Saturday, May 28, 2016

வாழ்வும் சாவும்


மனிதன் இறக்கிறான்
உயிர் பிரிகிறது
 உடல் கிடக்கறது.

துக்க வேளையில்
 நல்லது பேசப்பட்டு
 கெடுதல் விடப்படுகிறது.


நாட்கள் செல்ல
 மாறுகிறது
பேச்சுக்கள்.

நரம்பில்லா நாக்கு
 கூடவும்  பேசுகிறது
 குறையவும்  பேசுகிறது.

வாழ்வின் அழகை
 புகழ்ச்சி  மெருகுட்டுகிறது
 இகழ்ச்சி  விகாரப்படுத்துகிறது.






   

No comments:

Post a Comment