அவள் அழுதாள் குலுங்கி குலுங்கி
அவளை அழுது கண்டதில்லை
திடமான மனதுடன் வளைய வருபவள்
மனது குன்றி அழுதாள்
வழியும் கண்ணீரைக் கருதாமல்
சிந்தும் முக்கை நினையாமல்
துடிக்கும் உதடை பாராமல்
சிவக்கும் கண்களை நோக்காமல்
விரைந்தாள் தன்னை காயப்படித்தினவனை
கேள்வி கேட்க
கேட்டாள் ஆத்திரமாக
நீயும் ஒரு மனிதன் தானா ?
பெண் என்று பாராமல்
மாணவி என்றி எண்ணாமல்
முறை கேடாக நடந்தாயே
ஆசிரியர் என்ற போர்வையிலே.
காளியாய் சீறினாள்
கண்ணகியாய் சுட்டெரித்தாள்
நிலை குலைந்த பெண் மணி .
எரிந்தானா அவன் ?
இன்று இல்லை
என்றோ ஒரு நாள்
எரிந்து சாம்பலாவான்
அவளின் காயம் அப்படி
.
No comments:
Post a Comment