Sunday, May 8, 2016

மரம் போல்

மரம் போல
 வாழ்.

பொறுத்து, தணிந்து
 பெருகி நில் .

கிளை விரித்து
 பல்கி நில் .

இலைகள் நிறைய
 சுற்றிலும்

 பூக்கள் மலர
 அழகிலும்


காய்கள்  காய்த்து
நிரக்கவும்.

பழமாகப் பழுத்து
 தொங்கவும்.

 செழிப்பான தோற்றம்
கண் முன்னே

மரம் போல்  என்றால்
 மரத்துப் போய்

 அல்லவே அல்ல
 வளமான பெருக்கமே

நவில்கிறேன் நல்விதமாக
 அறிந்து கொள்.











No comments:

Post a Comment