அன்பு சிறக்க
கோபம் குறை
கோபம் குறைக்க
சிரிக்கப் பழகு.
நானே எனக்குச்
சொல்லிக் கொள்வேன்
ஒரு முறை அல்ல
பன்முறை .
முதலில் என்னைப் பற்றி
பேசுவேன் குறைவாக
செய்வேன் நிறைவாக
அமைதி என் வழி.
கோபம் வராது
சட்டென்று
வந்து விட்டால்
போகாது சட்டென்று.
யாரையும் நோக
மாட்டேன்
சீண்டினால் ஒதுக்கி
விடுவேன் முற்றாக.
தாயாக இருந்தாலும்
அதுவே முடிவு
பகைவனாக் இருந்தாலும்
அதுவே.
என்னுடைய வலிமை
அமைதி
என்னுடைய குறையும்
அதுவே!
வாழ்கிறேன் நானும்
என்பாடு
பேசாமல் பார்க்காமல்
என்னுள்ளேயே
No comments:
Post a Comment