Thursday, September 1, 2016

நல்லவனும் தீயவனாகிறான்

பூ  ஒன்று கண்டேன்
ஒளி வெள்ளத்தில்

பொலிவுடன் நிமிர்ந்தது
என்னைப்  பார்த்து.

புன்னகையுடன்  குவிந்தது
அழகாக .

நெருங்கினேன்  ஒலியெழுப்பாமல்
மெதுவாக.

மருண்டது  அண்மையில்
 என்னைக் கண்டு.

பறித்துப்   பிரித்து  ஒடித்து
 விடுவேனோ  என்றாகி

குனிந்தது  அருண்டு
சற்று நேரம்.

மனிதனின்  நோக்கம்
மலருக்குப் புரிந்தும் புரியாமல்

வன்மையின்  துடிப்பை
 மென்மை உணர

நல்லவனும்  தீயவனாகிறான்
ஒட்டு மொத்தமாகவே!









  

No comments:

Post a Comment