Saturday, October 26, 2013

இனிய காதல்

அதி காலையில் ஓர் அழைப்பு
யாரென்று அறிந்த பின் ஒரு வியப்பு
அன்பான  குரலில் ஒரு உதவி  என்று  சொல்ல
ஆதரவுடன் என்ன என்று விசாரிக்க
 ஒரு சரிகை மேல் துண்டு  வேண்டும்
தீபாவளிக்கு   அணிய தன கணவருக்கு  என்று பகர
எண்பதைத் தொடும் பெண்மணி இன்றும்
கைப்பிடித்தவரின்    தேவையை மேற்பார்க்க
அக் கோரிக்கை  எனக்கு ஒரு கவிதையாகத் தோன்ற
அதில் மிளிர்ந்த அன்பு ஒரு தெளிந்த காதலாகத  ததும்ப
அன்புக்கு வயதில்லை அளவில்லை  என்று புரிய
என்ன ஒரு அழகான் விதத்தில் தன  காதலை
வெளிப்படுத்துகிறாள் இந்த  மங்கை
இதுவே நம்  இனத்தின் பண்பாடு. என்ற  பெருமிதம்
நெஞ்சில் பொங்க நிறைவுடன்  
வாழ்த்த  வயதில்லை என்றாலும்
தன்னிச்சையாக  வருவதை நிறுத்த  இயலவில்லை.
வாழ்க நீ  சகல மங்களத்துடன்

No comments:

Post a Comment