லாமல் செய்து 
ஆசையும்  பேராசையும்   பெருக்கெடுத்து 
நிலத்தை கிழித்து குதறி புண்ணாக்கி  
மழையை  தடுத்து  வறண்ட பூமியை  சேதமாக்கி 

மனிதனை என்ன வென்று அழை ப்பது 
பேரா சை க் கா ரன்  என்று சொல்லலாமா 
பே ர ழி வுக் காரன்  என்று  சினம் கொள்ள லாமா 
எதைச்  சொல்வது எதை விடுவது புரியவில்லையே .



மனிதன் என்னவாக்குகிறான் 

அன்றும் இன்றும்

வானுயர்ந்த  மலைகள்  
அழகான நிலப் பரப்பு  
அமைதியான  கடல் 
தெளிந்த நீரோடை
 பசெலேன்ற  விளை நிலங்கள் 
என்று இருந்த இந்திய  பூமி 
இன்று 
கல்லடிபட்ட குன்றுகள் 
வெடித்த காய்ந்த    நிலம் 
ஆர் பரிக்கும் கடல் 
 கலங்கிய  குட்டை நீர்  
வாடிய  நொந்த நிலங்கள் 
என்று இருக்கும்  இந்திய  பூமி 

எதனால் என்று சிந்திக்க
மனிதனின்  செயலால்  
அவனின் நடத்தையால்
 அவனுடைய  பேராசையால்
என்று  உணர்ந்து நோக்குங்கால் 
மனம் வெதும்புகிறது.


அன்றும் இன்றும்  

நரை

தலை மூ டி  வெளுக்க 
 நரை என்று சொல்ல  
அதை மறைக்க 
செயற்கை  சாயம்  தடவ
 கரு கருவென்று தோற்றம் மிக 
வந்ததோ வினை வேறு விதமாக 
 சாயம் முகத்தில் இறங்கி 
 சிவந்த நிறம்  கரும் 
படலமாகத் தோன்ற 
அதிலிருந்த இரசாயனம் 
 உடலில் செல்ல  பல விதமான 
கோளாறுகள் உண்டு பண்ண 
 முட்டி வலி யும்  முதுகு வலியும் பீடிக்க
கண்ணும் மங்கலாகத் தெரிய 
 அஞ்சினான் வெகுவாக 
 வயதான பின்  மூடி 
 நரைப்பது இயற்கையே  
தேற்றிக் கொண்டு 
 இயற்கையின் வழியே 
 செல்வது நியாயமே  




சருகானாள்

கண்ணாக வளர்த்து 
பூவாகப் போற்றி 
பேணி பாதுகாத்து 
ஆளாக்கிய பெண்ணை 
கயவன் என்று 
அறியாமல்  மணம்முடித்து 
அவன் அவளை
சின்னா பின்னாமாக்கி 
நையப்  புடைத்து  
சுட்டுக்   குதறி 
காயப்படுத்தி 
 உயிரைக்  குடித்தான் 
அழுதாள்   மாய்ந்தாள் 
நெருப்புக்குள்  பாய்ந்தாள் 
சருகானாள்   சடுதியில் 
திக்குத் தெரியாமல் 
 வாடுகின்றனர்  பெற்றோர் 


Wednesday, October 23, 2013

வாழ்வே வசந்தம்

பையிலே பணம்  நிறைய
வாயிலே வார்த்தை  உண்மையாக
கையிலே  வேலை திறம்பட
இயல்பிலே தன்மை நன்மையுடன்
வாழ்வே வசந்தம் சிறப்பாக
நிறைவான நிழல். வேண்டிய வகையில்.

Tuesday, October 22, 2013

மாற்றாமல் மாறுகிறது

அர்த்தங்கள் மாறினால்  
அனர்த்தம்    ஆகி விடும்.
வார்த்தையை மாற்றினால்
நாணயம் மறைந்து விடும்  
நினைப்பை மாற்றுவதால்
வழி . மாறிவிடும் 
தன்மையை மாற்றி போட்டால் 
தன்னிலை  விடுபட்டு போகும்.
தகவலை  மாறிச் சொன்னால் 
 விபரிதம்  மாறி வரும் 
சொல்வதும் செய்வதும் 
உறுதியாக  இருந்தால்
வளமையுடன்  வாழலாம்..


Monday, October 21, 2013

வெண் குவியல்

அழகான் முயல் ஒன்று கண்டேன் 
வெள்ளை வெளேரென்று 
வாயில் புல்லைக் கவ்விக் கொண்டு  
துள்ளி குதித்து தாவி ஓடியது 
துள்ளாட்டம் போட்டுக் கொண்டே 
மலை மீது தாவி ஏறியது 
தள்ளாட்டத்துடன்  மெது மெதுவாக 
கிழே  உருண்டு  வந்தது 
பந்தைப் போல் 
பார்த்தேன் பரவசமாக 
பனிக்குவியல்  போல் 
தோற்றமளித்த  குட்டி முயல் 
என் மனத்தைக் கொள்ளைக்  கொண்டது 
என்னே ஒருஅற்புதமான அழகு.

Friday, October 18, 2013

ஏற்றலும் திகட்டலும்

மழையும் சாரலும்
தூறலும்  தூவானமும்
மப்பும் மந்தாரமும்
கூடிய  மேகமும்
 வானவில்லும்
நிறக் கோள்களும்
அழகெனப் பரவி
மாலைப் பொழுதை
கவின்மிகு நேரமாக
 மாற்றிக்   களிப்புடன்
நோக்குங்கால்  காற்று
வேகமாக வீசத் தொடங்க
இடி பயங்கரமாக இடிக்க
மின்னல் பிரகாசமாக  மின்ன
 மழை துரிதமாகக்  கொட்ட
மாலை இரவாக மாறும் வேளை
கண்கொள்ளாக் காட்சி
கடுமையாக சடுதியில் வேறுபட
ஒரு பொழுதின் காலம்
ஏற்றலும் திகட்டலுமாக
தோற்றம் அளித்தது

Wednesday, October 16, 2013

திரு நாட்டின் நிலை

அதியமானுக்கு நெல்லிக் கனி
அளித்து பெருமை அடைந்த  அவ்வை
சோழனிடம் நீதிக் கேட்டு
 மணியடித்த பசு
 முல்லைக்கு தேர் ஈந்த பாரி
வாழ்ந்த திரு நாட்டிலே
 இன்று கபடும் கள்ளமும் மலிவு
எதற்கும் லஞ்சம் இலட்சத்தில்
எதிலும்  சூது அநியாயத்தில்
பள்ளியில் சேர்க்க லஞ்சம்
மருத்துவ சிகிச்சைக்கு  கையூட்டு
நிலம்  வாங்க விற்க  சேர்த்துக் கொடு
அதிகாரியைப் பார்க்க பரிமாற்றம்
நீதித் துறையில் உழலின் கோர ஆட்டம்
அரசியலோ தாங்கவொண்ணா  கலப்படம்
வர்த்தகமோ மட்டில்லா மறைமுக வேட்டை
 தொழில்துறையோ புயலென மாறும் நடவடிக்கை
இங்கு உழைப்பவனுக்கு  சோறில்லை வெங்காயத்துடன்
ஆதிக்கம் செலுத்துபவனுக்கு விருந்து
வடை பாயசத்துடன்.
நாட்டின் நிலை  வெகு விமர்சை

குறை கழிந்து நிறை அறிந்து

குறை காண்கிறோம்
எதிலும் எப்போதும்
 நிறையே இல்லையா
 என்று நினைக்கையில்
 ஆயிரம் ஆயிரம்
 அலைகள் முன் நிற்கின்றன
கறுப்பு என்றால் வெறுப்பு
குட்டை என்றால் கடுப்பு
குண்டு என்றால் கேலிக்கிடம்
ஒல்லி என்றாலோ பரிதாபம்
நெட்டை என்னும் போது நகைப்பு
முக்குச் சப்பை, இடுங்கிய கண்கள்
 மேட்டு நெற்றி , தூக்கிய  பல்
 என்று  அடுக்கிக் கொண்டே
போகலாம்  நெடுகிலும்
தெரியாத பலவினங்கள்
எத்தனை எத்தனையோ
மூடியும்  மறைந்தும்
கண்டும் காணாமல்
நிறைகளை அறிந்து
நடப்பது நல்வாழ்வு.

பணம் பத்தும் செய்யும்

பணம் என்ற சொல்
மிகுந்த வளமான் சொல்
பணம் பத்தும் செய்யும்
என்ற பழைய மொழி
மிகுந்த நற்பயக்கும் .

 பணம் தூக்கி  நிறுத்தும்
 அத தூக்கியும் எறியும்
பணம்  புகுந்து விளையாடும்
 அது பிளந்தும் கட்டும்
விட்டு விளாசும்  நேரடியாக .
.
பணம் ஏற்றம் காண  வைக்கும்
 அது தாழ்த்தியும் விடும்
பணம் ஒரு ஆபத்து
 வந்தால்கெடுக்கும்
 வராவிட்டாலும்  கெடுக்கும்.


 கையாளும் விதமே
அதன் வழி முறையை
 வகைப்படுத்தும்
சான்றான்மையை  விளக்கும்.
தனித்து நிற்க வைக்கும்

மாயமும் மந்திரமும் யாவற்றிலும்

மந்திரமும் மாயமும்
எங்கும் பரவி
 மந்திரத்தால் மாங்காயும்
 காய்க்கப பண்ணி
ஆணை  பெண்ணாக்கி
பரியை நரியாகி
 வெட்டுண்டு
பின் கோர்வைக் கண்டு
ஜால வித்தைகள்
காட்டி  மகிழ்வித்த
மாயவியைப் போல்
இன்று தொழிலும்
மந்திரமும் தந்திரமும்
 வெகுவாகத தெளிய
நேற்று நட்டத்தில்
இயங்கிய வர்த்தகம்
 இன்று கொழிக்கிறது என்றால்
மாயங்களின்  வெளிப்பாடு தான் .
மாயத்தின்  குணம் தான்
 ஒரு கேள்விக் குறி?

Sunday, October 13, 2013

ஒன்பது இரவுகள்

ஒன்பது இரவுகள்
 அற்புதமான  இரவுகள்
 மாலை கவியும் நேரம்
 பொம்மைகளின கொண்டாட்டம்
 இறைவனின்  அருள் குவிய
 இறைவிகளின்   அன்பு ததும்ப
தலைவர்களின் கடமை விரிய
கடை விரித்து வர்த்தகம் பெருக
கோலாட்டம் ஒங்க
நாட்டியம் துவங்க
 பூங்காவும், மைதானமும்
அழகாகப்  பொருந்த
பூக்களும் மரங்களும்
 கவாச்சியாக்த்    துலங்க
ஒன்பது நாட்களும்
 இறை உணர்ச்சி  மேலோங்க
பெண்களும் குழந்தைகளும்
 தாம்பூலம் பெற்று
வினயமாக வினவி
 கலந்து பாட்டும்
ஆடலும் கேளிக்கையும்
மனமுருகி நெகிழ்ந்து
எல்லாம் வல்ல  இறைவனுடன் உறவாடி
 மகிழ்வுடன் வாழும் இனிமை
 வேறு எங்கும் கண்டில்லோன்
இந்திய  நாட்டின் தனி வளமை
தனிப்பட்ட சிறப்பு

Saturday, October 12, 2013

மலையே விஞ்சும்

மலையைப் பார்த்து திகைக்க
 அதன் கம்பீரத்தை நோக்கி அசர
 அது தொடும் நீல வானத்தை கண்டு மிரள
அதில் குடியிருக்கும் பறவைகளின் குரலை
கேட்டு பரவசமாக
அங்கு ஏகாந்தமாக வாழும் மிருக இனத்தை சற்று
 பயம் கலந்த லயிப்புடன்  ஆனந்திக்க
அந்த கரு கரு வென்ற வளர்ந்த  மரங்களை
ஆசையுடன்  தழுவ
காய்த்து    குலுங்கும் பழங்களை எட்டி எட்டி
பறிக்க ஆவல் தூண்ட
மலையைக்   கண்டு வியந்து வியந்து  மலைத்து
 மலைத்து  விம்மிதம் அடைகிறான்
அழகை ஆராதிக்கும்  என்னைப் போன்ற மனிதன்

தங்கமே தங்கம்

தங்கத்தின் மேல் பெண்ணுக்கு ஆசை .
மின்னும் தங்கமும் மஞ்சள் முகமும்
கழுத்திலே தவழும் தாலிக் கொடியும்
 கையிலே குலுங்கும் பொன் வளையலும்
காதிலே ஜொலிக்கும்  அழகான் தோடுகளும்
  அழகு சேர்க்கும் நேர்த்தியும்
பெண்ணின் மனத்தை மயக்க
அதன்  மதிப்பும் அதன் மேல்
 உள்ள கவர்ச்சியை தூண்ட
தங்கத்தை மென் மேலும் சேர்க்க
 துடிக்கும் பெண்ணே
உன் புன்னகையை விடவா தங்கம் மேல்
உன் அன்பை விடவா  தங்கம்  உயர்வு
தங்கம் ஒரு உலோகம் என்ற நினைப்பு
தூக்கி நின்றால் அதன் மாயை
 சற்றுக் குறையும்  சற்று விலக்கி
மனம் மாறி தங்கத்தை சற்று மற
 மற்றதில் மனத்தை செலுத்து
வாழ்கையை அனுபவி
தங்கம் சேர்க்கும்  ஆசையை புறந்    தள்ளி
வாழக்   கற்றுக்கொள்

காலம் மாறவில்லை

புரட்டாசியில்  அடை மழை
கார்த்திகையில் விடாத மழை
மார்கழிப் பனி முட்டம்
தை மாதக் குளிர்  குத்தும்
என்ற காலம் போய்
இப்போது  எப்பொழுதும்
வெயில் சுட்டெரிக்கும் வெயில்
கொதிக்கும் மதிய வேளை
 சுடும் அதிகாலை
 எரிக்கும் மாலை
புழுக்கம் நிறைந்த இரவு
காலம் மாற மறந்துவிட்டது உறுதியாக
நம்முடைய  மாற்றங்களைக்  கண்டு

Friday, October 11, 2013

பெண் என்றால்.

பெண் என்றால் இளக்காரமோ1
என்றென்றும் அடிமையோ!
தந்தையை மீற முடியாது
 வயது போதாது  அவ்வேளையில்
கணவனை பகைத்துக்கொள்ள முடியாது
அவன் ஒரு சர்வதிகாரி  எப்போதும்
மகனைக் கேட்க முடியாது
அவன் ஒரு தன்ன்னப் போணி எந்நேரமும்
அவள் வாழ்வு பிணைந்து நெருங்கி
 இறுதியில் நெருக்கி  உக்கிப் போகிறது
மடிகிறாள் ஏக்கத்துடன்
என்று தான் அவளுக்கு விமோசனமோ!

நீர் இன்றி

கண்மாய்கள் கட்டிடங்கள்  ஆயின .
ஏரிகள் பெருங் கட்டிடங்கள் ஆயின.
ஆறுகள் கட்டிடங்களாக ஆகின்றன
கடலும் கட்டிடங்களாக  ஆகிவிடும்
இன்னும் சிறிது காலத்திலேயே.
நீர் ஒரு  காண  இயலாத சக்தி

ஆலிலைக் கண்ணன்

பாடினான்  பரவசமாக
ஆடினான் ஆனந்தமாக
தன்னை மறந்து
 தன நிலை மறந்து
ஆடிப் பாடினான்

கண்ணீர் மல்க
 உதடுகள்    துடிக்க
இமைகள் படபடக்க
மெய் மறந்து
 ஆடிப் பாடினான்


ஆடும் போது
கண்ணா என்று  கூவினான்
கேசவா என்று அழைத்தான்
 அவன் கண் முன்னே
தோன்றினான் ஆலிலைக் கண்ணன்
குழந்தை வடிவிலே

விமர்சனமும் தரிசனமும்

எவ்வித சலனமின்றி  நடந்த நிகழ்ச்சியில்
 ஏற்பட்டது ஒரு தடுமாற்றம்
சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
வினையாக வந்து வீழ்ந்த்தது
ஒரு விமரிசனம்,
தனியாக எடுத்து நோக்கின்
அது சாதாரணமாகத் தோன்றும்
சொன்ன நேரத்தையும்
 சொன்ன இடத்தையும்
 சொல்லிய விதத்தையும்
எடுத்துக்கொண்டால்
அது மிகவும் தாறு மாறாகத்
 தெரிந்தது மனதை நோக  அடித்தது
சொற்கள்  நாகரிமாக  பயன்படுத்தி
 நயமாக உச்சரிக்க வேண்டும்
வெளியே வந்த பின்
 அது நம்மிடையே இல்லை
 அவை சீறிப் பாய்ந்து
 கிழித்துக்   காயப்படுத்தி
மனத்தைக் குதறி விடும்.

பேசட்டும் தன்னோடு

வெட்ட வெளியில் அமர்ந்து
தன்னாலே பேசும் மனிதனை
 கிறுக்கன் என்று சொல்லலாமா
 வேண்டாம் மனிதனே
 அவன்  கிறுக்கன் அல்ல
 வம்பு வேண்டாம்  என்று
அவன் நினைக்கிறான் போலும்
இல்லை பேசி பேசி
 எதைக் கண்டேன்
என்று எண்ணுகிறான் போலும்
தன்னோடு பேசி
 மனத்தை ஆற்றிக்  கொள்கிறான்
 பாவம் அவனை விட்டு விடுங்கள்
பேசட்டும்  பேசிக்கொன்டிருக்கட்டும்
அல்லலை பகிர்ந்து கொள்ளட்டும்
 இன்பத்தில் பங்களிக்கட்டும்
அழுகட்டும் சிரிக்கட்டும்
அனுபவிக்கட்டும்  நலன் கருதி
அவன் பேசட்டும் தன்னோடே

நடப்பதும் நடந்ததும்

ஒரு பயங்கர வெடிச் சத்தம்
 காதைப் பிளந்து கொண்டு  வந்ததது
 எங்கிருந்து வந்தததோ
 எப்படி வந்ததோ
என்று அறியும் முன்
 மற்ற ஒரு  வெடிச் சத்தம்
அசையும் பொருட்கள் அதன் அகன்ற
 வாயில் புகுந்தன
அசையா வளங்கள் சிதைந்தன
குற்றுயிரும் கொலையுயிருமாகக்
 காட்சியளித்தன   யாவையும்.
உணர்ந்து நோக்கினால்
பொருளாதார கெடுவும் நெருக்கடியும்
 மனிதனை எவ்வாறு எல்லாம்
 அலைகழிக்கிறது
இருப்பவன் இல்லாதவனை முழு ங்குகிறான்
அதிகாரம் உள்ளவன் சாமானியனை  விழுங்குகிறான்
இயற்கையைப்  போல.

காளியாய் கண்ணகியாய்

அவள் அழுதாள் குலுங்கி குலுங்கி
அவளை அழுது கண்டதில்லை
திடமான மனதுடன் வளைய  வருபவள்
மனது குன்றி அழுதாள்
  வழியும் கண்ணீரைக்    கருதாமல்
சிந்தும் முக்கை நினையாமல்
 துடிக்கும் உதடை பாராமல்
சிவக்கும் கண்களை   நோக்காமல்
விரைந்தாள்  தன்னை காயப்படித்தினவனை
கேள்வி கேட்க
  கேட்டாள்  ஆத்திரமாக
நீயும் ஒரு மனிதன் தானா ?
பெண் என்று பாராமல்
 மாணவி என்றி எண்ணாமல்
முறை கேடாக நடந்தாயே
 ஆசிரியர் என்ற போர்வையிலே.
காளியாய்  சீறினாள்
கண்ணகியாய்  சுட்டெரித்தாள்
நிலை குலைந்த பெண் மணி .
எரிந்தானா அவன் ?
இன்று இல்லை
 என்றோ ஒரு நாள்
 எரிந்து சாம்பலாவான்
அவளின் காயம் அப்படி
.

விசுவநாதன் வேலை வேண்டும்

காசி விஸ்வநாதருக்கு
 தங்கக் கிரிடம்  சூட்ட
பெற்றார்கள் இலவசமாக
பவுனும் நகையும் எக்கச்சக்கமாக
பெண்மணிகள் அள்ளிக் கொடுக்க
ஊர்  ஊராக   ஊர்வலமாக
கிரிடத்தை கொண்டு செல்ல
பாதி இறைவனுக்கு  படைத்தது
மீதி  பதவியில் இருப்பவர்களுக்கு.
என்று பங்கிட்டு  செழிக்க
விஸ்வநாதன் கூர்மையாக   பார்க்க
உண்டு பண்ணினான் கலகத்தை
கலாட்டா தொடர
நான் நீ என்று ஈஸ்வரனின்
சொத்துக்கு  சண்டை நடக்க
காசி நாதன் புன்னகையுடன்
 காரைக்குடியை நோக்க
மகேசன் தீர்ப்பை  வழங்கும் நேரம்
அவன் ஆளுமை  தெரிய வரும்
 நாளை மாலையில். வெளியாகும்
தேர்தல் முடிவுகள்  ஒரு துடைப்பு
இறைவனையே ஏமாற்றும்  நடிப்பு
தேர்ந்தவனும் பதவி விலகுபவனும்
ஒரே குட்டையில் ஊறிய  மட்டைகள்
பணம் என்றால் நாணயம்
ஓடி விடும் போல்
ஆசை கண்ணைக்   கட்டும்
 இருப்பவனுக்கு இன்னும் வேண்டும்
இல்லாதவனுக்கு  நிறைய  வேண்டும்
விஸ்வநாதனின் வேலை என்ன
 என்பது தெரிய வரும்.
அவனுடைய திருவிளையாட்டு  திறனில்
  எள்ளளவும் சந்தேகம் இல்லை
 அவனுடைய  நீதி   வெள்ளிடைமலை
சொத்தை திண்டினவன் கை முடங்கும்
தின்னவன் வாய் புண்ணாகும்
அனுபவித்தவன்    நெஞ்சு வெடிக்கும்
அடைய நினைப்பவன் அடக்கம் ஆவான்