Saturday, October 12, 2013

காலம் மாறவில்லை

புரட்டாசியில்  அடை மழை
கார்த்திகையில் விடாத மழை
மார்கழிப் பனி முட்டம்
தை மாதக் குளிர்  குத்தும்
என்ற காலம் போய்
இப்போது  எப்பொழுதும்
வெயில் சுட்டெரிக்கும் வெயில்
கொதிக்கும் மதிய வேளை
 சுடும் அதிகாலை
 எரிக்கும் மாலை
புழுக்கம் நிறைந்த இரவு
காலம் மாற மறந்துவிட்டது உறுதியாக
நம்முடைய  மாற்றங்களைக்  கண்டு

No comments:

Post a Comment