Friday, October 11, 2013

காளியாய் கண்ணகியாய்

அவள் அழுதாள் குலுங்கி குலுங்கி
அவளை அழுது கண்டதில்லை
திடமான மனதுடன் வளைய  வருபவள்
மனது குன்றி அழுதாள்
  வழியும் கண்ணீரைக்    கருதாமல்
சிந்தும் முக்கை நினையாமல்
 துடிக்கும் உதடை பாராமல்
சிவக்கும் கண்களை   நோக்காமல்
விரைந்தாள்  தன்னை காயப்படித்தினவனை
கேள்வி கேட்க
  கேட்டாள்  ஆத்திரமாக
நீயும் ஒரு மனிதன் தானா ?
பெண் என்று பாராமல்
 மாணவி என்றி எண்ணாமல்
முறை கேடாக நடந்தாயே
 ஆசிரியர் என்ற போர்வையிலே.
காளியாய்  சீறினாள்
கண்ணகியாய்  சுட்டெரித்தாள்
நிலை குலைந்த பெண் மணி .
எரிந்தானா அவன் ?
இன்று இல்லை
 என்றோ ஒரு நாள்
 எரிந்து சாம்பலாவான்
அவளின் காயம் அப்படி
.

No comments:

Post a Comment