கார்த்திகையில் விடாத மழை
மார்கழிப் பனி முட்டம்
தை மாதக் குளிர் குத்தும்
என்ற காலம் போய்
இப்போது எப்பொழுதும்
வெயில் சுட்டெரிக்கும் வெயில்
கொதிக்கும் மதிய வேளை
சுடும் அதிகாலை
எரிக்கும் மாலை
புழுக்கம் நிறைந்த இரவு
காலம் மாற மறந்துவிட்டது உறுதியாக
நம்முடைய மாற்றங்களைக் கண்டு
No comments:
Post a Comment