Friday, October 11, 2013

காதலின் இலக்காக

காதலித்தது இல்லை
காதலிக்கத்   தெரியவில்லை
காதலிக்க வாய்ப்பில்லை
  காதலிக்க தொடங்கினேன்
மணவாளனை கைப் பிடித்த பின்.
காதல் பெருகி ஓடியது
 வளர்ந்த சூழ்நிலை அவ்வாறு
கண்டிப்பும் கண்காணிப்பும்
இடைவிடா தாயின்  அருகாமையும்
குடும்பப் பாரம்பரியுமும்
காதலுக்கு வழி கோலவில்லை
பெரியோரின் நோக்கிலே திருமணம்
அதன் பின் காதல்  வளர்ந்தது
மிகுந்த  மறைமுகமான பரிமாற்றங்கள்
அதில் ஒரு வெட்கம்
வயது ஏற ஏற அன்பு பெருக
 இன்று ஒருவர்  இல்லமால்
ஒருவரால் வாழ முடியவில்லை
வாழ்கிறோம் காதலின் புனித இலக்காக

No comments:

Post a Comment