கட்டியங் கூறுகிறான்
கட்டிளம் காளை
வந்தேன் வந்தேன்
என்று குரல் கொடுக்கிறான்
பொருட்படுத்தவில்லை அவனை
மிண்டும் குரலை உயர்த்தி அழைக்கிறான்
கண்டு கொள்ளவில்லை அவனை
சத்தமும் ஜால்க்கும் எத்தனை நாளுக்கு ?
நடிப்பும் வெட்டி பேச்சும் எதற்கு?
திமிரும் அதிகாரமும் நின்று பிடிக்காது
புரளியும் வெட்டிப் பெருமையும்
நிலைக்காது எப்போதும்
அமைதி நிரந்தரமாக நீடிக்கும்.
அடக்கம் அமரருள் உய்க்கும்
மந்திரமான தொடர்களை வெறுத்து
போலியான நிகழ்வுகளை நமபி
வாழ்கிறான் கட்டிளங் காளை
கத்திக் கொண்டு ஆடிக் கொண்டு
ஆர்ப்பாட்டமாக வலம் வருகிறான்
எப்போது புரியுமோ ?
No comments:
Post a Comment