Tuesday, October 18, 2016

குரல் என்ன செய்யும்?

பேசுபவன் முகத்தைக் காணாமலே
 தெரியும்  அவனின் நினைப்பை 
 பேசும் ஒலி  காட்டிக் கொடுக்கும்.

நினைத்ததை சொல்லாமலே 
 முகம் காட்டி விடும்.

பொய் எனில் ஓர் அதிர்ச்சி   
 மெய்  எனில் ஓர்  உவகை.

 தெரியுமே முகத்தில்  அழகாக 
 மறக்க மறைக்க முயன்றாலும் 
 தெளிவாகத் தெளியும்  பார்வையிலே !

கண்ணே பேசும் என்கிற போது 
குரல் என்ன செய்யும்?  
 கண்  காட்டுமே  நன்மையையும் 
தீமையும்.




Sunday, October 16, 2016

கடிந்தேன்

கடிந்தேன் அவனை
 சொன்னதேயேச்   சொல்லி
 கோபத்தில்  தூக்கியெறி ந்து
 உணர்ச்சி வசப்பட்டதால்.

 கெடுதல் அவனுக்கும்
 அவனின் மகளுக்கும்
 என்று அறியாமல்
கத்தும் வேளையிலே.

 புகை பிடிப்பவனுக்கும்
 மட்டும் கெடுதல்
 விளைவிக்கவில்லை  புகை
 கூட இருப்பனையும் சேர்த்தே
 அழிக்கிறது.

புரியாமல் கத்துகிறவனை
 என்னென்னவென்று  நிறுத்துவது
 நான் விளங்காமல்
 மலைத்து நிற்கிறேன்
 வெகு நேரமாக.

  

Wednesday, October 12, 2016

கண்டில்லேன் வேறு எங்கும்.

ஒர் ஆறு   ஓடுகிறது
 அதில் கழிவும்
 வண்டலும் .கூடவே.

ஒரு சாலை  விரிந்து
 நிற்கிறது  அதில் ஊரின்
குப்பை  நிறையவே.

ஒரு  பொதுவிடமான் பேருந்து
நிலயத்திலோ எச்சலும்,
 சிறு நீரும்  நாற்றமாகவே

ஒரு பள்ளி, கல்லூரியிலோ
பாடம் பாதகமாக காகிதமும்,
 மையும் சிந்திச்  சிதறி.

எங்கும் காணின்
தொய்வானத்   தூய்மையும்
  நிரந்தரமான அழுக்கையும்.

 இந்தியத்  துணைக் கண்டத்தில்
மலிந்து நிற்கும் முரண் பாட்டை
 கண்டில்லேன்  வேறு எங்கும்.


ஒதுங்குவது நலமே

கடிந்து பேச வேண்டாம் என்ற போதும்
விலகி  தள்ளி நின்றாலும்
 வந்து வந்து வம்பிழுப்பது ஏனோ ?

சொல்வதையெல்லாம் சொல்லி விட்டு
 நான் அவ்வாறு அல்ல.  நான் அப்படி
நினைக்கவில்லை  என்பது ஏனோ?

வேண்டாம் என்ற போதிலும்
 வேண்டி வேண்டி வந்து
அழுத்துவது ஏனோ?

துளைத்து துளைத்துக்   கேட்டு
வாயில்  விரலை  விட்டு
 தோண்டுவது ஏனோ?

புரியவில்லை ஏதுமே
மௌனம்   மேன்மையே
ஒதுங்குவது  நலமே !

Monday, October 10, 2016

எண்ணும் எழுத்தும்

எண்ணும்  எழுத்தும் 
 கண்ணனெனத் தகும்.

 இன்று எழுதத் தெரிந்தவனை விட 
 படிப்பே இல்லாதவன் சிறக்க.

 எண்ணை   அறியாதவன் 
கணக்கில் திறம்பட

 திகழும் அதிசயம் 
 கண்டேன் கண் கூடாக 

Sunday, October 2, 2016

நேரம் தவறி.

காத்திருந்தேன் காலம் காலமாக
 விடியும் என்ற எண்ணத்தில்.

விடிவது தினம் தானே
 என்ற போதும்
 நல்ல காலத்துக்காக
 பொறுத்திருந்தேன்.

நடக்கும் என்ற நம்பிக்கை  எனக்கு
 அபாரமாக.  நம்பினவனுக்கு
 கை  மேல் பலன் என்பது
 சொல்லளவே.

மனம் பட்ட பாடு  சொல்வொண்ணா
 கண்ணில் வடிந்த நீரோ
 கட்டுக்கடங்கா.

பதற்றம் எதிலும்
 உடலோ ஓத்துழைக்க மறுக்க
 உள்ளமோ துண்டுத துண்டாகச்
 சிதற.

சுற்றமோ  எள்ளி   நகையாட
 பிஞ்சுகளோ கரம்  பிடிக்க
துணையோ வதங்கி வாட.

ஏதோ ஒரு மனதோடு
நின்று பிடித்தேன்
கிடைத்தது வரம்
நேரம் தவறி.


 
  

Wednesday, September 28, 2016

கொஞ்ச நேரம்

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
 என்று காலம் தாழ்த்தி
பொறுமை கடலினும்   பெரிது
என்று பறை சாற்றி
நேரமும் காலமும்
 என்று  அறிந்தும்
   நீடிக்கும் எண்ணம்
 ஒரு தீமைக்கே
 என்று கொள்வோமாக.

Friday, September 23, 2016

தகுதி

தகுதி என்று நினைத்து
 தகாத காரியங்கள் செய்து
 தகுந்த எண்ணம் ஆகா

தகுதி என்று இறுமாந்து
 தாங்காத  கொடுமை செய்து
தானே பெரியவன் என்பது ஆகா.

தகுதி என்பதில்  திளைத்து
திமிராகத் தூக்கி எறிந்து
தான்  பொய்  பேசுவது ஆகா.

தகுதி ஓர்  அநீதி  அல்ல
 அது ஒரு சான்று  ஆகும்
மிகுவதும் மிகாததும்   நம் கையிலே   

Wednesday, September 21, 2016

தண்ணீருக்காகவா இவ்வளவு

தண்ணீர் தண்ணீர் 
 என்று புலம்பி 
 தடியடி  வன்முறை 
 எங்கும் பெருக.

 வழக்குரைக்க 
 நீதிமன்றங்கள் 
என்று தாண்டி ஓட.

தண்ணீரை  ஓட விடாமல்
அடக்கி  அணைகளில் தேக்கி 
பறறாக்குறை   என்று  மனிதன் 
 ஓலமிட.

 பயிரை வளர்த்து 
 நீர் வரத்து இல்லாமல் 
அவை வாட..
 
 மனமிழந்து 
 தன்னுயிரை  விட்டு 
 கதறுகிறான்  மனிதன்
இன்னொரு எல்லையில். 

.
 
உ யிர்ச் சேதம், பொருட் சேதம் 
 இழப்பு  என்று மக்கள் திக்குமுக்காட
 
 நினைத்துப் பார்த்தால் 
 தண்ணீருக்காகவா  இவ்வளவு 
என்று மயங்கி 
 துவள்கிறது  நெஞ்சம். 


 

Tuesday, September 20, 2016

தமிழின் அழகே

பாலும் கசக்கவில்லை
 பிழிந்த துணியும் கசக்கவில்லை
 என்று நயம்படச் சொன்னான்
புலவன்
 சாகும் தருவாயில் கூட.

தமிழின் அழகே அதனின்
இயம்புதலில்.
அதன் சிறப்பே அதனின்
தனித்தன்மையில்.

செல்வோமா என்பதை போவோமா
 கிளம்புவோமா,  பார்ப்போமா
 என்று பல விதமாக
 நேரம் காண்பதாக
 உரைப்பது
 என்னே அழகு.

இதே போல் எத்தனையோ
 எடுத்தாள எண்ணம்  
வியப்பு மேலிட பெருமிதம்
 பொங்க  மகிழ்வுறுகிறேன்
 தாய்த் தமிழை
 உணர்ந்து.

 


 

Saturday, September 17, 2016

கண்ட இன்பம்

வம்பு எதிலும் எவையிலும்
 எப்போது என்று காத்திருந்து
 சட்டென்று தாவி
 கழுத்தைப் பிடிப்பது  போல்
 கவ்விக் கிழித்துக் குதறி
கண்ட  இன்பம் என்னவோ ?

Thursday, September 15, 2016

நிலம் காணுதல் நிரந்தரம்.

மேலேயும் கீழேயும்
 ஒரு சந்திப்பு.

மேலே பறக்கும் ஓர் 
ஊர்தி  வானம் பிளந்து 
 காற்றைக்  கிழித்து 
பாய்கிறது 
இராட்சத   வேகத்திலே!

வான நீல  நிறம் 
 ஒரு பொழுதிலே 
 வெண்மையாக மாறி  
மீண்டும்  நிலமாக 
 கொப்பளிக்க.


 கீழே செல்லும் 
 ஊர்திகள்
 சில அசுர வேகம் 
 கொண்டு பாய
 சில மிதமான 
கோர்வையில் செல்ல 
பல ஊர்ந்து 
 நகண்டு   நகர்ந்து 
போகும் நேரம்   
விதமான 
போக்குவரத்துக்கள் 
நிலத்தின் மேலே என்று 
அறியுங் கால் 
 நிலத்தின்  அருமை 
நெஞ்சம் நிறப்ப! 


உயரப்  பறக்கும் 
 வானவூர்தியோ  
 தரை  நோக்கி 
 இறங்கும் கால் 
ஒரு நினைப்பு 

உயரப்  பறப்பின்   
 நிலம்  காணுதல் 
நிரந்தரம்.







  



Sunday, September 11, 2016

இயம்பு என்ற போது

தாய் நாட்டை விட்டு
வாழ்கிறான்
 பிழைப்புக்காக.

ஊரை விட்டு உறவை விட்டு
 வாழ்கிறான்
 பிழைப்புக்காக.

பணப்  பெருக்கம் இனப்  பெருக்கம்
 தேடி வர  வாழ்க்கிறான்
பெருமைக்காக

பதவியும் அனுகூலங்களும்
பெருகி நிற்க  வாழ்கிறான்
பெருமைக்காக

வாழ்கிறான் என்ற போது
ஒரு கேள்வி
எழும்புவதாக

கலாச்சரம் இழந்து  களையிழந்து
நிம்மதி இல்லாத
வாழ்க்கைக்கா ?

இயம்பு என்ற போது
வாயடைத்து நின்றான்
பொதுவாக.







Saturday, September 10, 2016

பட்ட மரம் துளிர்க்காது!

பட்ட மரம் துளிர்க்குமா?
ஆராய்ச்சி எதற்கு?
எனில்
சில நோக்கங்களுக்காக!

 செத்தவன் எழுவானா ?
 வரி காட்டுவானா?
 கட்டினான்
 எனக்கு தெரிந்த
 ஒருவன்.

அவன் உயிர்பிக்கப்பட்டானா?
 அருவமாக வந்தானா?
 அவனுக்கே வெளிச்சம்.

வந்தவன் கட்டினான்
 அதற்குரிய காசோலையைக் கொடுத்து
 கட்டினதற்கு  அத்தாட்சியை
 வாங்காமல் சென்று விட்டான்
பரலோகத்துக்கு மீண்டும்.

என்னே ஒரு பித்தலாட்டம்
 இதற்குப் பின்னும்
சொல்லுங்கள் ஏன்
பட்ட மரம் துளிர்க்காது
என்று?




Friday, September 9, 2016

அவன் அறிவு

விம்பு  செய்கிறான் 
 புரிந்தோ 
 புரியமாலோ!

அழகாக்கப்    பிரிப்பதை 
 அலங்கோலமாக்கி 
 துண்டாடி. கிழித்தான் 
எதற்கோ! .

ஆண்டுகள் பல ஒடியும்  
செய்வதறியாது 
 தத்தளிக்கிறான் 
 ஏனோ?

அவன் அறிவு 
 அவ்வளவு தான்  
தானும் வாழாமல் 
 பிறனையும்  நசித்து
 எதனாலோ!




 

எத்தனை பேரோ?

கண்ணிலே விளக்கெண்ணெய்
 ஊற்றி
 குற்றத்தை  துழாவிக்
 கண்டறிந்து.

காலிலே வெந்நீர் ஊற்றி
அங்குமிங்கும்
 நிலை கொள்ளாமல்
ஒடி

கண் பார்க்க கை
 செய்து
இயலாததையும்  இழுத்து
முடித்து

திரை கடலோடி திரவியம்
தேடி
 திரட்ட முடியாத  செல்வத்தை
திரட்டி



வாழ்ந்தேன்  என்று பெருமிதம்
பொங்க
நிறைவோடு  வாழ்கிறவர்கள்
 எத்தனை பேரோ?
 

Thursday, September 8, 2016

என் வழியிலே

முகம் காட்டி சிரித்த அழகு
 இன்று
முகம் திருப்பி அலக்கழிக்கும்  கோலம்
 நினைக்கையில்
இது உண்மையா? அது நிழலா?
என்று தோன்ற,
 சற்று நிதானித்து நோக்கின்
 இதுவம் அல்ல,
 அதுவும் அல்ல.
 என்று கொண்டு
 நேர்மையான  எண்ணம்
 மனதில் எழும்ப
சற்றும்
அசராமல்  செல்கிறேன்
 என் வழியிலே

Wednesday, September 7, 2016

மகிழ்ந்தேன்! மறந்தேன்!

பரத  முனிவரின்  நாட்டிய சாத்திரம்
 பல்கி பெருகி விதம் விதமாக
 செழிக்க

ப  என்பது முக  பாவத்துக்கும்
ர   இராகத்தை   மேற்கோளிட
த தாளத்துக்கு நிற்க
 பரத  நாட்டியம்
 ஒரு சுகானுபவ மாகத்  திகிழ

சுருதியும்  ஜதியும்
ஒன்று கூட
ஆரணங்கு   ஆனந்தம்
 மேலிட  குவிந்து மகிழ்
 அதிகாரம் காட்ட
 அடித்து உந்த.

   வீரம் வெளிப்பட
 குதித்து ஆர்ப்பரிக்க
வெகுண்டெழுந்து
கனல் கணக்ளில் தெறிக்க
ஆடுகிறாள்.
 
 கனவும்  கண்டு
 வெட்கி நாணி
 உயிர்ப்பித்தெழுகிறாள்
 நாட்டிய பெண்மணி.

பரவசத்தில் தன்னை
அறியாது  கண்ணீர்  மல்க
இறைவனை நினைத்து
கூத்தாடுகிறாள்.

என்னே ஓர் நாட்டியம்
 ஓர் அற்புதம்
கண்டேன்
 மகிழ்ந்தேன்!
 மறந்தேன்!
 என்னையும், ஏன்
 யாவறறையும்.










Monday, September 5, 2016

பாமரன் பரிணமிக்கிறான்

பாமரன்  பரிணமிக்கிறான்
உலகிலே
 பணத்துடன், ஆளுமையுடன்
ஒரு வழியில்
 வசதி மிக்க குடும்பத்தில்
பிறந்ததாலே!
.

நல்வழியில் செல்லாமல்
 கோணலாகப்   போகிறான்
 ஆத்திரத்துடனும் ஆற்றாமையுடனும்
அவனுக்குத் தெரிந்த
  தடத்திலே!

பணம் ஒன்றே குறிக்கோளாக
பண்பை    என்றும்
நாடாமலே
 பயணிக்கிறான்  வேகமாக
விளைவறியாமலே!

அழியும் செல்வம்
 எத்தனை  நாளைக்கு
என்று அறியாமலே
வாழ்கிறான் ஒரு
பதராகவே!








Sunday, September 4, 2016

பரந்த உலகிலே

வீணாகப் பேசுகிறான்
அவன் தான் சமர்த்தன்
 என்ற நினைப்பில்.

வெட்டியாகக்   கழிக்கிறான்
காலத்தையும் பொழுதையும்
புரியாமல்.

அவனின் முரண்பாட்டினால்
ஒரு குடியே பிரண்டது
முழுமையாக.

வாழ்கிறான் அவனும்
பரந்த உலகிலே  அவனுக்கும்
 ஓர் இடம்.  



Friday, September 2, 2016

கைகூடும்

கையில் தடியுடன்
 இடுப்பில் ஒரு முழத்
துண்டுடன்   இருந்தவனை
 மகாத்மா  என்கின்றனர்.

திருவோட்டுடன்
நீள அங்கியுடன்
 அலைந்தவனை
புத்தன் என்று  அழைக்கின்றனர்.

மாட்டுக் கொட்டிலில்
ஆடு மேய்ப்பவனுக்குப்
 பிறந்தவனே
யேசுநாதர்  என்பார்.

வெளித் தோற்றம்
 ஓரளவே
 உள்ளார்ந்த எண்ணமே
 கைகூடும் அதிகமே



Thursday, September 1, 2016

நல்லவனும் தீயவனாகிறான்

பூ  ஒன்று கண்டேன்
ஒளி வெள்ளத்தில்

பொலிவுடன் நிமிர்ந்தது
என்னைப்  பார்த்து.

புன்னகையுடன்  குவிந்தது
அழகாக .

நெருங்கினேன்  ஒலியெழுப்பாமல்
மெதுவாக.

மருண்டது  அண்மையில்
 என்னைக் கண்டு.

பறித்துப்   பிரித்து  ஒடித்து
 விடுவேனோ  என்றாகி

குனிந்தது  அருண்டு
சற்று நேரம்.

மனிதனின்  நோக்கம்
மலருக்குப் புரிந்தும் புரியாமல்

வன்மையின்  துடிப்பை
 மென்மை உணர

நல்லவனும்  தீயவனாகிறான்
ஒட்டு மொத்தமாகவே!









  

Tuesday, August 30, 2016

பரிதாபமாக

வளர் பிறை சந்திரனைப் போல்
வளர்ந்து கொண்டே போனது
 அவன்தன் பேச்சு.

தன்னை   விட என்ற
இறுமாப்புடன்  வலம்  வரும்
 அவன்தன்    நடப்பு .

நிகரில்லாதவன் என்ற  பெருமிதம்
 ஒவ்வொரு பொழுதிலும்
அவன்தன் செயலில்.

மேற்போனவன்  மேல் நோக்கி
 நிற்கும் கால் ஒரே நாளில்
மறைவான செல்வம் .

கண்ணிலே காணாமல்
கையிலே இல்லாமல்
பறந்து போனது.

நிற்கிறான்  தானாகவே
பெருமையும்  இல்லாமலே
தன்னந் தனியாக
பரிதாபமாக !


பலவாறாக

பல கோடி வேண்டி
 பலப் பல வியூகங்கள்
 வகுக்க

பல சக்தி வேண்டி
பலப்பல  ஹோமங்கள்
செய்து.

பல காரியங்கள் நடக்க
பலப்பல  வேண்டுதல்கள்
 அர்ப்பணித்து.

பலப் பல என்று பெருக்கி
 பலவற்றையும்  கூட்டி
பலவாக அளந்து.

பலவாறாக வாழ்ந்தான்
இங்க்கொன்றும் அங்கொன்றும்
 குடும்பமாக

பல தாரங்கள் பல பழக்கங்கள்
பலமுறை  தடுமாற்றங்கள்
என்று பலமிழந்து கொண்டு

பல வாகில்  பலவழியில்
 சிறுமைப்பட்டு  வாழ்கிறான்
 பலவேந்தன்  என்றவாக்கில்.






Sunday, August 28, 2016

எந்த நன்மையையும் இல்லாமல்

காலமும் பொழுதும் போக 
 வயதும் கூட 
 இளைஞன் இன்று முதியவன் 
 குழந்தை இன்று  மனிதன் 
மாறும் யாவையும்  வேகமாக 
ஒன்று மட்டும் மாறவேயில்லை 
 அது ஒரு குடும்பத்தின்  சொத்துக்கள் 
 வழக்கு வ ம்பு கணக்கு 
 என்று பல விதம் 
 பஞ்சாய்த்து   எல்லாவிதமும் 
 குறையில்லாமல்  ஆண்டுகள் 
 உருண்டோட நடக்கின்றன
 பணமும் நேரமும் உழைப்பும் 
முயற்சியும்  விரயமாக 
 யாருக்குமே எந்த நன்மையையும் 
 இல்லாமல் .

ஒரு மனிதனின்  புரியாத்தனத்தால்.

 

Saturday, August 27, 2016

அரிதிலும் அரிது.

தேடினான்  ஊசியை
 வைக்கோல்  போரில்
உறுதியாகக் கிடைக்காது
 என்று தெரிந்து.

தேடுபவனை என்ன என்னவென்று
குறிப்பது. அவன்  ஒரு  புரிந்தவனா
 புரியாதவனா  என்று நிர்ணியக்க
 முடியவில்லை.

அறியாத  கூட் ட்டத்தில்
 அறிந்தவனைக்  காண
படிக்காத குழுவில்
 படித்தவனைத்  தேடுவது  போல்.

நெறியில்லாதவர்கள் நிறைந்த
 நேர்மையின்றி  வாழும்
குழாமில்  நியாயம்
 எதிர்பார்ப்பது அரிதிலும்
 அரிது.





Monday, August 22, 2016

நகைப்புக்கு இடமாக விளங்கும் காட்சி

காக்கையும் கரைந்து
 தலை  தூக்கி  ஒன்றாக கண்ணால்
 கழுத்தைச்  சாய்த்து
பார்க்கும் கால்
அதன் பெருமை
 அதற்கே பிடிபடவில்லை.

சோளக்   கருது   பொம்மையோ
தானே அழகு என்று நினைத்து
 தலையைத்  திருப்பி திருப்பி
 காட்டும் விதம்  அதற்கே
 பெருமிதம்   என்றும் போது .


இரண்டுமே கை கோர்த்து
 போவோர்  வருவோரை
 நையாண்டி  செய்த   காலம்
 மலையேற. தற்போது
 இரண்டுமே நகைப்புக்கு
 இடமாக  விளங்கும் காட்சி
 வலித்து  வலிந்து தொடும்
 நேரம் மனவெழுச்சியை
அடக்கி சிரிக்க முடியாமல்
 தவிக்கிறார்கள்  மக்கள்.




Sunday, August 21, 2016

நிலையில்லாத மனம்

மனதில் ஒரு சலனம்
 எதற்கு என்று தெரியவில்லை
 ஏன்  என்று புரியவில்லை
 .
சடுதியில் தெளிந்து  விடுவேன்
ஏனோ  அவ்வாறு முடியவில்லை
சிறு கலக்கம்  புரட்டுகிறது.


 தளர்வடையாதவள்  நான்
 என்று இறுமாந்திருந்தேன்
 சற்று பின்னடைவு .

 நிலையில்லாத மனம்
 என்னை  ஆட்டுகிறது
 வெற்றிக் கண்டு விடுவேன்
 உறுதியாக.


Friday, August 19, 2016

நியாயம்.

வாரம் முடிந்தால் 
 ஊதியம் என்ற போது 
 மனம் நிறைந்த  
 பெருமிதம்.

மாதங்கள் உருண்டோடினால் 
ஊதிய உயர்வு  என்றவுடன் 
 மகிழவு  பெரும்பான்மையாக 
கச்சிதம்.

இவ்வளவும் முன்னே 
 நாம் செய்தது என்ன 
என்று நினைத்தால்  
 எரிச்சல்.

உதியத்திற்கு  உள்ள 
 வேலை  செய்தோமா 
 என்று  எண்ணினால் 
சலிப்பு.

இது போலே தான்  
அதுவும் என்று 
 சமமாக இருப்பது 
 தானே  நியாயம்.
  

 

 


  

Wednesday, August 17, 2016

முயலாலாமா?

புரிய வைக்க முடியுமா?
 தெரியவில்லை?
 முடியம் என்பது 
 ஒரு பெரியதல்ல.
 முடியாது என்றாலும் 
 ஒன்றும் ஆகப் 
போவதில்லை.

காலங்கள் முடிகின்றன 
 வயது  முதிர்கிறது 
 அநுபவங்கள் 
பலவிதம் 
 இருந்தும்  ஏதும் 
 முடிவுக்கு வரவில்லை.

ஏன்  என்று நோக்கின் 
 மனதில் அழுத்தம் 
 வெகுவாக இழுக்க 
விட்டு விடலாம் 
என்கிற போது  
 மனம் ஒத்துப் போக 
 அறிவு முயன்று பார் 
வெற்றி உறுதி 
 என எடுத்துக் 
 காட்டுகிறது.

முயலாலாமா?
 
 



 

Tuesday, August 16, 2016

என்னவென்று உரைப்பது?

எடுத்தான் முடித்தான்
 என்று இல்லாமல்
 சொன்னதயே
சொல்லிச் சொல்லி
 செய்ததையே
 செய்து செய்து
 என்னவென்று புரியாமல்
 எதற்கென்று என்று
 அறியாமல்
மற்ற வர்களுக்கும் இடம்
 கொடுக்காமல்
 தானே வலது மாறி
இடது விட்டு
 முழுவதுமாக
முடிக்காமல்
 பாதிக்  கிணறு
கூடத்  தாண்டாமல்
 திண்டாடும்
  விளங்காத  குமரனை
 என்னவென்று  உரைப்பது?






Monday, August 15, 2016

புழுதியும் பிதற்றலுமாக

பெண்ணின் மனதை 
 அறியாதவன் 
தன பெருமை பேசி 
 அலசுகிறான்
 தான் செல்வந்தன் 
என்றும் 
 செல்வாக்கு  நிறைந்தவன் 
 என்றும் 
வாய் ஓயாமல் 
 அள்ளி விடுகிறான் 
 புழுதியும்   பிதற்றலுமாக.


பெண்ணோ நிலை குலைந்து 
 புலம்புகிறாள்  தன் 
 நிலை  வருந்தி 
 மணவறையில் அமர வேண்டியவள் 
துடித்துக்  கதறுகிறாள் 
பொருட்படுத்தாது   பொய்யை 
 உண்மையாக்கி  நிலை 
 நாட்டுகிறான் 
 அவனுக்குத் துணையாக 
 அவன் தமக்கையும் 
 தமையனும்  வாதாட
அதிர்ந்து நிற்கிறார்கள் 
கூடினவர்கள்.


  

 
 

 

Wednesday, August 10, 2016

கழுத்திலே மாலை

கழுத்திலே மாலை  
கண்ணிலே நாணம்
தலையோ குனிந்து
 நிலம் பார்க்க
 வந்தாள்   மணமகள்
 அன்று.


கழுத்திலே மாலை
 அதே போல
 கண்ணிலே அகம்பாவம்
தலையோ நிமிர்ந்து
 நேரே நோக்க
 வருகிறாள்  மணப்பெண்
 இன்று.

தவறில்லை
 அச்சம், நாணம். பயிர்ப்பு
 யாவுமே   மலை ஏறிவிட்டன.
நிற்பதென்னவோ
ஆணவம், தைரியம், திமிர் .
பொறுத்துக்   கொள்வதே
 விவேகம்.

பெண் என்றாலே
 போதும்.

இனம் பெருக்க, குடும்பம்
தழைய, பெண்  வேண்டும்.
பொறுப்போமாக.  





Saturday, August 6, 2016

ஒரு தாயின் வயிற்றில்

வாழ்ந்தான் தனக்குத்  தானே
 தனது  தானே  எல்லாம்
 என்று சிவலிங்கம்
 நினைக்கவில்லை
 மற்ற்வர்களைத்    துளியேதும்.

விலகினான் தனக்கு இல்லை
என்று நினைத்துக் கொண்டு
சுந்தரம் .
தன்னிடத்தை   விட்டு விட்டு
 மற்றவர்களுக்கு தனதையும் .

கலக்கினான் .முழுவதுமாக
நேர்மை மாறி நிலைமை  தவறி
மெய்யன்
கருதவில்லை  மானம்
 நாணயம் அதற்காக எதையுமே.


கெடுத்த்தான் குடியை
 ஒழுக்கம் அற்று  இடம் தடுமாறி
மாணிக்கம்
கடுகளவும் எண்ணவில்லை
எதைப்  பற்றியுமே .

ஒரு தாயின்  வயிற்றில்
 பிறந்த நான்கு
 விநோதங்கள்.

 எவனுமே நேர் கோடாக
 அல்ல.



Monday, August 1, 2016

எண்ணங்களே வாழ்வு

வருமானம் பல கோடி என்பான்.
 பரிமாணம் பல விதம் என்பான்.
 
பிடிமானம் சிலவற்றில் அவனுக்கு.
படிமானம் சில வழிகளில் அவனுக்கு.

அனுமானம் அவனது   வழி.
 சன்மானம் வேண்டுவதே  வழி.

அவமானம் கண்டான் யாவற்றிலும்
அவதிக்குள்ளான எல்லாவற்றிலும்.



Friday, July 29, 2016

பன்முகத் தேடலிலே

பன்முகத் தேடலிலே
 கழிக்கும் காலங்களிலே
 தோன்றும் சூழ்நிலைகளோ

பலவாறு மனத்தை
உற்சாகப்படுத்தவும்'
 ஒரு நிலைப் படுத்துவதிலும்

அலக்கழிப்பதிலும்
 கூட்டணி அமைக்க
பட்டும் படாமல்

நல்லதை எடுத்து
 தீயதை விடுத்து
 கைக்கொள்வதிலும்

கையாள்வதிலும்
திறமை காட்டுவதே
நலம் பயக்கும்.
 





Monday, July 25, 2016

சந்திரனைக் கண்டேன்

மனிதன் எதை விட்டான்?
 சந்திரனை  விட்டு வைப்பதற்கு.

ஏன் சந்திரன் மட்டும்
சிரித்துக் கொண்டு
அழகாக ஒளிர்கிறான்
என்ற எண்ணம் மேலோங்க

துவங்கி விட்டான்
 அவன் தன முயற்சியை.

கட்டினான் ஓர் ஏவுகணையை
 ஏற்றினான் வீரர்களை .

சென்றார்கள், அடைந்தார்கள்,
நின்றார்கள், நடந்தார்கள்.
 திரும்பினார்கள்.

 எதை கண்டான் மனிதன் அங்கே ?

கோடிக்கணக்கான  பணம் விரயம்
உழைப்பு வீண், நேரம் வீணடிப்பு

மார்தட்டுகிறான்
விண்ணை அடைந்தேன்
 சந்திரனைக் கண்டேன் என்று.

 சந்திரனை  இருக்கும்  இடத்திலிருந்து
காணலாமே மகிழ்வோடு.





 

Friday, July 22, 2016

இருவருமே சகோதிரிகள்!

கேட்டலும் கேட்காததும் 
 தரு வதும்  தராததும் 
 அவரவர் விருப்பம்.

கேட்டு வாங்குவதை விட 
 கேளாமல்  கிடைப்பது மேன்மை.

 கேட்டவள் இன்று 
 பெருகி நிற்கிறாளா?

கேளாதவள் அதற்காக
 குறுகி நிற்பாளா?  

 அவள் தகுதி 
 அவள் நினைப்பு 
 அடித்துப் பறித்து 
 வாங்கினால் 
 சிறப்பு என்கிறாள் 

மற்றவளோ 
 தன்மையுடன் 
 கேட்டும் இல்லை 
என்ற போது 
விலகுவதே
 நயம்   என்கிறாள்.

 இதில்  ஓர்  அழகு 
இருவருமே 
சகோதிரிகள்!


 
 



 

Wednesday, July 20, 2016

பச்சை

நிறங்களில் பச்சை
 பெருமிதம் கொண்டு
 அலங்காரமாக நிற்கின்றது.

  பிறந்த குழந்தையை
 பச்சை மண் என்று
 சிலாகிக்க!

செழித்து  வளரும்
 அழகை பசுமை என்று
போற்ற!

சற்று மாறாக
அப்பட்டமான  
பொய்யை
பச்சைப்  பொய்
 என்று கெக்களிக்க.

பசுந்தாழ், பசலி,
பசுமை, என்று
 வளமை  காணும்
அழகே  அழகு.


 

Monday, July 18, 2016

அன்பும், பண்பும்

அன்பால் வெல்லலாம்
 அன்பால் இழக்கலாம்

பண்பால் அடையலாம்
புகழை
பண்பால்  தொலக்கலாம்
பெருமையை .

 தக்கவரிடத்தில் அன்பு
வழி கோலும் சிறப்பை  .

தகாதவரிடத்தில் அன்பு
 வழி  விடும் கேட்டை.

நற்பண்பு தூக்கி  விடும்
 உயரத்திலே.

நன்னெறி நிலைத்து விடும்
 தன்னாலே.

மாறிய  பண்பு அலைக்கழிக்கும்
  வேகமாகவே.
 
மாற்றிய  நேரத்தில்
மறுத்தளிக்கும்   நன்மையை
கொடுத்தழிக்கும்  கொடுமையை.







கை வலிக்க எழுதினால்

கை வலிக்க எழுதினால்
 மனம் வலி குறைகிறது.

மனம் துடிக்க நேர்ந்தால்
 இதய  வலி அதிகமாகிறது.

இதயம் இயக்க மறுத்தால்
 உயிர் பலியாகிறது.


உயிர்  பிரிந்தால்
  ஏதும்  யாதும்  எதுவும்  
அறியாது.

 குமுறல்கள் குறுகி விடும்.
 உண்மை மரித்துப் போகும்
 உடல் மணணோடு   புதையும்.





Saturday, July 16, 2016

சிறந்த உபாயம்.

வானத்தில்  பறக்கும் மனம்
வானத்தையே  எல்லையாகக்
கொண்ட  எண்ணம்


கீழே  இறங்கி வராது
 பெரிதாகவே  நினைக்கும்
 பெருமிதமாகவே பேசும்.

எதிரில் இருப்பது தெரியாது
அறியும் உயரே  பறப்பதை.

 தன்னை நிகழும்  காரியங்கள்
 தாக்காது   பார்க்கும் வகை
 ஒரு விதமான   ஆடுபுலி ஆட்டம்

கண்ணை   திறந்த கொண்டே
 தியானிக்கும்  வழக்கம்
ஒரு அற்புதமா ன்  வித்தை
 ஒரு கண்கூடான விலகு.

கை கூடி னவுடன்   சேர்ந்து
தன்னை முன் நிறுத்துவது
ஒரு சிறந்த  உபாயம்
ஒரு ஆற்றலான  திறன்.




Friday, July 15, 2016

ஆடிப் பட்டம்

ஆடி தேடி  பயிரிட  
 ஆடிப்  பட்டம்  கண்டு
விதை.

பழமொழிகள் பல
ஆடியின்  புகழ் பாட
 பெருகி பெருக்கி
 வளம்   கண்டிடும்
 மாதம் ஆடி.

பயிர் பச்சை
 உயிர் பிச்சை
 என்பது போல

ஆடியில்  பயிர்கள்
 விளம்பிட
  தம்பதியர்கள்
 பிரிந்திட
 ஒரு காணல்
ஏறக்குறைவாகத்  தோன்ற.

 ஏன்  எதற்கு  இவ் முரண்பாடு
 என்று நோக்க
 புரிவது போலும்
புரியாதது போலும்
ஓர் இனம்  அறியாத
 உணர்வு எழ.

பழக்கங்கள்  காரியத்தின்
 பின் தொடர்பே!
 ஆராய்ந்து  அறிவது
 சாலச்  சிறந்தது
என்று கொள்வோமாக.
 
















Thursday, July 14, 2016

அவன் நிலை

 கருப்பைய்யா    பேசுகிறான்
பன் மாதிரியாக .

விதண்டா வாதம்
 பேசுகிறான்  விழைந்து

அன்று நடந்த
 சாதாரண  நடப்பை
 மிகைப் படுத்திப்
 பேசுகிறான்  காரணமாக

அவனாகப் பேசவில்லை
 பின்னால் ஒருவன்
உந்துதலினால்

தெரியும்  அவன்
 விளையாட்டு
 தெரிந்தே
 சந்திக்கிறேன்
அவனை.

அவன் நிலை
மாறாது  நின்றான்
 எனின்
அவல நிலை
 தானே வந்து
 நிலைத்து விடும்.




  

Monday, July 11, 2016

நெடு நேரம் கண்டேன்

நெடு நேரம் கண்டேன்
 நெடு நேரமும் 
 வியப்புடன்.

  நன்னாளில்   நடக்கும் 
 நற்பொழுதில் துவங்கும்  
விடிந்தும் விடியாததும் 
 தெரிந்த  வித்தியாசங்களை  
கண்டு அதிர்ந்தேன்.

உடல் நலம் குன்ற 
 வலி வந்து அமிழ்த்த 
 நிலை குலைந்து நிற்கிறான் 
நாயகன்.

அறிந்தும்  நாயகி 
சீண்டுகிறாள்   அவனை.

உடல் வலியும்  மன வலியும் 
 அவனை படுத்த 
 நாயகன் மயங்கினான் 
பரிதாபம்! பாவம் 
  
    

Saturday, July 9, 2016

மானம் எது? மானம் ஏது?

மானம் எது?
 மானம் ஏது?

கேள்விக் கணைகள்
 என்னைத் தாக்க
 நிதானிக்கிறேன்  சற்று.

எது என்பதற்கு
 என்ன விடை?

நேர்மை, ஒரு சொல்,
பிறழாத தன்மை
தவறினால்  மன்னிப்பு
அடக்கம்,  அருள்
 என்பது மானம்.


ஏது  என்ற போது
என்ன பதில்?

பொய், புரட்டு
புறங்கூறுதல்,
 வார்த்தை மாறுதல்,
 விலை போகுதல் 
என்ற போது
 மானம்  எங்கு
கண்டோம்.

மானம் பெரிது
 என்ற காலம் போய்
 பணமே  சிறப்பு
என்ற
 நேரம் இப்போது.

  


Thursday, July 7, 2016

எவ்வழியில் பெருக்கினான்

பணம் பத்தும்  பண்ணும்
 என்பது அவனுக்கு
 முற்றும் பொருந்தும்.

 எளிய குடும்பத்தில்
 பிறந்தும்  அவனுக்கு
 அதில் ஏற்றமில்லை.

ஏற்றம் அடைந்தான்
 படிப்பாலே  ஓரளவு
ஏற்றம் எனில்
பணத்தாலே!

 திறமை  என்று நோக்கும் போது
 பெரிதளவு  அவனிடம்
காண முடியாது. 

எவ்வழியில் பெருக்கினான்
 என்பது அவனுக்கே
 வெளிச்சம்.

 
  பணத்தை கண்டவுடன்
 அடக்கம் அற்றுப்போய்
 அடங்காமை தலை  தூக்க
 ஆடுகிறான்  ஆடுகளம்
மிக அழகாக.

Wednesday, July 6, 2016

என்ன ஒரு பெருமை!

வந்தமர்ந்தான்  அழுத்தமாக
நோக்கினான் மேலும் கீழுமாக
 பேச்சை ஆரம்பித்தான்
  அமர்க்களமாக

 அது அப்படி இது அப்படி
 என்று அளந்தான்
 பெரும் பணம் புரண்டோட
வாழ்கிறான் போலும்.

நின்றேன்  சற்று நேரம்
 மெதுவாக அவனை
 கிளப்பினேன்.
புரியாமல் பேசிக்கொண்டிருந்தான்
 நேரம் போவது தெரியாமல்
 தாங்காமல்  கை எடுத்துக்
 கும்பிட்டேன்.

 என்ன ஓர் ஆணவம்!
 என்ன ஒரு பெருமை!



Saturday, July 2, 2016

முல்லை.

ஒரு சிறு அலட்டல்
 ஒரு சிறிய  பகட்டு
 என்று இல்லாமல்
 தனித்துவமாக
 அமைதியின்  மறு
பதிப்பாக
 திகழ்கிறாள்
 முல்லை.

பெயர்க்கு  ஏற்றவாக 
மிருதுவான கனிவும்
அதிராத பேச்சும்
ஆழமான  சிந்தனையும்
 அழகான  நடையுமாக
 வலம் வரும்
 முல்லை.

யாவரும் விரும்பும்
 ஒரு அறிவு  மிகுந்த
 பெண்மணியாக
 அறிமுகமாகிறாள்
 முல்லை.






Friday, July 1, 2016

தீர்ப்பு சொல்பவன்

தீர்ப்பு  சொல்பவன் 
 தீர  விசாரித்து 
 ஆராய்ந்து  
 எப்பக்கமும் சாராது 
 நியாயம்  வழங்குவதே 
 சிறப்பு.


தீர்ப்பு  கூறும் 
ஒருவன் 
சொந்தம் என்றால் 
பொறுப்பிலிருந்து   விலகி 
விட்டு

அன்பு 
ஒருவனிடம்  மிகுந்தால் 
மற்வறொருரிடம்  ஒப்படைத்து 
 ஒதுங்க வேண்டும்.

இல்லாமல் விடாது 
கொம்பை 
பிடித்த்துக் கொண்டே இருந்தால்
ஒன்றும் ஆகாது. 
.







அநியாயத்துக்கு துணை போய்.

வாழ்கிறான் அவனும்
 நன்றாகவே.

நியாயம் இல்லாமல்
 நியதி அற்று .

 செல்வம் நிறையவே
என்னிடம்  என்று  பேசிக்கொண்டு .

அவனுக்குத் துணை
நான்கு பேர்.

கூடவே  சென்று குலவி
 கூத்தடித்து  கெடுத்து

 வாழ்கிறார்கள் அவர்களும்
அவனோடு
அநியாயத்துக்கு
 துணை போய்.








Tuesday, June 28, 2016

கற்றாழை

அழகான தோட்டத்திலே
 ரோஜாவும் , மல்லிகையும்,
 பிச்சியும் , சூர்யகாந்தியும்
 மணம் கமழ
 தன்னந் தனியாக நின்றது
 ஒரு சோற்றுக்  கற்றாழை

 அழகின் ஊடே ஒரு அழகற்றதாக
 பச்சை நிறத்தில் இலைகள் கனமாக
 கோணலாக  நிற்கிறது  கற்றாழை.

வேரோடு பிடுங்க நினைத்துப் போது
 தடுத்தாள்   என்  தோழி.

அதன் பயன்களையும்,அதனின் சக்தியையும்
 கூறியவுடன் மலைத்து நின்றேன் .

தீயனவற்றைக் கழிந்து, தீமையைப் போக்கி
 நலம் பல செய்யும் செடியைப்  பழித்தேனே
 என்று வருந்தினேன்.

  

Sunday, June 26, 2016

தூங்கினான்

தூங்கினான்  தூக்கம்  வராமல்
 கண் மூடி    அசைவில்லாமல் .
மணவறை   மறந்தான்
 அசதியிலே!


பெண்ணின்  மனத்தை
 தொடாமல்   உடுருவினான்
 மயங்கினாள் மாது
நினைவில்லாமல்.

 அவன் தந்தையோ
 அள்ளி வீசினான்
சொற்களை.

தாயோ  மெச்சினாள்
 மகனின்  அறிவை.

பெரிய தகப்பனோ
 கூவினான்  அதிகமாக

கோடியில் புரள்கிறேன்
 ஆள் பலம் அதிகமாக.
எனக்கு என்று.

 வாங்கினார்கள்
 யாவரும்  மிகவாக
ஏச்சும் பேச்சும்
 அடியும்!





Monday, June 20, 2016

மாட்டினான் வசமாக

மாட்டினான்  வசமாக

சீராக  வாழ்கிறான்
என்ற நினைப்பு.

"கோடியில்  புரள்கிறேன்
 ஆள் பேர் அரசாங்கம்
 என்று எனக்கு
 எல்லாச் செல்வாக்கும்"
நிறையவே   என்று
 மார் தட்டினான்  நேற்று.

இன்று கதை மாற
 நிலை குலைந்து நிற்கிறான்.

தடம் புரண்டான் பல் நேரங்களில்
 மகனின்  திருமணத்தில்  முற்றுமாக
 பழக்கம்  தவறிய
 மகனுக்கு ஒரு கல்யாணம்.
அவன் மனைவியும் தெரிந்தும்
 உடந்தை.

 மகன்  கடைசி நேரத்தில்
 தூங்கி  காரணமாகவே
 துக்கம் உண்டாக்க.
 கதறி ய பெண்ணும்
 அவள் வீட்டாரும் வெகுண்டு
 அவனை ஏச.

வாய் மூடி கை கட்டி
 தலை குனிந்து
 நிற்கிறான் .

நிமிர்ந்து விடுவான்
 சில நாட்களிலே
பணம் முழுவதுமாய்
 அவனை விட்டுச்
 செல்லும் வரை.

  






   

Tuesday, June 14, 2016

நன்று பல கூறின்

 நன்று பல கூறின்
நாளும் பொழுதே
 நன்று எனின்
 நலம்   பயக்குமே!.

 நன்மை  விளையும்
 நன்னாள் முழுதுமே
நற்செயல் செய்யின்
நட்பு   நகுமே!.

 நாவிலே சொல்
 நடப்பிலே செயல்
நல்லவை  வழங்க
நவில்வது நற்பண்பே! 

Monday, June 13, 2016

பனியில் மலர்ந்த பூ

பனியில் மலர்ந்த  பூ
 நிகரில்லா ஒளியுடன் திகழ
 பனி விலகிய வுடன்
 மட்டில்லா  பொலிவுடன்
 சொர்ணமயமாக  விளங்க
  ஒரு பலமான் காற்றுடன்
 பேய் மழை  பொழிய
 அழகிய மலர்
 பறந்து மறைந்தது.

Sunday, June 12, 2016

ஒற்றுமை குலைந்ததது

சிறு சச்சரவு
 ஊதி பெரிதாக்கி
 வெடித்துச், சிதறி
 நிர்க்கதியாக்கியது
 ஒரு குடும்பத்தை.

 புயல்  வீசியவுடன்
அமைதி தோன்றுவது போல
சண்டை ஓய்ந்த பின்
பேசுவதே நின்றது.

ஒற்றுமை குலைந்ததது

Friday, June 10, 2016

அடங்கினான் எதற்கோ?

அடங்கினான்  எதற்கோ?
 அடங்குவது  அவன்
 வழிமுறை அல்ல
 பின் ஏன் ?


தாண்டவம்  ஆடுவான்
 குதிப்பான்  தாம் தூம்
 என்று என்றைக்கும்
 இன்று அடங்கினான்
 எதற்காகவோ?

வாய் நீளம்   கை
அதை விட
 கத்துவான் ஏன்
 அடிப்பான் யாவரையும்
இன்று அடங்கினான்
 எதற்காகவோ?

எங்கோ பலமாக
வீழ்ந்தான்
  அடங்கினான்
 இன்று காரணமாகவே.


பார்வை வேறே

 விவரம் அறியாத பிள்ளை
பேசுவது மழலை
 விவரம் புரியாத மனிதன்
பேசுவது புலம்பல்.

மழலை இனிமை  பயக்கும்
 புலம்பல்   கடினம் விளையும்.


வயதுக்கேற்ற  அறிவும்
வயதை மறந்த அறியாமையும்
 நோக்கின்

 ஒன்று அழகு
அடுத்தது  அனர்த்தம்.

 ஒரே கல்
 பார்வை வேறே




  

Sunday, June 5, 2016

ஆரோக்கியம்

வளர்ந்தேன்  அருமையாக
தாயும் படித்தவள்
தந்தையும் அது போலே.

 கண்டிப்பும் பாராம்பரியுமும்
 என் இள  வயதில்
 அதிகம் கண்டேன்.

 சொகுசு வண்டியிலே
 வயதில்  மூத்த   ஓட்டுனர்
 ஆரோக்கியம்  பள்ளிக்கும்,
 வாய்பாட்டு ஆசிரியரிடமும்,
பரத நாடிய வகுப்புக்கும்
 அழைத்துச் செல்வார்.

நான் செய்த சிறு தவறுகளைக் கூட
 அறிந்து அதை என்ன தாயிடம்
 சொல்லி விட்டு, "அம்மா
 தங்கச்சியை கண்டியுங்கள்"
 என்று  எடுத்தும் கொடுப்பார்.


ஒரு நேரம் என் தாய்க்கு
 கோபம்  மிகவே என்னை
  அடித்து  விட்டார்.
அழுத என்னை அன்பாகத்
 தூக்கிக் கொண்டு
"உன் நல்லதுக்குத் தானே
அம்மா" என்றார்.

நான் கோபத்தில்
 கத்தினேன்  செய்வதையும்
செய்து விட்டு
 இது  வேறேயா !.
கறுவினேன் மனதுக்கள்ளே.

நினைத்துப்   பார்க்கிறேன்
 ஆரோக்கியத்தின் அன்பையும் ,
 என்னுடைய ஆங்காரத்தையும்
விசும்புகிறேன் என்னுள்ளே


Friday, June 3, 2016

சுகம் தனியே!

மாங்காய்  கொத்து
 கொத்தாகக்  காய்க்க
 தேங்காய் குலை
குலையாகத்  தொங்க
 வாழை குலை
 தள்ள.பரந்த
விரிந்த தோப்பில்
 குளுமை தழுவ
பசுமை படர்ந்த
நிலப்பரப்பிலே
 காலாற நடக்கும்
 சுகம் தனியே!

Thursday, June 2, 2016

கல்யாண வைபோகமே

பலகாரமும், பாயசமும்
 பனியாரமும், பொரியலும்
சட்னியும், அவியலும்
சாம்பாரும்,  ரசமும்
சாதமும்,  கூட்டும்
இரண்டு நாட்கள்  
மூன்று  வேளையிலும்
 விமர்சையாக வழங்கப் பெற
திருமணம் தடபுடலாக நடைபெற
 சமையற்  கலைஞரும்    பல
 இலட்சம் சன்மானமாகப் பெற
 சில்வர் சாமான்கள் சிறிதும், பெரிதுமாக
பல வகையில்  அன்பளிப்பாக
 வழங்கப் பெற
 ஒரு சமுகம் செலவு செய்யும்
வினோதம்.

அதே மக்கள் சாதாரண நாளிலே
 கிழிந்த பாயில் படுத்து,
 நடையன் இல்லாமல் நடந்து,
எளிமையான் உணவை உண்டு
 விட்டிலே ஒரு  சிறு பகுதியில் இருந்து கொண்டு
ஏனையப் பகுதியை வாடகைக்கு விட்டு
 வாழும் விதம் ஆச்சரியமே!

கல்யாண வைபோகமே

















Wednesday, June 1, 2016

ஏமாற்றம்

அண்ணன் என்று பாராது
தம்பி என்று நினையாது
 தமக்கை என்று எண்ணாது
பாடுபட்டதற்கு கிடைத்தது
பெரிய பரிசு--ஏமாற்றம்
 ஒரு  வழியில் அல்ல
 பல  வேளையில்.
 

Tuesday, May 31, 2016

என்ன எதிர்பார்ப்பது?

அடித்துக் கூறினான்
 சத்தமாக

சத்தம் உணமையாக்குமா?
 அவன் எதிர்பார்ப்பு.

எதற்கும் ஒரு எதிர்ப்பு
 அவனிடம்.

 நல்லது  என்றாலும்
எதிர் மறை.

கெட்டது  என்றால்
 மறு முறை

அவனிடம் என்ன
 எதிர்பார்ப்பது?

அடி வாங்குவாள்

வடிவிலே அரசி என்ற  நினைப்பு
அழகி என்ற எண்ணம்
அறிவானவள் என்ற நோக்கம்
 எல்லாம் கூடவே  அவளிடம்.


 குட்டையாக மெலிந்து  காணப்படுவாள்
வாயும் கண்ணும் ஒன்றை ஒன்று பார்க்க
 எட்டாம் வகுப்புக் கூட தேறாமல்
 பேச்சு மட்டும் மிக அதிகமாகவே.

துச்சமாக பேசுவது அவளின் சிறப்பு
 தூக்கி எறிந்து  பேசுவது அவளுக்கு இன்பம்
  மற்றவர்கள் அவளைச் சொல்ல  நேரம் ஆகாது
அடி வாங்குவாள்  வெகு சீக்கிரத்தில

Monday, May 30, 2016

எழுத்து நயம் பார்க்கும்.

எழுதினால் தான்
 சிரமம் தெரியும்
 எழுதும் போதே
 பிழைகள்  மலிந்து
 வரும்.

உற்று நோக்கின்
 தப்புக்கள் மாளா
 திருப்பிப் பார்க்கின்
 பொருள் மாறும்.

எழுதுவது எளிது  அல்ல
 பழகப் பழக  கை வரும்
மன ஓட்டம்  கை ஓட்டம்
ஒன்றுபட்டால்   எழுத்து
 நயம் பார்க்கும்.

Sunday, May 29, 2016

ஞாயிறு போற்றி !

கோடை வெயில்
 கத்திரி வெயில்
 அக்னி வெயில்
 நாமகரணங்கள்
 எத்தனை எத்தனையோ
 உனக்கு

யாவையும் உன்
 திறனை எடுத்துரைக்க
 போதுமா ?

சுடரொளி விட்டு
பாயும் நீ
 ஓரு  நாளைப் போல
 அல்ல.

இன்று தண்ணொளியாய்
 நாளை பேரொளியாய்
 மறு நாள்  சுடரொளியாய்
காட்சி தருவாய்.

மேலாக சுட்டெரிக்கும்
 தணலை வாரி வாரி
 வீசுவாய்  பொழுதுகளிலே

தாங்கவும் தாங்காதவாறும்
 கொடுத்தும் கொடுக்காதவாறும்
 நின்று தடங்கு இல்லாமல்
 வழங்கும்  கதிரவனே
ஞாயிறு  போற்றி !  



    

Saturday, May 28, 2016

வாழ்வும் சாவும்


மனிதன் இறக்கிறான்
உயிர் பிரிகிறது
 உடல் கிடக்கறது.

துக்க வேளையில்
 நல்லது பேசப்பட்டு
 கெடுதல் விடப்படுகிறது.


நாட்கள் செல்ல
 மாறுகிறது
பேச்சுக்கள்.

நரம்பில்லா நாக்கு
 கூடவும்  பேசுகிறது
 குறையவும்  பேசுகிறது.

வாழ்வின் அழகை
 புகழ்ச்சி  மெருகுட்டுகிறது
 இகழ்ச்சி  விகாரப்படுத்துகிறது.






   

Friday, May 27, 2016

மதி முன்னதாகவே.

கையிலே ஆயிரம்
 ஒரு வெகுமதி.
 
மண்ணிலே வைரம்
 ஒரு பெருமதி.

 கண்ணிலே கனிவு
 ஒரு முழு மதி .


மனதிலே அன்பு
ஒரு வளர்மதி.


திருத்தமாக  வாழ்தல்
 ஒரு புத்திமதி.

எங்கும் யாவும்
 மலர்வது  திருமதி.


எதிலும் யாவையிலும்
 தென்படுகிறது  அமைதி.







Thursday, May 26, 2016

வெப்பம் அமர்க்களம்

கடும் வெயில்
 வெப்பம்
எலும்புக்குள்ளே
தோல் வழியே
 சென்று  குடைய.

வேர்வை
எலும்பிலிருந்து
 தோல் வழியே
 வடிந்து உத்த.

 முயற்சியாக
 முன்னும் பின்னும்
பகி ர்ந்தவாறு
 நடைமுறைப் படுத்த

ஒரு இயலாமை
 முன்னிலைப்
படுத்த.

சீர் பெறும்
நிலைமை
தோன்ற.

இறப்பு
 விழி ப்புடன்
காத்திருக்க.





Wednesday, May 25, 2016

இல்லை என்பதே இருக்கு

நிலத்தில் நீர் இல்லை
 மண்ணில் சத்து இல்லை
 விளை   பொருள் இல்லை
விளைந்த  பொருளில்
சுவை இல்லை .
உடலில் தெம்பு இல்லை
உணவில் எதுவுமில்லை
நலம் பயக்க ஏதுமில்லை
ஊரில் செளிப்பில்லை
 உலகில் நிம்மதி இல்லை.











கண்டேன் மின்னுவை

கண்டேன்  மின்னுவை
 எதிர்பாராவிதமாக
 மும்முனைச்  சந்திப்பிலே
 பச்சை உடுத்தி.  

Tuesday, May 24, 2016

ஒதுங்குவது என்பது .

ஒதுங்குவது என்பது அடங்கிப் போவதல்ல
 அடக்கம் என்றால் அடிமைத்தனம்  ஆகாது.
 அடிமை என்கிற பொழுது   பயம் என்றில்லை
பயம் என்று நினைக்க பயங்கரம் என்றில்லை
 பயங்கரம் தற்காலிகமானது
சடுதியில் மறைந்து  விடும்.

எதிலும் அழகு.

ஒரு சிறு  குச்சி
 எனினும் ஓர் அழகு
நெளிந்து, வளைந்து
 விரிந்து காணும்
 அழகே அழகு.

 ஒரு புல்லோ
அதை  விட அழகு
பசேலென்று
மிருது வாக
 தளிர் போல் நிற்கும்
அழகே அழகு .

ஒரு சருகு
 காற்றிலே பறந்து
சரிந்து சறுக்கி
 தரை  நோக்கி வரும்
 அழகே அழகு.

எதிலும் அழகை
காணும் நான்
 கண்டேன் மிகவே
  குச்சியிலும், புல்லிலும்
சருகிலும்  அவைகளின்
 தனித்ன்மையிலும்




Sunday, May 22, 2016

அழுகவில்லை, பதறவில்லை

மாமியார் கொடுமை
 அக்காலத்தில் நிறையவே.
 என் அத்தை பட்ட பாட்டை
 சொல்லி மாளவே முடியாது.

அத்தைக்கு முதலில் பெண் மகவு
 ஒரு நாள் கோபத்தில் மாமியார்
 பிறந்த குழந்தையைப் பறித்து
 அறுவாள் மணையில் நறுக்க முயன்றாள்.

 என் அத்தையோ   இளம் வயது
 அழுகவில்லை, பதறவில்லை
 செய் வதை செய்யட்டும்
 என்று நின்றாள்  தையிரியமாக.

அவள் அறியாவண்ணம் பதறாமை
அவளிடம் வெகுவாகப் பற்றிக் கொண்டது
வென்றாள்  அந்த ஆயுதத் தை வைத்து.
 அவளை நோகடித்தவர்களை.

 என்னிடம் சொல்லும்   போது
 அவள் கண்களில் ஒரு மின்னல்
 ஒரு பிரகாசம் துளி நேரம் மட்டுமே
 கண்களில் கண்ணீர் பொங்க
பார்க்கிறாள்  கடந்த காலத்தை.


கண்ணேறு

கண்ணேறு  என்றால்
 என்ன என்று பார்க்கையில்
 கண்  பட்டது என்றார்கள்

கண் ஏறு  என்றால்
  ஏற்றிப்  பார்ப்பது
 ஏற்றி பார்க்கும் போது
  கண்ணிலே ஓர் ஆச்சிரியம்.
 ஒரு வியப்பு என்கிற போது
கண் உயரும் .

வியப்பு  சற்று மாறினால்
 பொறாமை , ஆத்திரம்
 எனலாம் .

பொறாமைக் கொண்டு
 பார்ப்பது அழகல்ல
ஆத்திரம் கண்டு
நோக்குவது   அடம்.

கண்ணேறு என்பது
இதனால் தான்
என்று வரக் காரணம்


Saturday, May 21, 2016

கரு நாக்கு

கரு நாக்கு என்பார்கள்
 நல்ல கண் இல்லை என்பார்கள்
 சுட்டெரிக்கும் சொற்கள் என்பார்கள்
 நான் யாவற்றையும் நம்பவில்லை
 இது நாள் வரை .

 தற்போது நம்பிக்கை கொண்டுள்ளேன்
 நல்லதற்கோ கேட்டதற்கோ
 தெரியவில்லை எனக்கே
 அனுபவங்கள்  அவ்வாறு.

விலகி வால் என்று மனம் சொல்கிறது
முயற்சி செய்கிறேன் வெகுவாக
 தெரிந்து தள்ளி நிற்காமல் இருந்தால்
 விவரம் இல்லாதவளாகி விடுவேன்.

மாற்றங்கள் தான் உலகம்

கோழி கூவி எழுந்த காலம் போய்
 பசுவின் பாலை அருத்திய நேரம் போய்
 கீரையும், பருப்பும், அரிசியும்  உண்ட
 நாட்கள் போய்.
 கோவிலும், கட்டுப்பாடுமாக வாழ்ந்த
  வேளை போய்:  முடிந்த காலம்.

இன்று செல்போன் சிணுங்க எழும் பழக்கம்
 பாக்கெட் பாலை  குடிக்கும் வழக்கம்
 பீசாவும்,பர்கரும் உண்டு: மகிழும்  அழகு
 திரைப்படமும், தொலைகாட்சியும்
கண்டு கழித்து களிப்புற : தற்காலம் .

நாளை எப்படி மாறுமோ என்று சிந்திக்கையில்
மாற்றங்கள் தான் உலகம் என்று எண்ணி
யாவற்றிலும் நல்லது இருக்க அதைப் பற்றி
 கொண்டு வாழ்தலே சிறப்பு .

Thursday, May 19, 2016

ஒட்டைப் பானை

உடையப்பன் என்று  அழைக்கப்படுவான்
 உண்மையே பேசுவான் அல்ல.
தான் பெரிய செல்வந்தன் என்பான்
கூட்டிக் கழித்துப்   பார்த்தால்
 ஒரு நூறு ஆயிரம் தேறும்.

பங்குச்சந்தையில் தான்
 ஒரு பெரிய நிபுணன்  என்று  பேசுவான்
தான்  ஒரு வாரன் பபெட்
என்ற நினைப்பு.

ஆகமம், இந்துக்களின்  வழி பாட்டு

முறைகளை ப்  பற்றி பேசுவான்
 விலாவா ரியாக.
 விவேகனந்த சுவாமி என்ற எண்ணம்.


அகவை அறுபதை கடந்தும்
 குழந்தையைப் போல்
 நடந்து கொள்கிறான்.
 எல்லோரும் அவனை அழை
 ஒட்டைப் பானை என்றே
அழைக் கின்றனர்.







Monday, May 16, 2016

திருகலும், கொட்டும்

காலங்கள் மாறும்
 வயது  ஏறும்
மனம் மாறும்
 நினைவுகள் தொடரும்

இன்று ஏனோ
 திரும்பிப் பார்க்கிறேன்
 என் பள்ளிக்   காலத்தை
 நிறைவு தன்னாலே.

திருமதி டேவிட்
 என்னுடைய ஆசிரியர்
வீ ட்டுக்கு வருவார்
அதி காலையில் .

எடுத்தவுடன் ரென்  & மார்டின்
ஆங்கில இலக்கணம்
 வினைச் சொற்களை
காலங்களில் எழுத  பணிப்பார்.


ஓரளவு எழுதி விடுவேன்
"புட்"க்கு  இறந்த காலத்தில்
புட்டட்  என்று
எழுதி விட்டேன்
 காதைத் திருகினார்
 சற்று பலமாக.

நினைத்தால் இன்று கூட
 வலிக்கிறது. அத்தவறை
 என்றுமே   பின்
 செய்ததில்லை.


தமிழில் அதற்கு மேலே
 பெற்றுக் கொள்
 என்பதற்கு  பெற்றுக் கொல்
 என்று எழுதியவுடன்  தலையில்
 ஒரு கொட்டு .


புடைத்த தலையின் வலி
  இன்றும் என்னை பயமுறுத்த
 கவனம் மிக அதிகமாக
லகரம், னகரம்  என்கிற
வேளையில்.

அதே நேரம்
 தவறில்லாமல்
 பெருக்கல்  வாய்ப்பாட்டை
 சொன்ன போது அள்ளி
அணைத்துக்   கொள்வார்.


ஏனோ இன்று நான்
ஆங்கிலத்தில்  நிறையவே
 தம்ழில் குறைவாக
 எழுதுகிறேன்
 கணக்கை முற்றிலும்
மறந்து

திருகலும்,  கொட்டும்
 செய்யும் வேலையோ?

 .
















காலத்தே செய்தால்


உழைப்பவன் 
 நேரம்  நோக்கின் 
 சிறுமை 

 உழவன் 
இலாபம் கண்டின் 
 பெருமை .


 வணிகன் 
 அயர்ந்தால் 
 நட்டம்.

படிப்பவன் 
 துவண்டால் 
 தோல்வி.

யாரும், எவரும் 
ஏதும், எதுவும் 
 செய்வதை 
 காலத்தே 
 செய்தால் 
 வெற்றி.





 





 




 


Sunday, May 15, 2016

எலியும் பூனையுமாக

எலியும் பூனையுமாக
விளையாடிய  விளையாட்டு
மனதில் தோன்ற
 சென்றேன் கடந்த
 காலத்திற்கு.

நான் எலியாக
என் நண்பன் பூனையாக
 ஆடினோம்   ஒரு முறை.
பள்ளியின் விளையாட்டு
 திடலில்.

 என் நண்பனோ
 உடல் உறுதியும்
 மன உறுதியும்
ஏராளமாக வாய்க்கப்
 பெற்றவள்.

நானோ ஒரு பயந்தவள்
உடலோ மெலிவு
இருந்தும் அவளை
 எதிர் கொண்டேன்
 துணிச்சலாக.

ஓடினேன் சுற்றி
 சுற்றி குனிந்தும்
 நிமிர்ந்தும்  அவளுடைய
  பிடியை விட்டு
 சாமர்த்தியமாக.

ஓரு   நேரத்தில்
 அவள் என் அருகே வந்து விட
 பிடிபட்டோம் என்று
நான்  நினைக்க
 பாவம் அவள்
தடுமாறி  விழுந்தாள்.

 தப்பித்தேன் பிழைத்தேன்
 என்று நான்  குதிக்க
 நினைத்தேன்  ஒரு முகமாக
 வெற்றிக்கும் தோல்விக்கும்
திறமையோ வலிமையோ
காரணம்  அல்ல
 நேரம் தான் என்று தெளிந்தேன்,.








Saturday, May 14, 2016

அறியாமை எனலாம் முடிவாகவே

செயலில்  என்ன விதம்?
 நன்று தீயது என்பது மீதம்
நோக்கம் என்பது நெறி
 சரியோ தப்போ என்பது
 ஒரு  வெறி.

எடுத்தக் காரியம்
முடிய வேண்டும்
 சீக்கிரத்தில் என்பதே
 ஒரு கோட்பாடு.

அதில்லாமல்  இழுப்பதும்
வலிப்பதும் தடுப்பதும்
 ஓர் எண்ணம்  கெட்ட
  என்பதை விட  கொடுமை.

நேரம் தவறினால்
 பாலும் புளித்து விடும்
கொதி நீரும் ஆறி  விடும்
 திரியும் எரிந்து விடும் .


ஏதும் செய்யாமல்
 வாளாவிருந்து  எல்லாமே
 செய்வது  போல்
 காட்டுவது நடிப்பு.
பகட்டான் ஒன்று.


அல்ல அல்ல!
 அது ஒரு தீய எண்ணம்
 இல்லாவிடில்
 ஒரு அறியாமை
 எனலாம் முடிவாகவே






Thursday, May 12, 2016

கைக்கு எட்டியது

கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை
என்று அழுதாள்
 பாவம் !

புரியாமல் பேசுகிறாளே
 என்று தோன்ற
 கேட்டான் மேலும்
கூர்மையாக

வேலைக்கு   முறச்சி செய்தேன்
 யாவும் நலமே முடிந்தது
 மாறி விட்டது என்று
 அங்கலாய்த்தாள்.

இது முடிவல்லவே
 மீண்டும் முன்று பார்
 வெற்றி உறுதி
 அறிவுறுத்தினேன் .

வெளியேறினாள்
 கோபமாக
 சிரித்துக் கொண்டேன்
 என்னுள்ளே

பழமொழிகள்   பல
எவ்வாறென்று
 திரித்து திரிந்து
உணரப்ப்டுகின்றன.





















முடியுமா மறக்க?

ஒன்றல்ல  மூன்று
 குழந்தைகளை 
இழந்தனர்  ஒரு தம்பதி 
 கொடுமையடா! 

விமானம் சுட்டு
 தள்ளப்பட 
 குழந்தைகள்  மடிந்தனர்.
பரிதாபமாக 


தாய் கதறினாள்  
 தந்தை விம்மினார் 
 வரவில்லை குழந்தைகள்.
போனது போனது தானே.

ஆண்டு ஒன்று உருண்டோட
மிண்டும் உண்டானாள்
 தாய்.
ஒரு விளையாட்டோ!

 பிறந்தாள்  ஒரு பெண் மகவு 
மகிழ்ந்தனர் பெற்றோர் 
ஓரளவே!
முடியுமா மறக்க? 

 மறைந்த மூன்று  செல்வங்களும் 
 கண் முன் நிழலாட  எதிரே 
 நிற்கும் மகவில் கிடைத்தது 
 அமைதி!














Wednesday, May 11, 2016

அற்று அற்று

மலிந்து கிடந்தன
பொருட்கள்
 தேடுவாரற்று .

பிரிந்து  வாழ்ந்தன
 உறவுகள்
 ஆதரவற்று.

வாடித்   தெரிந்தன.
 பயிர்கள்
 நீர் ஆதாரமற்று.

பாடித் திரிந்த
 குயில்
நோயுற்று

 ஆடி அழிந்த
 மனிதன்
 கேட்பாரற்று.


குடித்து  குலைந்த
 குடிகாரன்
 காப்பாரற்று

  கட்டுக்கடங்காத
   மகன்
பிறபானற்று

அற்று அற்று
 ஓதும் போதே
கவனம் சற்று.




















 





வாழ்வாதாரம்

திருவிழாவுக்கு வந்தேன் நான் 
கண்டேன்   விமர்சையாக 
பத்தாண்டுகளுக்கு முன் 
  
செம்பனை  தோட்டத்திற்குள் 
 சென்றேன் என்னவென்று அறிய
ஆவலுடன் 

 பனை மரம் நின்றது உயரமாக  
ஆடாமல் அசையாமல்
ஓர் அச்சம்  .

 பனம் பழமோ   மிகப் பெரிதாக 
 இராட்சத  அளவிலே 
ஒரு பிரமிப்பு 

தோட்டமோ அமைதியில் உறைந்து 
மௌனமாக  நின்றது.
ஓர் உதறல் 

புழுக்கமோ  மிக அழுத்தமாக  
வியர்வை  வழிந்தோட 
ஒரு புகைச்சல் 

சுற்றி வந்தேன் செம்பனை  
 தோட்டத்தில் 
என்னது என்ற பெருமையுடன் 

அன்று தெரியாது எனக்கு 
 இதுவே தொழில் ஆகும் என்று.
ஓர் ஆச்சரியம் 

அன்று தொடங்கியது இன்று வரை 
 என்னை விடவில்லை  
தொடர்கதையாக 

சிநேகமாகி விட்டோம்  கூடுதலாகவே 
 பிரியாமல் இருக்கிறோம். 
ஒரு நாளை போல் 

வாழ்கிறேன்  பல மணி நேரம் 
செம்பனை மரத்தின் கீழே
காசுக்காக 

என்னுடன் குரங்கும்,பாம்பும்  
 அட்டையும், உடும்பும் .
பங்கு போட

வாழ்வாதாரம் அது  என்கிற போது  
 வலியே  வலிமையாக 
 வலுவான வாய்ப்பாக  உணர்ந்து 
கழிக்கிறேன்  காலத்தை  
களைப்புடனும் களிப்புடனும் .


 
 


 



Monday, May 9, 2016

காலமே காலம்


காலமே காலம்
என்று கூறுவாள்
 என் அத்தை அடிக்கடி.

காலம் தான் இது
 என்பாள் மூச்சுக்கு
 முன்னூறு முறை!

எனக்கும் அவ்வழக்கு
 தன்னாலே வந்து
 விட்டது.


காலத்தை  நோகுவாள்
அவள் நேரத்தில்
 பட்ட  வேதனையை கழிப்பதற்கு


வெந்து தணியும்
மனத்திலே  சீற்றம்
எள்ளளவுமில்லை  அவளிடம்

 விரக்தியும் குமறலும்
யாரிடமுமில்லை
 எதற்கோ காலத்தின் மேல் மட்டுமே!

அநீதி  இழைத்தவர்களை
கடியவில்லை கடிந்தாள்
 என்னவோ காலத்தை.

தூக்கியெறிந்தவர்களை
 கோபிக்கவில்லை  கோபம்
ஏனோ  காலத்தின் மேலே!

பெற்ற பிள்ளைகள்
 நினைக்கவில்லை அவளை
 ஆத்திரம்  காலத்தின் மீதே! எதனாலோ?

அறியாமல் அவளிடம் கற்றது
இன்று எனக்கு கை கொடுக்க
 காலமே என்று  நினைந்து  மகிழ்வாகவே


நன்மைக்கும் தீமைக்கும்
 காலத்தின் மீது பழி போட்டு
வாழ்கிறேன்  நிம்மதியாகவே!


  

அமிர்தம் என்னவென்று அறிய

பாலை புகட்டுவாள்
 கூடவே  பண்பையும்

அன்புக் காட்டுவாள்
 அதனுடையே   கண்டிப்பும்

ஆதரவை நல்குவாள்
 வழியிலேயே சுதந்திரமும்


யாவையிலும்  இருப்பாள்
 கண்டும் காணா மாலேயும்


தள்ளியிருக்கிறாள்  என்றாலும்
 தகமையில்  நிற்பாள்

தன மகன் என்பதில் பெருமை
 உள்ளுக்குளேயே  அடங்கி


மகனைப் பார்த்து பூரிப்பாள்
கண்ணாலே காட்டுவாள் பரிவை

அமிர்தம் என்னவென்று  அறிய
   கண் குளிர காண்  தாயை .






Sunday, May 8, 2016

வாழ்வே மாயம்

பற்றி எரிகிறது
 ஓர் ஊரே

கொழுந்து விட்டு
நெருப்பு பிழம்பாகவே,

 ஓடுகிறான், பறக்கிறான்
 ஒரே வழியிலே

 நெருப்பும் வேகமாக
 பின் தொடர்கிறது

 நூறு , ஆயிரம்,
இலட்சம்  என்று

 தப்பித்தப போக
 தெற்கும் வடக்குமாக

 கூரைகள் எரிந்து
 சாம்பலாகி  விழவே

நெடிதுயர்ந்த  மரங்கள்
 குபு  குபு  என்று எரிய

காய்ந்த  இலைகள் சருகுகள்
சேர்ந்து எரியவே

எங்கும் தீ எவற்றிலும் தீ
 நெருப்பே எத்திக்கிலும்


எண்ணெய்  வளமிகுந்த
ஊர்   மேக் முர்ரே  கோட்டை

தொண்டினால் எண்ணெய்
 உற்றெடுக்கமே

செல்வமும் இன்பமும்
 நிறைந்த ஊரே

 இன்று தீக்காடாக
எறிந்த சாம்பலாகவே

நேற்று ஒரு அழகான ஊராக
இன்று ஒரு புகைந்த  காடாக

வாழ்வே மாயம்
 வாழ்வோம் நியாயமாக!









மரம் போல்

மரம் போல
 வாழ்.

பொறுத்து, தணிந்து
 பெருகி நில் .

கிளை விரித்து
 பல்கி நில் .

இலைகள் நிறைய
 சுற்றிலும்

 பூக்கள் மலர
 அழகிலும்


காய்கள்  காய்த்து
நிரக்கவும்.

பழமாகப் பழுத்து
 தொங்கவும்.

 செழிப்பான தோற்றம்
கண் முன்னே

மரம் போல்  என்றால்
 மரத்துப் போய்

 அல்லவே அல்ல
 வளமான பெருக்கமே

நவில்கிறேன் நல்விதமாக
 அறிந்து கொள்.











Saturday, May 7, 2016

சாதனை

தாய்  தந்தையைச் சுற்றி
 கண்டான் உலகத்தை
 ஆனைமுகத்தான்.

சிலுவையில் அறையப்பட்டு
முக்தி அடைந்தான்
இயேசு.

போதி  மரத்தடியில்
 ஞானத்தை அறிந்தான்
 புத்தன்.


ஈற்றடியில்  உலகளாவிய
வாழ்வியல்  முறைகளை
எழுதினான் வள்ளுவன்.


சோதனை  யாவருக்குமே
 எடுத்தாளும்  விதமே
 சாதனை.

வேதனை எல்லாருக்குமே
 காணும் விதமே
சாதனை.

கையில் உள்ளது கோடி
அணுகும் முறையே
 சாதனை.

இருப்பதிலே மகிழ்வு
 காணும் நெறியே
சாதனை.

.







என்னுள்ளேயே

அன்பு சிறக்க 
 கோபம் குறை 
 கோபம் குறைக்க 
 சிரிக்கப் பழகு.

நானே எனக்குச் 
 சொல்லிக் கொள்வேன் 
 ஒரு முறை அல்ல
 பன்முறை .

முதலில் என்னைப்  பற்றி 
பேசுவேன் குறைவாக 
 செய்வேன்  நிறைவாக 
 அமைதி என் வழி.

கோபம் வராது 
 சட்டென்று 
 வந்து விட்டால் 
 போகாது சட்டென்று. 


யாரையும்  நோக 
 மாட்டேன்
  சீண்டினால்  ஒதுக்கி 
விடுவேன் முற்றாக.


தாயாக இருந்தாலும் 
 அதுவே முடிவு 
 பகைவனாக் இருந்தாலும் 
அதுவே.
   


என்னுடைய வலிமை 
அமைதி 
 என்னுடைய குறையும் 
 அதுவே!

வாழ்கிறேன் நானும் 
 என்பாடு 
 பேசாமல்  பார்க்காமல் 
 என்னுள்ளேயே 


  





Friday, May 6, 2016

தாய்ப் பாசம்

தாயின்  மடியில்
 குழந்தை 

 தாய்ப் பாலை 
 சுவைத்துக் கூட்ட 

 தாய் தலையைக் 
கோதி 

 காலை நீவி 
சுகமாக 

 குழந்தை  கண் 
 உறங்க 

தாயும் களைப்பு 
மேலாக 

கண் அசர 
இருவருமே 

மணி நேரம் 
 தெரியாமல் 

ஒன்று, இரண்டு மூன்று
மணி நேரமாக  

அயர்ச்சியில்  ஆழ்ந்து 
 உறங்க 


தாயின் பால்  உற்றெடுத்து 
 முதலில் 

சொட்டு சொட்டாக  
 உதிர

 பின்   வேகம் எடுத்து 
 கூடுதலாக  கொட்ட

தாய் ஈரம் 
 அறிந்தவுடன் 

எழுந்து  தன்னை 
நேர் செய்து 

 குழந்தையை வாரி 
 எடுதது 


பாலைப்  புகட்டி 
 மகிழ


 எப்படி   வந்தது?
   முயற்ச்சியே இல்லாமல் 


எவ்வாறு அந்த 
 அமிர்தம்  சொட்டியது?


மணி தவறாமல் 
கச்சித்மான் நேரத்திலே  


பரவசமானேன்  கூடவே 
 தேடினேன்  ஏதென்று ?



ஆழ்ந்தேன்   சிந்தனையில் 
 தொனித்த  கரு 


  யாவற்றிற்கும் மேலாக 
ஓரு   சக்தி, ஒரு பொருள்  

 கேளுங்கள் எந்த 
 மருத்துவரிடமோ?

 அலசுங்கள்  எல்லா 
 வலைதளங்களிலும் .

ஓடுங்கள் மேல்நாட்டு 
விஞ்ஞானிகளிடம் 


கிடைப்பது என்னவோ 
 ஒரு பொருந்தாத பதில் 
இதனாலோ, அதனாலோ
என்று இழுக்கும் குரல்கள்  

 சொல்லிவிடுவாள்   
ஒரு  பெண்.

இது தான் பாசம் 
தாய்ப்  பாசம்  -
 அதி அற்புதம்.












  



Thursday, May 5, 2016

படிக்காமல் சிறக்காமல் வாழ்கிறான்.

அவசரம் இல்லை அவனுக்கு
 இழுத்து விடுவான் பெரும்பாலும்
 தனக்கு என்றவுடன் துடிப்பான்
அள்ளித் துள்ளி முடிப்பான்.


தான் ஒரு நிபுணன் என்பான்
 கணக்கிலும் தொழிலும்
 வெகு விரைவில் விற்பான்
 தன் பங்கை அல்ல  தம்பியின்.

வாழ்கிறான் ஓர்  ஊரில்
அவனைப் போல் பல பேருடன்
 திருமணம், சாவு என்றே சென்று
 அன்றாடப் பொழுதை போக்குவான்.

கொஞ்சம் பணம் கையிலே புரள
 நடை போடுகிறான்  முறுக்காக
 ஆமாம் சாமி போட ஓரிருவர்
பொழுதைக் கழித்து விட்டான்

மிச்சம் சொச்சம் நாட்களில்
 வெட்டிப் பேச்சு  பேசி கலந்து கழிப்பான்
அவன் வாழ்க்கையே ஒரு மாதிரி
 படிக்காமல் சிறக்காமல் வாழ்கிறான்.

கை காட்டி மரம்

கை காட்டி மரம்
 சாய்வாக  நிற்கிறது
 ஏதும் சந்தேகமோ
காட் டுமிடம் இல்லையோ?


செல்வதா வேண்டாமா
 காட்டும் வழியில்
நிதானிக்கிறேன் சற்று
 வழி  தெரியாமல்.


 போகும் இடமே
 கேள்விக் குறியாக
இருக்கும் பொழுது
 எங்கு செல்வது ?


நிற்கறேன்  நேரமாக
 புலப்படாத  மனதுடன்
வாழ்விலும் அது போலவே
புரியாமல் .தடுமாறுகிறேன்.

பாதி வழி .  க்டந்து விட்டேன்
எவ்வாறு என்று அறியாமல்
 மீதியும் கடந்து விடும்
 இது போலவே  புரியாமல்.

நினைத்துப் பார்க்கிறேன்
 எதற்குப் பிறந்தேன்?
பிறந்து என்ன செய்தேன்?
 வாழ்ந்து என்ன செய்கிறேன்?


ஒரு கை காட்டி மரம்
 எனக்கு புத்தனாக
 பகவத் கீதையாக
திருக்குறளாகத் தோன்ற


நிற்கிறேன் கால் கடுக்க
 வெகு நேரமாக
 மரம் போல்
 கை  காட்டி மரமாகவே!


 





கதிரவன் எழுகிறான்

கதிரவன் எழுகிறான்
மசண்டையிலே 

ஏனோ அவனுக்கு 
 அவசரம் .

உறங்க  முடியவில்லை 
போலும் 

எழும் போதே  அவனுக்கு 
 வேகம் 

அசாத்தியமான் வேகம் 
 ஏனோ?

பலபலவென்று  விடியும் 
 என்பதற்கு  மாறாக 

பளபளவென்று தெரிகிறது 
 வானம் அதி  காலையிலே


பகட்டுகிறான் கதிரவன்
 ஏனோ?   


போகப் போக  கொளுந்து 
விட்டு  ஒளி  வீசுகிறான்.


திறமையைக் காட்டுகிறானோ?
 இருக்கலாம். 


ஓய்வு ஒழிச்சல் இன்றி சுட்டெரிக்கிறான் 
சாயும் பொழுது வரை. 


என்ன விளையாட்டோ இது ?
புரியவில்லை .


கடுமை என்று சொல்ல 
 மனம் வரவில்லை 

கொடுமை என்று கூற
 மனம் இடம் தரவில்லை .


ஒரு வேளை   பழிக்குப் பழி 
இருந்துவிடுமோ ?


 வினை விதைப்பவன் 
வினை அறுப்பான் 

என்பது முதுமொழி 
அதற்கு ஈடாக 

 நாம் மாசுபடுத்தியதற்கு 
 இணையாக 


 இன்று  இயற்கை 
 செயல் படுகிறதோ?

 பதிலுக்குப் பதில் 
நடத்துதோ?











  


நிதானம் எதிலும்

கணக்கிலே ஒரு தவறு
 ஒரு ஐம்பத்தி முன்று  காசு
 விடப்பட்டது  கவனக் குறைவால்


காசு தான் என்று  நான்
சமாதன்மடை யவில்லை
 என்னையே கடிந்து கொண்டேன்.


காசு தானே என்றாலும்
 தவறு தவறு  தானே
 என்னை என்னவென்று சொல்வது


 நேர் செய்து விட்டால்  வம்பு இல்லை
 வம்புக்காக இல்லை எனக்காக
 அதை கணித்து  திருத்தி  விட்டேன்.


அவசரம்    என்பது   கூடாது
 நிதானம் எதிலும் இருத்தல்
அவசியம் என்று உணர்ந்தேன் .



Wednesday, May 4, 2016

கசிந்து படுத்துவதற்கு

படுக்கிறேன் காலை நீட்டி
 ஆயாசமாகத் தோன்ற

 கண் அயரும் முன்
 தலை முழு வதும் ஈரம்

துவட்டிக் கொண்டு
சாய்கிறேன் அனாயசமாக

கண்களைப் பொருத்தும் போது
கழுத்து இடுக்குக்குள்  ஈரம்.

 எழுந்து அமர்கிறேன்
பிரயாசையுடன்  மெதுவாக

கண்களோ முடி திறக்க
கைகளில்  ஈரம் .

நிற்கலாம் சற்று நேரம்
 எனறு  தோன்ற

 நிற்கிறேன்  ஒரமாக
 கால்வழியே  வடிகிறது ஈரம்.


என்னைச் சுற்றி ஈரமே இல்லை
வறண்ட காற்று  வீச

நிலம்  நீர்இன்றி  வெடிக்க
வெயில் சுட்டெ ரிக்க

எங்கிருந்து ஈரம் என்னிடம் .
கசிந்து படுத்துவதற்கு?















Tuesday, May 3, 2016

வாழ்க் இருவரும் வளமுடன்.

குறை காணுவதே அவன் எண்ணம்
 நிறையே அவனிடம் காணவில்லை
 எண்ணம்  குறுக மனம் நோக
 பேசுவதே அவன் வழக்கம்

தானே பெரியவன் தானே நியாயம னவன்
 என்று மார் தட்டி பேசும் விதமே அலாதி
 தன்னை   விட யாரும் இல்லை என்ற நினப்பே
 மேலோங்க மேலும் கீழும்  பார்த்து  நொ டிப்பான்

தன்மை என்பதே அவனிடம் இல்லை
 பொறாமை ஆற்றாமை அவனைச்  சூழ
 அதோடு  இல்லாமல் தற்போது இயலாமையும்
 அவனைப் பிடிக்க   புழுங்குகிறான்  அனலாக

அவனுக்குத் துணையாக  மற்றொருவன்
எடுத்துக் கொடுக்க   சொன்னதைச  செய்ய
 கிளிப் பிள்ளை போல்  பேசுவதற்கு
 ஏனோ அவன் தட்டுத் தடுமாறி  பேசுகிறான்.


இருவருமே ஒரு சேர்க்கை  நல்லதற்கோ
கெ ட்டதற்கோ   என்று எனக்கு விளங்கவில்லை
எங்கும் எவ்வாறும் எடுத் தெறிந்து பேசுவதே
 குறிக்கோள்  வாழ்க் இருவரும் வளமுடன்.

எல்லாம் இருக்க எதுவும் இல்லை.

வசிக்க ஆவல்
 வாழ இல்லை 

பாட  எண்ணம் 
படிய  இல்லை .

நடக்க  விருப்பம் 
நழுவ  இல்லை.

வினவ  நோக்கம்
வழுவ  இல்லை


எல்லாம் இருக்க
 எதுவும் இல்லை.












நன்றி மறப்பது நன்றன்று.

செய்ததை மறந்தான்
 இன்று அதை
 அனாவசியம் என்றான்.


சொன்னதை மறந்தான்
 இன்று அது
 தேவையற்றது என்றான்.


சொன்னதும் செய்ததும்
 எனக்கு நன்றாகவே
 ஞாபகத்தில்.



மறந்ததை  நினைத்து
 மறுகவில்லை
 வியப்புற்றேன்.


மனதைச்  சமானப்ப்டுத்த
 முடியவில்லை
 எவ்விதத்திலும்.


அவ்வளவு தான் மனிதன்
 இன்றை  நேற்று என்பான்
 அவனுக்கு  ஏற்றவாறு..


சொல்லட்டும்  அவன்
  நன்றி  மறப்பது
நன்றன்று என்று  அறிந்தால்
 சரி.


















Monday, May 2, 2016

நானாகவல்ல

இடத்தை விடாதே
 பிடித்துக் கொள்
 சட்டென்று.

கேட்டவுடன் சற்று
 துணுக்குற்றேன்
 சில மணித் துளிகள்.

பின் சிரித்தேன்
 எனக்குள்ளே
 அதிராமல்.

இடமே இல்லை
 எதைப் பிடிப்பது
 சிந்தித்தேன்.


நேராக அனுபவித்தால்
 தான் தெரியும்
 நினைத்துக் கொண்டேன்.


சிறுமையும்  சீற்றமும்
மோத  முட்ட
 விலகினேன் .


தாங்க முடியாத போது
தள்ளப்ட்டப் போது
 வெளியே வந்தேன் .

நானாகவல்ல  என்பது
சொன்னாலும்  புரியாது
புரியவே வேண்டாம்
யாருக்கும்.




 

Sunday, May 1, 2016

ஒரு நிலைப்படுத்தும்

மனதை ஒரு நிலைப்படுத்தி
வாழும் நிலை  உன்னதமானது

நிலைப்டுத்துவது சாமானியமல்ல
 அது ஒரு  வழிமுறை .

நொண்டல் பேசுபவனை
கண்டு கொள்ளாமல்.

 நொடித்துப் பார்ப்பவனை
 மறந்தும்   கருதாமல்.


வெடித்து  விளம்புவனை
 எவ்விதத்திலும்  அறியாமல்

புறம் கூறுபவனை
 ஒதுக்கி  சகியாமல்


தன நோக்கிலே
 குறியாகி வாழும் நோக்கு


மனதை ஒரு நிலைப்படுத்தும்
வளமான வழியாகும்.







ஒவ்வவொரு செயலும்

மாவைக் கரைத்து 
 மறு நாள் காணி ன் 
 ஒரு புளிப்பு 
 பெருக்கம்.

தயிரை  தோய்த்து 
மறு நாள் காணின்   
ஒரு புளிப்பு 
 ஒடுக்கம். 

இன்றைய வேலையை 
 முடித்து  நாளை  காணின் 
 ஒரு நிறைவு
ஊக்கம் .


ஒவ்வவொரு செயலும் 
இன்று போல் 
நாளை இல்லை  
மாற்றம்.

Saturday, April 30, 2016

பிரிவு நிரந்தரம்

ஒரு பிரிவு
 தற்காலிகமாக
 நனமை  பயக்கும்

 பார்த்ததையே  பார்த்து
 செய்ததையே செய்து
வெறுப்பு அடையும் .

ஊர்  மாற்றம்
 இடம் மாற்றம்
 மனம் குளிரும்.


யார் செய்வார்கள் ?
 செலவு என்று
 ஒதுக்கி விட்டு
  அரைத்த  மாவே
அரைத்து
 புண்ணாக்கி
கந்தலாக்கி
 சிதைந்து
 நைந்து
 பிரிவு
 நிரந்தரம்
ஆகும் கால்.


பலப்பல.

குறை காண  வேண்டும்
 கண்டான் பல வகையில்
 பலப்பல .


அது  நெட்டை இது குட்டை
 என்றான் பல விதத்தில்
 பலப் பல.

அது அப்படியல்ல இது  இப்படியல்ல
என்றான் பல முறையில்
 பலப்பல.


கண் பொட்டை  காது செவிடு
என்றான் எல்லாம்  இருந்தும்
நன்றாகவே.


தன குறையை மறந்தான்
தன்னை  நினைக்கவில்லை
குறை நிறைய உள்ளவன்.



ஏனோ எனக்கு

திரைப்படம் பார்ப்பதில்லை
 ஏனோ எனக்கு  அவை
 புரிவதில்லை.

காதல் அறிந்ததில்லை
 ஏனோ எனக்கு அவை
 புரிந்ததில்லை.


கோபம் வந்து  போகும்
ஏனோ எனக்கு  அவை
 நிலைத்ததில்லை.


ஏமாற்றம்  நிறைய கண்டேன்
 ஏனோ எனக்கு அவை
 நிலைத்ததில்லை.

ஒதுங்குவேன்  பிடிக்காத போது
 ஏனோ எனக்கு   அவை
 மாறாது என்றும்.







Friday, April 29, 2016

ஏதும் நடக்காது

நாடுகளைப்  பார்க்க  நினைக்கிறேன்
 நெடுகிலும் ஏனோ முடியவில்லை .
முய ன்றும் பல தடவைகள்  
 தடைகள் தோன்ற செல்லவில்லை

 இலண்டனைக்  காண வேண்டும்
 பாரிசைப் பார்க்க வேண்டும்
 ஆசையோ மனதில்  வெகு நாளாக
யாவும் கானல் நீராக  வடிநதன.

வயது எறி க் கொண்டே போக
 காலிலே தடுமாற்றம் நிறையவே
 மனதிலே பதட்டம் வெகுவாகவே
ஏதும் நடக்காது எண்ணம் போலே .



நூலைப் போல சேலை

தாயின் வழியில்
சென்றனள்
நூலைப்  போல சேலை
 தாயைப்  போல பிள்ளை
அறிந்தேன் .

வல்லமையும்  வடிவமும்
சொல்லாற்றலும்  செயலும்
கண்டேன் .
தாயைப் போல்  பிள்ளையிடம்

பிடிவாதமும்  பீடிகையும்
மதியாமையும்  மதியும்
தெளிந்தேன்.
 தாயைப் போல் பிள்ளையிடம்.

தாயிடம் ஓரளவு எனின்
பிள்ளையிடம்  பெருமளவு
 பார்த்தேன்.
ஒற்றுமையும்  வேற்றுமையும்

நந்மொழியும் நட்பும்
நல்லெண்ணமும்  நலனும்
 காணேன்.
சுற்றிலும் முற்றிலும்


கண்டேனா  தாயிடம்
 மறந்தேன்  முக்கால்
 விதமும்
மறதி என் பால்

காணவில்லை பிள்ளையிடம்
மறக்கவில்லை  முழு
 விகிதத்தில்.
நினைவு  அருமையாக


நூலில் முரணபாடு
பாவிலும் உடுபாவிலும்
 முடிச்சாக
விளம்பினேன்  அழகாக

பிள்ளையில் பிழை
பக்குவத்திலும்  பதட்டத்திலும்
நெருடலாக.
 களங்கம் ஆங்காங்கே.














Thursday, April 28, 2016

புத்தகமே துணை

எரிச்சல் உள்ளத்திலும்
 உடம்பி லும் ஒரு சேர
 தன்னாலே ஒரு மாதம்
அதற்கு மேலேயும்
 சமையல், துவை த்தல்
மடித்தல், படுத்தல்
 என்ற செய்து கொண்டே
 இயந்திர வாழ்க்கை
 மனதை நெருட

காலம் முன்  நினைத்தால்
 மகன்களோடு படித்து
 விளையாடி , தூங்கி
 அடுத்து என்ன என்ற
 எதிர்பார்ப்புடன்  வாழ்ந்தது
 மனதிலே தோன்ற
 பெருமூச்சுடன்   சாய்ந்து
 கடந்த காலங்கள்
மனதில் நெருட


கண்ணீர்  பெருக்கெடுத்து
 ஒரு தனி மரமாக
 நிற்கும் வேளையில்
யாரிடம் பேசுவது
 யாரைப் பார்ப்பது
 என்ற எண்ணம்
தலை தூக்க
 புத்தகமே துணை
என்று அணைத்துக் கொள்ள





மலர்ந்த மாணிக்கமாக

அகமும் புறமும் நன்றே திகழ
தூய்மை  ஒருங்கே அமைய

மனம்  சலனமே இல்லாது இருக்க
ஆத்திரம்  மறுக்க பொய் அறுக்க

துப்பரவு  என்று தொடங்க  நினைக்க
தனது என்ற எண்ணம்  ஓங்க

பார்வையிலே அன்பும் பண்பும் வெளிப்பட
 மனதில் மகிழ்வு அதிகம் பொங்க.

சுற்றுப்புறம் அழகும் ஒழுங்கும் மேம்பட
மனதிலே  அதிர்வு  வெகுவாகக் குறைய

அகத்தில் அழகு புறத்த்தில்   தெரிய
மலர்ந்த மாணிக்கமாக  தெளியுமே
இவ்வுலகு.





வீடே வாழ்வு

வீடே வாழ்வு
 வாழ்வே வீடு
 என்ற எண்ணம்
 இன்றல்ல நேற்றல்ல
எப்போதும்  என்றும்.

வீடே உலகம்
 உலகமே வீடு
 என்ற நோக்கு
 இன்றல்ல நேற்றல்ல
 எப்போதும்  என்றும்.


வீடே அனைத்தும்
 அனைத்தும் வீடே
 என்ற உள்ளம்
 இன்றல்ல நேற்றல்ல
 எப்போதும்  என்றும்.


விட்டிலே கண்டேன்
 சுகமும் சௌக்கியமும்
மகிவும் மகிச்சியும்
 இன்றல்ல  நேற்றல்ல
எப்போதும் என்றும்.


விட்டில் இருந்தே
 கண்டேன் யாவற்றையும்
 நல்லதையும் கெ ட்டதையும்
இன்றல்ல நேற்றல்ல
எப்போதும் என்றும்.


வீடே எனக்கு
யாவும்  தெளிந்தேன்
 வீட்டை அடைய
 இன்றல்ல நேற்றல்ல
எப்போதும் என்றும்,









Wednesday, April 27, 2016

கண் கொள்ளாக் காட்சி

கயிலை மலையிலே
 பனி வாசம்  வெகுவாக
 வெள்ளிமலை  சாரலில்
 அழகாக மின்ன
 வெள்ளிப் பனி
 பாறையெல்லாம்
கனிந்து நிரம்ப
கண் கொள்ளாக்
 காட்சி  கண் நிறைய.


குளிரும் பனியில்
 கதிரவன்  எழும்ப
 இருட்டும்  வெளிச்சமும்
 விட்டும் விடாமலும்
 மப்பும் மந்தாரமுமாக
வெண் போர்வை
மெல்ல மெல்ல விலக
கண் கொள்ளாக்
காட்சி  கண்  நிறைய.


வெளிறிய போது
 மஞ்சள்  முகத்தான்
பட்டும் படாமலும்
 பகட்டும் பகட்டாமலும்
அசையாமல்   மௌனமாக
 வெளி வரும் தோற்றம்
மனதிற்கு  ஈடொ ன்னா
அமைதியை நல்க
கண்  கொள்ளாக்
 காட்சி கண்  நிறைய.








  

வையகம் புகழ பெறுமே !


 காட்டிலே மழை  பெய்தால் 
 நாட்டிலே  களை கட்டும் 
 காட்டிலே  பயம்  என்றால் 
 நாட்டிலே நயம் தெளியும் 


காடும் நாடும்  ஒன்றுக்கொன்று 
  எதிர் மறையாக விளங்க 
 இருட்டும் வெளிச்சமும்  ஒன்றன் பால் 
கடினமும் எளிதும்  விளைவிக்கும்.

காட்டிலே  வாழ்க்கை காணின் 
 இன்னல்  நிறைய  கண்டு 
 பேரிடர்  பெரும்பான்மை அறிந்து 
நன்நிலை  குறைவே என்று எண்ணி 

நாட்டிலே வாழ்வு  பயக்கின் 
இனிமை  மிகவே  கண்டு 
வன்செயல்  மிதமாக  வலிந்து 
நன்று   நின்று  பெருகுமே 


காடும் நாடும்  சில கணங்களில் 
 அநேகமாக   ஒன்றே   புரிந்து 
 சற்று ஏறக்குறைய எனின்
 அதுவல்லவே  தீர்ப்பு. என்று கொள் 


காட்டு மனிதன்  அனாயசமாக 
  மேட்டிலும்   காட்டிலும்  கரடுமுரடிலும் 
 சுற்றி  வலம் வந்து  ஆங்காங்கே 
காயும் பழமும் புசித்து.

பொங்காமல்  பொரிக்காமல்  
 பச்சை யாக உண்பாண்  உடனே 
 இறைச்சியும்  கிழங்கும்  அதிகமாக 
உப்பும் உரைப்பும்  இல்லாது.


நாட்டு மனிதன்  நளினமாக 
வானிலும் தரையிலும் வலி தெரியாது 
 கடலிலும்  பறந்து  நடந்து 
ஊர்ந்து  களிப்புடன்.

 

பக்குவமாக ஆக்கி  பலவிதமாக 
மணமுடனும் சுவையுடனும்   
அரிசிச் சோறும்  கூட்டும்  
அவியலும்  குழம்பும்  கலந்து 


எங்கு வாழின்  காட்டிலோ 
 நாட்டிலோ மனிதன் மனிதனாக 
வாழ்ந்தான் எனில் 
வையகம் புகழ  பெறுமே !

 

 








 



 


Tuesday, April 26, 2016

நன்றே! நவினமே !

சாதம் போட்டு
 நெய் உற்றி
மை போல்
பிசைந்து  உருட்டி
 காகம் அழைத்து
உட்டிய  காலம்
 போய்  இன்று

பிசா என்ற \
ஒன்று  வி ரிந்து
 பரந்து  வெண்ணெய்
 பரப்பி காய்
 தூவி  யுடியுபில்
படம் பார்த்து
 ஊட்டும் வேளை.

காலம் மாற
 உணவு வேறுபட
 நெய் வெண்ணையாக
காகம் யூடிய்பில்
பறந்து வர
 முன்னே  நிற்கும்
 காகம் காணாமல்
நடாத்தும்  பாங்கு
 நன்றே! நவினமே !


 

Monday, April 25, 2016

பச்சை

கிளிப்   பச்சை
பேருவகை
பசேலேன்ற வயல்
 பெரு  மகிழ்வு
பசுமை எங்கும்
பேரின்பம்.

இருப்பினும்

பச்சை வேறுவிதமாக
பச்சைப்  பொய்.

பச்சைத் துரோகம்
 கொடுரம் என்பினும்

பச்சையாகப்  பேசுவது
கொச்சை   என்றினும்

காணலாம்  வெவ்வேறு
வழி  மொழிதல்களிலே

அழகிய ஒப்பனையாகவும்
 அநீதியான ஒப்புதல்களாகவும்


பச்சை  கூறும்  கூற்று
பசுமையாக மனதிலே.




பேச்சை வம்பாக்குவான்

பேச்சை வம்பாக்குவான்
 வம்பை    வழக்காக்குவான்
 வழக்கை  சண்டையாக்குவான்
சண்டையை  கலகமாக்குவான்
கலகத்தை  போராக்குவான்
 போரில் உயிரிழப்பு
 குருதி  வெள்ளம்
 காயம்  சேதம்
பொருளிலே  வாழ்விலே.

 எவ்வாறு ஒரு சிறு பொறி
 அனல் வாரிக் கொட்டி
காட்டுத்  தீயாகப் பரவி
அழிவை உண்டாக்குவது  போல
 ஒரு சொல் வெடித்துச் சிதறி
திரிந்து  மலிந்து ஒன்று பலவாகி
உலகமே   அசைந்து அசந்து
 வாழ்வே  மறித்து மறைந்து
சேதமே  யாவற்றிலும்  காணலாம்.


அவன் வழியிலே

வழிந்தான்  குடம் குடமாக
 அசடு


முழித்தான் திரு திருவென்று
மக்கு.

முனங்கினான்  முனு முனுவென்று
கோழை.

ஒளிந்தான் ஒடி ஒடி
பயந்தாங்கொளி.

வாழ்கிறான் அவனும்
 அவன் வழியிலே


இலக்கே இல்லாமல்

பட பட வென்று பேசி
 நிலை குலைய வைத்து

சட சட வென்று  ஏசி
மனம் குன்ற வைத்து

சுடு சுடு வென்று  குத்தி
நெஞ்சைக்  கொதிக்க  வைத்து

நம நம வென்று  நச்சு
உள்ளத்தை நடுங்க வைத்து

விடு விடு வென்று ஓடி
கதவை  அறைந்து சாத்தி


வெகு வெகு வென்று
நடந்தான்  இலக்கே  இல்லாமல்





Sunday, April 24, 2016

வெற்றி உறுதி.

சற்றும் நினையாமல்
சற்றும் நிதானிக்காமல்
சற்றும் தெளியாமல்
சற்றும் அடங்காமல்
 சற்றும் தயங்காமல்
பேசுகிறான் .

கொஞ்சம்  நினைப்பு
கொஞ்சம் நிதானம்
கொஞ்சம்  தெளிவு
கொஞ்சம் அடக்கம்
 கொஞ்சம்  தயக்கம்
 இருந்திருந்தால்


காரியம் கை குடியிருக்கும்
காரியம்  முடிந்திருக்கும்
காரியம்  நிலைத்திருக்கும்
காரியம் வென்றிருக்கும்
காரியம் காரியாமாயிருக்கும்
வெற்றி உறுதி.




நினைப்பு எல்லாம்

மனது  ஒய்ந்து விட்டது
 உடலைப் போலவே

ஆர்வமும் ஆவலும்
குன்றி விட்டது


ஆசையும்  பற்றும்
வடிந்து விட்டது.

வாழ வேண்டும்
 என்ற துடிப்பு  
வற்றி விட்டது.


கண்ணை முடுவது
 எப்போ  என்ற
 வேகம் கூடுகிறது..

 காத்துக்  கொண்டிருக்க
 முடியவில்லை நினைப்பு
எல்லாம் போவதிலேயே



Saturday, April 23, 2016

கடுவன் பூனையாக.

பேசினான் என்பதோடு
 வெடித்தான்  குமறி னான் என்பதே
நியாயம் .


வெடித்தது எதற்காக?
கொழுந்து விட்டு எறிந்த
பொறாமைத் தீ.

பொருமினான் நேரமாக
ஒன்றல்ல ஒராயிரம்   மணியாக
வெந்த மனம்.


விளம்பினான் எல்லாரிடமும்
தன்னுடைய ஆத்திரத்தை  முழுதாக
கனல் புகைய.


என்னவென்று சொல்வது
அவன் தன் இயலாமையை
கடுவன் பூனையாக.