Sunday, October 27, 2013

வீடு என்பது

வீடு என்பது கோவில்  
இல்லம் என்று சொன்னால் 
 இல்லாதது ஒன்றுமில்லை 
மகிழ்வும் நிறைவும் 
 கவலையும்    துன்பமும் 
ஏற்றமும் தாழ்வும் 
ஒன்றே அமைந்த 
இடம்  வீடு.

மனைவியுடன் கூ டி 
குழந்தைகளுடன் கொஞ்சி 
உண்டு களி த்து 
உறங்கி எழுந்து 
உழைத்து  அலுத்து 
நிம்மதியுடன்  வாழும் 
இடம் வீடு .


சுத்தமும்  சுகாதாரமும் 
நேர்த்தியும் நிர்மாணமும்
வளமும்  வனப்பும் 
நல்லதும் கெட்டதும் 
நன்றாகவே நடந்திட 
சுகமான வாழ்வுக்கு  ஏற்ற 
இடம் வீடு.


அருமையும் பெருமையும்  
பேசும்  கதவுகளும் 
கண்ணீரும்  கோபமும் 
பார்த்த அறைகளும் 
நறுமணமும் புகையும் 
கண்ட அடுப்படியும்  அமைந்த 
இடம் வீடு.

கல்லும் மண்ணும் 
கதை சொல்லும் 
மரமும் கம்பியும் 
கலகலப்பை  உள் வாங்கும்
வண்ணமும்  வகையுமாக 
நிலமும் தளமுமாக  நிற்கும் 
இடமே வீடு.




No comments:

Post a Comment