Friday, October 11, 2013

அமைதியும் அற்புதமும் எளிமையிலே

இளங் காலைப் பொழுதிலே
 நங்கை  ஒருத்தி  தென்றல்  போல்
அன்ன நடை யுடன்
சுகந்த மணத்துடன்
நிதானமான  பார்வையுடன்
 உறுதியான  நோக்குடன்
மிகவும் ஆச்சரியாமான
உடையில் ஆம்
அழகான புடவை உடுத்தி
(இன்று புடவை ஒரு அபூர்வமான  உடை)
நேர்த்தியான நகைகள் அணிந்து
புன்னகை தவழ
சென்ற காட்சி
மனதில் நிற்கிறது
அமைதியான அழகு
என்று சொல்லலாமா
அற்புதமான அழகு
என்று கொள்ளலாமா
எவ்விதத்திலும் அவள்
ஒரு தெய்விகமான
அழகாகத்   தோன்றினாள் .
யாவருக்கும்  ஒரே நேரத்தில்
அழகு  ஆர்பாட்டத்தில் இல்லை
அதித அலங்காரத்த்ல்  இல்லை
விலை மதிப்புடைய அணிகலன்களில் இல்லை
எளிமை ஒரு தனிப்பட்ட அழகு
 அதனுடன் சாதுர்த்தியம் கூட்டும்
அவற்றுடன் கனிவு சேர்க்கும்
இதமான  பேச்சு ஏற்றும்
உணர்வப்   பூர்வமான எண்ணம்  போற்றும் அழகை ஆற்றலுடன்  வழங்கி
 அழகுக்கு அழகு அளித்து
வளமாக கொண்டு செல்லும்
இயற்கை தரும் வெற்றி
இதுவன்றோ !

No comments:

Post a Comment