Monday, February 2, 2015

பச்சிள ங் குழந்தைகள் முகங்களும்

பால் நினைந்து ஊட்டும்
 லிங்கத்திற்கு  பாலால்
 நன்னீராட்டு
தயிரால் ஆராட்டு
 தேனால் பாராட்டு
 இளநீரால் குளிர்விப்பு
 சந்தனத்தால்  வசமாக்கி
 மஞ்சளால் குளியாட்டி
அரிசி மாவால் துடைத்து
 நன்னீரால் மீண்டும்  கழுவி
வண்ண மலர்களால்
 அலங்கரித்து
 ஆராதித்து
 தீபம் காட்டி
 பரவசத்துடன்   திரும்பிய
 பக்த கோ டிகளை   கண்ட போது
மனம் கனியவில்லை வெதும்பியது
ஆதரவற்ற சீறார்கள்   உண் ண
 ஒன்றுமில்லாமல்  வாடி மடியும்
துயரைப்  போக்க  பசியைக்  குறைக்க
 பாலும், தயிரும், தேனும், மாவும்
 அளிக்கலாமே.
 லிங்கோத்பவர்    மனமும் குளிரும்
 பச்சிள ங் குழந்தைகள்  முகங்களும்
மகிழ்ந்து வாழ்வு பெருகும் .

No comments:

Post a Comment