Friday, October 18, 2013

ஏற்றலும் திகட்டலும்

மழையும் சாரலும்
தூறலும்  தூவானமும்
மப்பும் மந்தாரமும்
கூடிய  மேகமும்
 வானவில்லும்
நிறக் கோள்களும்
அழகெனப் பரவி
மாலைப் பொழுதை
கவின்மிகு நேரமாக
 மாற்றிக்   களிப்புடன்
நோக்குங்கால்  காற்று
வேகமாக வீசத் தொடங்க
இடி பயங்கரமாக இடிக்க
மின்னல் பிரகாசமாக  மின்ன
 மழை துரிதமாகக்  கொட்ட
மாலை இரவாக மாறும் வேளை
கண்கொள்ளாக் காட்சி
கடுமையாக சடுதியில் வேறுபட
ஒரு பொழுதின் காலம்
ஏற்றலும் திகட்டலுமாக
தோற்றம் அளித்தது

No comments:

Post a Comment