Thursday, October 29, 2015

வேறுபாடு ஏனோ ?

காற்றிலே ஆடியது மரம்
சாய்ந்து  சாய்ந்து ஆடியது
 பார்க்க பரவசம் மிகுந்தது

 மனமும்  சில கணங்களில்   ஆடுகிறது
 விரைந்து விரைந்து ஆடுகிறது
 பார்க்க பதற்றம் மிகுந்தது.

ஆட்டம் ஒன்றே தான்
 சாய்ந்தும் விரைந்தும்  ஆட
ப ரவசம் ஒன்றில் தோன்ற
பதற்றம் மற் றோன்றில்  காண
வேறுபாடு ஏனோ ?

No comments:

Post a Comment