Saturday, April 25, 2015

நினைந்து உருகி

நினைந்து உருகி
கசிந்து கண்ணீர்  மல்கி
 கை தொழுது நின்றாள்
 இறைவன் முன்னே

அவன் எப்போதும் போல்
சிலையாக  நின்றான்
 கையில் அபய  முத்திரையுடன்
 அவள் முன்னே

விசும்பினாள் விம்ம்னா
 கதறினாள்  மனச்  சோர்வோடு
அசைந்தான் முழு முதற் கடவுள்
 அருள் பாலித்தான்.

கண் துடைத்தாள்  புறங்கையால்
முடியை அள்ளி முடித்தாள்
 ஒரு வினாடி  நோக்கினாள்
 இறை வன் வழி  விட்டான்.
   

No comments:

Post a Comment