Friday, October 11, 2013

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர்
 என்று புலம்பும் நாம்
 செய்த பாவம் என்ன தானோ ?
நீர் இல்லையேல் உயிரினம் இல்லை
வரப்பு   உயர  நீர் வேண்டும்
பயிர் செழிக்க நீர்  அவசியம்
மனிதன் தாகம் திர்க்க
அவனின் உடல் அழுக்கைப் போக்க
மற்ற   தேவைகளைப்   பூர்த்தி செய்ய
விலங்குகளின்  நிலைக்கும்
அவைகளின் வாழ்வுக்கும்
நீர் ஒரு அத்தியாவசியமான  செயல்பாடு
 நீரின்றி உலகம் இல்லை
நாம் அந்த தேவ அன்பளிப்பை
புறக்கணித்து புறம் தள்ளி
சீரழித்து வீணாக்கி
நச்சுப் பொருட்களை  தேக்கி
அசுத்தப்படுத்தி   கொல்லாமல்
 கொன்று கொண்டிருக்கிறோம்
 தெரிந்து  முக்கால் வாசி
தெரியாமல் கால் வாசி
செத்தவன் பிழைத்துப் பார்த்தோமா!
நீர் வளம் குன்றி  சிறுத்து
 தேய்ந்து  ஓடாகிப் போனது.
தண்ணீர் தண்ணீர் என்று ஏங்குகிறோம்
  இன்று கண்ணீருடன்

No comments:

Post a Comment