Tuesday, October 29, 2013

உலகம் இவ்வளவு தான்

காட்டினதைப் பார்த்தேன் 
மிகுந்த சங்கடத்துடன்
பேசினதைக் கேட்டேன் 
மிகுதியான வருத்தத்துடன் 
நடந்ததைக்  கண்டேன் 
மிகவும்  நெருக்கடியுடன்  
நெஞ்சில் ஒரு பதைப்பு 
பிடித்துக் கொண்டேன் 
கண்ணிலே நீர் 
சுண்டி விட்டேன் 
 குமறி  வந்த 
உணர்ச்சிகளை அடக்கி
 நிலை குலையாமல்
வெளியே  வந்தேன்
எப்படி  என்று தெரியாமல் .

மனிதர்கள்   பல விதம் 
நான்  அறிந்த வகையில் 
நல்லவர்கள் மிகக் குறைவு 
நல்லவர அல்லாதவர்கள் 
என்று அறி வது மிகக் கடினம் 
கண்டு கொண்டேன்  மக்களை 
முன்னால் பெருமை  பேசி 
பின்னால் கேலி  செய்வதும் 
புறம் பேசுவதும் நகைப்பதும் 
இன்னல் விளைவிப்பதும் 
இல்லாததைச் சொல்வதும் 
வாழப் பொறுகாதவர்களும் 
   இருகிறார்கள் என்று தெளி ந்து  
உலகம் இவ்வளவு தான் 
என்று புரிந்து கொண்டேன்.

 

உலகம் இவ்வளவு தான் 



 



No comments:

Post a Comment