Sunday, March 15, 2015

அர்த்த நாரியைப் போல

பாதி தூக்கம் பாதி விழிப்பு
 என்ற கண்  துடைப்பு
பாதி நினவு பாதி மறதி
என்ற நாடக நடிப்பு
பாதி பொய் பாதி மெய்
என்ற வாழ்க்கை விரிப்பு
பாதி செயல் பாதி தள்ளுபடி
என்ற வளர்ச்சிக்  குறிப்பு
 பாதி ஆண்  பாதி பெண்
என்ற அர்த்த நாரியைப்  போல   

No comments:

Post a Comment