உண்மையை சொன்னால்
கோபம் கொள்கிறான்.
அடிக்க வருகிறான்
உண்மை கசக்கும்
கசந்து கண்ணைப் பிடுங்கும்
பொய்யும் ம் நடிப்பும் அமர்க்களம்
தக தக என்று மின்னும்
குளுகுளு என்று குளிர்விக்கும்
வருடினாப் போல் தொடும்
இதமும் சுகமும் வெகுவாக அளிக்கும்
எவ்வளவு நாட்கள் என்பது தான் கேள்விக் குறி
நிழல் மறைந்தவுடன் வெயில் தகிக்கும்
பொய் குறைந்த நாள் வாழ்ந்து
வெளிக் கொணர்ந்த பின்
நாய் அடி பேய் அடி பட்டு
தோலுரித்து தண்டவாளம் ஏறி
மானம் மரியாதை களைந்து
கழுவேறி தூக்கிலடப்படும்.
கசந்த உண்மை கசப்பாக இருந்து
காலம் வரும் போது கனிந்து
திகட்டாத இனிமையை நல்கும்
கசப்பு நாளடைவில் இனிமையாக மாறும்
நடிப்பு காலப்போக்கில் நரகமாகத் தாழும்
No comments:
Post a Comment