Sunday, March 29, 2015

தாமரை மணாளன்

யோகங்கள் பெற
 யாகங்கள் வளர்த்து 
 வயது கூட
 அர்ச்சனைகள் செய்து
 பீடை கழிய 
 ஆடைகள் கொடுத்து  
 அட்டாகசமாக வாழ
 அன்னதானம் அளித்து
 வாழ்வில் சிறக்க 
 தர்மங்கள் செய்து 
வாழ்ந்தான்   தாமரை மணாளன் 
 மனம்  முழுக்க   கெட்ட எண்ணம் 
செய்கைகள் யாவும் கெடுதி 
ஒன்றை ஒன்று  நிறைவு செய்ய 
 பட்டென்று  போனான் 
 வயதாகாமல், யோகம் பெறாமல்,
பீடை கழியாமல்   தாமரை மணாளன் .

No comments:

Post a Comment