மலையைக் கண்டேன் 
  
 சிகரம் நோக்கினேன்
 ஆதியும் அந்தமும் 
 இல்லா அருட் செல்வம் 
 போல் தோன்ற 
மலைத்து நின்றேன்
 அதன் பரப்பளவைக்  கண்டு 
 கண்ணை வீட்டு அகல மறக்க  
கூவினேன்  பெரிய குரலெடுத்து 
 உன்னின் அழகுக்குக் காரணம் என்ன?
 மலையோ என்னைப் பார்த்து  மெல்ல சிரிக்க 
 அதிக ஒலியுடன் மேலும் குரல் எழுப்பினேன் 
 எ வ்வளவு காலமாக  நீ  இங்கு நிற்கிறாய்?
மலை தொடர்ச்சியோ மீண்டும் பாங்குற புன்னைகைக்க 
 அசந்து நின்றேன் அதன் மேன்மையை  அறிந்து 
 அமைதியும் அடக்கமும் ஒருங்கே இணைய 
 பெருமையும் பேருவகையும் ஒன்றே அமைய 
 பெரியார்களின் மாட்சிமையை எண்ணி 
 தலை வணங்கினேன்  மலையின் அடிவாரத்தில்.
 
No comments:
Post a Comment