தாயை நேசிக்கிறேன்
தமிழைத் தலை வணங்குகிறேன்
தமிழும் தாயும் கலந்து
நினைக்கிறேன் எம் வாழ்வை
இரண்டுக்கும் நிகர் இல்லை
வாழ்வுக்கும் குறை இல்லை
தமிழ் பற்று நிரம்ப
தாய் அன்பு மேலோங்க
நீ நன்றாக இருப்பாய்
என்று தாயின் குரல்
தமிழில் ஒலிக்க
சீருடன் வாழ்கிறேன்
தமிழ் மொழியோடு.
செம்மையாக எழதப் பழகி
கவிதையுடன் நடை பயின்று
காவியமாகப் பறந்தோடி
உயர எண்ணம் கொண்டு
துவங்கியுள்ளேன் என் தமிழ்
பயணத்தை உவகையுடன்
No comments:
Post a Comment