சற்று நேரம் பொறுங்கள்
சிறிது நேரம் பாருங்கள்
சில மணித்துளிகள் காத்திருங்கள்
நல்லது நடக்கும்
நல்லதே நினையுங்கள்
நன்றாகவே நடக்கும்
என்று பார்க்கிறவர்கள் யாவரும்
சொல்லும் பொது ஆத்திரம் உண்டாகிறது
பொறுத்திருந்து என்ன நடந்தது
இழப்பு தான் மிச்சம்
காத்திருந்து என்ன ஆனது
பேரிழப்பு தான் மீந்தது
நல்லதே நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தால்
கெட்டது தான் விரைந்து வருகிறது
சொல்வது மிக எளிது
அன்பவித்தால் தான் தெரியம்'
வலியும் வேதனையும்
பிரசங்கம் செய்பவர்களும்
அலோசனை கூறுபவர்களும்
தங்கள் வாழ்வில்
இருக்கிறார்களோ அவ்வாறு?
ஆயிரம் பொற்காசு பெற வேண்டிய கேள்வி
No comments:
Post a Comment