Thursday, December 31, 2015

என்றும் போல்

என்றும் போல் இன்றும் விடிய
என்றும் போல் கதிரவன் தோன்ற
என்றும் போல் விழித்தெழுந்து
 என்றும் போல் நீராடி
என்றும் போல் உண்டு
என்றும் போல் உடுத்தி
என்றும் போல் அயர்ந்து
 என்றும் போல் உறங்கி
 என்றும் போல் இ ன்றும் முடிய.

வரவு 2016

வரவு 2016
 செலவு 2015
 இலாபம் 1
 ஆகா என்ன
கண்டுபிடிப்பு
 ஆண்டு தோறும்
அவ்வாறே
இலாபம் தான்
 நம்பிக்கை
 நல்ல ஆராய்ச்சி தானே  

கேட்டாள் செவந்தி

கேட்டாள்  செவந்தி கேள்விகள் பல
 கேட்பாள் அவள் எப்போதும்
 தன்னை நினையாமல்
தன்  நிலை மறந்து
 கேட்பாள் கேள்விகள் பல

செவந்திக்கு ஒரு சௌந்தரம்  பதில் சொல்ல
கேட்பாள் செவந்தி கேள்விகள் பல
 மேகலாவுக்கு என்ன
முடியவில்லையா  என்ன என்ன
 கேட்கிறாள் தொடர்ந்து

சௌந்தரம்  சொல்கிறாள்  எல்லாம்
அறிந்த மாதிரி எப்போது போலத்தான்
மேகலாவிடம் சொல்கிறாள்
 மேகலா  முதலில் வருந்தினாள்
 மனிதனுக்கு உடல் நிலை மாற்றம்
ஒரு சாதாரண  நிகழ்வே.

தமிழ் மொழி

பால் ஓடும் ஆறு பாலாறு
 தேனும் பாலும்  கலந்து
 பாய் ந்து ஓடும்  ஆறு
தமிழ் மொழி என்ற ஆறு
எதுகையும் மோனையும்
இலக்கணமும் இலக்கியமும்
பொருளும் கருத்தும்
ஓசையும் ஒலிகளும்
 நடையும் எளிமையும்
ஒருங்கே காணுபது
தமிழ் மொழி அல்லா
வேறிடம் இல்லை.

Sunday, December 20, 2015

மாறு வது இயல்பு

காலை எழுந்தவுடன் படிப்பு
 என்று பாடினான் பாரதி
இன்று நிலை  மாறி விட 
 குழநத்தைகள்  கையில்
 கணினி , அலை பேசி
 அதில் விளையாட்டு  
 காலை  முதல் இரவு வரை
 காற்றோட்டம் காணவில்லை
 வெயிலும் நிழலும் அறியாத
 விளையாட்டு கையிலே 
 என்று அங் காலாயக்க  தோன்ற
 அதிலும் நயம் பயக்கும்
 காலங்கள் மாறுவது போல்
 மனிதர்கள்  மாற
 சிறுவர்களும்  மாறு வது இயல்பு


Thursday, December 17, 2015

சற்று ஏறக்குறைய

சற்று ஏறக்குறைய  தோன்றிய  எண்ணம்
 சற்று மாறுபட்டதாக இருக்கும் என்ற நோக்கம்
 சற்று நாலும்  நினைக்கும்  என்ற க்ருத்து
 முயற்சியைப்    பின்தள்ள
 நினைப்புக்கள் முடங்க
 முன்னேற்றம் காண் முடியவில்லை. 

Sunday, December 13, 2015

வெட் ப தட்பம்

மனிதன் தன தேவைக்கு
இயற்கையை  வதைத்தான்
 தானாக முடியாமல்
 சிதைந்தது வெட் ப தட்பம்
கூப்பாடு போடுகிறான் இன்று
 கூட்டம் கூட்டுகிறா ன் வேகமாக
 தனக்கு தனக்கு என்றால்
 பதக் பதக் என்கிறதோ மனம் 

தண்ணீர்

வாழ்வின் ஆதாரம் தண்ணீர்
 வீணடித்து விட்டோம் அறியாமையில்
 காப்பாற்ற தெரியவில்லை நமக்கு
 கடலில் கலந்தது அசட்டையால்  அப்போது.

வாழ்வயே  நாசம் செய்தது  தண்ணீர்
 விதரணையாக கொள்முதல் செய்யாமல்
 திறந்து விட்டோம் அநியாயமாக
 குடித்தது உயிர்களை அடுக்கு அடுக்காக .

  

Saturday, December 12, 2015

மட்டில்லா அமைதி

காகம் கரையும் காலை வேளையிலே
 கத்றவன் தோன்றும் விடியல் பொழுதிலே
எழுந்து நீராடி தொழுது   உணவு உட்கொண்டு
 வெளியில் அமர்ந்து காட்சியை காணும் பேறு
மட்டில்லா  அமைதியு ம் மகிழ்வும்  நல்கும்

கையிலே இருப்பது

கையிலே இருப்பது கோடிக்கு சமம்
 எட்ட இருப்பது ஒரு சன்மானமும் இல்லை
 அருகிலே  கிடைப்பது மிகுதியான மதிப்பு \
தூரத்தில்   இருப்பது எப்போதுமே ஒரு சிக்கல்.

Friday, December 11, 2015

அரசாங்கத்தின் ஆணையே

கவனக் குறைவு  ஓர் இடர்
 அதிகாரத்   தொனி  பேரிடர்
 இரண்டுமே சென்னையின்
 வெள்ளத்துக்கு காரணம்
அநியாய சாவுகளும்
 அக்கிரமான்   இழப்புக்களும்
 அனாவசியமான்  இடையூ று களும் 
மனக் கலக்கமும்  அழு  குரல்களும்
 அவலங்களும்  நடக்க
 அரசாங்கத்தின்  ஆணையே வேறல்ல
இயற்கையை குறை   கூற   ஒன்றுமில்லை.


கெ ட்டு பட்டினம் போ

கெ ட்டு பட்டினம் போ
 என்பது முதுமொழி
 பட்டினம் கெட்டு விட்டது
திரும்பி ஊருக்குப்  போ
 என்பது புது மொழி. 

ஆவலோடு!

படகிலே வந்தான் பணக்காரன்
 அதில் ஒரு நாற்காலி போட்டு
 வெள்ளம் அவன் மாளிகையைச்  சூ ழ
 படகிலே பயணித்தான்  மனைவியுடன்
கைலியுடன் சென்றான் செல்வந்தன்
 வெள்ளத்திற்கு ஏழை  எளியவன்
 வித்தியாசம் தெரியவில்லை
 இவனையும் அவர்களோடு
ஒன்றாகச்  சுற்றினான்
 ஆவலோடு! 
  

Thursday, December 10, 2015

அளவுக்கு மிஞ்சினால்

கதிரவன் வந்து  விட்டான்
 மகிழ்வு தானே பொங்குகிறது
 மழை  ஒரு இனிய இராகம்
 நெகிழ வைக்கும் அழகு
 அளவுக்கு மிஞ்சினால்
 மழையும்  கசக்கும்
 வெயிலும் எரிக்கும் 

Tuesday, December 8, 2015

மனம் ஒரு நிலையில் இல்லை

மனம் ஒரு நிலையில் இல்லை
 அதிக துணிச்சல் சில நேரத்தில்
மிகுதியான பயம் சியல் நேரங்களில்
அமைதிப்படுத்த   முடியவில்லை
 நினைத்து நினைத்து வழி  தேடுகிறேன்
 கிட்டும் என்ற நம்பிக்கையுடன்

Monday, December 7, 2015

அழிவு திண்ணம்.

தீ என்றால் வாய் வெந்து விடு மா ?
 நெருப்பு என்கிற போது து ஒரு பயம்
நீர் என்றால்  உதட்டிலே ஒரு சிரிப்பு
 தண்ணீர் என்றாலே ஒரு மகிழ்ச்சி
தீ அழிப்பது வேகமாக  ஒரே பொழுதில்   
நீர் இழுப்பது பல விதத்தில்
இரண்டுமே மிகுதியானால்
அழிவு திண்ணம். 

Sunday, December 6, 2015

அவனின் சொற்கள்

கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல்
கனல் தெறிக்கும் அனலைப் போல்
பொதியாக கொட்டும் பனி யைப் போல்
 அவனின் சொற்கள்  வெகுவாகப் பாதித்தன்
 சுட்டன எரித்தன உருக்கின பலவாறாக
விறைத்தன் நிமிர முடியாமல்.  

Saturday, December 5, 2015

எனக்கு மட்டுமா ?

கண்டதும் பொய்
கேட்டதும் பொய்
பிறந்ததும் பொய்
  வளர் ந்ததும் பொய்
 வாழ்ந்ததும் பொய்
 இறந்ததும் பொய்
 எனக்கு மட்டுமா ?

பரவலாக .

கண்டேன் சீதையை என்று மகிழ்ந்தான் 
 காணக் கிடைத் தது அவள் திரு முகம்
 குதித் தான், கொண்டாடினான் 
 ஓடினான் இராமனிடம் 
 பகிர்ந்து மகிழ்ந்தான்   செய்தியை 
 அனுமான் பரவலாக .
 
 
  

Thursday, December 3, 2015

யாருமே இல்லாமல்

கனிவான பேச்சு என்றும் இல்லை
 நேர்மையான நட த்தை எப்போதும் இல்லை
அள வான   பழக்கம் எதுவும் இல்லை
அடாவடியும்  அதிகாரமும்  வாழ்க்கை
 இன்று மறைந்தான் யாருமே இல்லாமல்   

மழை

கா ட்டிலே  மழை 
 ஏ தோ  பரவாயி ல்லை 

 நாட்டிலே மழை  
ஏதோ  ஒரு நல்லதுக்கு 

காட்டிலே கடும் மழை 
ஏனோ தெரியவில்லை 

நாட்டிலே கடுமையான மழை 
 ஏதோ  கெடுதலுக்கோ  

Wednesday, December 2, 2015

செம்மொழியாம்

செம்மொழியாம் என் தாய் மொழி
 நலிந்து போகும் விதம் சூழ்நிலை 
நைந்து போகும் விதம் இடை நிலை
செழித்து  விளங்கும் விதம் எதிர் நிலை
 அழிந்து போகாத  விதம்  உயர் நிலை
வழங்கும் விளங்கும் மொழி எம் தாய் மொழி 

மழை பெய்து

மழை பெய்து  செழிக்கும்
மழை  பெய்தும் கெடுக்கும்
 செழிப்பும் அதிகம்
கெ ட்டதும் அதிகம்
 நேற்று மகிழ்ச்சி
 மழை  பெய்ததால்
 இன்று துயரம்
 மழை பெய்ததால்
மழையின் ன் சிறப்பும்  
சீரழி ப்பும் 

கண்ணே தெரியாதவன்.

வெளிச்சம் மிக அதிகமாக
 கண் கூச்சம் மிக அதிகமாக
வெளியே செல்ல முடியாமல்
 உள்ளே இருந்துக்கொண்டே
 உற்று உற்று நோக்கினான்
 கண்ணே தெரியாதவன். 

Tuesday, December 1, 2015

சாதரணமாகவே தெரிந்தது

ஒரு வெளியே செல்லுதல்
 பெரியது ஒன்றுமில்லை
 வெகு நாளைக்குப பிறகு
 சென்றது ஒரு கூச்சம்
செல்ல ஒரு தயக்கம்
 சென்றேன் மெதுவாக
 பெரிய வேறு பாடுஇல்லை
சாதரணமாகவே தெரிந்தது 

Sunday, November 29, 2015

இறைவனுடன் கலந்தது

பழக்கத்திலே ஓர் இங்கிதம்
 பேச்சிலே ஒரு நாகரிகம்
 வழக்கத்திலே ஒரு தன்மை 
 பார்வையிலே ரூ கனிவு
 செயலிலே ஒரு தாராளம்
 ஒருங்கே அமையப்பெற் றின்
 இறை தன்மை பொருந்தியது
 இறைவனுடன் கலந்தது
போல் ஆகும்.

வாழ்த்த வேண்டாம்

வாழ்த்த வேண்டாம் வாழ விடு
 பாராட்ட வேண்டாம் பாழ்  நினையாதே
 போற்ற வேணடாம் போக்கடிக்காதே
தூக்க வேண்டாம் தூக்கியடிக்காதே
நியாயாமாக இரு  நலியாதே 

Saturday, November 28, 2015

கேடு நினைப்பவன்

கேடு நினைப்பவன்
 கேடு செய்பவன்
 கெட்டுப்  போவான்
 இன்று அல்ல
 நாளை அல்ல
 இன்றும் நாளையும்
 அவன் பூவாய்
 மலர்வான்
 பின் ஒரு காலத்தில்
 துடிப்பான்  உறுதியாக.

காடும் மேடும் விற்றான்

காடும் மேடும் விற்றான்
 எதற்கு என்று தெரியவில்லை
 காடும் மேடும் அவனுக்கு பூர்விகம்
 அதை ஏன் விற்கிறான் அறியமுடியவில்லை
 செல்வந்தன் என்று கூறு பவன்
 என் விற்கிறான் புரியவில்லை
ஆ னால் விற்கிறான் ஒன்றொன்றாக 

Friday, November 27, 2015

கையில் இருக்கு திறன்

கையில் இருக்கு திறன்
கண்ணில் இருக்கு புலன்
 கிடைப்பது அருமை
 கிட்டியது திறமை
 முடித்து விடு சட்டெண்று
 வென்று விடு முழுமையாக

ஏண்டா மனிதா

பாரினிலே அல்லாடும் மைந்தனே
 உனக்கு ஏன் இந்த வீதி

சண்டை வீட்டினிலே  எந்நேரமும்
நிம்ம்தியில்லை ஒரு காலும்..


கைகலப்பு அரசல் புரசலு மாக அண்டை
 அசலில்  மகிழ்வில்லை  ஒரு போதும்


 போர் மற்றைய நாடுகளுடன்  எந்நேரமும்
 துவளும் மனம் எக் காலமும்.


ஏண்டா   மனிதா   உன் தலைஎழுத்து  இவ்வாறு
 நியே யு ன்னை நொந்துகொள்  பலவாறாக.

தெளிவு வரும்

செய்தி சென்றது வேகமாக
 சென்ற வேகத்தில் திரும்பியது
 அதி வேகமாக


நினைத்தது நடக்கவில்லை என்று நினைக்க
 நினத்தது எல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஒன்று இல்லை.

மனதில் குழப்பம் மிஞ்ச கலங்குது மனது
 கலக்கம்  வெகுவாகத தாக்க
தெளிவு வரும் என்ற  நம்பிக்கை. 

Thursday, November 26, 2015

இரு கண்களாகப் போற்று.

நல்லது செய் மனமே
 நல்லதே நினை மனமே
நன்றாக வாழ இவை இரண்டும்
இரு கண்களாகப் போற்று 

குறையே உள்ளது என்பவன்

குற்றம் கண்டவன் காண்பான் எப்போதும்
 குற்றம் காணாதவன் காணமாட்டான் எப்போதும்
 குறை ஒன்றுமில்லை என்பவன் குறை யில்லாமல் வாழ்வான்
 குறையே  உள்ளது  என்பவன்  குறையுடன் வாழ்வான்

Wednesday, November 25, 2015

மனிதனைப் போல

வான் கோழி தன்னை மயில்
 என்று நினைத்து ஆடியதாம்
 மைனா  குயில் என்று
நினைத்துப் பாடியதாம்
 காகம் தன அழகை எண்ணி
 பெருமிதம் கொண்டதாம் 
கழுதை குதிரையாக நினைத்தாம்
 நிலை தெரியாமல் வாழும்
 மனிதனைப் போல 

அ , ஆ, அறியாதவன்

படிக்காதவன் பேசுகிறான் படிப்பை ப் பற்றி 
 கூட்டல் கழித்தல் தெரியாதவன் 
 கணக்கியலைப் பற்றி பேசுகிறான்
 அ , ஆ, அறியாதவன் 
 தமிழ்  இலக்கியத்தைப் விவாதிக்கிறான் 
 இதை எங்கு போய்ச் சொல்வது ?
 தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.

உண்டாகாது ஏனோ

பட்ட மரம் துளிர்க்காது
கெ ட்ட மனம் பெருகாது
வெந்த பேச்சு  விரியாது
 சுட்டப் பார்வை  விருத்திக் காது
 கடுஞ் சொல் துளிர்க்காது
 இருந்தும்  திருந்த நோக்கம்
 உண்டாகாது ஏனோ 

அறிவு இல்லை

எதற்கு என்று தெரியாமல்
 என்ன விதம் என்று புரியாமல்
 போட்டி போடுவதற்காகவே
 அவன் வருகிறான் என்னிடம்
 மறு த்து ப் பேசியும், ஊதா சினப்படுத்தியும்
விரட்டியும், பாராமுகமாக இருந்தும்
 அவன் தி ரும்பித்  திரும்பி  செய்கிறான்
 வீண் வெட்டிப் பேச்சும் விதண்டாவாதமும் 
எழுபதை நெருங் கும் போதும்  அறிவு இல்லை 

Monday, November 23, 2015

எதிர் நீநதினாள்


வாழும் எண்ணம் தலை தூக்க
 வாழ்ந்தே காட்டுவேன் என்று
வீம்புடன் வாழ நினைக்க
 கொடுமைகளையும்  தாங்கி
 துய ரங்களை முழுங்கி
 கடுஞ் சொற்களைப்   பொறுத்து
 எதிர்  நீநதினாள்  அங்கயற்கண்ணி 

மன நிறைவோடு.

தம்பி என்று நினைத்தேன்
 அண்ணன் என்று நம்பினேன் 
அக்கா  என்று எண்ணினேன்
 எனக்கு யாரும் இல்லை
 என்று அறிந்தேன்
 சிரித்தேன்  சிரிப்பாக
 வாழ்கிறேன்  மன நிறைவோடு.

அதுவே சிறப்பு

கொள்கை மாறாமல் வாழ வேண்டும்
 இன்று ஒன்று நாளை மற்றது
 என்று வாழும் நிலை மாற
 இன்றும் அதே  நாளையும் அதே
 என்று வாழப் பழகிக் கொள்
 அதுவே மகிழ்ச்சி அதுவே சிறப்பு 

சத்தமே இல்லாமல் வாழும் பெண்

சத்தமே இல்லாமல் வாழும் பெண் 
 சத்தமே பிடிக்காமல் வாழ நினைக்க 
குந்தகம்  வந்தது அவளின் இயல்புக்கு 
அதற்கு வரவில்லை இதற்கு வரவில்லை 
 என்று பேசி பேசியே  நெருக் கிறார்கள்  
மனித நேயமில்லா தவர்கள்  திறமையாக 
அவளோ சிரித்துக்கொண்டே விலகுகிறாள் 
வென்று விடுவாள் என்ற எண்ணம் மேலோங்க 
வாழ்த்துகிறேன் அவளை மனதார .

Saturday, November 21, 2015

கலகம் அவனது இயல்பு

கலகம் அவனது  இயல்பு
 எதில் வம்பு செய்ய
 எதில் வீம்பு பண்ண
என்று காத்திருப்பான்
 வாழ்வே அவ்வாறு  செல்ல
 அவன் நாட்களும் முடிவை  நெருங்க
 ஓடுகிறான் மூக்கில் வேர்வையுடன் 

Friday, November 20, 2015

நெஞ்சிலே கொள்ளை ஆசை

நெஞ்சிலே  கொள்ளை ஆசை
 உடலிலே பலமில்லை
 கண்ணிலே துள்ளும் அறிவு
 உடலிலே வலிமை இல்லை
 சாதிக்கத் துடிக்கும் அறிவு
 உடலோ இட ம் அளிக்கவில்லை
 இருந்தும் முயற்சி விடவில்லை
உடலைப் பொருட்படுத்தாமல். 

Thursday, November 19, 2015

நலம் விசாரிக்க வந்தான்

நலம் விசாரிக்க  வந்தான் என் தம்பி
 விசாரணை மட்டுமே கேள்வி மேல் கேள்வியாக
 மெய்யாக அதில்  ஓர் அன்பு காணேன்
 கண்டேன் ஒரு அறிந்துகொள்ளும் ஆர்வம்
 மனம் கோபத்தி ல் பொ ங்க
 அவனை வெளியேற்றினேன் நல்ல விதமாக.

Wednesday, November 18, 2015

பகற் கனவு.

சடுதியில்  ஒரு திருமணம்
 படைப்பின் காரணமாக
 பாம்பின் வரவு  அனுகூலம்
கனவிலும் நனவிலும்  தோற்றம்
 கை கூடியது மங்களம்
 இன்று என் வீட்டில்
 நாளை  உனதில்
 மறு நாள்  என்தில்
 என்று பெருமை பேசும்
அலமேலு  வளமுடன்   காண்கிறாள்
 பகற்  கனவு.

விழுந்த மழையோ மிக அதிகம்

விழுந்த மழையோ  மிக அதிகம்
 விணானதோ  அதை விட அதிகம்
 மிண் டும் தண்ணீருக்கு கெஞ்சல்
 இன்னும் கொஞ்ச நாட்களில்
 தொடரு ம் இந்த அரசியல் விளையாட்டு
 பணத்தின் திருவிளையாடல்  

Tuesday, November 17, 2015

தந்தை தாய் என்று பாராமல்

தந்தை தாய் என்று பாராமல் 
 பேசினான் வாய்க்கு வந்த படி 
 அநாகரிகமாக அல்ல 
 நாகரிகமாகச்  சாடினான் 
 காரண மே  இல்லாமல்.
பேசட்டும்  முடிந்தவரை
 சாடட்டும்  முடியு ம் வரை 
 நோகட்டும் வேண்டிய வரை 
 பொறுக்கும் தன்மை வேண்டும் 
 அவனைப பெற்றவர்களுக்கு 
 ஏகமாக இருக்க இன்னும் நிறையவே 
 வரமாக அளித்தல்  வேண்டும் 

.

 
 

Sunday, November 15, 2015

எமகாதகன் எமனிடம்

களவாடினான்  கொள்ளை கொள்ளையாக
 தனக்கு  தனக்கு மட்டும் என்று
 பகிர்ந்தளித்தான்  தன்  பிள்ளைகளுக்கு
 ஏமாற்றினான் தம்பி களைச்  சுளையாக
 தம்பிகள் மறுக, அழுக , அர ற்றசிரி
 அவன் நமுட்டுச் ப்புடன் நோக்க
 காலன் வந்தான் சடுதியில்
 வீசினான் கயிற்றை
 சுருண்டான்  எமகாதகன் எமனிடம்
 காலனுக்கே பொறுக்கவில்லை போலும் 

Saturday, November 7, 2015

செதுக்கினான் உளியை

செதுக்கினான் உளியை
 வடித்தான் சிலையை
 அருமையாகத்   திகழ்ந்தது
 அதித  அழகாக
 அற்புத வடி வமாக
 தெய்வப்  பொலிவொடு
கண் கொள்ளாக்  காட்சியாக

  

திருமண ஆசை

காலம் கடந்த பிறகு
திருமண ஆசை
 கொடி  கட்டி பறக்கிறது
  ஓடி ஓடிச் சென்று
பதிகிறான் வேகமாக
திருமண  சேவை  மையத்தில்
 பதில் வரவில்லை இன்று வரைக்கும். 

மனம் வெதும் பியது

செய்த உதவிக்கு
 பலன் எதிர்கொள்ளவில்லை
 நன்றியை நோக்கவில்லை
 நிராகரிப்பு கிடைக்க
மனம் வெதும் பியது

Tuesday, November 3, 2015

என்ன ஒர் எதிர்பார்ப்பு.

காலைப்  பொழுதிலே 
 கதிரவன்  தோன்றும்   வேளையிலே 
பறவைகள் எழும் பொழுதிலே 
ஒரு அலை பேசியின் அழைப்பு 
 பதறிக் கொண்டு எடுத்தப்  போது 
 தவறான அழைப்பு என்று துண்டிக்கப்  பட்டது 
 என்ன ஒரு பரபரப்பு !  என்ன ஒர்  எதிர்பார்ப்பு.

Sunday, November 1, 2015

அண்ணனும் தம்பியும்.

பின் தொடர்வதே பழக்கம் 
 இருவரும் கை கோர்த்துக் கொண்டு 
 என்ன மகிழ ச்சியோ ! 


புற ங் கூறு வதே   தொழில்  
இருவரும் அதிலும் ஒற்றுமையாக 
 என்ன நினைப்பிலோ !.

யாரையும் பற்றி அல்ல 
 கூடப்  பிறந்தவனைப் பற்றி 
 ஏன் தானோ !

 அவனின் அழகைக் கணடு  பொறாமை 
 அவனின் இயல்பை  அறிந்து கடுப்பு 
 அவனின் செல்வாக்கைக் பார்த்து  ஆத்திரம் .

பின் தொடர்ந்து புற ங்  கூறி   பழித்துப் பேசி 
 நேரத்தையும் பொழுதையும் 
 ஆண்டா  ண்டாகக் கழித்து
 வாழ் கி றார்கள்  அண்ணனும்  தம்பியும். 



என்ன நியாயமோ

தாயும் அணைக்கவில்லை
 தந்தையும் கண்டு கொள்ளவில்லை
 வாய் மூடி மௌனம் காத்ததற்கு  பலனோ
 எதிர்த்து ஆடினவளுக்கு கரிசினம்
அமைதி காத்தவளுக்கு விமர்சனம்
 என்ன நியாயமோ
 என்ன தர்மமோ


Saturday, October 31, 2015

வணங்க வேண்டியவன்.

கடலினும் மாணப் பெரிது
 மனதில் நிரம்பி வழியும்  
 அன்பு.

மலையிலும் மிகப பெரிது 
மனித  நேயம்  ததும்பும் 
மனம்.

வானிலும் சாலச்   சிறந்தது 
 சக மனிதனை மதிக்கும் 
எண்ணம். 

அன்பு செலுத்தவது எளிதல்ல 
 மனி த  நேயம்   கிடைக்காது 
மதிக்கும்  எண்ணம்  வராது.

மூன்றும் ஒருங்கே பெற்றால் 
 மனி தன தெய்வம்   போன் றவன் 
வணங்க வேண்டியவன்.

எல்லாம் பணத்துக்காக

விரட்டி விரட்டி செல்கிறான்
 எங்கு சென்றாலும்
 எதற்காக   என்று நினைத்தால்
 எல்லாம் பணத்துக்காக
 பணம் என்றால் மனம் மாறும்
 மனம் மாறினால் பணம் தடுமாறும்
 தடுமாறினால்  திருடு நடக்கும்
 திருடு என்றால் மோசம் செய்வது
 மோசம் பண்ணினால்  குடு ம்பம்
வளராது  புல் பூண்டு கூடத் தக்காது 

Thursday, October 29, 2015

வேறுபாடு ஏனோ ?

காற்றிலே ஆடியது மரம்
சாய்ந்து  சாய்ந்து ஆடியது
 பார்க்க பரவசம் மிகுந்தது

 மனமும்  சில கணங்களில்   ஆடுகிறது
 விரைந்து விரைந்து ஆடுகிறது
 பார்க்க பதற்றம் மிகுந்தது.

ஆட்டம் ஒன்றே தான்
 சாய்ந்தும் விரைந்தும்  ஆட
ப ரவசம் ஒன்றில் தோன்ற
பதற்றம் மற் றோன்றில்  காண
வேறுபாடு ஏனோ ?

Wednesday, October 28, 2015

பவள மல்லி

பவள மல்லி  ஓர் அழகு
 பவள நிறக்  காம்பும்
 வெள்ளை நிற மலரும்
 மிருதுவான் இதழ்களும்
 தொடும் போதே ஓரு  லயிப்பும்
மனதை கொள்ளை கொள்ள
 குனிந்து பொறுக்கினேன்
 ஒன்று ஒன்றாக
 எனது பூக் குடலையில்

Sunday, October 11, 2015

கனவிலும் நினையாதுது பல

கனவிலும் நினையாத ஒன்று
 நினைவில்   வந்த போது
கலங்கியது மனம்
கையைப் பிசைந்து  கொண்டு
 நின்ற போது
 சட்டென்று அடித்தது    முகத்தில்
ச்மாளித்துக்  கொண்டு  \
எழுந்த போது
கால் இடறியது ஏறக்குறைய
 நட வாதுதெ ல்லாம்  நடந்தது
கனவிலும்  நினையாதுது  பல  

காட்டிலே தீ

காட்டிலே தீ பரவி
 புகை சுற்ற
 யாருக்கும்  பாதிப்பு இல்லை
 ஊரிலே நெருப்பு தோன்றினால்
 அனைவரையும் எரி த்துக்  கொல்லும் 

Wednesday, October 7, 2015

மழை

மழை பூத் துவலாக த்   தூவ 
கதிரவன் சட்டென்று மறைய 
 மலர்கள் சிற குகள்  போல்  தெறிக்க 
அங்கு ஓர் அதிசயகே காட்சியை 
கண்டு மகிழ்ந்தோ ம்  

 

சினம் கண்டேன்

சினம் கண்டேன்
சினமே கண்டேன்
கண்ணில் குருதி
சொல்லில் வெப்பு
கண்டேன்  கே ட்டேன்
மனம் பொரும
நிற்கிறேன்
என் நிலயயை  நினை ந்து 

பொன்னான வயிறு

பொன்னான  வயிறு
 பூவாக மலர்ந்து
அழகாக  விரிந்து
சுகமாக  நிரந்து
 இன்று
சுருங்கியது ஏனோ 

Tuesday, October 6, 2015

செம்மொழி.

நெடிலும் குறிலும் நிறைந்த மொழி 
 வல்லினம் மெல்லினம் இடையினம் 
 என்றும் பகுத்துப்  பயிலும் மொழி 
 லகர னகர வேறுபாடுகள் காணும் மொழி 
 தமிழ் மொழி என்ற செம்மொழி.

Saturday, June 13, 2015

வேண்டாததை எல்லாம் நி னைத்து.

சற்று நேரம் கூட பொறுக்க  முடியவில்லை
 மனம் துடடிக் கிற து முடிவைத் தெரிந்து கொள்ள
 ஏன்னா வாயிருக்கும் என்று மனம் கொந்தளிக்க
  கண்கள் பட படக்க  பதறி  நிற்கிறேன்
முடிவு பாத கமாயின்  என்னவெல்லாம்  ஆகும்
 நினைக்க முடியவில்லை
நைந்து போனேன்  வேண்டாததை எல்லாம்  நி னைத்து.

Friday, June 12, 2015

மீண்டும் தொந்தரவு.

திருப்பித்  திருப்பி தொந்தரவு 
இழுத்து இழுத்து வம்பு செய்து 
தள்ளத  தள்ள நெருங்கி 
 விட்டு விலகி ஓட விழையும்  
மனதை நிறுத்திப் பிடித்து 
 சலனம் களைய  விரும்பும் போது 
மீண்டும் தொந்தரவு.

 
 

Tuesday, June 9, 2015

கொள்ளை அழகில்

வந்தேன்  வெகு முயற் சியுடன்
 கண்டேன் இன் முகத்தை
ஆழ்ந்த  சிந்தனையில்
 புன்முறுவல் பூக்க
 எண் ணு ம் எழுத்தும்
விரல்களிலே  என்பதுக்கேற்ப
 சாய்ந்து ஆடிக் கொண்டிருக்கும்
 குழந்தை மீனாட்சி யின்
கொள்ளை அழகில்
 ததும்பிய   நிறைவிலே.
  

கண்ட மேகம்

மப்பும் மந் தாரமாக
 கண்ட மேகம்
 மழை பெய்யும் என்ற நோக்கிலே
 கண்ட மேகம்
இருட்டும் இடியும் என்ற எண்ணத்திலே
கண்ட  மேகம்
பளி ரெ ன்ற  மின்னலை  தோற்றவித்த
  விரிந்த மேகம்
 எல்லாவற்றையும்  ஏமாற்றி இன்று
  பலபல என்று  விடிய
 கதிரவன் தன கதிர்  வீச்சை வீசினான்
 வேகமாக.

வராது போனேன்

வராது போனேன்  ஒரு மாதமாக
 எங்கும் செல்லவில்லை
 ஏன்  வரவில்லை
 மாற்றங்கள் வலை  தளத்தில்
 பல  முறை மறை ந்தும் தோன்றி யும்
 மீண்டும் கண்டும் காணாமலும்
 சென்ற என் தே ன் துளிகள்
இன்றி மறையாமல்  வந்து நரக
 தொடுங் குகிறேன்
 என் எழுத்துப் பயணத்தை
தாய் மொழி வாயிலாக.

Tuesday, May 5, 2015

கை நிறைய

சித்திரை அப்பன் தெருவிலே
 சித்தரை பிள்ளை விரட்டுவான் 
 அப்பனையோ தம்பியையோ 
 தெரியவில்ல புரியவில்லை 
 அப்பனைக் கை கொண்டான் 
 எவ்வழியில் புலப்படவில்லை 
நியாயம் இல்லா  வழியிலே 
 அப்பனை வசப்படுத்தினான்  
மந்திரமோ தாரமோ 
 எதோ  அறிய முடியவில்லை 
 தம்பியை கைக்  கொள்ள  
இயலவில்லை  
 பதிலாக சொத்தைக் கொடுக்காமல்  
 இழுத்தடித்தான்  வழக்கு விளக்கு 
 என்ற முறையிலே 
 இறுதியில் தவிக்கிறான்  தற்போது
உடல் உபாதையால்    மொழி வழக்கு 
 தெரியாமல்   அதிகாரம் புரியாமல் 
 மூ ட்டைக்  கட்டுகிறான்  
 முடித்துக்  கொண்டு  
 திரும்பிகிறான்  கை நிறைய 
 பணத்தோடு..




Thursday, April 30, 2015

கண்ணில் நிற்கும் அழகு

 கண் கவர் அழகு
 கண்ணில் நிற்கும் அழகு
 மதிக்கும் விதம் அலாதி
 தன்னம்பிக்கை  மிகை
உயர்வான சிந்தனை
 உன்னதம்மன் நினைப்பு
 அளந்து பேசும் ஆற்றல்
 அதிர்ந்து பேசாத  அடக்கம்
 தனது வேலை தான் உண்டு
 சிறப்பான் ஈகை
 இர க்கம்  கனிவு
 என்று வாழும் பெண்ணை
 நிந்திக்கிறான்  ஒரு பாமரன்
 பட்ட மரம் துளிர்  விடுமா
 அறியாதவன் தெரிந்து கொள்ள
 முற்படுவானா ?


 


Wednesday, April 29, 2015

கலகி வருவான்

கலியுகத்தில் கல்கி வருவான்
 அவதாரத்தின் கடைசி
 வருவான் என்ற போது
 வர வேண்டும் இப்போது
 கலி முற்றி  அநியாயம்  பெருக
அரசியலில் பல  பழி ப்புக்கள்
 ஆன்மிகத்தில் பல களிப்புக்கள்
தொழிலில்  பல விதர்ப்புக்கள்
குடும்பகளில்   பல் அக்கி ரமங்கள்
 ஊழல்கள்  ஊதாசினங்கல் மல்க
 கலகி வருவான் எ ன்ற எதிர்பார்ப்பு
 ஓங்கி  நிற்க காத்து காத்து
 பூத்துப் போகின்றன கணகள்

Saturday, April 25, 2015

நினைந்து உருகி

நினைந்து உருகி
கசிந்து கண்ணீர்  மல்கி
 கை தொழுது நின்றாள்
 இறைவன் முன்னே

அவன் எப்போதும் போல்
சிலையாக  நின்றான்
 கையில் அபய  முத்திரையுடன்
 அவள் முன்னே

விசும்பினாள் விம்ம்னா
 கதறினாள்  மனச்  சோர்வோடு
அசைந்தான் முழு முதற் கடவுள்
 அருள் பாலித்தான்.

கண் துடைத்தாள்  புறங்கையால்
முடியை அள்ளி முடித்தாள்
 ஒரு வினாடி  நோக்கினாள்
 இறை வன் வழி  விட்டான்.
   

Thursday, April 23, 2015

வெட்க்மேயி ல் லாமல்

வாழ்ந்தான் இராமன்
எவ்வாறு
 ஈ சனின் அருளால்
 என்றால்
 எவ்வாறு
 சேவை என்பான் இராமன்
சேவை என்றால்
 ஒரு கழகப் பணியில்
 என்பான்
எவ்வாறு
அதில் ஒரு பொறுப்பில்
 என்பான்
 எவ்வாறு
செயலர்  பொருளாளர் என்று
எவ்வாறு
 பணி செய்வது என்பான்
 பணி  என்றால்
 பங்கு வைப்பதில்
 உண்டியலில், கட்டட செலவில்
போக்குவரத்தில்
 ஆண்டு தோறும்  சில பல
 லட்சங்கள்
 சுருட்டி  வட்டிக்கு விட்டு
வாழ்கிறான் இராமன்
அமோகமாக.
தொண் டன்  என்று
வெட்க்மேயி  ல் லாமல்




Monday, April 20, 2015

பேதை

கை கொடுப்பார் யாரும் இல்லை
 சமை கொடுப்பவர் பலர் இருக்க 
 பேந்த பேந்த முழிக்கிறாள் 
 பேதை 
கையில் குழந்தையுடன் 
 வயிற்றில  சுமையுடன்.

மயங்கவும்

பாட்டிலே  ஒரு இனிமை
 அதில் ஒரு தனிமை
 அதில் ஒரு வலிமை
 ஒரு தனித்துவம்
 ஓர் இன்பம்
 கேட்பதில் ஒரு  தித்திப்பு
 மனதில் ஓர் ஈர்ப்பு
கிறங்க வைத்தப் பாட்டு
 மயங்கவும் வைத்தது.

Sunday, April 19, 2015

கலந்தது சோகம் .

சோகம் கண்டேன்  முகத்திலே
கண்ணிலே துளிர்த்த  கண்ணி ரிலே
 துடிக்கும் உதடுகளிலே
நடுங்கும் விரல்களிலே
 வாடிய  வதனம்
 வதங்கிய தோற்றம்
 மிறிய சிரிப்பிலே
 கலந்தது  சோகம் .

Tuesday, April 14, 2015

சிறு சிறு தொந்தரவுகள்

சிறு சிறு தொந்தரவுகள்
கட்டுக்கடங்காமல்
 தொல்லைப் படுத்த
 மனம் வெதும்பினாள்
 பெரிய இடிகளைத்
 தாங்கிக் கொண்டவள்
 நிலை குலைந்து நிற்கிறாள்
 சிறிது என்று நினத்தது
 பெரிய முள்ளாக
 தைக்கும் பொது
 வேதனை மிகவாகிறது.
 

சாலச் சிறந்ததது

போனவன் திரும்பினான்
 பூ மண த்தோடு
 எதற்குப் போனான்?
 ஏன் திருபினான்?
அவனுக்கே தெரியாது
 பிறகு அல்ல
 மற்றவர்களுக்கு
 அன் அப்படித் தான்
என்று முடிவெடுக்க
 அவன் வேண்டுமென்றே
 என்று புரியம்  போது
 அவனை விட்டு
 விலகி நிற்பதே
 சாலச் சிறந்ததது


Monday, April 13, 2015

வந்த படி

வாய் வந்த படி பேசும்
 பேசினால் விபரிதம்
 கண் விரும்பியபடி பார்க்கும்
 பார்த்தால்   அநாகரிகம்
கால் தோன்றியபடி நடக்கும்
 நடந்தால்  துன்பம்
 கை நினைத்தபடி  எழுதும்
எழுதினால்   துயரம்
 யாவற்றையும் அவை
 நினைத்த படி விட்டால்
 கலக்கம் விஞ்சும்
கலகம் மி ஞ்சும்

   

Saturday, April 11, 2015

காதோடு ஒரு செய்தி

காதோடு ஒரு செய்தி 
 காற்றோடு வந்தது 
 காதிலே விழுந்தது 
 காற் றோடு  கலந்தது  
காதோடு நில்லாமல் 
 காற்றோடு போனது 
 காதுகள் பல கேட்டன 
 காற்று ஊ தியது 
காதுகள் புடைத்தன
காற்று பற்றிக் கொண்டது 
காதோடு  வந்து 
 காற்றோடு பரவி 
 கொழுந்து விட்டு எரிகின்றது.

வலியோடு வலி

 காலிலே  வலி
வி ண் வவி ண் என்று
 எழுந்தால் வலி
 உட்கார்ந்தால்  வலி
நடந்தால் வலி
படுத்தால் வலி
 எந்நேரமும் வலி
 தாங்க வில்லை  வலி
 வலியோடு வலி  

Wednesday, April 8, 2015

பல முறை

படித்தான் பல முறை
மனதில் ஏறவில்லை
படித்தான்  பல முறை
 புரியவில்லை
படித்தான் பல முறை
 என்ன  என்று தெரியாமல்
 படித் தான் பல முறை
புரியாமல்
தெரியாமல்
பல முறை
 பல முறை

  

தொடருகிறது பயணம்


    கையிலே   ஒரு விளக்கு
 மனதிலே மிக  இருட்டு
 வெளியிலே  பளபளப்பு 
உள்ளே ஒரே அழுக்கு
முகத்திலே ஒரு மினுமினுப்பு
மனதிலே துரு  வும்  களும்பும்
 பேச்சிலே ஒரு  நடிப்பு 
எண்ணமெல்லாம்   பிசகு
 இவ்வோரும் வாழ்கிறார்கள்
 எல்லாவிடத்திலும்  பெருமையாக
 எதிலும் எப்போதும்
 நிரவலாக
 எங்கும் பங்கிலும்
 நெருடலாக
 நி னைத்த லும் நினைப்பிலும்
 முள்ளாக
தொடருகிறது பயணம்
ஏற்றத்துடன்
 

கபட நாடகத்தை

நேர் முகம் நிறைந்த முகம்
 புற முகம்  வெந்த முகம்
 நேரிலே  நியாயமானவன்
 புறத்திலே  அநி யாயமானவன்
கண்களிலே ஒரு பாவம்
 மனதிலே ஒரு வெறுப்பு
போக்கிலே  ஒரு நடிப்பு
 காட்டும் துடிப்பு
 வாழ்கிறான் அவனும்
 இரட்டை வாழ்க்கை
 உலகுமும் நம்புகிறது
 அவனின் வேடத்தை
கபட நாடகத்தை 

Saturday, April 4, 2015

ஒரு தேவன்

தன்  தேவை முதல்  
தானே முதல் 
 தான் செய்வது சரி 
 தான் இடறினால்
 அது விபத்து 
 தான் கோ பப் பட்டால் 
 அது  நியாயம் 
 தான் ஒரு  நீதிமான் 
 தனக்கு  வலி வந்தால் 
 அது ஒரு பெரிய வலி 
 மொத்தத்தில் தான்  
ஒரு தேவன் என்ற நினைப்பு.
 
 

Thursday, April 2, 2015

தா யும் மகனும்

நினைந்து உருகும் தாயைக்  கண்டேன்
 வெறுத்து ஒதுக்கும் மகனையும் கண்டேன்
தாயின் கண்ணில் பாசம் ஒளி யூட்ட
 தனயனின் கண்ணிலோ கோபம் உமிழ
 இரு துருவங்களாக இருவரும் நிற்க
 குழம்பி னேன் அவர்களை நோக்குங் கால்
 எங்கோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது
 தா யும் மகனும் மறை க்கிறார்கள்
 காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
 காலம் கனியும் மாற்றம் உண்டாகும் .

சொக்கேசன்

காலனை எட்டி எட்டி உதைத்தான்
 ஆடல் வல்லான்
 காலன் திமிறி திமிறி முண்டினான்
 விடவில்லை அவனை
 தள்ளினான் புரட்டினான் விரட்டினான்
  ஞா ன்க்கூத்தன்
 இருந்தும் துள்ளிப் பார்த்தான் காலன்
சொக்கேசன் விட்ட பாடில்லை
 ஒரே மிதி மிதித்தான்
 காணாமல் போனான் காலன்.
  

Wednesday, April 1, 2015

கனவுகள் நனவாகுமா

கனவுகள் நனவாகுமா
 என் விருப்பாம் அதுவல்லவே
நினைவுகள்  பல
விருப்பங்கள்  நிறைய
எல்லாம்  நடந்தால்
 பூவுலகம் தா ங்காது
மனிதனின் கால் பாவாது
 பற ப்பான்   ஆகாயம்   வழியாக
 பரவுவான் விண்ணிலே
தாய் மண்ணை மறந்து விடுவான்
 வெகு வேகமாக.

தன கையே தனக்கு உதவி

கதவு திறந்து இருக்க
 உள்ளே ஒரு நிசப்தம்
 யாரும் கண்ணில் படவில்லை
 எங்கும் ஒரு அமைதி
 நிதானித்து  நோக்கில்
ஓசை என்பதை வெறுக்கும்
 ஒரு குடு ம்பம் போல்
 தன வேலை தா ன உண்டு
 தன்னால் முடியும் என்ற
 ஒரு விழிப்பு
 தன கையே தனக்கு உதவி
 என்ற சிந்தனை
 போற்றுவதற்குரிய
 பெருமைக்குரிய  நினைப்பு.

Tuesday, March 31, 2015

கொடுப்பினை யை நினைந்து

மண் வாசனை  ஈர்க்க
 வாசலில் நின்றேன்
கரு முகில  சூ ழ
வானம்  இருள
 குளிர் காற்று வீச
 சொட்டு சொட்டாக
மழை  வடிய
வெகு நாட்கள்
 தவம் கை கூட
மகிழ்ந்து நின்றேன்
 இயற்கையின்
 கொடுப்பினை யை
 நினைந்து 

சாடி நோக வைப்பது

கோபமும் தாபமும்
 செல்லும்  இடம் தான்
எல்லா இடத்திலும் அல்ல
 கண்ணிலே குரோதம்
 சொல்லிலே எரிச்சல்
 திருப்பும்  அடிகள்
 யாதும் யாவும்
 ஒரே நோக்கில்
 காரணம்  புரியாமல்
சாடி நோக வைப்பது
 எதற்கோ? 

Monday, March 30, 2015

எழு பத்து ஆண்டுகளாக

வரவிலும் செலவிலும் கணக்கு
 வரவு தன  தம்பியிடமிருந்து
 செலவு தனக்கும் தன மக்களுக்கும்
 கணக்கு முடிந்தது அவனுக்கு
எழு  பத்து ஆண்டுகளாக

ஆனந்தத்தையும் கவலையும்

பாடலிலே இன்பம்
 கு ரலிலே துள்ளல்
பார்வையிலே  மினு மினுப்பு
கண்டேன் மகிழ்ந்தேன்.


பாடலிலே  சோகம்
குரலிலே தொய்வு
 பார்வையிலே தளர்வு
கண்டேன் துணு க் குற் றேன்.

பாட்டிலே கண்டேன்
ஆனந்தத்தையும்  கவலையும்
குரலில் கண்டேன்
 விகிதமான விளைவுகள.

காட்டிக் கொடுத்து விடும்
கண் களும்   குரலும்
கண்ணீரிலும்  கலங்களிலும்
விக்கலிலும்  தொக்கலி லும்.


இன்பமும் துன்பமும் மாறி மாறி
 சிரிப்பும் அழுகையும் திரும்பத் திரும்ப
வந்த நேரத்தில் சற்று நிற்காமல்
 வந்து போய் க் கொண்டிருந்தன


Sunday, March 29, 2015

வாழ்கிறேன் வாழ்வதற்காக

மனதிலே ஒரு வெறுப்பு
 மனதிலே ஒரு சலிப்பு
 என்ன தான் செய்தோம்
 என்ன தான் செய்யவில்லை
 இருந்தாலும் ஒரு நெருடல்
 எவ்வளவு நாள் என்ற  ஒரு நொடிப்பு
எத்தனை   எத்தனை என்ற ஒரு கடுப்பு
 இருந்தும் வாழ வேண்டிய  சூ ழல்
வாழ்கிறேன்  வாழ்வதற்காக !

பொ ட்டு வைத்த முகம்

பொ ட்டு வைத்த முகம்
இன்று  காண்ப் தில்லை
 காலணா அளவு
நல்ல சிகப்பு
  வட்ட வடிவு
குங் குமம்  நிறைய
செம்மை நிறைந்த
 முகம் எவ்வயதிலும்
நாணம் படர ,
 மதிப்பு மிக்க வரை
 காண்பது அரிது
 கண்டேன் இன்று
ந ம்முரில் இல்லை
 கனடாவிலும்.ஆஸ்டேரே லியாவிலும்
 அமெரிக்காவிலும்  எங்கு சென்றாலும்
அவள் முகத்தில்   மிளிரும் குங்குமப் பொட்டை 

தாமரை மணாளன்

யோகங்கள் பெற
 யாகங்கள் வளர்த்து 
 வயது கூட
 அர்ச்சனைகள் செய்து
 பீடை கழிய 
 ஆடைகள் கொடுத்து  
 அட்டாகசமாக வாழ
 அன்னதானம் அளித்து
 வாழ்வில் சிறக்க 
 தர்மங்கள் செய்து 
வாழ்ந்தான்   தாமரை மணாளன் 
 மனம்  முழுக்க   கெட்ட எண்ணம் 
செய்கைகள் யாவும் கெடுதி 
ஒன்றை ஒன்று  நிறைவு செய்ய 
 பட்டென்று  போனான் 
 வயதாகாமல், யோகம் பெறாமல்,
பீடை கழியாமல்   தாமரை மணாளன் .

Friday, March 27, 2015

மருகுகிறேன்

பாடிக் கொண்டிருந்தேன்
குரல் கம்மியது
மேல் நிலையில்   எட்ட முடியாமல்
 சறுக்கியது  நழுவியது
 முயன்றேன்  பல முறை
 அடைய முடியவில்லை
 எளிதாக  மேலும் கீழு ம் சென்ற  குரல்
இன்று பாதியிலே நிற்கிறது
 தள்ளாடுகிறது கட்டாயமாக
 மருகுகிறேன் பாட முடியாமல்

Thursday, March 26, 2015

மா பாவிகள்

ஊருக்கு அவன் உபகாரி
 பங்குடையவனின்  பாகத்தை
 கணக்கு ஏதுமில்லாமல்
 அநுபவிக்கும் மா பாவி

அவனுக்கு ஒரு தம்பி
 அருள் வாக்கு சித்தன்
என்று அ டை மொழி
 நக்கலாக   அவனுக்கு


உபகாரிக்கு ஒரு மனைவி
பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு
தனனை தானே புகழ்ந்து கொண்டு
 திரிகிறாள் தட்டுண்டு போனதை மறந்து

அருள் வாக்கு சித் தனுக்கு
ஒரு மனை வி பல துணைவிகள்
 இங்கு இரண்டு  ஆண்  மக்கள்
அங்கு பல மக்கள்

 உபகாரிக்கு மனதில்
 ஏறவில்லை  படிப்பு
சித்தனுக்கோ  படிக்க
 படிக்க படிப்பு. பலமுறை


அரை குறைப் பேச்சு ஒருத்தனுக்கு
வல்லினம் மெல்லினம்  இல்லா
எ ழுதும் வழி  மற்றவனுக்கு
செம்மையுடன் இவ்வாறு
வாழ்கிறார்கள் அண்ணனும் தம் பியும்
 மற்றவர்களின் வாயிலே  கிடந்தது.


Wednesday, March 25, 2015

குடும்பம் நடத்து கிறான் கோலாகலமாக

கை அகல  வீட்டில்
முழு அகலத்திற்கு
 அடைத்துக்  கொண்டு
 வாழ்கிறான்
 அரை நிர்வாணமாக
  நாகரிகம்  சற்றே இல்லாமல்
 நாசூக்கு என்பதே இல்லாமல்
 காட்டுக் கத்தலும்
திருட்டு  முழியுமாக
 இரு  பத்து  ஆண்டுகளாக
 வாழ்கிறான்
 மற்ற பங்குகாரர்களை
 மறுத்துப் புறக்கணித்து
 ஆனந்தமாகக்   குடும்பம்
 நடத்து கிறான்   கோலாகலமாக 

Tuesday, March 24, 2015

படியாதவ்னும், செவிடியும்

வீடு அகலத்திற்கு
 அடைத்து வாழ்கிறாள்
 ஆண்டாண்டாக
 அவன் முகப்பிலும்
 முதல் கட்டிலும்
 ஒரு நான்கு முழ வேட்டியுடன்
 மேல் சட்டை இல்லாமல்
 அவள் அடுத்தக் கட்டில்
 அடுப்படியிலும்  நடை பழக
 மகனோ அரை குறை பேச்சுடன்
  சாதா மென்று கொண்டு
 குறுக்கும் நெடுக்குமாக
 வளைய வர
 எங்கு இருப்பது
 பொது விட்டிலே
 வாழ்கிறார்கள்
 படியாதவ்னும்,
 செவிடியும்


தாமரை Vs அல்லி

அல்லி மலர் பூத்தது
 தாமரை யினூட
 மந்தகாசமாய் சிரித்தது
 தாமரையைப்    பார்த்து
உன் அழகுக்கு நான் போட்டியா
 என்றது இறுமாப்புடன்
 தாமரை புன்னகை வழிய
 சொன்னது  மெது வாக
உன் அழகு   ஒர் அற்புதம்
செழுமையும் செல்வாக்கும்
 ஒருங்கே கண்டேன்.
 என்னிடம் என்ன இருக்கிறது
 நான் நீர் தேங்கா இல்லை மேல்
 பூக் கிறேன்  மிதக்கிறேன்
 அவ்வளவே
 என்னயும் உன்னையும்
 ஒப்பிப் பார்ப்பது
 சரியே இல்லை  
நீ தான் ஒப்பற்ற அழகு
 நான் ஒரு மிகச்  சாதாரணம்
உள்ளது போல் இருக்கிறே ன்
என்று அமைதியாகக் கூறி யது.
அடக்கம் எங்கும்  பரவும்.
 அடங்காமை ஆரிருள்
உய் த்து விடும்


ஓடுகிறது மனம்

மனதை ஒருமைப் படுத்து
 என்கிற போது  தான்
மனம் ஓடி பாய்கிறது
 எங்கு  எங்கு என்று
இல்லாமல்
இலக்கே இல்லாமல்
வளை ந்து  வலிந்து
புகுந்து ஊடுருவி
 எங்கு செல்கிறதோ
 கட்டுப்படுத்து
 என்ற போது தான்
 வெருண்டு துள்ளி
 ஓடுகிறது மனம்

Monday, March 23, 2015

குறை என்றால்

குறை என்றால் எதிலும்
எ ளிதில்  கண்டு பிடிக்கலாம்
 சிறியதும் பெரிதுமாக
பிறப்பிலிருந்து  சாவு வரை
 துரு வி துருவிக்  காணலாம்
பிறந்த குழந்தைக்கு
 என்ன என்று கூடத் தெரியாது
 செத்தவர் வர்களுக்கோ
 எதுவும் தெரியப் போவதில்ல
  உயிரோடு இருப்பவர்கள்
 குறை கண்டு சண்டை
 பிடித்து பேச்சை  தவிர்க்கிறார்கள்
 

Friday, March 20, 2015

சொல்லிச் சொல்லி

நல்லதுக்கு த் தான் சொல்கிறேன்
 உன்னுடைய நல்லதுக்குத் தான்
என்று சொல்லிச சொல்லி
 செயல் பட விடாமல்
எதுவும் தெரியாத
பேதையைப்  போல
 எதுவுமே புரியாத
 மடந்தையாக
 ஆகிப் போனாள்
 என் அருமைத் தோழி
 மாறிப் போனாள்
 அறிவான சிநேகிதி
 சுறுசுறுப்பும்  சூட்டிகையும்
 நிறை ந்த    பெண்
 இன்று மக்காகிவிட்டாள்
சொல்லிச் சொல்லி

பேச்சும் செயலும்

கடிக்கிற நாய் குலைக்காது
 தெரியாமல் திருப்பி  போட்டேன்
 குலைக்கிற நாய் கடிக்காது
 இரண்டும் பொருத்தம்  தான்
இது  செய்தால் அது செய்யாது
 அது செய்தால் இது செய்யாது
 இரண்டும் ஒருங்கே செய்யும்
 நாயை காண்பது அரிது.
 மனிதனே பேசுபவன் பேசுவான்
 காரியம் செய்யான்
 தெரிந்தது தானே
 பேச்சும்  செயலும்
 பாங்குற  அமைந்தவன்
ஒரு சிலரே .

கண்ட வீ ரியன்

கண்ட வீ ரியன் கத்தினான்
 காது செவிடாகும்படி
 கண்டவனெ ல்லாம் பேசுகிறான்
 கண்டதையும் பேசுகிறான்
கண்ட வீ ரியன்  பல்லைக் கடித்தான்
கடுமையாகச் சாடினான்
 கட்டவிழ த்தக் கோபத்தில்
கைத் தூக்கி அடிக்க  விளை ந்தான்
 அடிக்கும் போது நினைவிழந்தான்
 கண்ட வீ ரியன்

வாழ்ந்து காட்டு மகனே

இன்று இருப்பது நாளை  இல்லை
நாளை உதி ப்பது மறு நாள் இல்லை
 தற்காலிகம் யாவும் என்று கொள்
இன்று ஒரு அறிவிப்பு கோ லாகலாமாக
 நாளை ஒரு மறுப்பு விரோதமாக
 உறு தியில்லாதது   வாழ்க்கை
 வாழும் வரை   நேர்மையாக
 வாழ்ந்து காட்டு மகனே  

Thursday, March 19, 2015

கூலியாக அளந்தான்

கள த்து  மேட்டில் நின்று
 போரடித்தான் கண்ணன்
நெற்  குவியலை  கண்ட
 பெருமிதத்தோடு குவித்தான்
கண்ணன்  ஒரே  அளவாக
விளைச்சல் நன்றாகவே என்று
 நினைத்து விம்மினான்
 கண்ணன் மகிழ்ச்சியாக
 கண்ட பலனை
 கூலியாக அளந்தான்
 கோவிலுக்கு  கொஞ்சம்
 வண்ணானுக்கு கொஞ்சம்
 கொஞ்சம்  தொட்டிக்கு
 என்று அளக்க
 கொஞ்சம்  கொஞ்சமாக
 குறைந்தது நெல்
 மிஞ்சினதா கண்ணன்
 எதுவும்.?

Wednesday, March 18, 2015

ஆத்திரபடுவது

சிறுகச்  சேர்த்து
 பெரு  வாழ்வு
சிறு துளி
 பெரு  வெள்ளம்
 மூர்த்தி சிறிது
கீர்த்தி  பெரிது
 என்று சிறிது
 மிகப் பெரிதாக
 தோன்ற
சிறியவனுக்கும்
 அறிவு  மிகுதியாக
 இருக்க முடியும்
என்று எண்ணு வதே
சிறப்பாகும்
ஆத்திரபடுவது
அழகு ஆகாது


இராமாயணக் காவியம்

இராமயாணம் வால்மீ கியின்  ஆதாரம்
 கதையைச்  சொன்னான் வால்மீகி
 நடந்தததை அவ்வ்வாறே

மெருகு  சேர்த்தான் கம்பநா  ட்டான்
 எதுகையு ம் மோனையோடு
இனிமை வழிந்தோட.

தந்தை சொல்  மிக்க மந்தி ரமில்லை
 தனயன் இராமன் சென்றான் காட்டுக்கு
 தம்பியுடனும் மனைவியுடனும்.


நேற்று அவனுக்கு மூடி சூ ட்டுதல்  என்ப
 இன்று அவன் கானகத்துகுச்  செல்ல
 நிலையாமை நம்மை நிலைகுலைய வைக்க


இராம  காதை  தன அடுத்த   பகுதி தொடங்க
 அறிவது மிகுதி மனிதனின் மனம்
செல்லும் விகுதி அறியாமையை   நோக்கி.

கைகேயின் வரங்கள் மந்தரையின் தூண்டுதல்
 தசரதனின் காதல் கௌ ல்யையின் தவம்
 இராமனின் பலம் யாவும் நெகிழ்ந்து  தொடர

 இராமாயணக் காவியம்  உலகின்  நிகழ்வை
 மானுடனின் இயல்பை நிலவும்   நிலயற்ற
ஆக் கரிமப்பை   வெளிக்  கொணரும் விதமே அலாதி
 

தலை வணங்கினேன்

 மலையைக் கண்டேன் 
 சிகரம் நோக்கினேன்
 ஆதியும் அந்தமும் 
 இல்லா அருட் செல்வம் 
 போல் தோன்ற 
மலைத்து நின்றேன்
 அதன் பரப்பளவைக்  கண்டு 
 கண்ணை வீட்டு அகல மறக்க  
கூவினேன்  பெரிய குரலெடுத்து 
 உன்னின் அழகுக்குக் காரணம் என்ன?
 மலையோ என்னைப் பார்த்து  மெல்ல சிரிக்க 
 அதிக ஒலியுடன் மேலும் குரல் எழுப்பினேன் 
 எ வ்வளவு காலமாக  நீ  இங்கு நிற்கிறாய்?
மலை தொடர்ச்சியோ மீண்டும் பாங்குற புன்னைகைக்க 
 அசந்து நின்றேன் அதன் மேன்மையை  அறிந்து 
 அமைதியும் அடக்கமும் ஒருங்கே இணைய 
 பெருமையும் பேருவகையும் ஒன்றே அமைய 
 பெரியார்களின் மாட்சிமையை எண்ணி 
 தலை வணங்கினேன்  மலையின் அடிவாரத்தில்.


  

Tuesday, March 17, 2015

மகிமை

இறைவன் உன்னுள் இருக்கிறான்
 எங்கும் தேடாதே
 உன்னுள்ளே தேடு
 தெரியு ம் உனக்கு
 அவனின் வெளிச்சம்
 தெளிவாகத் தெரியம்
 அவன் குணம்
 கண்டுபிடி  கவனமாக
 அவனின் மகிமை
 உன்னுடைய உண்மையில் 

வேகம் விவேகம் இல்லை

சொன்னவள் லெட்சுமி
 தனக்கு நி கர் தானே
 ஓர்  இடத்தில் நில்லாள்
ஒரு நிலையில் இல்லாள்
 சாதா ஓடிக் கொண்டு
 ஏதோ  தன்னை  விட்டால்
 ஆளில்லை என்று திமி ரிக் கொண்டு
வேகம்  வேகமாகத்  திரிகிறாள்
 வேகம் விவேகம் இல்லை
 என்று அறியாமல்
செல்கிறாள் லெட்சுமி.


Monday, March 16, 2015

சரியாக வராது

சொன்னாள்  லெட்சுமி
கெட்டிகாரத்தனம்  
சரியாக வராது என்று 
எவளாது   சொல்வாளா 
 அறிவைக்  குறைத்து 
லெட்சுமியின் 
 மதிப்பு அவ்வளவே 
 சூ ட்சமம்  நல்லதல்ல
சாமர்த்தியம்  கெடுதல்  
  கேள்விபட்டிருக்கோமா 
 தெரிந்து கொள்ளுங்கள் 
 லெ ட்சு மியிடமிருந்து 

கெடுதல் செய்தவன்

கெடுதல் செய்தவன்
 கெடுதலையே அடைவான்
கேடு நினைப்பவன்
 கேட்டை அனுபவிப்பான்
இது நான் சொல்வதில்லை
காலம் காலமாக வருவது
அறிந்து  கொள்ளாதவர்களை
என்னே என்று சொல்வது 

Sunday, March 15, 2015

அர்த்த நாரியைப் போல

பாதி தூக்கம் பாதி விழிப்பு
 என்ற கண்  துடைப்பு
பாதி நினவு பாதி மறதி
என்ற நாடக நடிப்பு
பாதி பொய் பாதி மெய்
என்ற வாழ்க்கை விரிப்பு
பாதி செயல் பாதி தள்ளுபடி
என்ற வளர்ச்சிக்  குறிப்பு
 பாதி ஆண்  பாதி பெண்
என்ற அர்த்த நாரியைப்  போல   

காலிலே சக்கரம்

காலிலே சக்கரம்
ஓடுகிறான் அங்கும் இங்கும்
ஓய்வு என்பதில்லை
 எதிலும் ஒரு அவசரம்
 இதைச்  செய்வான் என்று
 நம்ப முடியாது
அதை முடிப்பான் என்று
எண்ண  முடியாது
அரைகுறையாகவே
விட்டு விடுவான்
 யாவற்றையும்
இருப்பினும் ஓடுகிறான்
 எதையோ சாதிக்கப்
 போவது போல்.


கண்களி ன் வழியாக

சென்ற பொழுது கண்டேன்
 பெரிதும் சிறிதுமாக
 ஒரு மனிதனின் பார்வையை
 கண்களே மனதின் கண்ணாடி
 அன்பைக்   காண  முடியும் ஒரு நோக்கில்
கண்களில் ஒரு கனிவு  தெரியும்
 பண்பைக்  கண்டு பிடிக்க முடியும்
 கண்களின் வழியாக ஒரு ஆதரவு
கோபத்தை அறிய முடியும்
 கண ல் தெறிக்கும் விழிகளிலே
கண்களின் வாயிலாகத்   தெரிய வரும்
ஆத்திரமும்  அதிகாரமும்
 கண்களி ன் வழியாக  வாயில் திறக்கும்
கூடவோக் குறைவாகவோ

Friday, March 13, 2015

வாழ்கிறான் அவனும்

வாழ்கிறான் அவனும்
 ஏமாற்றிக்   கொண்டே
 அறியாதவன் அவன்
என்பது அறிவு   சற்றும்
 இல்லாதவன் என்றே கொள்
ஏமாற்றுபவன் எவ்வாறு \
அறிவில்லாதவனாகி  இருத்தல்
 என்று நீ விழி க்கலாம்
 அது  அப்படியே
 கணக்கு பொய்
 வழக்கு வெட்டி
 நாணயம்  இல்லை
 நன்றி இல்லை
 இல்லை என்பதை அடுக்கலாம்
அவனிடமும் உண்டு  சில
 அரைகுறை  பேச்சு
 அடித்துப் பேசுவது
 திருட்டு  அமோகமாக.
வாழ்கிறான் அவனும்
 இப் பூவியிலே

Thursday, March 12, 2015

சம அறிவு சம நிலைமை

வளர்ந்தேன்  செல்வத்தில்
கடும் சொல் கண்டறியேன்
 பள்ளியில் சிறந்த மாணவி
 கல்லூரியிலும்   அவ்வாறே
 புகுந்த இடத்தில்
 தேவையில்லாப்    பேச்சு
வன்மம் மிகக் கண்டேன்
 பொறுத்துக் கொண்டேன்
 என் குழந்தைகளுக்காக
 சம அறிவு  சம நிலைமை
 இருந்தால் கவலைக்  கொள்ள  வேண்டும்
 எதுமே இல்லாத போது
 ஒதுங்கி ஒதுக்கி வாழ
 பழகிக் கொண்டேன் 

Wednesday, March 11, 2015

செயலற் றவள்

நான் ஒரு செயலற் றவள்
 செயல் திறன் இல்லாதவள்
 என்று நினைகிறார்கள் சிலர்
 செய்வதை சொல்வதில்லை  நான்
செய் ததையும்   சொன்னதில்லை
 முடிந்ததை முடித்துக்கொடுத்து
 முடியாததை தவிர்த்து வாழும்
 என்னை ச்செயல ற் றவள்
 என்கிற போது   மகிழ்வு  அடைகிறேன்
 என் செயலாக்கத்தை எண்ணி.

பூக்காரி

பூக்காரி வந்தாள்  தினமும்  
பூக்  கொடுத்தாள் சில தினம் 
பணம் கேட்டாள்  பல தினம்  
 வாங்கினேன் பூ சரத்தை
 கொடுத்தேன் தொகையை   
பின் பூவைவிட பானம் அதிகம் கேட்டாள் 
பாவம் என்று எண்ணி கொடுத்தேன் 
அதையே வழக்கமாகக் கொண்டாள்
 பார்த்தேன் சரியாகத் தோன்றவில்லை 
 நிறுத்தினேன் பூ வாங்குவதை அவளிடம் 
 உதவி சில நேரத்தில்  தொல்லையாகி விடும்   

செய்தி ஒன்று சொன்னான் சேதுராமன்

செய்தி ஒன்று சொன்னான்  சேதுராமன்
சேர்த்துச் சொன்னான்  சேது
 குறைய அல்ல நிறைய வே அடுக்கினான்
சொல்லும் போது து விசனப்பட்டான்
 அதே நேரம் சிரிக் கவும் செய்தான்  சேதுராமன்
பாவனையும் செய்தியும் பொருந்தி வர
 நாடகமாகவே நடித்துக் காட்டினான் சேது
 இராமர் கதை போல் நீண்டு
 அனுமார் வால்   போல் நீளமாக
 இலக்கியம் படைத்தான் சேதுராமன்
 இராமன்  பாலம் அமைத்து இலங்கை சென்றான்
 சேது ராமனோ  சொற்களால் இணைத்தான்
 மொடடை த் தலையையும்  முழங்காலையும்
கேட்க நன்றாகவே இருந்தது
கேட்டேன் முழுவதையும் இணக்கமாக

Tuesday, March 10, 2015

பரிணாமம் கண்டேன்

ஆறிலும் அழகு 
 அறு பதிலும் அழகு 
 வயது கூடக் கூட
அழகு மிளர
 வயது ஏற ஏற 
 மனம் மிளர 
 வயது போகப் போக   
அறிவு  மிஞ்ச 
 வயதும் அனுபவமும் 
 ஏறக்குறைய  வளர 
அழகும் அறிவும் 
 முழுமை அடைய 
 ஒரு மேலான 
 பரிணாமம் கண்டேன் !
 


ஆறு மருமகளும் அழகு

ஆறு மருமகளும் அழகு
 பெரியவள் இரண்டுக்கும் இடையில்
 அழகுக்கும் பொறுமைக்கும்
 இரண்டமவளோ   குமரி  போல
 சிரிப்பும் சிணுங்கலும்
 கமலம் போன்ற மூன் றாமவள்
 செந்தாமரை மலர் ஒத்தவள்
 அமர்த்தலான் அழகு  நாலாவதாக
 வந்த பெருங்குடு ம் ப ப் பெண்
 அறிவ சால் தகைமையு டன்
 அட்டகாசமாக  பேசும்  அடுத்தவள்
 அழகுக்குச்  சிகரம் என்று பெருமைக்
 கொள்ளும்  ஆக இளையவள்
 என்று பெருமிதம் கொள்ளும்
பிள்ளைக் குட்டிக்காரக் குடும்பம்
கண்டேன் அடிக்கடி  பல முறை
 வியந்தேன் தற்பெருமையைக்  கண்டு.


   

நினைந்து நினைந்து

தந்தையும் தாயும்  ஒரு நேரத்தில்
மனைவியும்  பிள்ளைகளும் சில நேரத்தில்
மனிதன் தனக்குத் தானே எல்லா நேரத்திலும்
நினைந்து நினைந்து  வாழ வகை காணின்

Sunday, March 8, 2015

எங்கு கேடபது

பாட்டைக் கேட்டேன்
 பாட்டு என்றவுடன்
 இசை என்று கொள்ளாதே
 இசை மட்டும் அல்ல
  வயிற்றுப் பாட்டு
 முதலில் தோன்ற
 அறிந்தேன் பலரின்
 துன்பத்தை   வயிற்றுக்காக
 அலையும்  பாடு
 உழைக்கும்  பாடு
 நினைத்துத்  துவள
அதற்கு மேலும்
உடலால் படும் பாடு
 நோய் வந்து அழுத்தும்
வலி வந்து படுத்தும்
அதை எண்ணின்
 கண்ணிர்  தளும்பும்
மேற்கொண்டு
 மன வேதனை  அளிக்கும்
பாட்டையும் கரத்தின்
 உறவுகளால்  சொத்தால்
பேச்சால் அடையும் வலி
 சொல்லி மாளா
 இவ்வளவும் தரும்
 துயரம்  கணக்கிலடங்கா
 பாட்டும் இசையும்
 எங்கு கேடபது




வெல்வாய் உறுதியாக

படிக்கும் எண்ணிக்கை குறைவு
 படிப்பார்கள் ஒரு  முறை
 எண்ணம் நன்று
எண்ணுவது நல்லதல்ல
 படிப்பார் படிக்கட்டும்
 கவலைக்   கொள்ளா தே
 எழுத  நினைத்ததை
 அழ்காக  நயமாக எழுது
 வெல்வாய் உறுதியாக 

மகராசி மாதரசி

தோடும்  கண்டசரமும்
முக்குத் தியும்    வளை யலும்
 காஞ்சி பட்டும்   கொண்டைப்   பூவும்
 புன்சிரிப்பும் குங் குமப்  பொ ட்டும் 
 மங்கள நாணு டன்  வந்தமர் ந்தாள் 
 மகராசி மாதரசி லெட்சுமிகரமாக 
 ஒரு பூச்சு இல்லை  ஓர் அலங்காரமும் இல்லை 
ஒரு அதிக அலட்டலும் இல்லை 
 யதார்த்தமாக இயற்கையாக 
தோற்றமளித்தாள்   பெண்ணரசி .
 வியந்தேன் அவளைக்  கண்டு 
 கைக் கூப்பி னேன் பரவசத்துடன் 
அவளின் அடக்கத்தைக்  கண்டு  
படிப்பில் மேதை  எழுத்தில்  தெளிவு 
கருத்தில் சிறப்பு கவிதையின் உற்று 
 இருப்பினும் ஒரு அவையடக்கம் 
 கண் கொள்ளாக்  காட்சி 
கண்டேன் பிரமிப்புடன் .

Saturday, March 7, 2015

அன்று மலர்ந்த

 அன்று மலர்ந்த மலரும்
அன்றே செய்த உணவும்
அன்று நடந்த நிகழ்வும்
 அன்றே முடிந்து விடும்
மலர் வாடிப் போகும்
உணவு சலித்துப்  போகும்
 நிகழ்வு  மறந்து போகும்
அப்போதைக்கு அப்போது
தோன்றி மறைந்தது விடும்
நினைவில் நிற்கா

சாதா வட்டி அல்ல

வட்டி வாங்கி வாழ்கிறான்
 சாதா வட்டி அல்ல
  தடி வட்டி அநியாயம்  என்பது
மிகக்  குறைவு அதற்கும் மேலே
 சொல்லத் தெரியவில்லை
வட்டிலிலே உண்ணும் போ து
 வட்டி பளிரென்று தெரியவில்லையா
 கட்டிலேலே உறங்கும் போ து
வட்டி கடுகளவும் குத்தவில்லையா
வண்டியிலே பயணிக்கும் போது
வட்டி வம்பாகத்  தெரியவில்லையா
 வட்டி வட்டி என்று அலையும் போது
 வடிக்கும் கண்ணீரைக்  காணவில்லையா
 மாளாத வட்டி பாழாகப் போக
 அடங்காத ஆசை பொசுங்கிப் போக
 வட்டி வாங்கும் தேட்டாளன்
ஆரவாரித்து நிற்கிறான் குதுகாலமாக.

Thursday, March 5, 2015

தறி கெ ட்டு

வாய்க்கு வந்ததைப் பேசுகிறான்
 வரம்பு க்குள் இல்லை
 முறையாக இல்லை
 சினம் கொண்டு சீறி விழுகிறான்
 மனம் ஒரு நிலையில் இல்லை போலும்
 கறுக்கச் சிவக்கப் பார்த்து
 உருட்டி உருட்டி  விழி கள் பிதுங்கத்
திரிகிறான் தன்னோத்துப்   போ கிறான்
 தன் போல் தறி  கெ ட்டு அலையும் மனிதர்களுடன்






வாழ்க்கை முறை

நடிப்பு எதிலும்
 நகாசு எதிலும்
 பசப்பு எதிலும்
 பகடை எதிலும்
ஆழம் இல்லாத  படிப்பு
ஆழந்து  கருதாத  கருத்து
 மேலெ ழு ந்த  பேச்சு
 இதவே வாழ்க்கை முறை
என்று ஆகும் போது
 அதை  நடை முறை
  படுத்துபவர்களை
 நோக்கின் மனம்
 வெதும்புகிறது.

நக்கிரன் யாரென்று

நன்றி யாருக்கு?
நக்கீரனுக்கு எதற்கு
 தமிழ் நெறிக்கா
 வழி  முறைக்கா
அவன் நேர்மைக்கா
 சீறுகிறான் பெரும் புலவன்  
காயப் படுத்துகிறான் இராமன்
நக்கிரன் யாரென்று அறியாமல்
புலப்படும்  உண்மை ஒரு நாளில்
ஓடுவான் தலை தெறிக்க இராமன் 

Wednesday, March 4, 2015

இராமனாகவோ சுப்பனாகவோ

காரியம் இல்லாமல்
 தட்டு தூக்க மாட்டான்
 விவரம் இல்லாமல்
 வால்  பிடிக்க மாட்டான்
சாமானியன் அல்லன்
 சாதுர்த்தியம்  நிறைந்தவன்
தன்  வேலையே குறி
பணமே வெறி
 அவன் யாருமன்றோ
அவன் இராமனாகவோ
 சுப்பனாகவோ   இருக்கலாம்


சொல்லவொண் ணாச் சிறப்பு

மூம்மொழி  கற்றேன்
 ஆங்கிலத்தில் கல்வி
 தமிழோ தாய் மொழி
 பிரெஞ்சோ  அடுத்த மொழி
 மூன்றும்  அழகு
 செம்மொழி கள்   என்று கண்டு
 உலக மொழியான ஆங்கிலம்
பழந்தமிழும்  அதன்  இலக்கணமும்
பிரெஞ்சும்  அதன் இனிமையும்
ஒன்றுடன் கோர்த்த  சரமாக
பொருந்தி உட்படுத்தி
 என்னை  வழி  நடத்தும் பாங்கு
 சொல்லவொண் ணாச்    சிறப்பு
 அளவிடமுடியாத  மகிழ்வு


Tuesday, March 3, 2015

நிற்கிறேன் சிலையாக

எல்லாமே ஓரு நிலையில்
முன்னும் போக முடியவில்லை
 பின்னும் சரிய முடியவில்லை
 ஏன்  இந்த நிலை?
 தெளியத் தெரியவில்லை
சட்டெ ன்று  புரியவில்லை
 நிற்கிறேன் சிலையாக.

Sunday, March 1, 2015

கட்டாயம் என்று

கட்டாயம்  என்று சொல்லப போக
கடினமாகத்  தோன்ற முயலும்
கடினம் மேற்கொண்டு  இடையூறாக
இடையூறு  ஓர் இயலாமையாக மாறி
 நடப்பதே  உறுதி யி ல்லாமல் விலகி விடும்
 திணிக்க  நினைக்காமல் எடுத்து இயம்பி
முடிவைக் காண விழைதல் சிறப்பு
   

Saturday, February 28, 2015

உற்சாகம் மெதுவாக உற்றெடுக்க

மனதிலே சொல்லொண்ணா  அயர்வு
 ஏன் எதற்கு என்று  தெரியவில்லை
உடலில் விவரிக்க முடியாத ஒரு தளர்வு
 ஏன் எதற்கு என்று அறியமுடியவில்லை
வெறித்துப் பார்க்கிறேன் வானத்தை
 அகன்ற வானமும் நீலம் பரிந்த தோற்றமும்
 எட்டிப் பார்க்கும் கதிரவனும் மனத்தை நிலைபடுத்த
 நெகிழ்ந்து கண்களில் நீர் தளும்ப  திரும்பினேன்
 கண்டேன்  பூக்கள்   மலர்ந்து  குலுங்கும்  அழகை
 உற்சாகம் மெதுவாக  உற்றெடுக்க  அமைதியானேன் 

தெய்வக் குற்றமோ

பருவமும் காலமும் மாற 
மழையும் வெயிலும்  மாற 
நீரும் நெருப்பும் கூடக் குறைய 
காற்றும் வெள்ளமும் பெருக்கோட 
வந்தது சுனாமி என்ற பேரலை 
அடித்துச் சென்றது  வீ டும் வாசலும் 
தொலைந்தது நிலமும் புலமும்
மடிந்தனர் மனிதர்களும் விலங்குகளும்  
 தி ரும்பியது அமைதி  இரண்டொரு  நாளில் 
 அழுகுரல்களும்   மருட்சியும்  விரிந்தன
சோர்வும் துக்கமும் மிகுந்தன
 இயல்பு நிலை வர வெகு நாட்களாகியது 
இது தெய்வக்  குற்றமோ என்று எண்ணு ங் கால் 
 இது மனிதனின் மடமையே என்று கொண்டேன்  

Friday, February 27, 2015

எது நடக்குமோ

இலை யுதிர் காலம்  என்றும்
வேனிற் காலம் என்றும்
 பனிக் காலம் என்றும்
வசந்த காலம் என்றும்
 பிரித்து வகுத்து
வாழ்ந்த காலம் போய்
 இன்று வெயில்  தொடர்ச்சியாக
மழையே  இல்லாமல்  நீடித்து
காலங்கள் மாறி
 நிகழ்வுகள்  மாறி
மனிதர்களும் மாறி
உரு  மாறி   இடம்மாறி
எல்லாமே மாறி
திரியும் கால்
 எது நடக்குமோ
எது நடக்காதோ
என்று உருகி
உணரும் போது
யாவும் முடித்தே போய் விடும்.



Thursday, February 26, 2015

இரண்டும் ஒன்றே

இறையன்புடன் வாழ்ந்தால்
 நெருக்கடி இருப்பின்
நெகிழ்ந்து விடும்
 பனி போல்
 என்று சிலாகிக்றார்கள்
 இறையன்பர்கள்.

நெறி வழியில்   வாழ்ந்தால்
 இடுக்கண் ஏற்படின்
சடுதியில்  நக ண்டு விடும்
 காற்றைப் போல்
 என்று வியக்கிறார்கள்
 சிந்தனையாளர்கள்.

இரண்டும் ஒன்றே
 இறையன்பு ஒரு பற்று
நெறிமுறை  ஒரு வழி
 பற்றும் வழியும்  வெவேறு அன்று
 ஒருங்கே  நோக்கிச்   செல்லும்
 ஒரே கோட்பாடு. 

கண் மூடினாள்

பாட்டிலே கீதம்
அன்பிலே  பாசம்
 அழகிலே அமைதி
வேலையிலே  சுறுசுறுப்பு
கண்ணிலே கனிவு
நடையிலே  மிடுக்கு
 என்ற வாழ்ந்த  பின்
 கண் மூடினாள்
 அதே பொறுப்புடன் 

Saturday, February 7, 2015

சுணக்கம் வரும்

தம்பியை ஏமாற்றி
வாழு ம்  அண்ணன்
 வீடு முழு வதும்
தனக்கு வேண்டும்
 சொத்து எல்லாம்
தனக்கு வேண்டும்
தன்   பிள்ளைகள்
வாழ்ந்தால் போதும்
 தனக்கு தனக்கு
என்று வாழ்கிறான்
 நன்றாக இருப்பானா
இருப்பதை  பார்த்துக் கொண்டே
 இருப்போம்.
 சுணக்கம் வரும்
 பார்க்காமாலா   போகப்
போகிறோம்?
 

புண் படுத் துவதிலும்

அரசை ஆள்வான்
 பட்டுக் கிடப்பான்
என்று என் பாட்டி
கோபமாக  சீறும்  போது
தெரிந்து கொண்டேன்
ஆத்திரத்திலும்   நல்ல
வார்த்தைகள்
 மே ன்மையான் சொற்கள்
 சொல்ல வேண்டும்
 புண் படுத் துவதிலும்
 ஒரு நயம் வேண்டும்  என்று   

சீரும் சிறப்போடும்!

கூட்டினான்  கூட்டத்தை
அண்ணன் தம்பி என்று
பாராது பேசினான்
 வாய்க்கு வந்ததை
கையெழுத்து   போட்டான்
 அவனுக்கு அதிகாரம்
இல்லாத போது
நியாயப்   படுத்துகிறான்
ஆணவத்தோடு
 அவனும் வாழ்கிறான்
 இவ்வையகத்தில்
 சீரும் சிறப்போடும்!  

Monday, February 2, 2015

பச்சிள ங் குழந்தைகள் முகங்களும்

பால் நினைந்து ஊட்டும்
 லிங்கத்திற்கு  பாலால்
 நன்னீராட்டு
தயிரால் ஆராட்டு
 தேனால் பாராட்டு
 இளநீரால் குளிர்விப்பு
 சந்தனத்தால்  வசமாக்கி
 மஞ்சளால் குளியாட்டி
அரிசி மாவால் துடைத்து
 நன்னீரால் மீண்டும்  கழுவி
வண்ண மலர்களால்
 அலங்கரித்து
 ஆராதித்து
 தீபம் காட்டி
 பரவசத்துடன்   திரும்பிய
 பக்த கோ டிகளை   கண்ட போது
மனம் கனியவில்லை வெதும்பியது
ஆதரவற்ற சீறார்கள்   உண் ண
 ஒன்றுமில்லாமல்  வாடி மடியும்
துயரைப்  போக்க  பசியைக்  குறைக்க
 பாலும், தயிரும், தேனும், மாவும்
 அளிக்கலாமே.
 லிங்கோத்பவர்    மனமும் குளிரும்
 பச்சிள ங் குழந்தைகள்  முகங்களும்
மகிழ்ந்து வாழ்வு பெருகும் .

பொருள் தெரியவில்லை

நமக்கு மேலே  ஒருவன்  '
 அவன் இறைவன்  எனலாம்
இறைவன் என் கிறது  ஆன்மிகம்.

நமக்கு மேலே ஒருவன்
அவனோ அதுவோ இயற்கை
என்பது யதார்த்தம் .

நமக்கு மேலே யாரும் இல்லை
நாமே அதயும் அந்தமும்
என்கிறது நாத்திகம்.

எது சரி, எ து தவறு
 என்று ஆராயலாம்
 தெரிய வருவது யாதொன்று மில்லை.

காற்று சீறு ம் போது
 கடல் கொந்தளிக்கும்  போது
 வெயில் காயும் போது
இறைவனைக் காணவில்லை
இயற்கை கட்டுப்பாட்டில் இல்லை
 மனி தன  தத்தளிக்கிறான்.

ஆன்மிகம் போன இடம்  எங்கே?
யதார்த்தம்  சென்ற திசை   எது?
நாத்திகம் கண்டது தான் என்ன ?

பொருள் தெரியவில்லை






புல்லுக்கும் சிறிது பாயும்.

வாயில் வந்ததைப் பேசி  
தனக்குத்  தான் எல்லாமே தெரியும் 
மற்றவர்கள் ஒன்றுமே அறியாதவர்கள்
 \என்று திரிகிறான் ஒரு வன் 
 படிப்பே இல்லாதவன் 
 வளர்ச்சி அறிவிலும்  இல்லை 
 உடலிலும் இல்லை 
 அவனுக்கு சாலரா க்கள் 
அவனுக்கு சலாம்  செய்பவர்கள் 
என்று ஒரு பட்டாளம் .
 வாழ்கிறான் அவனும்
  பயிருக்கு  பாய்ச்சிய 
 நீர் புல்லுக்கும் 
 சிறிது பாயும்.

Saturday, January 31, 2015

மரியாதை

பிற னைப் பற்றி  பேசுவது 
 புறங்  கூ று தல்.

பிறனைப்  பழிப்பது 
 ஆற்றாமை .

பிறனின்  சொத்தை  அபகரிப்பது
கேவலம்..

பிறனி ன்   உரிமையைப்     பறி ப்பது 
அவதூறு.

பிறனின்  மனையை  நோக்குவது 
அநியாயம் 

பிறனின்  வேலையாளை  அணுகுவது 
அக்கிரமம்.

பிறன்   என்று நினைத்து ஒதுங்குவது  
மரியாதை.

  

கோரமானவன்

மரியாதை இல்லாதவனை 
நகர்த்தி விடு 
 திமிர்ப்  பிடித்தவனை 
 விரட்டி விடு
 அவனை நெருங்க விடாதே 
அவன் கோரமானவன்.
   

அசந்து போனேன்

வயதை மறந்தான்
 ஓடினான்  வாசலுக்கு
 எட்டிப் பார்த்தான்
 மூன்றாம்  வீட்டை
 உள்ளே ஓடினான்
சட்டென்று
புரியவில்லை எனக்கு
 மூன்றாம்  வீட்டை
கவனித்தேன்
அலுவலகத்திலிருந்து
 வெளியே வநது
தன் மகிழு ந்துவை நோக்கிச்
 சென்றார்.
 அதை திருப்பி கொண்டு
 வந்தார்.
அவரைக் கண்டவுடன்
 இந்தஅறு பத்தெ ட்டு   மனி தன்
 ஓடுகிறான்  என்று அறிந்தேன. .
எழட்டு  வயது    மன வளர்ச்சியைக்
கண்டேன்.
தெரிந்து கொண்டேன் பின்  இருவரும்
அண்ணன் தம்பி என்று
 என்ன பாசம் என்று எண்ணு ம் போது
கேள்விப்பட்டேன் இருவரும்
 பேசிக் கொள்ள மாட்டார்கள் என்று
உணர்ந்தேன் காழ்ப்பை!
ஓடும் திறன்  அறு ப தெட்டடிலும்
அசந்து போனேன்  அவனின்
இளமையைக்  கண்டு
அதிர்ந்து போனேன்  அவனின்
வளர்ச்சியைக் கண்டு


Monday, January 26, 2015

இது என்றால் அது

இது என்றால் அது என்கிறான்
 அது என்றால் இது என்கிறான்
 தெளிவு அவனிடம் இல்லை
அவன் வழி  சென்றால்
 அதற்கும் இணங்க வில்லை
 என்ன  செய்வது
 முழ்கிப்  போயிருக்கிறேன்
ஆழ்ந்த  சிந்தனையோடு.

Sunday, January 25, 2015

தாய் பெற்ற மகன்

தாயை நேசிப்பது போல்
 நேசித்து
  தாயின் சொல்லை மீறாதது  போல்
 மீறி
நல்ல பிள்ளை என்று பெயரெடு க்கும் போது
தாயின் வளர்ப்பினால் அல்ல
 தன்னுடைய  நிலையால்
 என்று இறுமாந்து
 பூரிக் கிறான்  தாய்
  பெற்ற  மகன்
தாய்  புன் முறுவல்
 பூக்கிறாள்   மகனின்
நினைப்பை நினைத்து.
  

Saturday, January 24, 2015

வெற்றியை நோக்கி

தடயம் இல்லை
உண்மை இல்லை

தடிப்பு இல்லை
தாக்கம் இல்லை

துடிப்பு  இல்லை
 துட்டும் இல்லை.

உறுதி இருந்தது
 உரிமை இருந்தது

தைரியம் வந்தது
கை கூடியது .

தளர்ந்த மனம்
எழும்பியது  வீறு   கொண்டு.

 விழ்ந்தது  புனைச சுருட்டு
விழ்த் தியது  உண்மை

எழுந்தான், நடந்தான்
 ஓடினான் வெற்றியை நோக்கி
பெருமையுடன்.

Friday, January 23, 2015

ஊரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்

அன்பும் அரவணைப்பும்
 என்று வாழ்ந்தது பொய்.

பாசமும் பிணைப்போடும்
வளர்ந்தது பொய.

மெய் பொய் ஆகிப் போனது
 மறந்தது நெஞ்சம்
மர த்தது கொஞ்சம்.

காற்றுக் கூட பட வேண்டாம்
 என்று ஒதுங்கிப் போக.

தூசும் வேண்டாம் துடைப்புமும்
வேண்டாம்  என்று விலகிப் போக


ஊரில் போவோர் வருவோர்
நினைவுப் படுத்தும் போது

மனம் சீற
 கண்கள் துடிக்க
உடல் சிலிர்க்க
ஊரும் வேண்டாம்
ஒன்றும் வேண்டாம்
என்று ஓடத் தோன்றுகிறது

  

Tuesday, January 20, 2015

ஆள் இல்லை

காட்டிலே ஒரு பூ
 அது எ ன்ன பூ?

கவனம் கொள்ள
ஆள் இல்லை
 அழகு பார்க்க
 ஆள் இல்லை.


வளர்த்து செழித்து
அழகாக மலர்ந்து
பூ பூவாகச்  சிரித்து
நிற்கும்  வண்ணக்
கோலத்தைக்  காண
ஆள் இல்லை.   

Monday, January 19, 2015

கண் பார்வை

மாநிறத்தை வெண்மை
 என்று கொள்ளலாம் 
பார்க்கும் கண்களிலே 
 இருக்கிறது  நிறம் 
 வெள்ளையாக  இருப்பவளை 
 கறு ப்பு என்று சொல்லும் போது 
கண்  பார்வை சரியில்லையோ 
 என்று நினைக்கத்  தோன்றும்.
என்னே  என்று சொல்வது 
 தெரியவில்லை . 

Sunday, January 18, 2015

தரமற்ற படைப்பு

எழுதுவது நனநெறி க்காக
 எழுதுவது உணர்ச்சிகளுக்கு
 வடிகாலாக
 எழுதுவது பண்பாட்டின்
 மேன்மைக்காக
 எழுத்தில் கண் ணியம்
 எழுத்தில் ஒரு நேர் த்தி
எழுத்தில் ஓர் அழகு
 காணி ன்
அது ஒரு காவியம்
அநாகரிகம்  தோன்றின்
 கொச்சை  சொற்கள் இருப்பின்
 அது ஒரு
 தரமற்ற   படைப்பு
 என்று கொள்ளின்.
  

என்ன என்று சொல்ல!

பெண் பிறந்தால்
 ஆண் அழுவான்
 ஆண்  இறந்தால்
 பெண் அழுவாள்
 என்ன என்று சொல்ல!
 எதற்கு என்று கொள்ள! 

மெய் மறந்து நின் றேன்

துள்ளலுடன் வந்தாள்  
குலுங்கி குலுங்கிச்  சிரித்தாள்
கண்ணில் பெருமை
 உதட்டில் புன்  முறுவல்
பெருமிதமும் பேரு வகையுடன்
குதுகாலித்தாள்
சிறுமி என்று நினைத்தேன்
 சிறுமியே என்றாலும்
மதிப்பும் மரியாதையும்
 வியாக்க வைக்கும்
 அழகும்
 என்னைக்  கவர
 மெய் மறந்து நின் றேன்
வெகு நேரமாக! 

Saturday, January 17, 2015

பெண்ணின் மனதை

கூட்டிச் சென்றான்
 உலகத்தைக்  காண
 ஒவ்வொரு திசையும்
காட்டினான்  அக்கறையாக
ஒவ்வவொரு நாட்டையும்
  முழுவதும் காட்டினான்
அன்போடு
 ஒவ்வொன்றையும் காட்டியவன்
பெண்ணின்  மனதைக்     காணவில்லை
 காண விழைய வில்லை
ஏனோ தெரியவில்லை

தெரியவில்லை

அதுவாக இருக்கும் 
 இது வாக  இருக்கும்  
என்று எண்ணி 
 மனது கவலைக் கொள்ளும்
 அதுவு ம் இல்லை 
 இதுவும்  இல்லை 
 என்று  தெளிய வந்த போது 
மகிழ்வு   கொள்வதா  
 அல்லது
துயரம் அடைவதா 
 தெரியவில்லை 
 எனக்கு!
  

Friday, January 16, 2015

ஒர் அற்புதம்

திருமணம்   ஒரு வரம்
 நடப்பதும்  நடவாதும்
 நம்மிடையே இல்லை

முனைப்பும் முயற் சியும்
இருப்பின்  கைகூடும்  என்று
கொள்ள இயலாது.

அதற்கும் மேல் ஒன்று
 இரு ப்பது மறக்க
 இயலாது.

  அதுவே  தெய் வாதினம்
கண்ணுக்குத் தெரியாத
 ஒர்  அற்புதம்!    

புல் மீது படர்ந்த

தன்  நிலை பிறழாதவன்
இன்னல் பட வேண்டியதில்லை
 அவை வரும் போகும்
செலவினம் இல்லை.
 வந்த வழியில் போய்  விடும்
 சற்று தடுமாற்றத்தைக் கொடுத்து
  தாங்கிக் கொண்டு திடமாக
 நோக்கின்
 புல்  மீது படர்ந்த
 பனி போல விலகிடும்
 சட்டென்று !

Monday, January 12, 2015

நியாயமன்றோ?

விட்டில் பிறந்த பெண்ணை
 எள்ளி நகையாடி
 நைந்து பேசி
 நோகச் செய்த
 போது   மகிழ்ந்த
 உள்ளம்
 இன்று தன மகள்
 இன்னல் படும் போது
 துடிப்பது
நியாயமன்றோ?
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
 முற்பகல் செய்யின்
 பிற்பகல் தானே வரும்
 என்ற கோட்பாடுகள்
 நினைவுக்கு வரின்
 அது ஒரு
 வேறுபாடு அல்ல! 

செல்வந்த்ரைக் காணின்

தன்னை இழந்தாள்
 தன்னோட பிறப்பை
மறந்தாள்
பிறன் மனை நாடாத
 தாயுக்கும்  பிறன் வழியில்
ஆதாயம்    காணும்
 தந்தைக்கும்   பிறந்த மகள்.
தன நிலை தாழ்ந்து
 செல்வந்த்ரைக் காணின்
 மண்ணில் விழுந்து
 வணங்கினாள்
 அவளைக் கண்டு
 மனம் புழுங்குகிறது
 எண்ணம் துடிக்கிறது
   
 

Friday, January 9, 2015

வீடு தேடி வந்தாள்

பிறந்தாள்  மாதேவி
மகத்தினிலே
 குலவிளக்காய்
 வெள்ளி மாலையிலே
 விளக்கு வைக்கும்
 மாலைப் பொழுதிலே
 வந்தாள்  மகராசி
 திருமகளாக
செல்வம் பொங்க
வளம் கொழிக்க
வீடு தேடி வந்தாள்
 அழகுப்  பெண்ணாய்
மழலைக்  குழந்தையாக!
  

Thursday, January 8, 2015

அரை தூ க்கத்திலே

துயில்  எழுந்தாள் 
 காலைப் பொழுதிலே
 கண்ணை மூடி மூடி 
 திறந்தாள் வைகறைப்  பொழுதிலே 
 சாள ரம் வழியே வந்த காற்று  
 உடலை வருட 
 சுகமாக நெட்டி  முறித்தாள்
 மங்கை சோம்பலோடு  
 மனம் பறந்து சென்றது 
 முடிந்ததை  நோக்கி 
 கவனம் ஆட்கொண்டது 
 நடப்பதை நினைத்து 
பார்வை பறிபோனது 
 எதிர்காலத்தை எண்ணி 
 சிக்கி தவிக்கிறாள் 
 மங்கை  அரை தூ க்கத்திலே 
  
 

ஒரு நெருடல்

கிட்டே வந்தால் 
 நூறு அடி ஓடுகிறான்.

தள்ளிபோனால் 
 வாலைப்  பிடிக்கிறான்.

அவனைத்  தாக்குவது 
 எளிது!
 புறந்த்தள்ளுவது 
 சுலபம்!
 அவன் என்றுமே
 ஒரு நெருடல்  

அறிவில்லை!

திசை தெரியாமல்
 திரிகிறான்
 கண்ணிருந்தும்!

பேசத தெரியாமல்
 பேசுகிறான்
வாயிருந்தும்!

பொருள் புரியாமல்
நடக்கிறான்
 காதிருந்தும்.

 ஏன்  தெரியுமா?
 அவனுக்கு
 அறிவில்லை!

Wednesday, January 7, 2015

தன் னை விட

தன் னை விட சிறந்தவன் இல்லை
 தன்னை மிஞ்ச ஆள் இல்லை
 தான்  சொல்வது சரி
 என்று வாதாடுவான்
 விவாதம் செய்து
 விவே கம் மறந்து
 காயப்படுத்தி
இரறு மாப்புக்கொள் வான்

  

கருணைத் தலைவன்

கலைஞன் அவன்
 கட்சியில்  அவன்
தலைவன்
 குடும்பத்தில்  அவன்
 தவறு
 குடும்பங் களில்  அவன்
 ( அவனுக்குப் பல)
 தலைவன்.

நின் றான் பெருமிதமோடு
 அன்று
 செல்வம் பெருகியது
 ஏன்  வழிந்தது
பொற்குவியலாக
குடும்பங்கள்  
மகிழ்ந்தன.

நிற்கிறான்   பெருங்கவலை யோடு
 இன்று
பதவிக்குச் சண்டை
 தாரங்களின்  ஆக்கிரிமிப்பு
 செல்வங்களின்   கொந்தளி ப்பு
  திக்கு முக்காடிகிறான்
கருணைத் தலைவன்

வைகை

கடலாடி  குதிப் போட்டு
 துள்ளி  விளையாடி
 கண்ணா  மூச்சி ஆடி
உருண்டு  புரண்டு
  குலுங்கி அலு ங்கி
 மகிழ்ந்து பரவசமாக
 கரை நோக்கிச்
சென்றாள்    வைகை

Monday, January 5, 2015

என் பொம்மை தாயும் தந்தையும்.

என் சிறு பிள்ளை விளையாட்டு
மரப்பாச்சி பொம்மைகளுடன்
 தாயகவும்  தந்தையாகவும்
நினனத்து  பேசுவேன்
  அழுவேன், சிரிப்பேன்
குறைகளைக்  கூறி  கதறுவேன்
 நிறைகளைச் சொல்லி நிரப்புவேன்
  பாடுவேன் , ஆடுவேன், கொண்டாடுவேன்
என் தாயும் தந்தையுமே மறந்தாலும்
என் மரப்   பெற்றோர்  மற க்கவில்லை
தந்தை சிவனடி சேர்ந்தார்
 தாய் தவறி  விட்டார்
என் பொம்மை தாயும் தந்தையும்
உள்ளனர்   இன்றும்  என்னோடு
இருப்பார்கள்  எனக்குப்  பிறகும்  கூட.
   

ஒரு தாய் மக்களிடம் கூட!

பார்வைகள் வெவ் வேறு
 தாயுமாயின் தனயனுமாயின்
 தங்கை போல் அக்கா இல்லை
பண்பில், படிப்பில், தோற்றத்தில்
 அக்கா வெடித்து விம்முவாள்
 தங்கை மடித்து மறு குவாள்
பெரியவள் கடித்துக் குதுறு வாள்
 சின்னவளோ  முழுங்ஙி   மறைப்பாள்
 முத்தவள்  எல்லாம் தனக்கு
 இளையவள் கிடைத்ததில் மகிழ்ச்சி
 அடங்காத ஆசை அக்காவுக்கு
 ஆறாத மனதும்    கூட!
போதுமென்ற   வழி  முறை தங்கைக்கு
அமைதியான மனதும் கூட!
 பார்வை வேறு, முறை வேறு
 ஒரு தாய் மக்களிடம்  கூட!
     

விழி வழியாக

காட்டிலே காண்டாமிருகம்
பெரிய  மாமிச மலையாக
நாட்டிலே நட்டுவாக்களி
பெரிய விஷக்   கொடுக்காக
மலையிலே மலைப்பாம்பு
விரிய வேக சூரனாக
 கடலிலே கடல் புறா
அமைதி வேள்வியாக
பெரிதும் சிறிது மாக
கொடுமையும் கனிவுமாக
பயங்கரமும்  பரிதாபமுமாக
நடைபெறும்  நடவடிக்கை
 கண்டும் காணாமலும்
 நிகழும் நிகழ்ச்சிகள்
 மனத்தைக் குடைய
 வாழா விருத்தலும்
வாழ்த்தியும் வாடியும்
  நிறுத்தலும் நிற்காமலும்
இருத்தலைக் கண்டேன்
விழி வழியாக    


ஆட்டமும் பாட்ட முமாக

ஆடல் வல்லான்
 ஆடினான்
 இர வும்  பகலுமாக
 தரிசனம் தந்தான்
 ஆதிரை அன்று
 கால் மாறி
 மாறி  ஆடினான்
  இடது வலது என்று
 மனிதன் மனமும்
மாறுகிறது
வலதும் இடதுமாக
 வையைத்தில்
தோன்றும் கதிரவன்
 கிழக்காலே
 மறையும் ஞாயிறு
 மேற்காலே
 இரவும்  விடியலு மாக
ஆட்டுவிக்கும் சிவன்
 ஆட
 மாறும் மனிதன்
மாற
சுற்றும் பூ லோ கமும்
சுற்ற
ஆட்டமும் பாட்ட முமாக
தொடர்கிறது
புவியினோ ட்டம்




 




சற்றுப் பொழுதிலே


அன்றொரு நாள்

காற்று  வீசியது
கோராமாக
 பிய்த்துக்  கொண்டு
 பிளறிக் கொண்டு
 தாண்டவமாடியது
அலறியது, பதறியது
 அமைதியானது  சற்றுப்
பொழுதிலே.


மறு நாள்

காற்று  பரவியது
 தென்றலாக
உரசிக்  கொண்டு
உறவாடிக்கொண்டு
  நடனமாடியது
பாடியது, அழைத்தது
சுகமாக சற்றுப்
பொழுதிலே




ஒரு கேள்வி

வந்தவன் கேட்டான்
 ஒரு கேள்வி
எதற்கு என்று தெரியவில்லை
ஏன் என்றும் புரியவில்லை
 பதில்   சொன்னேன்
ஏன் என்று புரியவில்லை
எதற்கு என்று தெரியவில்லை
இது தாண்டா  உலகம்
என்று சிரிக்கிறாய் நீ
ஏளனமாக
 அந்தக் காரணமும்
 எனக்கு புரியவுமில்லை
தெரியவுமில்லை.