Tuesday, May 3, 2016

வாழ்க் இருவரும் வளமுடன்.

குறை காணுவதே அவன் எண்ணம்
 நிறையே அவனிடம் காணவில்லை
 எண்ணம்  குறுக மனம் நோக
 பேசுவதே அவன் வழக்கம்

தானே பெரியவன் தானே நியாயம னவன்
 என்று மார் தட்டி பேசும் விதமே அலாதி
 தன்னை   விட யாரும் இல்லை என்ற நினப்பே
 மேலோங்க மேலும் கீழும்  பார்த்து  நொ டிப்பான்

தன்மை என்பதே அவனிடம் இல்லை
 பொறாமை ஆற்றாமை அவனைச்  சூழ
 அதோடு  இல்லாமல் தற்போது இயலாமையும்
 அவனைப் பிடிக்க   புழுங்குகிறான்  அனலாக

அவனுக்குத் துணையாக  மற்றொருவன்
எடுத்துக் கொடுக்க   சொன்னதைச  செய்ய
 கிளிப் பிள்ளை போல்  பேசுவதற்கு
 ஏனோ அவன் தட்டுத் தடுமாறி  பேசுகிறான்.


இருவருமே ஒரு சேர்க்கை  நல்லதற்கோ
கெ ட்டதற்கோ   என்று எனக்கு விளங்கவில்லை
எங்கும் எவ்வாறும் எடுத் தெறிந்து பேசுவதே
 குறிக்கோள்  வாழ்க் இருவரும் வளமுடன்.

No comments:

Post a Comment