பூக்காரி வந்தாள் தினமும்
பூக் கொடுத்தாள் சில தினம்
பணம் கேட்டாள் பல தினம்
வாங்கினேன் பூ சரத்தை
கொடுத்தேன் தொகையை
பின் பூவைவிட பானம் அதிகம் கேட்டாள்
பாவம் என்று எண்ணி கொடுத்தேன்
அதையே வழக்கமாகக் கொண்டாள்
பார்த்தேன் சரியாகத் தோன்றவில்லை
நிறுத்தினேன் பூ வாங்குவதை அவளிடம்
உதவி சில நேரத்தில் தொல்லையாகி விடும்
No comments:
Post a Comment