Tuesday, May 3, 2016

நன்றி மறப்பது நன்றன்று.

செய்ததை மறந்தான்
 இன்று அதை
 அனாவசியம் என்றான்.


சொன்னதை மறந்தான்
 இன்று அது
 தேவையற்றது என்றான்.


சொன்னதும் செய்ததும்
 எனக்கு நன்றாகவே
 ஞாபகத்தில்.



மறந்ததை  நினைத்து
 மறுகவில்லை
 வியப்புற்றேன்.


மனதைச்  சமானப்ப்டுத்த
 முடியவில்லை
 எவ்விதத்திலும்.


அவ்வளவு தான் மனிதன்
 இன்றை  நேற்று என்பான்
 அவனுக்கு  ஏற்றவாறு..


சொல்லட்டும்  அவன்
  நன்றி  மறப்பது
நன்றன்று என்று  அறிந்தால்
 சரி.


















No comments:

Post a Comment