Tuesday, August 30, 2016

பரிதாபமாக

வளர் பிறை சந்திரனைப் போல்
வளர்ந்து கொண்டே போனது
 அவன்தன் பேச்சு.

தன்னை   விட என்ற
இறுமாப்புடன்  வலம்  வரும்
 அவன்தன்    நடப்பு .

நிகரில்லாதவன் என்ற  பெருமிதம்
 ஒவ்வொரு பொழுதிலும்
அவன்தன் செயலில்.

மேற்போனவன்  மேல் நோக்கி
 நிற்கும் கால் ஒரே நாளில்
மறைவான செல்வம் .

கண்ணிலே காணாமல்
கையிலே இல்லாமல்
பறந்து போனது.

நிற்கிறான்  தானாகவே
பெருமையும்  இல்லாமலே
தன்னந் தனியாக
பரிதாபமாக !


No comments:

Post a Comment