Monday, February 2, 2015

பொருள் தெரியவில்லை

நமக்கு மேலே  ஒருவன்  '
 அவன் இறைவன்  எனலாம்
இறைவன் என் கிறது  ஆன்மிகம்.

நமக்கு மேலே ஒருவன்
அவனோ அதுவோ இயற்கை
என்பது யதார்த்தம் .

நமக்கு மேலே யாரும் இல்லை
நாமே அதயும் அந்தமும்
என்கிறது நாத்திகம்.

எது சரி, எ து தவறு
 என்று ஆராயலாம்
 தெரிய வருவது யாதொன்று மில்லை.

காற்று சீறு ம் போது
 கடல் கொந்தளிக்கும்  போது
 வெயில் காயும் போது
இறைவனைக் காணவில்லை
இயற்கை கட்டுப்பாட்டில் இல்லை
 மனி தன  தத்தளிக்கிறான்.

ஆன்மிகம் போன இடம்  எங்கே?
யதார்த்தம்  சென்ற திசை   எது?
நாத்திகம் கண்டது தான் என்ன ?

பொருள் தெரியவில்லை






No comments:

Post a Comment