Thursday, May 12, 2016

முடியுமா மறக்க?

ஒன்றல்ல  மூன்று
 குழந்தைகளை 
இழந்தனர்  ஒரு தம்பதி 
 கொடுமையடா! 

விமானம் சுட்டு
 தள்ளப்பட 
 குழந்தைகள்  மடிந்தனர்.
பரிதாபமாக 


தாய் கதறினாள்  
 தந்தை விம்மினார் 
 வரவில்லை குழந்தைகள்.
போனது போனது தானே.

ஆண்டு ஒன்று உருண்டோட
மிண்டும் உண்டானாள்
 தாய்.
ஒரு விளையாட்டோ!

 பிறந்தாள்  ஒரு பெண் மகவு 
மகிழ்ந்தனர் பெற்றோர் 
ஓரளவே!
முடியுமா மறக்க? 

 மறைந்த மூன்று  செல்வங்களும் 
 கண் முன் நிழலாட  எதிரே 
 நிற்கும் மகவில் கிடைத்தது 
 அமைதி!














No comments:

Post a Comment