Wednesday, October 30, 2013

என்னவென்று சொல்ல

கண் இமைக்கும் நேரத்திலே 
ஒரு கோர விபத்து 
பச்சிளங் குழந்தை கண் முட
தாயின் மடியில் தவழ்ந்த படி  
தாயோ குழந்தையை அணைத்தப்படி
மரணத்தை தழுவ 
தந்தையோ வண்டி  ஒட்டியபடியே 
நிலை தடுமாற 
வண்டியோ முட்டி மோதி 
அப்பளமாக நொறுங்க  
போவோர் சற்றுக் கூட 
உதவாமல் விரைய  
இரத்த வெள்ளத்தில் 
தாயும் மகளும்  
 துடி துடித்து சாக  
கணவனோ   நிலைக்குத்தி 
புரியாமல் நிற்க
பெருஞ சாலையில்  
நடந்த சேதத்தை 
என்னவென்று சொல்ல 

No comments:

Post a Comment