Wednesday, March 18, 2015

தலை வணங்கினேன்

 மலையைக் கண்டேன் 
 சிகரம் நோக்கினேன்
 ஆதியும் அந்தமும் 
 இல்லா அருட் செல்வம் 
 போல் தோன்ற 
மலைத்து நின்றேன்
 அதன் பரப்பளவைக்  கண்டு 
 கண்ணை வீட்டு அகல மறக்க  
கூவினேன்  பெரிய குரலெடுத்து 
 உன்னின் அழகுக்குக் காரணம் என்ன?
 மலையோ என்னைப் பார்த்து  மெல்ல சிரிக்க 
 அதிக ஒலியுடன் மேலும் குரல் எழுப்பினேன் 
 எ வ்வளவு காலமாக  நீ  இங்கு நிற்கிறாய்?
மலை தொடர்ச்சியோ மீண்டும் பாங்குற புன்னைகைக்க 
 அசந்து நின்றேன் அதன் மேன்மையை  அறிந்து 
 அமைதியும் அடக்கமும் ஒருங்கே இணைய 
 பெருமையும் பேருவகையும் ஒன்றே அமைய 
 பெரியார்களின் மாட்சிமையை எண்ணி 
 தலை வணங்கினேன்  மலையின் அடிவாரத்தில்.


  

No comments:

Post a Comment