Wednesday, August 10, 2016

கழுத்திலே மாலை

கழுத்திலே மாலை  
கண்ணிலே நாணம்
தலையோ குனிந்து
 நிலம் பார்க்க
 வந்தாள்   மணமகள்
 அன்று.


கழுத்திலே மாலை
 அதே போல
 கண்ணிலே அகம்பாவம்
தலையோ நிமிர்ந்து
 நேரே நோக்க
 வருகிறாள்  மணப்பெண்
 இன்று.

தவறில்லை
 அச்சம், நாணம். பயிர்ப்பு
 யாவுமே   மலை ஏறிவிட்டன.
நிற்பதென்னவோ
ஆணவம், தைரியம், திமிர் .
பொறுத்துக்   கொள்வதே
 விவேகம்.

பெண் என்றாலே
 போதும்.

இனம் பெருக்க, குடும்பம்
தழைய, பெண்  வேண்டும்.
பொறுப்போமாக.  





No comments:

Post a Comment