Friday, February 27, 2015

எது நடக்குமோ

இலை யுதிர் காலம்  என்றும்
வேனிற் காலம் என்றும்
 பனிக் காலம் என்றும்
வசந்த காலம் என்றும்
 பிரித்து வகுத்து
வாழ்ந்த காலம் போய்
 இன்று வெயில்  தொடர்ச்சியாக
மழையே  இல்லாமல்  நீடித்து
காலங்கள் மாறி
 நிகழ்வுகள்  மாறி
மனிதர்களும் மாறி
உரு  மாறி   இடம்மாறி
எல்லாமே மாறி
திரியும் கால்
 எது நடக்குமோ
எது நடக்காதோ
என்று உருகி
உணரும் போது
யாவும் முடித்தே போய் விடும்.



No comments:

Post a Comment