Tuesday, March 24, 2015

ஓடுகிறது மனம்

மனதை ஒருமைப் படுத்து
 என்கிற போது  தான்
மனம் ஓடி பாய்கிறது
 எங்கு  எங்கு என்று
இல்லாமல்
இலக்கே இல்லாமல்
வளை ந்து  வலிந்து
புகுந்து ஊடுருவி
 எங்கு செல்கிறதோ
 கட்டுப்படுத்து
 என்ற போது தான்
 வெருண்டு துள்ளி
 ஓடுகிறது மனம்

No comments:

Post a Comment