Tuesday, March 24, 2015

தாமரை Vs அல்லி

அல்லி மலர் பூத்தது
 தாமரை யினூட
 மந்தகாசமாய் சிரித்தது
 தாமரையைப்    பார்த்து
உன் அழகுக்கு நான் போட்டியா
 என்றது இறுமாப்புடன்
 தாமரை புன்னகை வழிய
 சொன்னது  மெது வாக
உன் அழகு   ஒர் அற்புதம்
செழுமையும் செல்வாக்கும்
 ஒருங்கே கண்டேன்.
 என்னிடம் என்ன இருக்கிறது
 நான் நீர் தேங்கா இல்லை மேல்
 பூக் கிறேன்  மிதக்கிறேன்
 அவ்வளவே
 என்னயும் உன்னையும்
 ஒப்பிப் பார்ப்பது
 சரியே இல்லை  
நீ தான் ஒப்பற்ற அழகு
 நான் ஒரு மிகச்  சாதாரணம்
உள்ளது போல் இருக்கிறே ன்
என்று அமைதியாகக் கூறி யது.
அடக்கம் எங்கும்  பரவும்.
 அடங்காமை ஆரிருள்
உய் த்து விடும்


No comments:

Post a Comment