Saturday, October 26, 2013

தோற்றமும் அழகும்

கரு வண்டு கண்கள்
என்று சொல்லும் போதே
ஓர் அழகு மிளிரும்


பரந்த நெற்றி
என்று  பார்க்கும் போதே
 ஒரு  விசாலம் தெரியும்

கூர்மையான முக்கு
என்று கருதும் போதே
ஒரு சுடர்   தெறிக்கும் .

பவள வாய்
 என்று குறிக்கும் போதே
ஒரு செம்மை மின்னும்


முத்துப் பற்கள்
என்று  நோக்கும் போதே
ஒரு ஒழுங்கு விரியும்  .


சங்குக் கழுத்து
என்று வியக்கும் போதே
ஒரு பளீர் வெண்மை படரும்.


கனிவும்,  பரந்த நோக்கும்
 தீட்சனி யமும் , சிரிப்பும்
வரை முறையும்  நேர்மையும்
ஒன்று சேரக் காண்பது  அதி அற்புதம்,



No comments:

Post a Comment