Thursday, February 26, 2015

இரண்டும் ஒன்றே

இறையன்புடன் வாழ்ந்தால்
 நெருக்கடி இருப்பின்
நெகிழ்ந்து விடும்
 பனி போல்
 என்று சிலாகிக்றார்கள்
 இறையன்பர்கள்.

நெறி வழியில்   வாழ்ந்தால்
 இடுக்கண் ஏற்படின்
சடுதியில்  நக ண்டு விடும்
 காற்றைப் போல்
 என்று வியக்கிறார்கள்
 சிந்தனையாளர்கள்.

இரண்டும் ஒன்றே
 இறையன்பு ஒரு பற்று
நெறிமுறை  ஒரு வழி
 பற்றும் வழியும்  வெவேறு அன்று
 ஒருங்கே  நோக்கிச்   செல்லும்
 ஒரே கோட்பாடு. 

No comments:

Post a Comment