Thursday, October 10, 2013

தமிழ் பயணம்

தாயை நேசிக்கிறேன் 
தமிழைத் தலை வணங்குகிறேன் 
தமிழும் தாயும் கலந்து 
நினைக்கிறேன் எம் வாழ்வை 
இரண்டுக்கும் நிகர் இல்லை 
வாழ்வுக்கும் குறை இல்லை 
தமிழ் பற்று நிரம்ப 
தாய் அன்பு மேலோங்க 
நீ நன்றாக இருப்பாய் 
என்று தாயின் குரல் 
தமிழில் ஒலிக்க 
சீருடன் வாழ்கிறேன் 
தமிழ் மொழியோடு. 
செம்மையாக எழதப் பழகி 
கவிதையுடன் நடை பயின்று 
காவியமாகப் பறந்தோடி 
உயர எண்ணம் கொண்டு 
துவங்கியுள்ளேன் என் தமிழ் 
பயணத்தை உவகையுடன்



No comments:

Post a Comment