Sunday, January 25, 2015

தாய் பெற்ற மகன்

தாயை நேசிப்பது போல்
 நேசித்து
  தாயின் சொல்லை மீறாதது  போல்
 மீறி
நல்ல பிள்ளை என்று பெயரெடு க்கும் போது
தாயின் வளர்ப்பினால் அல்ல
 தன்னுடைய  நிலையால்
 என்று இறுமாந்து
 பூரிக் கிறான்  தாய்
  பெற்ற  மகன்
தாய்  புன் முறுவல்
 பூக்கிறாள்   மகனின்
நினைப்பை நினைத்து.
  

No comments:

Post a Comment