Saturday, February 28, 2015

உற்சாகம் மெதுவாக உற்றெடுக்க

மனதிலே சொல்லொண்ணா  அயர்வு
 ஏன் எதற்கு என்று  தெரியவில்லை
உடலில் விவரிக்க முடியாத ஒரு தளர்வு
 ஏன் எதற்கு என்று அறியமுடியவில்லை
வெறித்துப் பார்க்கிறேன் வானத்தை
 அகன்ற வானமும் நீலம் பரிந்த தோற்றமும்
 எட்டிப் பார்க்கும் கதிரவனும் மனத்தை நிலைபடுத்த
 நெகிழ்ந்து கண்களில் நீர் தளும்ப  திரும்பினேன்
 கண்டேன்  பூக்கள்   மலர்ந்து  குலுங்கும்  அழகை
 உற்சாகம் மெதுவாக  உற்றெடுக்க  அமைதியானேன் 

No comments:

Post a Comment