துயில் எழுந்தாள்
காலைப் பொழுதிலே
கண்ணை மூடி மூடி
திறந்தாள் வைகறைப் பொழுதிலே
சாள ரம் வழியே வந்த காற்று
உடலை வருட
சுகமாக நெட்டி முறித்தாள்
மங்கை சோம்பலோடு
மனம் பறந்து சென்றது
முடிந்ததை நோக்கி
கவனம் ஆட்கொண்டது
நடப்பதை நினைத்து
பார்வை பறிபோனது
எதிர்காலத்தை எண்ணி
சிக்கி தவிக்கிறாள்
மங்கை அரை தூ க்கத்திலே
No comments:
Post a Comment