Friday, October 11, 2013

ஆலோசனையும் பிரசங்கமும்

சற்று நேரம் பொறுங்கள்
 சிறிது நேரம் பாருங்கள்
சில மணித்துளிகள் காத்திருங்கள்
நல்லது நடக்கும்
 நல்லதே நினையுங்கள்
 நன்றாகவே நடக்கும்
என்று பார்க்கிறவர்கள் யாவரும்
 சொல்லும்  பொது  ஆத்திரம்  உண்டாகிறது
பொறுத்திருந்து  என்ன நடந்தது
 இழப்பு தான் மிச்சம்
காத்திருந்து என்ன ஆனது
 பேரிழப்பு தான் மீந்தது
 நல்லதே நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தால்
கெட்டது தான்  விரைந்து வருகிறது
சொல்வது மிக எளிது
 அன்பவித்தால்   தான் தெரியம்'
 வலியும் வேதனையும்
பிரசங்கம் செய்பவர்களும்
அலோசனை கூறுபவர்களும்
தங்கள் வாழ்வில்
இருக்கிறார்களோ அவ்வாறு?
ஆயிரம்  பொற்காசு பெற வேண்டிய கேள்வி

No comments:

Post a Comment