Thursday, April 2, 2015

தா யும் மகனும்

நினைந்து உருகும் தாயைக்  கண்டேன்
 வெறுத்து ஒதுக்கும் மகனையும் கண்டேன்
தாயின் கண்ணில் பாசம் ஒளி யூட்ட
 தனயனின் கண்ணிலோ கோபம் உமிழ
 இரு துருவங்களாக இருவரும் நிற்க
 குழம்பி னேன் அவர்களை நோக்குங் கால்
 எங்கோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது
 தா யும் மகனும் மறை க்கிறார்கள்
 காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
 காலம் கனியும் மாற்றம் உண்டாகும் .

No comments:

Post a Comment